அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label சுயதேடல். Show all posts
Showing posts with label சுயதேடல். Show all posts

Tuesday, October 30, 2012

14 உங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...


கஷ்டப்பட்டு உழைத்து, மாதம் பிறந்தால் பெற்றதைக்கொண்டு, செலவு செய்ய வேண்டிய பலவற்றில் கட்டுப்பாடாக இருந்து, அதை சிறுக சிறுக சேமித்து, கடைசியில்... 'இதுவும் ஒரு பெருகக்கூடிய சேமிப்பே..' என்று, அவ்ளோ காசு போட்டு தங்க நகை வாங்கினால்... அது, புதுசிலேயே அறுந்தாலோ-விட்டாலோ-முறிந்தாலோ-உடைந்தாலோ-நெளிந்தாலோ-நசுங்கினலோ-விரிந்தலோ... நம் மனம் என்னமாய் படாத பாடுபடுகிறது..? அதே நகை இதே காரணமாக எங்கோ தவறி, தொலைந்தாலோ... அப்போதைய நம் மனநிலையை கேட்கவே வேண்டாம்..! எத்தனை மாத உழைப்பின் சேமிப்பு..?

Thursday, May 31, 2012

25 அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

சகோ... இப்படி நீங்களோ நானோ அல்லது எவரா இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே... ஏதோ ஒரு சூழலிலே... யாரோ ஒருத்தரிடமிருந்து... மேற்படி அர்ச்சனையை நாம் எப்படியோ பெற்றிருப்போம்..! இப்போது நம் நினைவை சற்று மெல்ல மீட்டிப்பார்த்தால்... எங்கே, எப்போது, எதற்காக, யார் நம்மை அப்படி கடிந்து கொண்டது என்று நியாபகம் வந்து விடும்..! அதன்படி நியாபகம் வராவிட்டால்... இதோ உங்களுக்காக சில க்ளூஸ்..! இதன்படியும் நியாபகம் வராவிட்டால்... ஸாரி... பதிவுலக சொல்வழக்குப்படி 'இதற்கு கம்பெனி பொறுப்பல்ல'..!
.

Saturday, February 18, 2012

50 பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..!


உலகின் பற்பல சமூக மக்களிடம் எப்படியோ இப்படி ஒரு மூடப்பழக்க வழக்கம் தொற்றிவிட்டது. அனேகமாக வருடாந்திர காலண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த மடத்தனம் ஆரம்பித்து இருக்க வேண்டும்..! 

தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை  என்ற ஒருநாளை...  அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... "தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று" என்கிறார்..! இது எப்படி சரி..? லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..? விளக்கமாக காண்போம்.

குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..? 

இப்படி... கேட்டால்... Birth Day  என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி "wish you happy birthday to you" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்..! அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்..! கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்..! கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்..! எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..? 

Friday, January 27, 2012

27 citizen of world : இந்திய எதிர்ப்பா..?


citizen of world  - எனக்கு நான் இப்படி பெயர்சூட்டி பல மாதங்கள் ஆகியும் ஒருவருமே இதைப்பற்றி கேட்டதில்லை. முதன்முதலாக சகோ. அஸ்மாவின் 'பொங்கல் பொதுவான திருநாளா?' பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவரின் பெயருக்கு நான் விளக்கம்  கேட்கப்போய், பதிலுக்கு அவர் என்னுடைய citizen of world-ற்கான பெயர்க்காரணத்தை கேட்டார். 10 நாள்கூட பொறுக்க முடியாதவர், என் பெயருக்கான வேறு பொருளை தன் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி, தவறான கருத்தை இன்னொரு தளத்தில் பரப்புகிறார். இதுபோன்ற அநாகரிக செயல்களை நல்லோர் செய்யார்..!
.
இனி... எனது citizen of world பெயருக்கான பின்னணி விளக்கம்...

Thursday, August 4, 2011

25 அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது.  மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்... இலை தழை தானே  ஆடை..!?) ஆக, 'வலியது' கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது.  இந்த வலிமை... தோல், கொம்பு, தந்தம், தோகை... இப்படியாக... மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது. 


Friday, July 22, 2011

16 'தேன்கூட்டின் ராஜாக்கள்'..!?

(This is the third article of my 'Honey Bee Series')
முதல்  கட்டுரை :  
தேன்கூடு (A Miracle in Engineering & Technology)  இதில் தேன்கூட்டை தேனீக்கள் எப்படி கட்டி  இருக்கின்றன என்று கண்டு அதிசயிக்க..!

இரண்டாவது கட்டுரை :   
தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?   இதில் தேனீக்களில் மட்டும் ஆண் 1% -ம்  பெண் தேனீக்கள் 99% -ம் எப்படி சாத்தியமாயின என்று மலைத்து சிந்திக்க..!

சென்ற பதிவில், நான் வைத்திருந்த சில கேள்விகளுக்கு விடை தேனீக்கள் தொடரின் இப்பகுதியில் கிடைக்கும். பெண் தேனீக்களில் மிக முக்கியமான வகையான உழைப்பாளி தேனீக்கள் (worker bees) பற்றி இப்பதிவில் மேலும், சற்று சிந்திப்போம்.   தேனீக்கள் என்றாலே 99% இவைதானே..! 

Monday, July 4, 2011

15 தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?

(The second article of my 'Honey Bee Series') 

தேன்கூடு (A Miracle in Engineering & Technology) என்ற சென்ற பதிவில் தேன்கூடு பற்றிய அற்புதங்களை கண்டோம். இனி, தேனீக்கள் பற்றிய அற்புதங்களை காண்போம். சகோ..! நீங்கள், பள்ளியில் கணிதப்பாடத்தில், 'நிகழ்தகவு' (probability theory) பற்றி படித்திருப்பீர்கள். அதில், 1/2 நிகழ்தகவுக்கு இரு உதாரணங்கள் சொல்வார்கள். ஒன்று... காசு சுண்டும்போது விழும் "பூவா தலையா" ; மற்றொன்று... குழந்தை பிறக்கும்போது "ஆணா பெண்ணா" நிகழ்தகவு. இதன் மூலம் நாம் என்ன அறிகிறோம் என்றால்... ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்புக்கு 50:50 Ratio வாய்ப்பே இருப்பதாக சொல்கிறது இக்கணிதம். பொதுவாக, இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் (இன அழிப்பு போன்ற மனித ஊடுருவல் இல்லாமல்) இயற்கையாக இப்படித்தான் பொதுவாக ஆண் பெண் பாலினத்தொகை இருக்கிறது.    

Friday, July 1, 2011

18 தேன்கூடு (A Miracle in Engineering & Technology)

(The first article of my 'Honey Bee Series')
.
நம்பினால் நம்புங்கள் சகோ..!  "தேன்கூடு" என்பது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல ஆராய்ச்சிகளின் இறுதியில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகத்துல்லியமான ஒரு இயந்திரத்தால், மிகக்கச்சிதமான கணித அளவீடுகள் கொண்டு மனிதனுக்காக மனிதனால் வடிவமைக்கப்பட்ட, "தேன்வேட்டைக்கு" பயன்படும் ஒரு "கருவி" என்றுதான்... நான் பல ஆண்டுகள் வரை நினைத்திருந்தேன்..! ஹி..ஹி.. :)

Friday, October 22, 2010

25 ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.


previous home
Related Posts Plugin for WordPress, Blogger...