நான் முன்பு ஒருமுறை அதிராம்பட்டினத்திலிருந்து காரைக்குடி நோக்கி ரயிலில் பிரயாணித்தேன். அப்போது, வீரசோழன் எனும் ஊருக்கு... அந்த ஊரின் மதரசாவில் உஸ்தாத் பணிக்கு சென்ற -- என்னுடன் பயணம் செய்த ஒரு மவுலவியிடம் இஸ்லாம் குறித்த கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவரிடம் இருந்து பல இஸ்லாமிய மார்க்க விஷயங்களை பயணத்தின் போது கற்றுக்கொண்ட நான், ஒரு மார்க்க சட்டத்தில் நான் ஒரு கேள்வி கேட்க அவர் அதற்கு பதில் கூறும் முன் என்னிடம் ஒரு கிளைக்கேள்வி ஒன்றை கேட்டார்.
அந்த கேள்வி யாதெனில்....
"நீங்க 'அத்தா கூட்டமா'... இல்லே... 'வாப்பா கூட்டமா'...?" என்ற கேள்விதான்..!