அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, March 31, 2013

63 சில தனித்தமிழ் ஆர்வலர்களின் முகமூடி கிழிகிறது

முன்  சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார் சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமென சகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.

'மரூஉ' என்பது தமிழ்ப்பெயர்ச்சொற்களில், காலமாற்றத்தினால் அதன் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று  மருவி, இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல். உதாரணமாக, தஞ்சாவூர்=> தஞ்சை ஆகும். உபாத்தியாயர்=> வாத்தியார் ஆவார். சர்க்கரை=> சக்கரை ஆகிவிடும். இதுபோல தமிழில் 'மரூஉச்சொல்' நிறைய இருக்கின்றது=> இருக்கிறது=> இருக்குது=> இருக்கு=> ஈக்கிது=> கீது..! 

ஆனால், 'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தை அதுபோல... மஸ்ஜித் - மஸ்சித் -மசித் என்றுதான் மருவி இருக்கலாம். 'மசூதி' என்று பொருந்தா ஒலியாக மருவ வேண்டுமானால் யாரோ சிலர் அந்த பெயரை புதிதாக வேண்டுமென்றே உண்டாக்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்..?
நன்றி : www.thangampalani.com

Saturday, March 30, 2013

5 நம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..?



கொலைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் மரணதண்டனை என்பது சரியான சட்டம்தான், அப்போதுதான் அக்குற்றம் செய்வோரின் மனதில் பயத்தை உண்டாக்குவதன்மூலம் அக்குற்றங்கள் குறையும், பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதியாகவும் அமையும் என்கிற வாதமும் சரியே..! இதை அப்படியே 100% ஏற்கிறேன்..!

ஆனால்... நம் நாட்டில் கொலைக்கு மரண தண்டனை சட்டம் பல்லாண்டுகளாக இருந்தாலும்... கொலைகள் ஏன் குறையவில்லை..? எப்படி அதிகரிக்கிறது..? எதற்கு மக்கள் மனதில் பயம் வரவில்லை..?

பாலியல் வல்லுறவுக்கு புதிதாக மரண தண்டனை சட்டம் வகுத்தாலும்... பாலியல் வல்லுறவு குறையுமா..? அல்லது கொலை போலவே அதுவும் கூடுமா..?

நம் நாட்டில் மரண தண்டனையே கூடாது என்று போராடுவோருக்கும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போருக்கும் இதில்   ஒரு தெளிவான புரிதல் அவசியம் வேண்டும்.  அதை நோக்கியே இப்பதிவு..!

Sunday, March 24, 2013

21 செம்மொழியில் இதெல்லாம் சரியா..?

சில சமயம் வேற்று மொழி வார்த்தைகள் சொல்ல விழையும் பொருளை சரியாக புரியாமல் எவரோ ஒருவர், முதலில் தவறாக ஒரு தமிழ் பெயரை இட்டுவிடுகிறார். பின்னாளில் அதுவே சரிகாணப்படாமல் பிரபலமாகி விடுகிறது. அதன் பின்னர் எந்நாளோ ஒரு நந்நாள் சரியான மொழியாக்கத்தை ஒரு நல்லார் சொன்னாலும் அது எடுபடுவதில்லை. அப்படி சிலபல பதங்கள் இருந்தாலும் நாம் நன்கு அறிந்த ஒன்று "பள்ளிவாசல்"..! 'மஸ்ஜித்' என்ற அரபி பதத்திற்கு மொழியாக்கமாம்..! யாரு வச்சாங்களோ தெரியலை. School Gate / School Entrance என்றுதான் அர்த்தம் ஆகிறது..! இது தவறானது என்று அறிவுக்கு புரிந்தாலும், சரியான ஒரு தமிழ் வார்த்தையை எவரேனும் இன்று சொன்னாலும் அது எடுபடாது..! புறக்கணிக்கப்படும்..! ஏனெனில்... தவறே பழகி விட்டது..! இதுதான் இன்றைய நமது நிலை..! இந்நிலையை நாம் இனியாவது மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..!

Saturday, March 16, 2013

12 16-ல் செக்ஸ் OK..! But, 18/21-ல்தான் மேரேஜ்..! இது சட்டமாம்..!

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் தமக்குள் நடத்தும் உடலுறவுக்கான (Consensual Sex) வயது வரம்பை, 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும்  விபச்சாரத்துக்கான புதிய சட்டத்துக்கு, நேற்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாம்..!

'குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்' (?)

'மைனர் விபச்சாரத்துக்கான(?) இந்த  புதிய மேஜர் சட்ட திருத்தம்(!) ஏன் வந்தது' என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது. 

Friday, March 8, 2013

6 தேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்


இன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. 

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 

( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

Sunday, March 3, 2013

18 சவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு.


அன்று ஒருநாள் என் நிறுவனத்தில் பணியில் இருந்த சமயம், ஒரு SMS வந்தது சகோ. சவூதி அரசு தொலை தொடர்பு நிறுவனமான STC யின் ALJAWAL - SAWA சிம் நிறுவனத்திலிருந்துதான், அந்த SMS..!

அதில்... 
//
Dear Customer
Thank you for choosing STC and we confirm that your SAWA 25 - ???-25 ???? ????? Phone # 509133278 has been successfully registered.
//
என்று இருந்தது.

குழம்பினேன். நான் இங்கே எப்போ சிம் தேர்ந்தெடுத்தேன்..? யாரோ ஏதோ ஒரு SIM நம்பர் பதிவு செய்தால், அந்த குறுந்தகவல் எனக்கேன் வருகிறது..? 'எப்படியோ எங்கோ தவறு நடந்துள்ளதே...' என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே... அடுத்த SMS... வந்தது. அதிலும் அதே வாசகங்கள்... ஆனால், வேறு ஒரு SIM எண் பதிவாகிய தகவல்..! உடனே, இன்னொரு SMS, அதை தொடர்ந்து இன்னொன்று... மேலும் இன்னொன்று... இப்படியே 7 SMS வந்தது..! ஏழு சிம் நம்பர்கள் பதிவான குறுந்தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு ஏன் வர வேண்டும்..? அப்படியெனில் அவை எனது பெயரில் எனக்கே தெரியாமல் பதிவு செய்யப்படுகின்றவையா..? உடனே... மொபைல் கஸ்டமர் கேரிடம் பேசலாம் என்றால்... பணிகளுக்கு இடையில் பல முறை முயன்றும் தொடர்பு பெற முடியவில்லை.

பின்னர், சிந்தித்த போது பல பின்னணி விஷயங்களை யூகித்தேன். 
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...