அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label ஜகாத். Show all posts
Showing posts with label ஜகாத். Show all posts

Thursday, February 2, 2012

33 சிறுகதை - ஹராம்

தானே புயல்... தானே உருவாகி, தானே மையங்கொண்டு, தானே பலம் பெற்று, தானே நகர்ந்து, தானே கரை கடந்து, தானே சுழன்றடித்து, தானே சேதப்படுத்தி, தானே வலுவிழந்து, தானே ஓய்ந்தும் போனது... ஆகிய அனைத்தும் தானேவா நிகழந்தது..? இல்லை... இது இறை விதியா..? இது மனிதர்களுக்கு இறைவனின் சோதனையா..? ...போன்ற கேள்விகளெல்லாம் மனதை ஆக்கிரமிக்க இடமே இன்றி... பெருந்துயருடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்து என் மனதை போலவே சுக்கு நூறாய் உடைந்து போன எனது தள்ளு வண்டி இட்லி கடையின் முன்னே அமர்ந்து இருந்தேன். 'இங்கே கடையை நிறுத்தினால், சாலையின் நியான் விளக்கின் உதவியுடன் இரவு வியாபாரம் களைகட்டும்' என்று நிறுத்தும்போது தெரியவில்லை... இப்படி புயல்வரும்... அதனால், இந்த மின்சார விளக்குத்தூண் என்  பொருளாதாரத்தின் மீதே விழுந்து இப்படி உடைத்து தொலைக்கும் என்று..!

Friday, April 22, 2011

9 வறுமையை ஒழித்திடுமா ஜகாத்..?

ஆம்..! ஒழித்திடும்..! ஆனால், இஸ்லாம் சொன்ன முறையில் வழங்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டால்..! முந்தையதொரு பதிவில், //ஜகாத்(கட்டாயதர்மம்), சதகா(தர்மம்)// என்று குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்ட    9:60 இறைவசனத்தில் 'தர்மம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் நீங்கள் குர்ஆன் அரபி மூலத்தை எடுத்து பார்த்தால் ஜகாத் என்று இருக்காது..! ஸதகா என்றுதான்  வரும்..! (... إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ ) ஆனாலும் எல்லா அறிஞர்களாலும் 'இது ஜகாத்திற்கும் உரிய விளக்கம்' என்று சொல்லப்படுவதற்கு காரணம், அதில் உள்ள அந்த மூன்றாவது பிரிவினரான தர்மங்களை 'வசூலிப்போருக்கும்' என்பதை வைத்துத்தான். 

Saturday, April 16, 2011

14 பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்

முந்தைய ( ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் ) பதிவில், நான் எடுத்திட்ட அந்த 9:60 குர்ஆன் வசனத்தில் வரக்கூடிய யாசிப்போர் (ஃபக்கீர்கள்) பற்றி குறிப்பிட்டிருந்தேன். "கூர்ந்து கவனித்தால் அவ்வசனத்தில் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒரு பிரிவினர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்... தேவையுடைய ஏழைகள் (மிஸ்கீன்கள்) என்போர் இந்த யாசிப்போர் (ஃபக்கீர்கள்)-ஐ அடுத்து தனியாக அந்த இறைவசனத்தில் சொல்லப்படுகிறார்கள்".

Thursday, April 14, 2011

9 ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
--------------------------------------------------------------------------------------------------------புறநானுறு

மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?) 

previous home
Related Posts Plugin for WordPress, Blogger...