அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, March 30, 2011

16 நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?

"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ." என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4, 1/2, 1 மணிநேரம் என்று) மணிக்கணக்கில் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவோருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரலாம் என்று பார்த்தோம். அதில் இருந்து என்னென்ன வழிகளில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் பார்த்தோம். அதில், Speaker-phone, Ear-phone, Landline-phone ஆகியன உபயோகித்தல் நலன் பயக்கும்  என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

Saturday, March 26, 2011

57 உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.

Tuesday, March 22, 2011

16 லிபியாவில் எண்ணெய் வெறி பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஆரம்பம்

முன்கதை சுருக்கம் :

இந்த உலகில்  எண்ணெய் வள நாடுகளின் எண்ணெய் வளத்தை, தக்க கூலியை பெற்றுக்கொண்டு தன் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து, அவர்களை சிறு பணக்காரர்களாக்கி, பின்னர் தன் பலமிக்க ஆயுத அடக்குமுறை மற்றும் பரந்த பொருளாதார நிர்பந்தம் மூலம், மேலும் மேலும் எண்ணெயை உறிஞ்சி, இதன் மூலம் இந்நாடுகளை விட  மிக அதிக பயன் அடைந்து பெரும்பணக்காரனாகி தன் வயிற்றை கழுவும்'தொழில்நுட்ப வல்லரசு நாட்டாமை' நாடுகள் இவ்வுலகில் சில உண்டு. 'இந்த அநியாயத்தை தட்டிக்கேட்பதால் தமக்கு பாதகத்தை தவிர வேறு எந்த ஒரு சாதகமும் இல்லை' என்பதை நன்கு உணர்ந்து, தன்னிடம் மனிதாபிமானம் என்ற ஒன்றையே கொன்று புதைத்துவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும் சுயநல நாடுகள்  பல உள்ளன இவ்வுலகில்.

இனி  விரிவாக......,

Sunday, March 20, 2011

23 உலகின் ஒரே & கடைசி 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!

    பண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. 

Thursday, March 17, 2011

18 ஜப்பான் தரும் படிப்பினைகள்

அமெரிக்காவின் அணுகுண்டுகள், வெள்ளம், சூறாவளி, எரிமலை, நிலநடுக்கம், சுனாமி என தொடர்ந்து பல சோதனைகளை ஜப்பானியர் காண்பதும், அவர்கள் தொடர்ந்து அதிலிருந்து எல்லாம் மீண்டு வருவதும், அவர்களின் முயற்சியையும் முதிர்ச்சியையும் உழைப்பையும் உலகிற்கு நன்கு எடுத்துரைக்கிறது. பொதுவாக ஜப்பானியர், சோதனைகளிலும் மனம் தளராமால், எதிர்நீச்சலிட்டு முன்னேறுவதெப்படி என்று உலக மக்களுக்கு படிப்பினை பெறுவதற்கான நல்ல முன்னுதாரணம். இனி, ஃபீனிக்ஸ் பறவைக்கு யாரும் உதாரணம் கேட்டால் ஜப்பானியர்கள்தான் எனலாம்....! 

Friday, March 11, 2011

23 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா? (Photo Gallery)


'இது'...இப்படி இருந்தால்...இதில், "இது" என்பது 'எது' என்றால் அதுதான் நீங்கள் இங்கே பார்ப்பது..! சகல வசதிகளுடன் கூடிய பெரிய கட்டிடம். இது ஆஸ்ட்ரியாவில் கட்டப்பட்டு உள்ளது..!

Tuesday, March 8, 2011

18 மனிதநேயத்தை போற்றுவோம்

      மும்பையைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷான்பாக். இவருக்கு தற்போது 62 வயதாகிறது. இவர், மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையி(KEMH)ல் நர்சாகப் பணியாற்றி வந்தவர்.

Monday, March 7, 2011

16 நான் பதிவுலகிலிருந்து விடைபெற விரும்புகிறேன்.

அதிர்ச்சி அடைய வேண்டாம்..! மார்ச் மாதம் வந்து விட்டது..! பள்ளி இறுதித்தேர்விற்கு பிள்ளைகள் முழுமூச்சோடு படிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க, வீட்டிலேயே மீள்பார்வை தேர்வுகள் வைக்க, படித்ததை சொல்லச்சொல்லி செவிமடுத்து சரிபார்க்க, அவர்களின் படிப்பிற்கான தக்கவசதிகளை செய்துகொடுக்க... என நாம், நம் பிள்ளைகளோடு ரொம்ப 'பிசி'யாகி விட்டோம்.

"எனக்கு பிள்ளைகள் எல்லாம் இல்லை, நான் எப்பவுமே ஃப்ரீ" என்றால்.....
தம்பி/தங்கை..? அவர்களுக்கு பயிற்சி/பாடம் சொல்லிக்கொடுக்கலாமே....?
அப்படியெல்லாம் யாரும் இல்லை....... என்றாலோ............
"பிள்ளைகள் இருந்தும் எனக்கு நேரம் இருக்கிறது"....... என்றாலோ............
"இல்லை நான் ஒண்டிக்கட்டை, ஃப்ரீயாத்தான் இருக்கேன்"........ என்றாலோ............

Thursday, March 3, 2011

10 காட்டுமிராண்டிகளின் தேசமா பாகிஸ்தான்...?

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷஹ்பாஸ் பட்டி (வயது 42) என்ற கிறிஸ்தவ அமைச்சரை அநியாயமாய்-அக்கிரமாய் சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளை, அவர்கள் எவராக இருந்தாலும் உடனடியாய் கண்டுபிடித்து அரசே நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். ஆழ்ந்த துயரத்துடன் இப்படுகொலைக்கு எனது மிக மிக வன்மையான கண்டனங்களை இங்கே பதிகிறேன். 

தனது தாயாரின் வீட்டிலிருந்து காலையில் காரில் வெளியேறிய ஷஹ்பாஸை மூன்று அல்லது நான்குபேர் அடங்கிய கும்பல் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவருடைய கார் டிரைவர் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தவில்லை. அமைச்சரின் உடலில் எட்டுக் குண்டுகள் துளைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். எதற்காம் இந்த படுகொலை? பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவ உறுப்பினரான ஷஹ்பாஸ் மத அவமதிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென கோரியிருந்தார். அவ்வளவுதான்..!

Tuesday, March 1, 2011

28 'மூன்றாம் பாலினம்(?)' பற்றி இஸ்லாம்



டிஸ்கி: 
இது, இத்தொடரின் இறுதிப்பதிவு..! இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள், முதல் 5 பதிவுகளான...
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...