அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, December 27, 2013

11 'ப்ளூ டீ' போடுவது எப்படி?



சகோஸ்...
'சுடுதண்ணீர்  போடுவது எப்படி?'ன்னு எல்லாம் வலைப்பூவில் கத்து தறாங்க. 
உங்களுக்கு அதை பார்க்க செமை கடுப்பா  இருக்குமே..? இருக்கும்..!

ஏன்னா, உங்களுக்கு 'ப்ளாக் டீ' கூட போட தெரியும். (வித் அவுட்... மில்க்)
'ப்ரவுன் டீ' கூட போடுவீங்கதானே..? (டிகாஷன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா...)
'ஆரஞ்ச் டீ' கூட போட்டு இருப்பீங்க. (ஹி..ஹி... அதாங்க.. டிகாஷன் கம்மியா, பால் கொஞ்சம் ரொம்ப தூக்கலா...)
இது மட்டுமின்றி, மூலிகைச்சாறு மணக்க மணக்க 'கிரீன் டீ' போட்டு குடிக்கும் சத்தான ஆளுங்களும் இங்கே இருப்பீங்க.

சரி, அதெல்லாம் ஓர் ஓரமா இருக்கட்டும். ஆனால்... உங்களுக்கு,
'ப்ளூ டீ' போட தெரியுமா..? இதுக்கு முந்தி 'ப்ளூ டீ' போட்டு இருக்கீங்களா..?

என்ன...? தெரியாதா..?

அப்படின்னா, அது பத்தி கத்துக்கணும்ன்னா,
வாங்க... சொல்லி தருகிறேன்..!
நாலே நாலு ஈஸி ஸ்டெப்ஸ்தான், சகோஸ்..!

படத்தோடு தெளிவா விளக்கி இருக்கேன்... ஒரே ஒரு முறை பார்த்துக்கிட்டீங்கன்னா கூட போதும்... அப்புறம், 'ப்ளூ டீ' போடுறதுல நீங்க மாஸ்டர் ஆகிருவீங்க..!

கம் ஆன் சகோஸ்...!


Monday, December 9, 2013

4 'தாயா-தாரமா' பனிப்போரை சமாளிப்பது எப்படி..?

ஆண்களே... இந்த பதிவு உங்களுக்காகத்தான்..! ஆனால், 
பெண்களும் படித்தால் அது அவர்களின் நல்லதுக்குத்தான்..!

இளம் ஆண்களே... நீங்கள் பிறந்தது முதல்  குப்புத்துக்கொள்வது, உட்கார்வது, ஊர்வது, நிற்பது, நடப்பது, ஓடுவது... வீடு, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி, அர்ரியர்ஸ், நேர்முகத்தேர்வு, அலுவலகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போராட்டம், வெளியுலகம், அரசியல், பந்த், கலவரம், விலைவாசி.... என்று இன்றுவரை... எண்ணற்ற பல தடைகளை தகர்த்து எரிந்து, அவற்றை எல்லாம் உடைத்து சாதனை படிக்கட்டுகளாக்கி, ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி கட்டியவாறே ஏறி வந்திருப்பீர்கள்..! 

ப்ச்... இதெல்லாம் உங்கள் வாழ்வில் ஒண்ணுமே இல்லை சகோ..! ஜுஜூபி..!

அப்புறம்... வேறு எது ஜேசிபி..?

ம்ம்ம் சொல்றேன்... சொல்றேன்... இனி...திருமணம் என்ற ஒன்று ஆன பின்னால்... ஏகப்பட்ட சோதனைகள் இருந்தாலும்... அவற்றில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்றாலும்... அதில் மிக முக்கிய சோதனையாக... "மாமியார்-மருமகள் பனிப்போர்" என்ற ஒன்று ஆரம்பித்து ஜெகஜோராக நடக்குமே... அங்கேதான் உங்கள் நிஜ திறமை தெரியவரும்..!


சப்போஸ் இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால்... அப்படி ஒன்று நடக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. நடந்தே தீரும். அப்போதுதான்.... உங்களுக்கு ஆரம்பிக்கிறது... வாழ்வினில்... நான் சொல்ல வரும்... தி ரியல் சேல்லஞ்..!

Monday, December 2, 2013

1 மிரட்டும் கரிக்கோல் கூட்டம் (Photo Gallery)


என்ன இவைகள்..? 
ஏதும் ஆழ்கடல் புது வகை ஜந்துக்களா..? 
அல்லது, அமேசான் முட்புதர் காடுகளில் மண்டிக்கிடக்கும் இதுவரை எவரும் அறியாத அரியவகை தாவரங்களா..? 
அல்லது, மின்னணு நுண்ணோக்கியில் கண்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பாக்டீரியா - வைரஸ் போன்ற நுண்கிருமிகளா..? 
அல்லது, UFO வில் வந்த வேற்று கிரகவாசிகளா..?
அட..... என்னதான் இவைகள்..?
பயப்படாமல் கொஞ்சம் கிட்டே சென்று உற்றுப்பார்த்து சொல்லுங்களேன் சகோஸ்..! 'Photo Gallery' பதிவு போட்டு நாளாச்சு..!

Sunday, November 10, 2013

10 தமிழா..! 'பகுதி நேர பிணம்' ஆகாதே..!



வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!

Thursday, October 31, 2013

1 வலக்கை வாட்ச்

வலது  கையில் வாட்ச் கட்டினால் என்ன தப்பு..?
இடது  கையில் தான் வாட்ச் கட்டனும்னு சட்டமா..?
இடது கையில் வாட்ச் கட்டும் கலாச்சாரம் எப்படி வந்தது..?

Friday, September 20, 2013

4 பாலியல் புகார் அளிக்கும் சிறுமிகளை தாக்கும் Ramjetmalonia நோய்

இந்த வாரம், தம் 90 வது பிறந்த நாள் விழாவில்...
தம்மை வாழ்த்த வந்த அத்வானி மோடியுடன் ராம் ஜெத்மலானி.
'Ramjetmalonia' - A new Disease Discovered @ Jodhpur High Court

"ராம்ஜெத்மலோனியா" வியாதி ( Ramjetmalonia Disease ) என்ற... பெண்ணுக்கு மட்டுமே (?!) வரும் புதியதொரு வியாதி (?!) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

===>>யாரால் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது..?

"ஆண்களை கவர்ந்து இழுக்கும்" இந்நோயை கண்டுபிடித்து உலக மருத்துவ சமூகத்திற்கு காணிக்கையாக்கியுள்ளார்... சங் பரிவார பிரபல கிரிமினல் லாயர் ஒருவர்..! அவரின் பெயரிலேலே அந்த நோயின் பெயரும் வழங்கப்படுகிறது..! 

===>>இந்நோய் யாருக்கு வரும்..? 

Wednesday, September 4, 2013

8 மூளைச்சாவு + உயிர்தானம் : சதியா..? விதியா..?

(சிறுகதை)
 மாநகரில்  ஒருநாள்...


Now alive & active..!

ICU விலிருந்து வெளியே வந்த... அந்நாட்டின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்... கையை பிசைந்து கொண்டே சொன்னார்....

"சார்... வந்து... மனசை தேத்திக்குங்க... ஒரு அதிர்ச்சியான செய்தி சொல்ல போறேன்.."

"டாக்டர், என்ன சொல்றீங்க.."

....செய்தியை கேட்கும் முன்னரே அதிர்ந்தார்... மாநிலத்தின் 'டாப் தர்ட்டி ரிச் பிசினஸ் மேக்நேட்ஸ்' -ல் ஒருவரான அந்த பிரபல நிறுவனத்தின் அதிபர்..!

"ஆமா சார், எங்களால் ஆன எல்லா முயற்சியும் பண்ணி பார்த்துட்டோம்... ம்ஹூம்... முடியலை... உங்க பையனின் இதயம் செயல் இழந்துக்கிட்டு வருது... இன்னும் சில நாட்கள்தான்.... அதிக பட்சம் பத்து நாட்களே... அவரின் இதயம் துடிக்கும்..!

Wednesday, August 14, 2013

29 ஜனநாயகவிரோதிகளா நீங்கள்..?



பல்வேறு குண்டுவெடிப்பு/துப்பாக்கிச்சூடு நாச வேலைகள் செய்தவனை 'பயங்கரவாதி' என்று அறிவித்து, { 'dead-or-alive' bounty of £10,000 on his head என்று } பிரிட்டன் அரசால் தலைக்கு விலை வைக்கப்பட்ட மெனிச்சம் பெகின் என்ற கொடியவனைத்தான் இஸ்ரேலின் பிரதமராக அந்நாட்டு மக்கள் பிந்நாளில் தேர்ந்தெடுத்தனர்.
---  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
---  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற  கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
---  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்'  என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
----  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

ஆனால்...

Saturday, July 27, 2013

2 என்னாது..? ரமளான் புனித மாதமா..!?



கேள்வி : இஸ்லாத்தில் ரமளான் புனித மாதமா..? 
பதில் : இல்லை..!

சில விஷயங்கள் நாளடைவில் நமது பேச்சு வழக்கில் "புனிதமிக்க மாதமான ரமளான்... ரமளான் எனும் புனித மாதம்..." என்று திரும்ப திரும்ப பேசி எழுதி எல்லா இடத்திலும் தவறான கருத்துருவாக்கம் கொண்டு மனதின் ஆழத்தில் அதுவே சரிபோல பதிந்து விடுகிறது. பின்னர் அதை எப்பாடு பட்டு நீக்க போராடினாலும் மிகவும் கடினமாகிவிடுகிறது. மார்க்கத்தில் பல்வேறு விஷயங்கள் இப்படித்தான் சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. இதற்கு இன்னொரு உதாரணம் தான் "ரமளான் ஒரு புனிதமாதம்" என்ற நமது தவறான புரிதல்..!

இதை அதிகமாக முஸ்லிம் அல்லாத மக்களே... 'சிறப்பித்து உயர்வாக சொல்ல வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி சொல்லப்போக நாளடைவில் முஸ்லிம்கள் மனதிலும் அப்படியே அழுத்தமாக அமர்ந்து விட்டது..!

'ரமளான் புனித மாதம்'  இது இஸ்லாமிய அடிப்படையில் தவறு..! 

ரமளான் புனித மாதம் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை. வேறு பல சிறப்புகள் கொண்ட மாதமே ரமளான்..! அதே நேரம் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ்வும் வேறு நான்கு மாதங்களைத்தான் முஸ்லிம்களுக்கு புனித மாதங்களாக்கி இருக்கிறார்கள். அந்த நான்கில்  ரமளான்  இல்லை..!

எனவே... நாம் நம் இஷ்டத்துக்கு அஞ்சாவதா ஒரு மாசத்தை சேர்க்க கூடாது. அதற்கு நமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை.

Tuesday, July 23, 2013

9 தமிழக காலிக்கல்வி கூடங்கள்

தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!



Rashatriya Madhayamic Shikasha Abhiyan (‪‎RMSA‬) என்ற அமைப்பு எடுத்த 2012-13 கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, July 3, 2013

1 '#பயங்கரவாதம்' - ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?

'#பயங்கரவாதம்'
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை

நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும்  காரணம் அல்ல..! எனில், 'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' எல்லாம் எப்படி முளைக்கிறது...?

அநீதமான ஆட்சியாளர்களால்தான்..!

Sunday, June 9, 2013

3 நம்மிருவரில் யார் மிகப்பெரிய தீயவன்?


"நம்ம ரெண்டு பேர்லே எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும், இதுதான் ரூல்ஸ். குறுகிய காலத்தில் நாந்தான் மிகப்பெரிய கெட்டவன் ஆகிருக்கேன். ஸோ, நீ ரிடயர்ட் ஆகிறு..."


"தப்பு... தப்பு..! இந்த ரூல்ஸ் படி பார்த்து இருந்தால்... நானல்லவா 3 முறையும் தலைவர் ஆகி இருந்திருக்கணும்..? 13 நாள், 13 மாசம், 5 வருஷம்ன்னு தொடர்ச்சியா படாபாய்க்கே வழி விட்டுகொடுத்தேன்லே..? யூ மஸ்ட் ஃபால்லோ தட் சேம் ரூல்ஸ்".

Thursday, June 6, 2013

9 @ Co-Education Girls : அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை..?


இப்போதெல்லாம்... ஊடகங்களில் அடிக்கடி தென்படும்  கெட்ட செய்திகள்... 'மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியன் கைது', 
'மாணவனோடு கள்ளகுடித்தனம் நடத்திய ஆசிரியை சஸ்பென்ட்', 
'மாணவி கர்ப்பம், ஆசிரியன் தலைமறைவு', 
'மாணவனோடு ஆசிரியை ஓட்டம்'... ... ...இப்படி..!  

கல்வி கற்கும் ஓர் உயர்ந்த இடத்தில், கற்பிக்கும் ஆசிரியப்பணி எனும் ஓர் உன்னத தொழிலில்... எப்படி இப்படி இவர்களால் கலவிக்கும் இடம் தர முடிகிறது..? 

Thursday, May 9, 2013

28 மதினாவின் மலர்ந்த மின்குடை மொட்டாகி காம்பாகி ஒளியாகி (Photo Gallery)

வியாழன் காலையில் மதினா பள்ளிக்கு உள்ளே செல்லும்போதே எல்லா நிழற்குடைகளும் விரிக்கப்பட்டே இருந்தன..! விரியும்போது இம்முறையும் நேரில் பார்க்க முடியவில்லை..! என்ன செய்ய..? மதினா போய் சேர்ந்ததே ஏழரை மணிக்குத்தானே..! ஆகவே, வீடியோவில்தான் பார்க்க வேண்டும்..! இதற்கு முன்னர் பார்த்திராவிட்டால் நீங்களும் இந்த யூ ட்யூப் வீடியோ பார்த்துக்கொள்ளுங்கள்..!




'அட்லீஸ்ட்... இன்று மாலை குடை மடங்கும் போதாவது மறக்காமல் பார்த்து வீடியோ எடுக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேன்..!

Tuesday, April 9, 2013

30 தர்கா வழிபாடு எனும் மூடநம்பிக்கை ஒழிக

“பிராத்தனையும் வணக்கமாகும்" :- நபி(ஸல்) (அபூதாவூத், திர்மிதி)
“அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத்தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” :-இறைவன்  (குர்ஆன் 31:30)
சாலையோர கி.மீ. கல்லை எல்லாம் கடவுளாக வணங்குவது அறியாமை என்றால்...  ஒரு மனிதரை அடக்கம் செய்து அதற்கு மேல் கல்லை கட்டி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்திப்பதும் அறியாமேயே..! அந்த கல்லுக்கு பக்கச்சுவரும் கூரையும் போட்டுவிட்டால் அதுதான் தர்காஹ்..! தர்கா வழிபாடு தாங்கொணா வழிகேடு..!
 
நன்றி : ஏகத்துவ அழைப்பாளன்.ஹுசைன்


பிரபலமான பெரிய தர்கா எனில், அங்கே முஸ்லிம் அல்லாத மாற்று மத மக்களும் ஏராளமாக வருவது சகஜம். அப்படியான ஒரு தர்காவுக்கு காரில் வந்து இறங்கி, அங்கே தாடி தொப்பி பச்சை ஜிப்பா வெள்ளை கைலி சகிதம் உட்கார்ந்திருந்த பெரியவரிடம், ஒரு சர்க்கரை பொட்டலம், ஊதுபத்தி பாக்கெட், மூன்று வாழைப்பழம் எல்லாம் தந்து ஃபாத்திஹா ஓத சொல்லி கேட்டு... நேர்ச்சை தாயத்து வாங்கி கட்டி, தர்ஹாவில் அங்க பிரதட்சணம் எல்லாம் செய்து, உண்டியலில் பயக்தியுடன் காணிக்கை செலுத்திவிட்டு, நீண்ட நேரம் சமாதியை கண்மூடி கும்பிட்டு பிரார்த்தித்துவிட்டு, அங்கே ஓரமாக ஒரு கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை நெற்றியில் திருநீறு போல பூசிக்கொண்டு வந்த  ஒரு படு டீக்காக ட்ரெஸ் போட்டிருந்த மாற்று மத நண்பரிடம்... மெல்ல பேச்சு கொடுத்தேன்...... 
.

Sunday, March 31, 2013

63 சில தனித்தமிழ் ஆர்வலர்களின் முகமூடி கிழிகிறது

முன்  சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார் சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமென சகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.

'மரூஉ' என்பது தமிழ்ப்பெயர்ச்சொற்களில், காலமாற்றத்தினால் அதன் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று  மருவி, இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல். உதாரணமாக, தஞ்சாவூர்=> தஞ்சை ஆகும். உபாத்தியாயர்=> வாத்தியார் ஆவார். சர்க்கரை=> சக்கரை ஆகிவிடும். இதுபோல தமிழில் 'மரூஉச்சொல்' நிறைய இருக்கின்றது=> இருக்கிறது=> இருக்குது=> இருக்கு=> ஈக்கிது=> கீது..! 

ஆனால், 'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தை அதுபோல... மஸ்ஜித் - மஸ்சித் -மசித் என்றுதான் மருவி இருக்கலாம். 'மசூதி' என்று பொருந்தா ஒலியாக மருவ வேண்டுமானால் யாரோ சிலர் அந்த பெயரை புதிதாக வேண்டுமென்றே உண்டாக்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்..?
நன்றி : www.thangampalani.com

Saturday, March 30, 2013

5 நம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..?



கொலைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் மரணதண்டனை என்பது சரியான சட்டம்தான், அப்போதுதான் அக்குற்றம் செய்வோரின் மனதில் பயத்தை உண்டாக்குவதன்மூலம் அக்குற்றங்கள் குறையும், பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதியாகவும் அமையும் என்கிற வாதமும் சரியே..! இதை அப்படியே 100% ஏற்கிறேன்..!

ஆனால்... நம் நாட்டில் கொலைக்கு மரண தண்டனை சட்டம் பல்லாண்டுகளாக இருந்தாலும்... கொலைகள் ஏன் குறையவில்லை..? எப்படி அதிகரிக்கிறது..? எதற்கு மக்கள் மனதில் பயம் வரவில்லை..?

பாலியல் வல்லுறவுக்கு புதிதாக மரண தண்டனை சட்டம் வகுத்தாலும்... பாலியல் வல்லுறவு குறையுமா..? அல்லது கொலை போலவே அதுவும் கூடுமா..?

நம் நாட்டில் மரண தண்டனையே கூடாது என்று போராடுவோருக்கும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போருக்கும் இதில்   ஒரு தெளிவான புரிதல் அவசியம் வேண்டும்.  அதை நோக்கியே இப்பதிவு..!

Sunday, March 24, 2013

21 செம்மொழியில் இதெல்லாம் சரியா..?

சில சமயம் வேற்று மொழி வார்த்தைகள் சொல்ல விழையும் பொருளை சரியாக புரியாமல் எவரோ ஒருவர், முதலில் தவறாக ஒரு தமிழ் பெயரை இட்டுவிடுகிறார். பின்னாளில் அதுவே சரிகாணப்படாமல் பிரபலமாகி விடுகிறது. அதன் பின்னர் எந்நாளோ ஒரு நந்நாள் சரியான மொழியாக்கத்தை ஒரு நல்லார் சொன்னாலும் அது எடுபடுவதில்லை. அப்படி சிலபல பதங்கள் இருந்தாலும் நாம் நன்கு அறிந்த ஒன்று "பள்ளிவாசல்"..! 'மஸ்ஜித்' என்ற அரபி பதத்திற்கு மொழியாக்கமாம்..! யாரு வச்சாங்களோ தெரியலை. School Gate / School Entrance என்றுதான் அர்த்தம் ஆகிறது..! இது தவறானது என்று அறிவுக்கு புரிந்தாலும், சரியான ஒரு தமிழ் வார்த்தையை எவரேனும் இன்று சொன்னாலும் அது எடுபடாது..! புறக்கணிக்கப்படும்..! ஏனெனில்... தவறே பழகி விட்டது..! இதுதான் இன்றைய நமது நிலை..! இந்நிலையை நாம் இனியாவது மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..!

Saturday, March 16, 2013

12 16-ல் செக்ஸ் OK..! But, 18/21-ல்தான் மேரேஜ்..! இது சட்டமாம்..!

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் தமக்குள் நடத்தும் உடலுறவுக்கான (Consensual Sex) வயது வரம்பை, 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும்  விபச்சாரத்துக்கான புதிய சட்டத்துக்கு, நேற்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாம்..!

'குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்' (?)

'மைனர் விபச்சாரத்துக்கான(?) இந்த  புதிய மேஜர் சட்ட திருத்தம்(!) ஏன் வந்தது' என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது. 

Friday, March 8, 2013

6 தேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்


இன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. 

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 

( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

Sunday, March 3, 2013

18 சவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு.


அன்று ஒருநாள் என் நிறுவனத்தில் பணியில் இருந்த சமயம், ஒரு SMS வந்தது சகோ. சவூதி அரசு தொலை தொடர்பு நிறுவனமான STC யின் ALJAWAL - SAWA சிம் நிறுவனத்திலிருந்துதான், அந்த SMS..!

அதில்... 
//
Dear Customer
Thank you for choosing STC and we confirm that your SAWA 25 - ???-25 ???? ????? Phone # 509133278 has been successfully registered.
//
என்று இருந்தது.

குழம்பினேன். நான் இங்கே எப்போ சிம் தேர்ந்தெடுத்தேன்..? யாரோ ஏதோ ஒரு SIM நம்பர் பதிவு செய்தால், அந்த குறுந்தகவல் எனக்கேன் வருகிறது..? 'எப்படியோ எங்கோ தவறு நடந்துள்ளதே...' என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே... அடுத்த SMS... வந்தது. அதிலும் அதே வாசகங்கள்... ஆனால், வேறு ஒரு SIM எண் பதிவாகிய தகவல்..! உடனே, இன்னொரு SMS, அதை தொடர்ந்து இன்னொன்று... மேலும் இன்னொன்று... இப்படியே 7 SMS வந்தது..! ஏழு சிம் நம்பர்கள் பதிவான குறுந்தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு ஏன் வர வேண்டும்..? அப்படியெனில் அவை எனது பெயரில் எனக்கே தெரியாமல் பதிவு செய்யப்படுகின்றவையா..? உடனே... மொபைல் கஸ்டமர் கேரிடம் பேசலாம் என்றால்... பணிகளுக்கு இடையில் பல முறை முயன்றும் தொடர்பு பெற முடியவில்லை.

பின்னர், சிந்தித்த போது பல பின்னணி விஷயங்களை யூகித்தேன். 

Thursday, February 28, 2013

18 ஊடகங்களா... உயர் உச்ச நீதி மன்றங்களா..?

ஒரு குற்றம் நடந்த அன்றே, வெறும் வெற்று பரபரப்புக்காக ஊடகங்களே தம் யூகத்தால் "முதல் தீர்ப்பை" நான் முந்தி நீ முந்தி என்று செய்தியாக எழுதி விடுகின்றன. முதல் நாள் சொன்ன தீர்ப்பை அடுத்தடுத்த நாள் ஊதி பெரிதாக்குகின்றன. பின்னர் அதன்மீதே மற்ற அனைத்து செய்திகளையும் 'ஆதாரங்களாக' கட்டமைக்கின்றன. இந்நிலையில்... பல தரப்பு வாதங்கள், விசாரணைகள், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் அலசி ஆய்ந்து... ஒரு நீதிபதியால் அந்த ஆரம்ப 'ஊடக தீர்ப்பை'... sorry... 'ஊடக திரிபை' மாற்றி... இப்போது உண்மையை தீர்ப்பாக எழுதி தர்மத்தை நிலைநாட்ட முடிவதில்லை..! இதற்கு அரசும் ஆதரவாக இருக்க முடிவதில்லை. It is really pathetic now a days..!  

இதோ... மற்றுமோர் உதாரணம்..! கேரளாவில்... இருவாரம் முன்னர், பல ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது. அந்த செய்தி இதுதான்.

கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் 

Monday, February 25, 2013

4 அடுத்து, பீஹாரில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி


இன்னாலில்லாஹி....
சில நாள் முன்பு ஹைதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு - பலியானோருக்கும் காயமடைந்தோருக்கும் எனது இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கிறேன்.

இந்த பயங்கரவாதத்துக்கு எனது கடும் கண்டனம். மிகச்சரியாக துப்பு துலங்கி இதில் ஈடுபட்டோரை கண்டு பிடித்து, நீதி விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி மரண தண்டனை தர அரசை கோருகிறேன்.

"அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழிவாங்கும் நடவடிக்கையா?" என்று பாஜக வெங்கையா நாயுடுவுக்கு குண்டு வெடித்த உடனேயே சந்தேகமாம்..! உண்மையில் பழி வாங்குபவனாயின் வெடி குண்டை யார் யாரின் காலுக்கு கீழே வைப்பான் என்று கூட இவருக்கு தெரியாதா..? தெரியும்..!

Saturday, February 23, 2013

69 இது 'திராவிட பயங்கரவாதம்' இல்லையா..?


ஒரு தனி மனிதர் செய்யும் தவறுக்காக அல்லது அவர் சார்ந்த சமூகத்தின் தவறான கொள்கைக்காக அவரின் ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பார்வை பார்த்தலும் அதற்கு தண்டனையாக அந்த சமூகத்தின் பிற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தலும் பயங்கரவாதம். 

இதைத்தான் ஹிட்லர் அன்று ஒட்டுமொத்த ஜெர்மானிய யூதர்கள் மீது நடத்தினார். ஜார்ஜ் புஷ் ஒட்டுமொத்த ஆப்கானியர் மீது நடத்தினார்.  ராஜபக்சே ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீது நடத்தினார். மோடி ஒட்டுமொத்த குஜராத் முஸ்லீம்கள் மீது பொய்ப்பழிபோட்டு நடத்தினார். ஆனால், இவர்கள் செய்த செயலை உலகரிய நல்லிதயம் கொண்ட நன்மக்கள், நடுநிலை சான்றோர் அனைவருமே குற்றம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த கொடுங்கோளர்கள் எல்லாம் விஷச்செயல்களில் காட்டியதை ஒருவர் விஷக்கருத்தாக மக்கள் மனதில் பதிய வைத்தார். அவர்... 'தந்தை'(?) பெரியார்..! 

Tuesday, February 19, 2013

20 சவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..!



நான் சவூதிக்கு அடிமை அல்லன். சவூதிக்கு ஆதரவாளனும் அல்லன். ஆனால்...

சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா..? அதுதானே நியாயம்..? ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது..! இது அநீதியன்றோ..? அராஜமன்றோ..?

Monday, February 11, 2013

18 பதிவருள் பத்தரைமாற்றுத்தங்கம் சகோ.மாயன்:அகமும் புறமும்


மீடியாவை பொருத்தமட்டில் பொதுவாக இஸ்லாம் என்றாலே உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதிலும், உண்மைகளை  மறைப்பதிலும், நடந்ததை திரிப்பதிலும் ஊடகங்களுக்கு அப்படி ஓர் அதீத ஆர்வம். காரணம், உலக அளவில் அமெரிக்க யூத ஜியோனிச அரசியல் சார்பு ஊடகங்களும், இந்திய அளவில் அவர்களை அப்படியே அடியொற்றி செயல்படும் ஹிந்துத்துவா அரசியல் சார்ந்த ஃபாஸிச ஊடகங்களும். ஆனால் இவற்றில் மிகவும் சிறு அளவில் நேர்மையான விதிவிலக்குகள் உள்ளன. அவற்றின் மூலமாக உண்மைகள் அவ்வப்போது சிறு வாய்க்காலாக வெளியே வந்தாலும் அவை மேற்கண்ட ஊடக சுனாமியில் இருப்பிடம் தெரியாமல் அடித்து செல்லப்பட்டு விடுவதுண்டு.

இதொன்றும் நமக்கு புதிது அல்ல..! ஏகாதிபத்தியத்தில் முன்னர் காலணி நாட்டினருக்கு எதிராக,  பின்னர் நம் நாட்டு ஜனநாயகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக, அமெரிக்க ஐரோப்பிய வல்லதிகத்தில் ஒடுக்கப்பட்ட நிறத்தினருக்கு எதிராக நடப்பதுதான் என்றாலும்... முஸ்லிம்களுக்கு - அவர்களின் மார்க்கமான இஸ்லாத்துக்கு எதிராக என்றால்மட்டும்... ஒட்டுமொத்த உலகமே உடனடியாக ஒன்றுபட்டு கைகோர்த்துக்கொள்வதை நாம் நன்கு அறிவோம்.

Thursday, January 31, 2013

26 முஸ்லிமல்லாதோருக்காக...



நாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,
நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,
நம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,

இவற்றுக்கு நடுவே...
//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்..? தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..?//
...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.

Thursday, January 17, 2013

44 If prostitution legalised... விளைவு..? ---ஓர் அலசல்.


டெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந்திய சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.ஷர்மா கமிட்டி ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியிடம் 'பாரதிய பாட்டிடா' என்றதன்னார்வ தொண்டு நிறுவனம் (!!?!!) ''விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ''நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காததுதான்'' என்றும் கூறியுள்ளது..! 

பொதுவாக உலக அளவில் உள்ள NGO க்கள் எல்லாருமே இதே மாதிரியான புரிதலில்தான் உள்ளனர். இது சரியா, இதனால் raping குறையுமா, வேறு என்ன பக்க விளைவுகள் ஏற்படும்... என்பதை இப்பதிவில் அலசுவோம்.

Monday, January 14, 2013

16 என் ஜல்லிக்கட்டு அனுபவம்

ஜல்லிக்கட்டு..!
ஊரெல்லாம் இதே பேச்சு..!
செங்கல் ஜல்லியோ..? கருங்கல் ஜல்லியோ..? ஜல்லியை கட்டுன்னா... இதில் எதை கட்டுவது..?
அப்படியே கட்டினாலும், ஜல்லியை எப்படி கட்டுவது,  கயிற்றாலா... கம்பியாலா... அல்லது வாழை நாராலா..?

இப்படி எல்லாம் சந்தேகம் எனக்கு சிறு வயது முதலே ரொம்ப காலமாகவே உண்டு.  உங்களுக்கும் இதே ஐயம் இருக்கலாம். எனக்கு மட்டும் எப்படி அர்த்தம் தெரியும்..? வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்... இன்றும் கூட 'ஜல்லிக்கட்டு' என்றால் என்ன அர்த்தம் என்று நிறைய பேருக்கு தெரியவில்லையே..! அதன் பெயர்க்காரணம் பற்றி அறிய முற்படுதலே இப்பதிவு.


எனது அந்த ஜல்லிக்கட்டு அனுபவம்... ஓர் அலாதியான அதிபயங்கர அனுபவம். நம்பிக்கை மோசடி, வெறித்தனமான துரத்தல், , காயங்கள், உயிருக்கு பயந்து ஓடுதல், த்ரில், காமடி, டிராஜடி... இப்படி எல்லாமே உண்டு. என்னால் மறக்க முடியாதது. ஏனெனில் அன்று நான் விரட்டப்படும் போது... ஓடு ஓடு ஓடு என்று அப்படி ஓடி இருக்கிறேன்... தலைதெறிக்க ஓடி இருக்கிறேன்..!

Saturday, January 5, 2013

20 இந்திய கிரிக்கெட் அணியில் "_வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)"

இன்றைய செய்தி... 

Parvez Rassol, the Jammu and Kashmir allrounder, has been included in the 14-member India A squad to play the warm-up one-day match against England on January 6 in Delhi.

இவரை நியாபகம் உள்ளதா சகோஸ்..? 


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...