அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, December 31, 2011

47 தனுஷ்-பிரதமர்: 'கொலவெறி' விருந்தின் பின்னணி

3 நாட்களுக்கு முன்னர்... இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவு-க்கு இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தது தனுஷ் உட்பட பலருக்கு ஆச்சரியமாகவும், ஏகப்பட்டோருக்கு எரிச்சலாகவும் இருந்தது..! எனக்கும்தான்..! காரணம்..?


Thursday, December 29, 2011

28 " ஈe-Tamilan's வைரஸ் " - ஓர் ஆய்வு..!

@ சகோ.ஆஷிக் அஹமத்,
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இதுக்குறித்து இன்ஷா அல்லாஹ் வேலை விட்டு வந்ததும் விளக்கம் கொடுப்பார் முஹம்மது ஆஷிக்.///---இதுமாதிரியான பொய்யர்களிடம் இது தேவைஇல்லாத வாக்குறுதி சகோ.ஆஷிக் அஹமத்..! இனி இது மாதிரி எல்லாம் என்னை கேட்காமல் வாக்கு எல்லாம் கொடுக்க வேண்டாம் சகோ. உங்களால்தான் இந்த விளக்கம் இப்போது எழுத வேண்டியதாயிற்று..!  

Any how................

....................at last..!
நன்றி  சகோ.ஆஷிக் அஹமத்..!
இனி.............. 'ஈe-வைரஸ்' பற்றிய விளக்கம்..!


வைரஸ் என்று சொல்லப்படும் நான் இட்ட அந்த ஓட்டெடுப்பு லிங்க் இதுதான்..!

Tuesday, December 27, 2011

38 'ஈe-tamilans' : பய(னுள்ள)டேட்டா

முன்னுரை.........................................................................................................................................
பொதுவாக இவ்வுலகில் 'சொல்லியவண்ணம் செயல்' என வாழ்வோரை பார்ப்பது மிகவும் அரிது. இது மனிதனின் பொதுவான பலவீனம். ஆனால், சொல்லியவண்ணம் மட்டுமின்றி அதற்கு மேலேயும் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதரைப்பற்றியும் அவர் சொன்னதைப்பற்றியும் அவதூறு கற்பித்து பழிக்கும் முன்னர், "நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்...", "நமக்கு குறைகூறும் அத்தகுதி உள்ளதா..." என்றெல்லாம் சற்று எண்ணிப்பார்க்க வேண்டாமா..?  
 .
ஈழத்தமிழ் போர் விதவைகள் மறுவாழ்வுக்காக 'மாங்கு மாங்கு' என்று  'கவலை'யோடு(?) புலம்புவோரிடம் ஒருவர் அப்பாவியாக  அதற்குரிய "தீர்வை" பகிர்ந்து விட்டார். அந்த தீர்வு பிடிக்கவில்லை என்றால் மாற்றுத்தீர்வு ஏதும்  இருந்தால் அதை முன்மொழிய வேண்டியதுதானே..? அதுதானே நேர்மை..? அதைவிடுத்து, அவரையும்...  அப்பதிவை எழுதியவரையும் திட்டித் தீர்த்துவிட்டு அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற பரிந்துரைப்பதுதான் நியாயமா..? அதன்பின்னரும்.. மனது அமைதி அடையாமல், மேலும், தனிப்பதிவுகள் போட்டு தீர்வு சொன்னோர் பின்பற்றும் வாழ்வியல் மார்க்கத்தையும் அசிங்கமாக- வரைமுறை இன்றி- எவ்வித லாஜிக்கோ அறிவோ இன்றி- கிண்டல் என்ற பெயரில் இழித்துரைப்பது அவர்களின் அறிவை பறைசாற்றுகிறது. அதனால் யாருக்கு என்ன பலன்..? தாடிவைப்பதைக்கூட ஆபாசம் என்று உளறிக்கொட்டி பதிவு போடும் அளவுக்கு துவேஷம் முற்றிவிட்டது. (பாவம் இந்த மனிதர்கள்... right click, open new tab and see)
 .

ஈழப்போர் விதவைகள் குறித்து இந்த அளவு பொறுப்பற்றத்தனத்தில் உள்ளோர்... தம்மில் ஒருவரின் புகைப்படத்தை முகநூலில் போட்டு, சீதனத்துடன் 'அழகிய இளம் மணப்பெண்' தேடுவது அவர்களுக்கே அடுக்குமா..? தன் திருமணத்தின் போதுமட்டும் அந்த ஈழத்தமிழ் விதவைகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்த மாயம் என்னவோ..? இது தகுமா..? முறையா..?  கேவலமாக இல்லையா..? 'கன்னிப் பெண்ணைத்தான் கைப்பிடிப்போம்' என்ற கொள்கையுடையோர்... தன் 25  வயதில் 40 வயது விதவையை மணந்து அவருடன் மட்டும் 24 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு, அவர் இறந்த பின்னரும் பல போர் விதவைகளையே  மணந்த ஒரு மாமனிதரை -அவரின் மூலம் மக்களுக்கு பிராக்டிகலாக சொல்லப்பட்ட விதவைகளுக்கான மறுமணத்தீர்வை- குற்றம் சொல்லலாமா..? இந்த சுயநலமிகளுக்கு அதற்கு என்ன யோக்யதை உள்ளது..? பிறரை குற்றம் சுமத்தும் முன்னர் தம் அருகதை பற்றி சிந்திக்க வேண்டாமா..?
 .
ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?
.

Tuesday, December 20, 2011

54 இலங்கை முஸ்லிம் ஆண்கள் @ ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..?

முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் 'சந்ருவின் பக்கம்' என்ற வலைப்பூவில் சகோ.யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார். எனினும் தமிழ்மணத்தில் பதிவிட்ட தலைப்பை மாற்ற இயலாது என்பதால் தொடர்ந்து ஹிட்ஸ் மழை அந்த தலைப்புக்கு குவிந்தது. இந்த சூடான தலைப்பால் அந்த பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகையின் உச்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது. 

Sunday, December 18, 2011

7 முல்லை பெரியாறு: அமைச்சர் ப.சிதம்பரம் வலுக்கட்டாய வாபஸ்..!

நேற்று.....

சென்னை காமராஜர் அரங்கில், நேற்று "முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை -- ஒரு விளக்கம்" என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "முல்லைப் பெரியாறு பிரச்னை, கேரளாவில் நடக்க உள்ள 'பிரவோம்  (PIRAVOM) தொகுதி' இடைத்தேர்தலுக்காக கிளப்பப் பட்டுள்ளது" என்றார்..! வார்ரே வ்வா..! இதே கருத்தைத்தான் இவருக்கும் முன்னாடியே நானும் என்னுடைய சென்ற வார பதிவிலேயே... (முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!) மிகத்தெளிவாக புகைப்படங்களுடனும், கேரள அரசியல் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எல்லாம் வைத்து லாஜிக்கலாகவும், முந்திய ராமஜென்மபூமி, ஒகேனக்கல் இவற்றுடன் ஒப்பிட்டு விளக்கமாக எழுதி இருந்தேன்..! எனது கருத்துக்கு வலுவூட்டும் விதமாக அமைச்சர் சொன்னது மட்டும் முக்கிய விஷயம் அல்ல..! இன்னொன்றும் உள்ளது..!

Friday, December 16, 2011

20 ' ஒரு நாள் = 24 மணி நேரம் ' : முதலில் சொன்னது யார்..?

ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...!
ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...!
ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...!
------------------------------------------இதெல்லாம்... எப்படி... யார்... எந்த அடிப்படையில்... எப்போது கண்டுபிடித்து கணக்கிட்டு வகுத்தார்கள்...? ஆச்சர்யம்தானே சகோ..?

ஒரு நாள் என்பது எது என்பதை... சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் இவற்றைக்கொண்டு மனித சமுதாயம் ஆரம்ப காலத்திலேயே எளிதாக அறிந்திருக்கும். அதனால், 'நாள் எது?' என்ற இந்த கண்டுபிடிப்பு - இதொன்றும் அதிசயம் இல்லைதானே..?

ஒரு மாதம் என்பதற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சிந்தனை ஒன்றும் தேவை இல்லை. சந்திரனை பின்தொடர்ந்து 12 அமாவாசை அல்லது 12 பெளர்ணமி மூலம் சுலபமாக வகுத்துக்கொள்ளலாம். இதனால், வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்றும் பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 354 days 8 hrs 48 minutes and 36 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்லதானே..?

ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள் கொண்டது என்பதும் கூட ஆச்சர்யப்படும் அளவுக்கு பெரிய கண்டுபிடிப்பு அல்லதானே..?

Sunday, December 11, 2011

32 முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!

இனவாதம் / இனவெறி என்றால் என்ன தெரியுமா சகோ..? 

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை. தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்) 

அப்படித்தான், பாபர் மசூதி விவகாரத்தில் பெரும்பான்மை நடுநிலை இந்து மக்கள் முதல்... உ.பி.போலிஸ், இந்திய ராணுவம், மத்திய அரசு... வரை, கரசேவை கொடுமைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது..! அலஹாபாத் ஹைக்கோர்ட் சொன்ன தீர்ப்பும் இதைத்தான் உணர்த்துகிறது..! காரணம்... 'ராமஜென்ம பூமி அரசியல்' என்பது தனது சமுதாயக்கடவுளுக்கு சாதகம் என்பதால்..! இது மதவெறி..!

இதேபோலத்தான்...  முல்லை-பெரியாறு விவகாரமும். நடுநிலை மக்களுக்கு நன்கு புரியும். என்றாலும், தாங்கள் கேரளாக்காரர்கள் என்பதால் அவர்கள் கேரள அரசும், மலையாள ஊடகமும் செய்து வரும் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். காரணம்... முல்லை-பெரியாறு ஒழிந்தால் அது தனது மொழிக்காரர்களுக்கு சாதகம் என்பதால்..! இது மொழிவெறி..!

நான், தமிழ் மொழி பேசுகிறேன் என்பதால் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுதவில்லை சகோ..! எனக்குப்பட்ட நியாயத்தை மட்டுமே எழுதுகிறேன்..!

Friday, December 9, 2011

8 முஸ்லிம் நிரபராதிகளுக்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு--அரசு அறிவிப்பு

2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 

இத்துயர சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்... "ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி (HUJI), லஷ்கர்-இ-தய்யிபா (LeT), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (SIMI), ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள்தான் இவர்கள்" என்றும் "இவர்கள்தான் குண்டு வைத்த 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்'...!" என்றும் பழிசுமத்தி குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது.  

Wednesday, December 7, 2011

41 தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்


07/12/11 பொய்மையின் உரைகல்
கிபி 632-ம் வருடம்
முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள். 

அன்று வாழ்வின் இறுதிநாள்... 

முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் அருமை மகள் ஃபாத்திமாவை (ரலி..) அவர்களை அருகே வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாக பேசினார்கள். அதைக்கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக்கூறவே ஃபாத்திமா (ரலி) சிரித்தார்கள். 

இதைப்பற்றி நபி(ஸல்)அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி..) கூறுவதாவது:

Monday, December 5, 2011

26 பாபர் மசூதி : ஹிஸ்ட்-ஜியோ டேட்டா


ஃப்ளாஷ் பேக்

1992 December - 6 அதிகாலை
1949 டிசம்பர் 22 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் 'இஷா' எனும் இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். வைகறை ஃபஜ்ர் தொழுகைக்காக  அன்று பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி..! கதவு உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார்' என்று ஒரு கும்பல் வெளியே கலாட்டாவில் இறங்கியது.

"வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக" ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் 'முதல் தகவல் அறிக்கை' (FIR) பதிவு செய்யப்பட்டது. அப்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத்தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

Friday, December 2, 2011

26 வரலாற்றில் 'ஆரிய படையெடுப்பும் முகலாயர் வருகையும்' :-)

பலருடைய பதிவுகளில் பலருடன் பின்னூட்டங்களில் விவாதிக்கும் போது, பெரும்பாலோர் இன்னும் இஸ்லாம் பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வரலாறுகள் கூட அறியாமல் இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. 

இதற்கு காரணம், சிறு வயது பள்ளிக்கூட பாடத்திட்டம் முதல் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பு வரை... இஸ்லாம் பற்றி தவறான கல்வியே நம் நாட்டு பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டு வருகிறது. 

அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய வரலாறு என்றால் மட்டும் அது, தவறாகவோ... திரிக்கப்பட்டோ... பொய்யும் புரட்டாகவுமே கயமைத்திட்டம் போட்டு, நமது கல்விப்பாடத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையன்று. 

இதனால், அந்த பெரும்பாலோரின் அறியாமைக்கு அவர்கள் மட்டுமே  காரணம் என்பதை விட நம் நாட்டு பாடத்திட்டம்தான் முக்கிய காரணம் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Sunday, November 27, 2011

20 நம்மை இளிச்சவாயனாக்கும் E codes..!

ஆங்கிலேய கவர்னர் ஜென்ரல் லார்ட் டல்ஹவுசி பற்றியும், 1857 -ல் நடந்த முதலா'இரண்டாம்' இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்தும் பள்ளியில் வரலாற்று பாடத்தில் தவறாமல் படித்து இருப்பீர்களே சகோ..? அப்போது, ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்த இந்திய சிப்பாய்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டன அல்லவா..? ஈரப்பதத்துடன் உப்புக்காற்று வீசும் கடல் பயணத்தை, மாதக்கணக்கில் கப்பலில் கடந்து வரும் தோட்டாக்கள், வீணாகாமல் அதே புதுப்பொலிவுடன் வந்து சேர வேண்டும் என்பதற்காக, (தற்போது கடையில் கதவு 'கீல்', தாழ்ப்பாள், பூட்டு போன்ற இரும்பு இயங்கு சாதனங்கள் வாங்கும்போது அவை கிரீஸ் எண்ணெய் பிசுக்குடன் இருப்பதை கண்டிருப்பீர்கள். அது அவற்றின் பாதுகாப்பிற்காக என்பது உங்களுக்கு தெரியும்) அந்த புதிய தோட்டாக்கள் மீது பன்றிக்கொழுப்பை தடவி, கொண்டு வந்தார்கள்.

Sunday, November 20, 2011

23 கைவாளேந்திய காரிகை..!

ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) - இவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சகோ. நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச்சார்ந்த தாதி. அதாவது 'நர்ஸ்'..! பின்னாளில் தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். இரவென்றும் பாராமல் கையில் ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு ஓடியோடி ஓய்வின்றி போரில் காயம்பட்ட வீரர்களுக்கு மருந்திட்ட காரணத்தினால் "கைவிளக்கேந்திய காரிகை" (The Lady with the Lamp) என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்டார்.

மன்னிக்கவும் சகோ..! இப்பதிவு 'இவரைப்பற்றி அல்ல' என்பதுதான் வருத்தமான செய்தி. பின் யாரைப்பற்றி..? 

Monday, November 14, 2011

34 புன்னகையே வாழ்க்கை

"புன்னகையே வாழ்க்கை" வலைப்பூ அதிபர் சகோ.முஹம்மத் ஃபைக் நேற்று எழுதிய வெளிநாட்டு வாழ்க்கை என்ற பதிவில்... எழுதப்பட்டு உள்ளவைக்கு வரிக்கு வரி பதில் எழுத விழைந்து அதனால் விளைந்ததுதான் இந்த பதிவு..! இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..! ஆனால், அதில் சொல்லப்பட்ட மற்றும் இதில் சொல்லப்படும் விஷயங்கள்தான் முக்கியம்..!

Wednesday, November 9, 2011

28 எண்:100க்கு அப்படி என்ன முக்கியத்துவம்..?

தற்போது 'ஹாட் டாபிக்', "சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் தன் "நூறாவது 100"-ஐ இத்தொடரில் அடிப்பாரா" என்பதுதான்..! கிரிக்கெட்டில் batsman நூறாவது ரன்னை அடைவதான 'century' / 'சதம்'  என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நரம்பு புடைக்கும் இரத்த அழுத்த துடிதுடிப்பு... உடலெங்கும் வியர்த்து ஊற்றும் படபடப்பு... இப்படி எல்லாமே அது ஏன் நூறை எட்டும்போது மட்டும் வருகிறது..? டெண்டுல்கரை பலவருடங்களாக நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் 'டக் அவுட்' (ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆவது) ஆகும்போது கூட அந்த அளவுக்கு ஏமாற்றத்தை முகத்தில் காட்ட மாட்டார்; ஆனால்... 99, 98, 97...90 போன்ற "nervous nineties" ரன்களில் அவுட் ஆனாலோ... "நாக்குக்கு எட்டியது தொண்டைக்குள் இறங்கவில்லையே" என்பது போல மிகப்பெரும் ஏமாற்றத்தை தன்முகத்தில் காண்பிப்பதை அப்போதெல்லாம் கண்டிருக்கிறோம். 

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனான சச்சினுக்கு மட்டுமா இந்த  டென்ஷன்..? எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும், இன்றைக்கு 56.14 ரன் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் சச்சினால் ஒரே ஒரு சாதனையை மட்டும் தன் வாழ்வில் என்றுமே கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங்கில் சாதனை ஒன்றை சாதித்து வைத்துவிட்டு சென்றாரே ஒருவர்..! அவருக்கும்தான் சகோ அன்று செம டென்ஷன்..! சரி... யார் அவர்..?

Monday, November 7, 2011

42 நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..!


(பொறுப்பற்ற மற்றும் எதிர்மறையான கருத்துகள் சொன்னதற்காக தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் கட்ஜுவை சாடினர்)
***************************


(இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கு "எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா" கண்டனம்)
***************************

(ஊடகங்களுக்கு எதிராக நீதிபதி கட்ஜுவின் தரம்தாழ்த்தும் கருத்துக்களை 'ஒலிபரப்பு எடிட்டர்கள் சங்கம்' கண்டிக்கிறது)

(கட்ஜு அறிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்)
***************************
(செய்தி ஒலி/ஒளிபரப்பாளர்கள் சங்கம் கூட, ஊடக செயல்பாடுகளை பாதுகாக்கும் பொருட்டு கட்ஜு கருத்துக்கு கண்டனம்)
***************************
News bodies - Indian Newspaper Society (INS) condemn Katju’s comment
(செய்தி அமைப்பு மற்றும் தினசரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு ஆகியன கட்ஜுவின் கருத்துக்கு கண்டனம்)
***************************
ந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர்  பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?

Tuesday, November 1, 2011

29 Traffic ராமசாமி-நீதி மன்றம்-CMDA-ஆக்ஷன் சீ(ல்)ன்..!


சென்னை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பல வருடங்களாக உள்ள மிகவும் பிரபலமான ஏகப்பட்ட வர்த்தக நிறுவனங்களில்... சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், குமரன் தங்க மாளிகை, ஜெயச்சந்திரன், காதிம்ஸ்... உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களை நேற்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (CMDA) அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

என்ன காரணமாம்..? முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக என்று செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே... இந்த நிறுவனங்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், எவ்வித உரிய நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்காது கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்ததாகவும், இப்போதுதான் அவை எல்லாம்  "பூட்டி சீல்"வைக்கும் அளவுக்கு செய்வல்வடிவம் எடுத்திருப்பதாகவும் செய்திகளை படிப்போர் மேலும் அறியலாம்.

சகோ..! ஒரு நிமிஷம்..! இப்போது நம்முள் எழும் சில முக்கிய வினாக்கள்.

Saturday, October 29, 2011

32 லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! 
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!

Thursday, October 27, 2011

35 "Stop Fire-Crackers" : இனி,வேண்டாம் பட்டாசு..!

டிஸ்கி:- சென்றவாரமே வந்திருக்க வேண்டிய இந்த பதிவை நான் வேண்டுமென்றே தீபாவளி முடிந்து வெளியிட காரணம், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும், சரியான உட்கருத்து சரியானவர்களிடம் சற்று நிதானமாகவே சென்று சேர்ந்தாலும் ஆழமாகவும் அழுத்தமாக சேரட்டும் என்பதாலுமே..! 

பொதுவாக மதச்சார்பற்ற நம் நாட்டில் சகல சமயத்தவரும் அவரவர் பண்டிகைகளை கொண்டாட உரிமை பெற்றவர்கள். அந்த வகையில் தீபாவளி கொண்டாடுவோர்...  (பலவகையினர் எனினும், இந்த பண்டிகைக்கு அவர்களால் காரணமாக நிறைய புராணக்கதைகள் கூறப்படுகின்றன... அவை பிற சாராரால் மறுக்கப்படுகின்றன... வேறு சாரார், அவை தமிழருக்கு எதிரானது என்று கடும் ஆவேசத்துடன் புறக்கணிக்கின்றனர்... என்றாலும் இப்பதிவுக்கு இதெல்லாம் அவசியமல்ல... காரணம் நான் தீபாவளி பண்டிகையை ஆதரிப்பவன் அல்லன், மாறாக... அதை கொண்டாடுவோரையும் புறக்கணிபோரையும் இணக்கமாக கருதுபவன்... அவர்களின் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக பாதுகாப்பாக கொண்டாட வாழ்த்துபவன்...) ஏறக்குறைய அனைவருமே, அதை தம் சமயப்பண்டிகையாக கொண்டாடும் போது மிக முக்கியமாக பட்டாசு வெடித்துத்தான் கொண்டாடுகிறார்கள். பட்டாசு ..! இதுதான் இப்பதிவின் மையப்பேசுபொருள்.

Sunday, October 23, 2011

49 அறுந்து விழும் லிஃப்டுக்குள் நீங்கள் இருந்தால்... உடனே செய்ய வேண்டியவை..!

நேற்று  இரவு... ஒரு "ஜீவ-மரண போராட்டமாக" கழிந்தது. இறைவன் அருளால் நான் பிழைத்து இருப்பதால் இன்று இந்த பகிர்வு..! நேற்று 'நைட் ஷிஃப்டி'ல் நான் பணிபுரியும் பவர் ப்ளாண்டில் பணி ஆரம்ப ரீடிங் போட லிஃப்டில் டாப் ஃப்ளோர் (12-th floor) சென்று, running equipments' reading எடுத்துக்கொண்டே படிகளில் இறங்கி வருதல் வழக்கம் (150 படிகள்)..!

அப்படி நான் லிஃப்டில் டாப் ஃப்ளோர் சென்றபோது... 11-வது தளத்துக்கும் 12-வது தளத்துக்கும் இடையில் லிஃப்ட் 'ஸ்ட்ரக்-அப்' ஆகி ஏதோ... 'பூகம்பம் வந்த பூமி' போல குலுங்கி ஆடி 'தடால்' என்று நகராமல் பயங்கர சப்தத்துடன் நின்று விட்டது..! உள்ளே பேனலில் எந்த பட்டனும் வேலை செய்யவில்லை. லிஃப்ட் நகரவே இல்லை. அப்போது சோதனையாக நான் மட்டுமே லிப்ஃட்டின் உள்ளே..! அப்புறம் என்ன செய்ய..? அப்போது மணி 22:15.

Monday, October 17, 2011

45 மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

விக்கியுலகம் said...
Mr.பெயரிலி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!
திரட்டியே இல்லாத நாட்களிலும் பதிவர்கள் இருந்தனரே..!? பதிவுகள் வந்தனவே..!? இவர்களுக்காகத்தானே பின்னர் திரட்டிகளே தோன்றின..?! 

இப்போது, பதிவர்கள் எந்த பதிவுகளையும் திரட்டியில் இணைக்காவிட்டால்..? திரட்டியே இருக்காதே..!? அப்படியே இருந்தாலும், அதற்கு விளம்பரம் ஏதும் வராதே..!? இத்தளத்தில் இருக்கும் 89,000+ ஹிட்ஸ்களால் எனக்கு ஏதேனும் பைசா பலன் உண்டா..? 

ஆனால், திரட்டிகள் மூலம் கிளிக் செய்து பதிவுகள் படிக்க வந்த வாசகர்கள் மூலம்... திரட்டிகளுக்கு அல்லவா ஒவ்வொரு கிளிக்குக்கும் ஹிட்ஸ் விழுந்திருக்கும்..? அதிக ஹிட்ஸ் வாங்கும் பதிவர்கள் அதிகமாக ஒரு திரட்டியில் இணைந்திருந்தால்... அதன் மூலம் திரட்டிகளுக்கு அல்லவா "அலெக்ஸா ரேட்டிங்" எகிறி, அதன் அடிப்படையில் திரட்டிகள் தமக்குவரும் விளம்பரத்தில் இலாபம் கொழிப்பர்..?! இதில், பதிவர்களுக்கு என்ன பங்கை தந்திருக்கிறார்கள்..?!

எனவே, யாரை நம்பி யார் இருக்கின்றனர் என்று புரிகின்றதா..? 

சரி, இனி பிரச்சினைக்கு செல்வோம்..!


Saturday, October 15, 2011

30 Micro-Wave ஒவன் உபயோகிக்கும் நாம் அறிய வேண்டியன:

ஒரு முக்கிய அறிவிப்பு :-


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இந்த பதிவை நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. ஓட்டுப்பட்டையையும் தூக்கி விட்டேன்.



காரணம்:-  சமீபத்தில் சக பதிவர்கள் மீது தமிழ்மண நிர்வாகி ஒருவரின் மோசமான சொற்பிரயோகமும் அதனை தொடர்ந்த அவரின் கருத்து இஸ்லாமிய முகமனை கேலி செய்வதாக இருப்பதாலும் அது குறித்து முஸ்லிம்கள் சார்பாக தமிழ்மணத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளின் விளக்கம் வரும்வரை இந்த பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படாது. யாரும் சேர்த்துவிடவும் வேண்டாம். 


என் சகோதர பதிவர்கள் பலரை கேவலமாக ஏசி இருப்பதற்கும், இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும் அவரும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் ஓட்டுப்பட்டை இணைக்கப்படும். புரிந்துணர்வு இல்லாமல் தொடரும் இவர்களின் ஒத்துவராத உழைப்புக்கு நன்றி சொல்ல தற்காலிகமாக இயலவில்லை..!


========================================================================

நாம் வாழும் தற்போதைய அதிவேக 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய சமையல் அறைகளில் 'மைக்ரோ-வேவ் ஒவன்' முக்கிய இடம் பிடித்துவிட்டது,  'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று அங்கலாய்த்தவர்ளுக்கு, மிகப்பெரிய ஆபத்பாந்தவனாக... இன்னுமொரு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பாக இவை வந்து... நிமிடங்களில் சமையலை முடித்துக்கொடுத்து விடுகின்றன. இந்நிலையில், 'மைக்ரோ வேவ் ஒவனை உபயோகிப்பது பற்றி' முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதுதான் 'மைக்ரோ ஒவன்' மற்றும் அதை உபயோகிக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்லவா சகோ..?

Saturday, October 8, 2011

49 'கையுங்காபி-பேஸ்ட்டுமாய்' அகப்பட்டேன் :-(

ந்த வினாத்தாளில் மொத்தம் 100 கேள்விகள். அனைத்தும் சிறு சிறு பதில்களுக்கான கேள்விகள்தான். 94 கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதினாலும் அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. விடை தெரியாத அந்த 6 கேள்விகளை சும்மா விட மனசு வரவில்லை. :-(  அந்த 6 கேள்விகளும் பூதாகரமாக உயர்ந்து நின்று... என்னை கேவலமாக பார்த்தது. ஏனெனில், என் வாழ்வின்  எதிர்காலத்திற்கான தேர்வுகளில் அது ஒரு மிக முக்கியமான தேர்வு.

அதுவரை குனிந்து என் பேப்பரை பார்த்தே தேர்வு எழுதியவன் முதன்முதலாக நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தால்... பக்கத்து டெஸ்க் நண்பன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்..!

'ஸ்ஸ்.. ஸ்ஸ்.. இந்த 5-க்கும் விடை  என்ன' என்றான்... கை விரித்து காட்டி, சைகையில்..!

Tuesday, October 4, 2011

31 தமிழ்மணத்திற்கு நன்றி..!





(SEPTEMBER 28, 2011 · POSTED IN சிறப்பிடுகைகள், தமிழ்மணம், நட்சத்திர வாரம் )  

{ முஸ்கி :-    பதிவு = வலைத்தளம் (WEBSITE/BLOGG)  ;; இடுகை = வலைப்பதிவு (POST) }

சென்ற வாரத்தில் இப்படி ஒரு இடுகையை தன் பதிவில் வெளியிட்டு இருந்தது, தமிழ்மணம்..!  

அவ்விடுகையில்,  

Thursday, September 29, 2011

4 பேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (final part)

இன்றைய உலகில், கணவன் மட்டும் ஈட்டும் வருவாய் குடும்பத்தின் வளமான வாழ்வுக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதிக வருவாய்க்கு 'அவசிய தேவை உள்ளது' என்றால்... கணவன்தான், தனக்கு அதிக வருவாய் வரும் வேறொரு வேலைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு மாற்று வேலை தேடி, சேர வேண்டும். ஆனால், பொதுவாக இன்னொரு குறுக்கு வழியை ஆண்களில் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். அது மனைவியை வேலைக்கு அனுப்புவது..!

Tuesday, September 27, 2011

12 மனைவி எனும்...தாய் எனும்...(first part)

பொதுவாக ஆண் பெண் இருபாலருக்கும் கலவியல் இன்பம் என்பது பொதுவானதாகவே இருப்பினும், இதனால் விளையும் இனப்பெருக்கம் மூலம் கிடைக்கும் குழந்தைச்செல்வமும் இருபாலருக்கும் உரிமையுள்ள பொதுவானதாகவே இருப்பினும், இதில், பெண்ணுக்கு மட்டுமே சுமார் 280 நாட்கள் கருவை சுமந்து, வளர்த்து, பிரசவித்து சுமார் இரண்டு வருடங்கள் தினமும் பலமுறை அவ்வப்போது தாய்ப்பாலூட்டி கண்ணுங் கருத்துமாக சீராட்டி வளர்த்தல் என்று மனிதப்படைப்பு ஒரு பக்க பால் சார்பாக(?) விதியாகியுள்ளது.

Wednesday, September 21, 2011

19 'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

Sunday, September 18, 2011

28 இது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..!

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோர தாண்டவம் ஆடிய குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டதும்... ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், பல்லாயிரக் கணக்கானோர் படுகாயப் படுத்தப்பட்டதும், இலட்சக் கணக்கானோர் உடைமைகள் களவாடப்பட்டதும்... ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கண்களில் அகப்பட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும்  தப்ப இயலாதவாறு சுமார் 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டதும்... இதற்கெல்லாம்... ஆரம்பமாக 3 நாள் சட்டம் ஒழுங்குக்கு விடுமுறை அளித்துவிட்டு... இந்த "அமைதிச்சீரழிவு" & "மதவெறி" இவற்றுக்கு எல்லாம் மூல காரணம் இன்னார் என்று தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவா நரகாசுரர்களின் தலைவன்தான் நர்ர்ர்ரேந்திர மோட்ட்டி..! 

Friday, September 16, 2011

34 குருபூஜைகள் அவசியமா..?

சகோ..! ஒரு நிமிஷம்..! நான் சாதிவெறிக்கு எதிரானவன் மட்டுமல்ல. சாதி மீது நம்பிக்கை இல்லாதவன் மட்டுமல்ல. சாதியை ஒழித்து அதை முற்றுமாய்  மறந்து வாழ்ந்துவரும் சமூகத்தில் பிறந்து வளர்ந்து அப்படியே வாழ்பவன் மட்டுமல்ல. என் சமூகம் போலவே என் மொழி பேசும் இதர மக்களும் சாதியிலிருந்து விடுபட வேண்டும் என்று பேராவல் கொண்டவன். ஆதலால், நான் யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ இந்த கோரிக்கையை இங்கே வைக்கவில்லை. சாதி வெறி மூலம் மக்கள் உயிருக்கும் உடமைக்கும் அமைதிக்கும் குந்தகம் நேரும் இந்நேரத்தில் நாம் சற்று நிதானமாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

Tuesday, September 13, 2011

21 காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...

தலையே சிதறப்போகுது...! ஆனால், ஒரு காது மட்டும் செவிடாகக்கூடாதாம்...!
சகோ..! சிலர் ஒரு கருத்தை சொல்லுவர். அதற்கு நேர்மாறாய் அவர்களின் செயல் இருக்கும். இதுபோன்ற முரண்பாடுகள் நம்மை சுற்றி நிறைய உண்டு என்றாலும்... எனக்குத்தெரிந்த என்னை அதிகம் அலைக்கழித்த பத்து முரண்பாடுகளை கீழே தொகுத்துள்ளேன். காரணம், இவற்றால் மக்களுக்கு நல்லது ஏதும் விளைவதில்லை அல்லது கேடு விளைகிறது. உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். மேலும், புதிய முரண்பாடுகள் என்று நீங்கள் வேறு சிலவற்றை நினைக்கலாம். அவற்றையும் பகிருங்கள்.

Friday, September 9, 2011

36 " படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..? "

"குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய "படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்?"  --க்கு எதிர்பதிவு இது..!

அதிராம்பட்டினத்தில் 1வது முதல் 5வது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-இல் படித்திருக்கிறேன். பின்னர்... காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில்  படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும்... +1  மற்றும் +2  மட்டும் co-education..!  ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2  வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்... 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..! அப்போது நான்...

Saturday, September 3, 2011

31 சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...

சவூதியில் "ஹுரூப்"  "Run away "  "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதென்ன சட்டம்... "ஹூரூப்"...?

Thursday, September 1, 2011

55 பதிவரே..! நிறுத்துங்கள் மூளைச்சலவையை..!

தற்கொலையை 'போராட்டம்' என்பதை நான் ஒவ்வொரு முறையும் எதிர்த்துள்ளேன். எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும் எதிர்த்துள்ளேன். இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு போராடுவது போராட்டம் அல்ல. எதிரியால் கொல்லப்படாத அது வீரமரணமும் அல்ல. தற்கொலை என்பது... 'போராட்டத்தில் எங்கே நாம் தோல்வி அடைந்து விடுவோமோ' என்று அஞ்சும் கோழைகளின் செயல்..! தற்கொலை என்பது... ஒருவேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தப்பிக்க எண்ணி முன்பே எடுத்து வைத்துக்கொள்ளும் முன்ஜாமீன்..! ஒரு வீரருக்கு வெற்றியை அனுபவிக்க உயிர் மிக அவசியம்.  

Monday, August 29, 2011

10 பண்டிகை அகதிகள்

தீபாவளி, பொங்கல், பூஜா, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் என்று நம் அரசு பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கின்றது. அதோடு அதன் பொறுப்பு முடிந்துவிட்டதா..? மக்கள் உண்மையிலேயே பண்டிகைகளை திருப்தியாக கொண்டாடுகிறார்களா, அந்த தினத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கொள்வதில்லை. தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அந்த ஊழியர்கள் அந்த பண்டிகையை கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் 'மதச்சார்பற்ற அரசுகள்' தீபாவளி போனஸ் வழங்கி விடும்.   எந்த சமயத்தினர் ஆனாலும் அதனை பெற்றுக்கொள்வார்கள். பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். இவ்வளவு ஏன்..? 'மதமே இல்லை ; கடவுளே இல்லை; தீபாவளியே இல்லை' என்போர் கூட கொடி- கோஷம்- உண்ணாவிரதம்- வேலைநிறுத்தம் என்றெல்லாம் முன்னின்று நடத்தி அடித்துபிடித்து 8.34% யாவது தீபாவளி போனஸ் வாங்கிவிடுவர்..!

Sunday, August 21, 2011

28 ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...

இதன் மூலம் சகலமானவருக்கும் நான் முன்னரே அறிவித்துக்கொள்வது என்னவென்றால்...


நான் ஊழலை எதிர்க்கிறேன்.
ஊழல் செய்வோரை எதிர்க்கிறேன்.
ஊழலுக்கு துணைபோவோரையும் எதிர்க்கிறேன்.

நான் ஜனநாயகத்தை ஆதரிக்கிறேன்.
ஜனநாயகத்தை காக்க பாடுபடுவோரை ஆதரிக்கிறேன்.
இவர்களுக்கு துணைநிற்போரையும் ஆதரிக்கிறேன்.

Thursday, August 18, 2011

37 உணவை வீணாக்காதீர் அரபிகளே..!

நான் கடந்த ஆறு வருடங்களாக சவூதியில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது. :-( மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்..! உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது..!  :-(  இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன். :-(

Saturday, August 13, 2011

36 சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution)

இவ்வருடம் அரபுலகில் புரட்சிகளின் வருடம் போலும்..! துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் லிபியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது..! அல்ஹம்துலில்லாஹ்..! சவூதி பற்றிய செய்தி என்றாலே 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உலக ஊடகங்கள் இதை மட்டும் ஏனோ வெளியில் தெரியப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக அமுக்கி விட்டன..! ஆனால், நாம் விட்டு விடுவோமா..? பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்..? லேட்டானாலும் தாளிச்சிட மாட்டோம்..?

Wednesday, August 10, 2011

26 9/11-Twin Tower-ஐ விட உயரமான புதிய அமெரிக்க டவர்..! (Photo Gallery)

2001, செப்டம்பர் 11-ல் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்களை விட மிக உயரமான புதுக்கோபுரத்தை அமெரிக்காவில் காணப்போகிறீர்கள் சகோ.! இந்தத்தளத்திலிருந்து அந்த கோபுரத்தின் அதிசய புகைப்படங்களை அஸ்திவாரத்திலிருந்தே சுட்டுக்கொண்டு வந்து... இங்கே நீங்கள் கண்டுகளிக்க வேண்டி உங்கள் கண் முன்னே காலரி பரப்பி வைத்துள்ளேன். இந்த கோபுரத்திற்கும் மற்ற உலகில் உள்ள வேறு எந்த கோபுரத்திற்கும் உள்ள பெருத்த வித்தியாசம் யாதெனில்...  இது முழுக்க முழுக்க US unfunded liabilities எனப்படும் ஒருவகை  கடன் தொகை (சுமார் 115 Trillion US Dollars) மூலமாகவே கட்டப்பட்டிருக்கிறதாம்...! அதாவது, இந்த உயரமான கோபுரத்தை கட்ட பயன்பட்ட அமெரிக்க நூறு டாலர் நோட்டுக்கட்டுகள் அவ்வளவும் அமெரிக்காவின் தற்போதைய கடன் தொகை..!

Sunday, August 7, 2011

55 நிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!

நிரூபன்  :- இலங்கையில் ஜாஃப்னாவில்... "ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல்" இவற்றையே தன் வேலையாக கொண்டுள்ளாராம் இவர்..! "நாற்று" மற்றும் "ஒளியூற்று" வலைப்பூக்களின் அதிபர்..! மிக்க நடுநிலையுடன் எவர்க்கும் அஞ்சாமல் பல உண்மைகளை பல பதிவுகளில் அதிரடியாக வலையேற்றுவதன் மூலம் வலையுலகில் புகழ் பெற்ற ஈழத்தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய முதல் நபர்..!


சித்ரா :-  எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கும் இவர்  "கொஞ்சம் வெட்டி பேச்சு" வலைப்பூவிற்கு அதிபர்..! தன் வலைப்பூவிற்கு இப்படி பெயர் வைத்திருந்தாலும்... அதற்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் நிறைய உபயோகமான நல்ல கருத்துக்களை சொல்லி வருவது நாம் தெரிந்த ஒன்றே. பாளையங்கோட்டையில் பிறந்து அமெரிக்காவாழ் தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய இரண்டாவது நபர்..!


ஆஷிக் அஹமத் :- "பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொணர்வதில் இவருக்கு டாக்டர் பட்டம் கூட கொடுக்கலாம்" (Thanks:-சகோ.bat) எனும் அளவுக்கு எழுதி வருவது நாம் அறிந்ததே..!  இப்போதெல்லாம் பரிணாமம் (Evolution) என்றாலே எனக்கு இவர் நியாபகந்தான் வருகிறது..! பாண்டிச்சேரியில் Islamic research, Semiconductor Physics, IC design என்று இருக்கும் இவர் "எதிர்க்குரல்" வலைப்பூவின் அதிபர்..! என்னிடம் மாட்டிய மூன்றாவது நபர்..!

சரி... தற்போது வெவ்வேறு நாட்டில் இருக்கும் இவர்கள் மூன்று பேரும் சவூதியில் இருக்கும் என்னிடம் எதற்காக வசம்ம்மாக மாட்ட வேண்டும்...?

Thursday, August 4, 2011

25 அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது.  மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்... இலை தழை தானே  ஆடை..!?) ஆக, 'வலியது' கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது.  இந்த வலிமை... தோல், கொம்பு, தந்தம், தோகை... இப்படியாக... மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது. 


Thursday, July 28, 2011

36 தமுஸ்கிபீடியா

நான் முன்பு ஒருமுறை அதிராம்பட்டினத்திலிருந்து காரைக்குடி நோக்கி  ரயிலில் பிரயாணித்தேன். அப்போது, வீரசோழன் எனும் ஊருக்கு... அந்த ஊரின் மதரசாவில் உஸ்தாத் பணிக்கு சென்ற -- என்னுடன் பயணம் செய்த ஒரு மவுலவியிடம் இஸ்லாம் குறித்த கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவரிடம் இருந்து பல இஸ்லாமிய மார்க்க விஷயங்களை பயணத்தின் போது கற்றுக்கொண்ட நான், ஒரு மார்க்க சட்டத்தில் நான் ஒரு கேள்வி கேட்க அவர் அதற்கு பதில் கூறும் முன் என்னிடம் ஒரு கிளைக்கேள்வி ஒன்றை கேட்டார். 

அந்த கேள்வி யாதெனில்....

"நீங்க 'அத்தா கூட்டமா'... இல்லே... 'வாப்பா கூட்டமா'...?" என்ற கேள்விதான்..!

Friday, July 22, 2011

16 'தேன்கூட்டின் ராஜாக்கள்'..!?

(This is the third article of my 'Honey Bee Series')
முதல்  கட்டுரை :  
தேன்கூடு (A Miracle in Engineering & Technology)  இதில் தேன்கூட்டை தேனீக்கள் எப்படி கட்டி  இருக்கின்றன என்று கண்டு அதிசயிக்க..!

இரண்டாவது கட்டுரை :   
தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?   இதில் தேனீக்களில் மட்டும் ஆண் 1% -ம்  பெண் தேனீக்கள் 99% -ம் எப்படி சாத்தியமாயின என்று மலைத்து சிந்திக்க..!

சென்ற பதிவில், நான் வைத்திருந்த சில கேள்விகளுக்கு விடை தேனீக்கள் தொடரின் இப்பகுதியில் கிடைக்கும். பெண் தேனீக்களில் மிக முக்கியமான வகையான உழைப்பாளி தேனீக்கள் (worker bees) பற்றி இப்பதிவில் மேலும், சற்று சிந்திப்போம்.   தேனீக்கள் என்றாலே 99% இவைதானே..! 

Friday, July 15, 2011

94 பெண்களே..! வரதட்சணை(சீரு)க்கு எதிரான போரில் இணைவீர்..!

http://genderbytes.wordpress.com/war-on-dowry/
'வரதட்சணை' என்றால் என்ன என்ற முழுமையான புரிதல் நம்மில் எல்லோரிடமும் இல்லை சகோ..! பொதுவாக வரதட்சணையை ஆங்கிலத்தில் DOWRY என்கிறார்கள். இதற்கு, பொருள் என்று நீங்கள் ஆங்கில அகராதியில் தேடிச்சென்றால், 'ஒரு மணப்பெண்ணிடம் இருந்து மணமகன் வீட்டாருக்காக திருமணத்தின் பொழுது கேட்கப்படும் பணம் & பொருள் அனைத்தும்' என்றுதான் எல்லா ஆங்கில அகராதிகளும் அறிவிக்கின்றன. ஆனால், நாம்தான் அதனை தமிழில் பலவகையாக பிரித்து வைத்துள்ளோம்..! மேலும், "அதில் பணம் சம்பந்தப்பட்ட ஒன்றாக" வரதட்சணையையும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம்.

Friday, July 8, 2011

39 " ஏழை மணப்பெண்களின் சந்தை ஹைதராபாத்" ---இந்த அவலத்திற்கு யார் காரணம்..?

"மேட்டருக்குள்" நுழையுமுன் ஒரு சிறு முன்னுரை 

ஓர் இஸ்லாமிய திருமணத்தை "இப்படித்தான் செய்ய வேண்டும்" என்ற வரையறையையும் ஒழுங்குகளையும் இஸ்லாம் நமக்கு  கற்றுத்தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த சட்டங்களை எல்லாம் பேணி ஒரு திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காட்டியபடி நடத்தும் போது தானே அது இஸ்லாமியத்திருமணமாக அமையும்..?

Monday, July 4, 2011

15 தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?

(The second article of my 'Honey Bee Series') 

தேன்கூடு (A Miracle in Engineering & Technology) என்ற சென்ற பதிவில் தேன்கூடு பற்றிய அற்புதங்களை கண்டோம். இனி, தேனீக்கள் பற்றிய அற்புதங்களை காண்போம். சகோ..! நீங்கள், பள்ளியில் கணிதப்பாடத்தில், 'நிகழ்தகவு' (probability theory) பற்றி படித்திருப்பீர்கள். அதில், 1/2 நிகழ்தகவுக்கு இரு உதாரணங்கள் சொல்வார்கள். ஒன்று... காசு சுண்டும்போது விழும் "பூவா தலையா" ; மற்றொன்று... குழந்தை பிறக்கும்போது "ஆணா பெண்ணா" நிகழ்தகவு. இதன் மூலம் நாம் என்ன அறிகிறோம் என்றால்... ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்புக்கு 50:50 Ratio வாய்ப்பே இருப்பதாக சொல்கிறது இக்கணிதம். பொதுவாக, இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் (இன அழிப்பு போன்ற மனித ஊடுருவல் இல்லாமல்) இயற்கையாக இப்படித்தான் பொதுவாக ஆண் பெண் பாலினத்தொகை இருக்கிறது.    

Friday, July 1, 2011

18 தேன்கூடு (A Miracle in Engineering & Technology)

(The first article of my 'Honey Bee Series')
.
நம்பினால் நம்புங்கள் சகோ..!  "தேன்கூடு" என்பது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல ஆராய்ச்சிகளின் இறுதியில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகத்துல்லியமான ஒரு இயந்திரத்தால், மிகக்கச்சிதமான கணித அளவீடுகள் கொண்டு மனிதனுக்காக மனிதனால் வடிவமைக்கப்பட்ட, "தேன்வேட்டைக்கு" பயன்படும் ஒரு "கருவி" என்றுதான்... நான் பல ஆண்டுகள் வரை நினைத்திருந்தேன்..! ஹி..ஹி.. :)

Saturday, June 25, 2011

35 புகைப்பிடித்தல் : ஹராமா...ஹலாலா..?

இந்தவாரம் திங்கள் அன்று,  'எதிர்க்குரல்' சகோ. ஆஷிக்  அஹ்மத் மிகச்சிறப்பாக எழுதி வெளியிட்ட 'என் மகள்களின் மூன்று கேள்விகள்' என்ற பதிவில், சகோ.லாரா பூத் சொன்ன //புகைபிடிப்பது ஹராம் இல்லை எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.// என்ற இரண்டாவது கேள்விக்கான பதிலை ஆட்சேபித்து, //சகோ.லாரன் பூத்தின் இப்புரிதல் தவறானது// என்றும், // 'படிப்போர் யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது' என்பதற்காக நீங்களாவது உங்கள் விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கலாம் சகோ. ஆஷிக் அஹமத்.// என்றேனா..?! அவ்ளோதான். நம்ம சகோதரர் உடனடியாக செயல்பட்டு... தன்னுடைய 'விளக்கமாக'  // //புகைபிடிப்பது ஹராம் இல்லை (??) எனினும்// என்று இந்த // (??) // 'குறியீட்டினை' பின்னர் சேர்த்து விட்டார். ஏனோ அது... "சிகரெட் பற்றி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், தெளிவற்ற முடிவே இஸ்லாத்தில் இருப்பது போல உணர்த்துவதாய் எனக்குப்பட்டதால்... அந்த "(??)" குறியீட்டுக்கான மேலதிக விளக்கமாகத்தான் இப்பதிவு, சகோ..!

Tuesday, June 21, 2011

34 சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! (Photo Gallery)

சகோ..! இங்கே சில மதிநுட்பமான கண்டுபிடிப்புகளை, மனிதனின் நூதன சிந்தனை திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான புதிய எண்ணங்களை, புகைப்படங்களாக வந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உவகை அடைகிறேன். எவ்வித ராயல்டியோ, பேடன்ட் பயமோ இன்றி... இவற்றை நீங்களும் உங்கள் வாழ்வில் தாராளாமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  :)

Friday, June 17, 2011

47 கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்

ஆதிமனிதர்களான ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா இருவரும் இவ்வுலகிற்கு படைத்தனுப்பப்பட்ட பின்னர், அவ்விருவரும் இப்படி இப்படித்தான் இம்மண்ணில் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அன்றே இறைவனால் கொடுக்கப்பட்ட கலாச்சாரம்தான் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி.  இதனை, தன் இறைத்தூதர் ஆதம் நபி(அலை)க்கும், அவர்மூலம் அவரின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களுக்கும் இறைவன் மூலம் பரிசளிக்கப்பட்டது. இதுவே- இந்த இஸ்லாமே- இவர்களின் வழித்தோன்றல்களும் கடைப்பிடித்தொழுக வேண்டிய வாழ்வியல் நெறி. அப்படி இருக்க, முதன்முதலில் இந்த நெறிக்கு எதிராக ஆதம் நபியின் மகன் தன் சகோதரனை கொலை செய்தார். முதல் மனித மரணம். கொலை. இப்படித்தான் இஸ்லாத்திற்கு எதிரான 'கலாச்சாரங்கள்' உலகில் ஆரம்பித்தன. கலாச்சாரம் என்றாலே.. ஒரு நாலுபேர் ஒரே மாதிரி செயல்படுவதும், அதையே அவர்களின் வழித்தோன்றல்கள் எக்கேள்வியும் இன்றி பின்பற்றுவதும் தானே..?!

Wednesday, June 15, 2011

15 அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...!? அதிர்ச்சிஅறிக்கை..!

எனதருமை சகோ..!                        
          சென்றவருடம்  டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
 ---என்று உங்க உடம்பு நோகாமல் இருக்க(?) ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி...! ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்..!? இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்..! என்னத்த சொல்ல சகோ..?! அந்த அறிக்கை சொல்வதை நீங்களே தொடர்ந்து படியுங்களேன்..!

Sunday, June 12, 2011

28 தமிழ்மாணவி சாதனை--அமெரிக்காவின் நற்செயல்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.

கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்" என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை, அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

அமெரிக்காவில் 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை திரும்பியுள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது :-

Tuesday, June 7, 2011

20 பேச்சை பேணுக

மொழியின் உயிர்நாடி பேச்சுதான். மனிதன் பிறக்கும்போதே 'பேசா'விட்டாலும், அழுகை எனப்படும் ஒலியை எழுப்புகிறான். பின்னர், சிந்தனை வளர வளர மனிதனின் தொண்டையிலிருந்து வெளியேறும் ஒலி... அதனை அடுத்த பல உறுப்புக்கள் மற்றும் அவனின் சிந்தை மூலமும் சரியாக திருத்தப்பட்டு, அந்த ஒலி வெளிவரும்போது... அது 'பேச்சு' என்றாகிறது. "ஒரு வித விதிமுறை + கட்டுக்கோப்பில்" அது இருந்தால்... இதுதான் மொழி என்றாகிறது..!   

Saturday, June 4, 2011

52 பதிவுலகின்...'தினமலம்'...(கொடுக்கி)










டிஸ்கி:


என் அன்புள்ள சகோ..!


உங்களுக்கு  நன்கு தெரியும்...!


தினமலரை முஸ்லிம்கள் எல்லோரும் 'தினமலம்' என்று எதிர்த்து எப்போது போராட்டம் புரிந்தோம்,  என்ன காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம், எதனால் 'தினமலம்' என்று சொன்னோம்... என்று...

உங்களுக்கு நன்கு தெரியும் அல்லவா..? 


அதே காரணம்தான்..!


அதே காரணம்தான்..!


அதே காரணம்தான்..!

Friday, June 3, 2011

32 Saudization=சவூதியின் பிழைப்புவாத அரசியல்

"செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது..!"--என்று ஒரு செய்தி எல்லா ஊடகத்திலும் சிறிது நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக போனியானதை பார்த்திருப்பீர்கள். இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள்  கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்று ஒரு பீதியை ஊடகத்தினர் கிளப்பினர். ஆனால், சவூதி அரசின் இதற்கான மறுப்பு விளக்க அறிக்கையை பல ஊடகங்கள் முந்திய பீதியூட்டும் செய்தியை சேர்ப்பித்தது போல இதை மக்களிடம் கொண்டுபோய் சரியாக சேர்க்க வில்லை.

Wednesday, June 1, 2011

17 அனா..பீப்பீப்பீப்பீப்பீ...அன்த்தா..மாப்பி..பீப்பீப்பீப்பீப்பீ..பாதன்..'டும்'..!

என்ன சகோ..? தலைப்பை பார்த்ததும் சும்மா 'கிர்ர்ர்ர்ரு'ன்னு இருக்கா? சொல்றேன்..! சொல்றேன்..! விளக்கமா சொல்றேன்..!

சவூதியை பொறுத்த மட்டில் ஒரு கார் பின்புறமாக சென்று வேண்டுமென்றே... 'தேமே' என பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கும் இன்னொரு காரின் முன்புறத்தில் இடித்தாலும், சாட்சிகள் இல்லையேல், பழியும் அபராதமும் வழக்கும் என்னவோ முன்புறம் இடிவாங்கியவர் மீதுதான் விடியும்..! இடித்தவர் ஏமாற்றுக்காரர் எனில், நஷ்டஈடும் பெற்றுக்கொள்வார்..! இங்கு வாகனச்சட்டம் அப்படி..!

Sunday, May 29, 2011

27 குஜராத் & மோடி - ஊழல் # 1 :- அன்னா ஹசாரேவின் அந்தர் பல்டி..!

 
அன்னா ஹசாரே என்ற முதியவர் சென்றமாதம் 'பிறந்தவர்' ஆவார்..! 

திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் இதற்கு முன்னர்  நடந்துள்ளன. அப்போதெல்லாம் இவர் ஏதும் உண்ணாவிரதாமோ, ஊர்வலமோ, அறிக்கையோ இப்படி எந்த செய்தியுமில்லை. அதற்கு முன்னர்வரை நம்மில் யாரும் அவரை அறிந்திருக்கவுவில்லை. 

Tuesday, May 24, 2011

30 முத்துக்குளிக்க வாரீஈஈகளா..? (Photo Gallery)

நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில் குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும். நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார் என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும். அந்த நேரம் வந்தவுடன் மேலே படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது கடினம்..!)

Thursday, May 19, 2011

88 நர்ர்ரேந்திர ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)

செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி கொண்ட, ஆர்.எஸ்.எஸ். அபிமான, தீவிர ஹிந்துத்வா அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது இல்லை...! அதுதான் ஜெ..!

Friday, May 13, 2011

58 'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!

வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!  

மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!

Monday, May 9, 2011

24 ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!

ஜப்பான்- ஹிரோஷிமா- 1945- ஆகஸ்ட்-6 காலை 8.15. 

அன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும், கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள் மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..! அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy). அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி முற்றாக அழிந்தது.

Saturday, May 7, 2011

19 'வாயால் வீடு கட்டி ஒரு வாயில்லா ஜீவன் சாதனை..! (Photo Gallery)

பயங்கரவாதங்கள் நிறைந்த, பணம் சம்பாரிக்கும் பரபரப்பான இவ்வாழ்கையில் சில நேரங்களில் நம்மை சுற்றி இயல்பாக நடந்து கொண்டிருக்கும் எளியோரின் சில அதிசய சாதனைகள் நம் கண்டு கொள்ளலில் ஏனோ சிக்காமலேயே போய் விடுகின்றன..!

அப்படி  ஒன்றைத்தான் இங்கே புகைப்படங்களாக தந்துள்ளேன்.

வாருங்கள்..!

எளியோருக்கு அதரவு நல்கி, அவர்களின் உழைப்பை போற்றி  அன்போடு அரவணைப்போம்..!

மனிதம் நம்மில் தழைத்தோங்கட்டும்..!

நம்முடைய  எளிய சக 'Citizen of World'-ன் ஒரு சாதனை இப்பதிவில் படங்களுடன்.!

Wednesday, May 4, 2011

21 Black Money-யை சேமிக்க & செலவழிக்க சட்டப்பூர்வ Top 10 வழிமுறைகள்.


Lots Of Money
"கருப்பு பணம்... கருப்பு பணம்" என்பார்கள்..! சிறிய வயதில்... நான், 'ஏதோ அது கருப்பு மையில் அச்சடிக்கப்பட்டு இருக்குமோ' என்று நினைத்தது உண்டு. பின்னாளில்தான் இதன் உண்மையான அர்த்தம் புரிந்தது... தன் வருவாய்க்கு உரிய வருமான வரியை அரசுக்கு செலுத்தாத கையிருப்புக்கு  பெயர் கருப்பு பணம் என்று..!  

Sunday, May 1, 2011

10 எங்கும்...எந்த நிலையிலும்...எப்படியும்...! (Photo Gallery)

உழைப்பாளர் தின சிறப்பு பதிவு
(மறுமை உழைப்பிற்காக...)

எங்கும் -- கிடைக்கும் சுத்தமான இடங்களில் எல்லாம், 
எந்த நிலையிலும் -- போர்சூழலோ, புரட்சி சமயமோ, முக்கிய விளையாட்டு இருக்கும்போதோ, மீன்பிடிக்க தூண்டில் போட்டிருக்கும்போதோ, பனிக்கட்டி மீதோ, குளிரிலோ, வெயிலிலோ, மழையியோ.... 

பாறையோ, பள்ளமோ, மேடோ, காடோ, ரோடோ, ரோட்டோர பிளாட்ஃபாரமோ, மைதானமா, ரயிலோ, பேருந்தோ, விமானமோ, கப்பலோ, கடலோ, பாலைவனமோ... என்றெல்லாம் பாராமல்....

Wednesday, April 27, 2011

21 நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..?

முன் கதைச்சுருக்கம் : நான் அப்போது தூத்துக்குடியில்உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அங்கே, அடுத்த மாத சம்பளத்தை இம்மாதமே சேர்த்து எடுத்துக்கொள்ளும், pay advance என்ற ஒரு வசதி இருந்தது. ஒரே நாளில் கையில் இரண்டு மாத சம்பளம்..! பின்னர், அடுத்த மாத சம்பளத்தில் இருந்து மாதாமாதம் ஒரு சிறுதொகை நம் வசதிப்படி பிடித்துக்கொள்வார்கள். அது முடிந்து விட்டால் மீண்டும் pay advance எடுப்போம். இதற்கு வட்டி கிடையாது.

Sunday, April 24, 2011

30 பதிவுலகில் பிரபலமான டாப் 50 ஹிட்ஸ்

பலருடைய பல பதிவுகளை பலமுறை திறந்து படித்து கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து பல நாட்கள் ஆய்விற்குப்பின் கடைசியாக 'எவை எவை எல்லாம் 'டாப் 50'-யில் இடம்பெறுவதற்கு குதியானவை'  என்று பொறுப்புடன் ஆய்ந்து அறிந்து பொருக்கி எடுக்க மண்டையை உடைத்து, அப்புறம் அடிச்சு துவைச்சி அலசி பிழிஞ்சு உதறி கொடியில காயப்போட்டு கிளிப் மாட்டி விட்டிடுக்கேன்.... ஐ மீன்... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!


எதை..?

Friday, April 22, 2011

9 வறுமையை ஒழித்திடுமா ஜகாத்..?

ஆம்..! ஒழித்திடும்..! ஆனால், இஸ்லாம் சொன்ன முறையில் வழங்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டால்..! முந்தையதொரு பதிவில், //ஜகாத்(கட்டாயதர்மம்), சதகா(தர்மம்)// என்று குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்ட    9:60 இறைவசனத்தில் 'தர்மம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் நீங்கள் குர்ஆன் அரபி மூலத்தை எடுத்து பார்த்தால் ஜகாத் என்று இருக்காது..! ஸதகா என்றுதான்  வரும்..! (... إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ ) ஆனாலும் எல்லா அறிஞர்களாலும் 'இது ஜகாத்திற்கும் உரிய விளக்கம்' என்று சொல்லப்படுவதற்கு காரணம், அதில் உள்ள அந்த மூன்றாவது பிரிவினரான தர்மங்களை 'வசூலிப்போருக்கும்' என்பதை வைத்துத்தான். 

Wednesday, April 20, 2011

10 தர்மம் செய்வது செல்வந்தருக்கு மட்டுமா உரித்தானது..?

 இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் சிந்தனையில் வேறு பட்டவர்கள். அதனால் செயலில் வித்தியாசப்படுகிறார்கள். சிந்திக்காமல் இருப்போர் பிறரைவிட தாழ்ந்து விடுகிறார்கள். சிறந்த முறையில் மூளையை உபயோகித்து சிந்திப்பவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆனால், அவர்களிடையே பொருளாதாரத்தில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வுகள்..? ஆக, என்னதான் உலகமக்கள் சிறந்த புத்திசாலிகளாய் பொருளாதாரத்திற்காக கடுமையாக முயன்றாலும் பலன் கிடைப்பதில் மட்டும் வேறுபாடு உள்ளதே..? அது ஏன்..? 

நன்கு படித்தவர்/உழைப்பவர்/வியாபாரம் செய்பவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். சரியாக படிக்காதவர்/உழைக்காதவர்/வியாபாரம் செய்யாதவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். இன்றைய ஏழை, நாளை செல்வந்தர் ஆகிறார்; இன்றைய செல்வந்தர் நாளை ஏழையாகிறார். ஆக, செல்வம் ஒரு வரைமுறையில் வருவதாக இல்லை.

Saturday, April 16, 2011

14 பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்

முந்தைய ( ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் ) பதிவில், நான் எடுத்திட்ட அந்த 9:60 குர்ஆன் வசனத்தில் வரக்கூடிய யாசிப்போர் (ஃபக்கீர்கள்) பற்றி குறிப்பிட்டிருந்தேன். "கூர்ந்து கவனித்தால் அவ்வசனத்தில் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒரு பிரிவினர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்... தேவையுடைய ஏழைகள் (மிஸ்கீன்கள்) என்போர் இந்த யாசிப்போர் (ஃபக்கீர்கள்)-ஐ அடுத்து தனியாக அந்த இறைவசனத்தில் சொல்லப்படுகிறார்கள்".

Thursday, April 14, 2011

9 ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
--------------------------------------------------------------------------------------------------------புறநானுறு

மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?) 

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...