அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Thursday, March 3, 2011

10 காட்டுமிராண்டிகளின் தேசமா பாகிஸ்தான்...?

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷஹ்பாஸ் பட்டி (வயது 42) என்ற கிறிஸ்தவ அமைச்சரை அநியாயமாய்-அக்கிரமாய் சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளை, அவர்கள் எவராக இருந்தாலும் உடனடியாய் கண்டுபிடித்து அரசே நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். ஆழ்ந்த துயரத்துடன் இப்படுகொலைக்கு எனது மிக மிக வன்மையான கண்டனங்களை இங்கே பதிகிறேன். 

தனது தாயாரின் வீட்டிலிருந்து காலையில் காரில் வெளியேறிய ஷஹ்பாஸை மூன்று அல்லது நான்குபேர் அடங்கிய கும்பல் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவருடைய கார் டிரைவர் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தவில்லை. அமைச்சரின் உடலில் எட்டுக் குண்டுகள் துளைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். எதற்காம் இந்த படுகொலை? பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவ உறுப்பினரான ஷஹ்பாஸ் மத அவமதிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென கோரியிருந்தார். அவ்வளவுதான்..!
previous home
Related Posts Plugin for WordPress, Blogger...