தேசியக்கொடியும் தேசப்பற்றும்
குடியரசு தினத்தை முன்னிட்டு 'கொடியேற்றும் யாத்திரை' என்ற பெயரில் கல்கத்தாவில் இருந்து கிளம்பி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தையும் அமைதி சீர்குலைவையும் வீண் மதக்கலவரத்தையும் விதைக்க பாஜக சங்பரிவார ஹிந்துத்வா சதிகாரக்கூட்டம் திட்டமிட்டுள்ளது.
'இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்' என்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தி 'முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை' என்ற நச்சுக்கருத்தை விதைப்பதுதான் இவர்களின் நோக்கம்.
'தேசப்பற்று என்றால் என்ன?' என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.