அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, August 29, 2011

10 பண்டிகை அகதிகள்

தீபாவளி, பொங்கல், பூஜா, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் என்று நம் அரசு பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கின்றது. அதோடு அதன் பொறுப்பு முடிந்துவிட்டதா..? மக்கள் உண்மையிலேயே பண்டிகைகளை திருப்தியாக கொண்டாடுகிறார்களா, அந்த தினத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கொள்வதில்லை. தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அந்த ஊழியர்கள் அந்த பண்டிகையை கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் 'மதச்சார்பற்ற அரசுகள்' தீபாவளி போனஸ் வழங்கி விடும்.   எந்த சமயத்தினர் ஆனாலும் அதனை பெற்றுக்கொள்வார்கள். பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். இவ்வளவு ஏன்..? 'மதமே இல்லை ; கடவுளே இல்லை; தீபாவளியே இல்லை' என்போர் கூட கொடி- கோஷம்- உண்ணாவிரதம்- வேலைநிறுத்தம் என்றெல்லாம் முன்னின்று நடத்தி அடித்துபிடித்து 8.34% யாவது தீபாவளி போனஸ் வாங்கிவிடுவர்..!

Sunday, August 21, 2011

28 ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...

இதன் மூலம் சகலமானவருக்கும் நான் முன்னரே அறிவித்துக்கொள்வது என்னவென்றால்...


நான் ஊழலை எதிர்க்கிறேன்.
ஊழல் செய்வோரை எதிர்க்கிறேன்.
ஊழலுக்கு துணைபோவோரையும் எதிர்க்கிறேன்.

நான் ஜனநாயகத்தை ஆதரிக்கிறேன்.
ஜனநாயகத்தை காக்க பாடுபடுவோரை ஆதரிக்கிறேன்.
இவர்களுக்கு துணைநிற்போரையும் ஆதரிக்கிறேன்.

Thursday, August 18, 2011

37 உணவை வீணாக்காதீர் அரபிகளே..!

நான் கடந்த ஆறு வருடங்களாக சவூதியில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது. :-( மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்..! உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது..!  :-(  இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன். :-(

Saturday, August 13, 2011

36 சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution)

இவ்வருடம் அரபுலகில் புரட்சிகளின் வருடம் போலும்..! துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் லிபியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது..! அல்ஹம்துலில்லாஹ்..! சவூதி பற்றிய செய்தி என்றாலே 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உலக ஊடகங்கள் இதை மட்டும் ஏனோ வெளியில் தெரியப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக அமுக்கி விட்டன..! ஆனால், நாம் விட்டு விடுவோமா..? பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்..? லேட்டானாலும் தாளிச்சிட மாட்டோம்..?

Wednesday, August 10, 2011

26 9/11-Twin Tower-ஐ விட உயரமான புதிய அமெரிக்க டவர்..! (Photo Gallery)

2001, செப்டம்பர் 11-ல் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்களை விட மிக உயரமான புதுக்கோபுரத்தை அமெரிக்காவில் காணப்போகிறீர்கள் சகோ.! இந்தத்தளத்திலிருந்து அந்த கோபுரத்தின் அதிசய புகைப்படங்களை அஸ்திவாரத்திலிருந்தே சுட்டுக்கொண்டு வந்து... இங்கே நீங்கள் கண்டுகளிக்க வேண்டி உங்கள் கண் முன்னே காலரி பரப்பி வைத்துள்ளேன். இந்த கோபுரத்திற்கும் மற்ற உலகில் உள்ள வேறு எந்த கோபுரத்திற்கும் உள்ள பெருத்த வித்தியாசம் யாதெனில்...  இது முழுக்க முழுக்க US unfunded liabilities எனப்படும் ஒருவகை  கடன் தொகை (சுமார் 115 Trillion US Dollars) மூலமாகவே கட்டப்பட்டிருக்கிறதாம்...! அதாவது, இந்த உயரமான கோபுரத்தை கட்ட பயன்பட்ட அமெரிக்க நூறு டாலர் நோட்டுக்கட்டுகள் அவ்வளவும் அமெரிக்காவின் தற்போதைய கடன் தொகை..!

Sunday, August 7, 2011

55 நிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!

நிரூபன்  :- இலங்கையில் ஜாஃப்னாவில்... "ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல்" இவற்றையே தன் வேலையாக கொண்டுள்ளாராம் இவர்..! "நாற்று" மற்றும் "ஒளியூற்று" வலைப்பூக்களின் அதிபர்..! மிக்க நடுநிலையுடன் எவர்க்கும் அஞ்சாமல் பல உண்மைகளை பல பதிவுகளில் அதிரடியாக வலையேற்றுவதன் மூலம் வலையுலகில் புகழ் பெற்ற ஈழத்தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய முதல் நபர்..!


சித்ரா :-  எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கும் இவர்  "கொஞ்சம் வெட்டி பேச்சு" வலைப்பூவிற்கு அதிபர்..! தன் வலைப்பூவிற்கு இப்படி பெயர் வைத்திருந்தாலும்... அதற்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் நிறைய உபயோகமான நல்ல கருத்துக்களை சொல்லி வருவது நாம் தெரிந்த ஒன்றே. பாளையங்கோட்டையில் பிறந்து அமெரிக்காவாழ் தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய இரண்டாவது நபர்..!


ஆஷிக் அஹமத் :- "பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொணர்வதில் இவருக்கு டாக்டர் பட்டம் கூட கொடுக்கலாம்" (Thanks:-சகோ.bat) எனும் அளவுக்கு எழுதி வருவது நாம் அறிந்ததே..!  இப்போதெல்லாம் பரிணாமம் (Evolution) என்றாலே எனக்கு இவர் நியாபகந்தான் வருகிறது..! பாண்டிச்சேரியில் Islamic research, Semiconductor Physics, IC design என்று இருக்கும் இவர் "எதிர்க்குரல்" வலைப்பூவின் அதிபர்..! என்னிடம் மாட்டிய மூன்றாவது நபர்..!

சரி... தற்போது வெவ்வேறு நாட்டில் இருக்கும் இவர்கள் மூன்று பேரும் சவூதியில் இருக்கும் என்னிடம் எதற்காக வசம்ம்மாக மாட்ட வேண்டும்...?

Thursday, August 4, 2011

25 அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது.  மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்... இலை தழை தானே  ஆடை..!?) ஆக, 'வலியது' கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது.  இந்த வலிமை... தோல், கொம்பு, தந்தம், தோகை... இப்படியாக... மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது. 


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...