அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, December 27, 2013

11 'ப்ளூ டீ' போடுவது எப்படி?



சகோஸ்...
'சுடுதண்ணீர்  போடுவது எப்படி?'ன்னு எல்லாம் வலைப்பூவில் கத்து தறாங்க. 
உங்களுக்கு அதை பார்க்க செமை கடுப்பா  இருக்குமே..? இருக்கும்..!

ஏன்னா, உங்களுக்கு 'ப்ளாக் டீ' கூட போட தெரியும். (வித் அவுட்... மில்க்)
'ப்ரவுன் டீ' கூட போடுவீங்கதானே..? (டிகாஷன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா...)
'ஆரஞ்ச் டீ' கூட போட்டு இருப்பீங்க. (ஹி..ஹி... அதாங்க.. டிகாஷன் கம்மியா, பால் கொஞ்சம் ரொம்ப தூக்கலா...)
இது மட்டுமின்றி, மூலிகைச்சாறு மணக்க மணக்க 'கிரீன் டீ' போட்டு குடிக்கும் சத்தான ஆளுங்களும் இங்கே இருப்பீங்க.

சரி, அதெல்லாம் ஓர் ஓரமா இருக்கட்டும். ஆனால்... உங்களுக்கு,
'ப்ளூ டீ' போட தெரியுமா..? இதுக்கு முந்தி 'ப்ளூ டீ' போட்டு இருக்கீங்களா..?

என்ன...? தெரியாதா..?

அப்படின்னா, அது பத்தி கத்துக்கணும்ன்னா,
வாங்க... சொல்லி தருகிறேன்..!
நாலே நாலு ஈஸி ஸ்டெப்ஸ்தான், சகோஸ்..!

படத்தோடு தெளிவா விளக்கி இருக்கேன்... ஒரே ஒரு முறை பார்த்துக்கிட்டீங்கன்னா கூட போதும்... அப்புறம், 'ப்ளூ டீ' போடுறதுல நீங்க மாஸ்டர் ஆகிருவீங்க..!

கம் ஆன் சகோஸ்...!


Tuesday, July 23, 2013

9 தமிழக காலிக்கல்வி கூடங்கள்

தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!



Rashatriya Madhayamic Shikasha Abhiyan (‪‎RMSA‬) என்ற அமைப்பு எடுத்த 2012-13 கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Thursday, June 6, 2013

9 @ Co-Education Girls : அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை..?


இப்போதெல்லாம்... ஊடகங்களில் அடிக்கடி தென்படும்  கெட்ட செய்திகள்... 'மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியன் கைது', 
'மாணவனோடு கள்ளகுடித்தனம் நடத்திய ஆசிரியை சஸ்பென்ட்', 
'மாணவி கர்ப்பம், ஆசிரியன் தலைமறைவு', 
'மாணவனோடு ஆசிரியை ஓட்டம்'... ... ...இப்படி..!  

கல்வி கற்கும் ஓர் உயர்ந்த இடத்தில், கற்பிக்கும் ஆசிரியப்பணி எனும் ஓர் உன்னத தொழிலில்... எப்படி இப்படி இவர்களால் கலவிக்கும் இடம் தர முடிகிறது..? 

Sunday, March 18, 2012

58 பல்லண்டம்... அது பிரம்மாண்டம்..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்... 10,000,00,00,000 சூரியன்கள்....... ஐ மீன்....... விண்மீன்கள் உள்ளனவாம்..! 
.
Ours Milky-Way Galaxy...நமது பால்வீதி மண்டலம் (அதன் மையம் ஒரு... கருந்துளையாம்..!!!)

இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்... பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!

அப்புறம் இது போல இன்னும் "ஆறு பிரபஞ்சங்கள்" வேறு இருக்கின்றனவாம்..!!!

எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு... ஹி...ஹி... அங்கிருந்தபடியே... பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?

Friday, January 13, 2012

27 General : தமிழர்களின் தவறான புரிதல்..!

General என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் உள்ளது. பொதுமை, முழுமை, பெரும்பாண்மை என்ற பொருள் மட்டுமின்றி, தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் என்றும் பொருள் உண்டு..! ஆனால், நாம் பொதுவாக இந்த ஆங்கில வார்த்தைக்கு 'பொது' என்ற ஒரே அர்த்தத்தையே எல்லா இடங்களிலும் கொடுத்து விடுகிறோம். இது நிச்சயம் தவறான புரிதல். சில இடங்களில் சரியாக இருக்கும்; எல்லா இடங்களுக்கும் சரியாக இல்லை. மேலும் இது, 'தவறு' என்று அறிந்தவுடன், உடனே சரியான பொருளுக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தவறுங்கூட..!

உதாரணமாக....., 

Friday, December 2, 2011

26 வரலாற்றில் 'ஆரிய படையெடுப்பும் முகலாயர் வருகையும்' :-)

பலருடைய பதிவுகளில் பலருடன் பின்னூட்டங்களில் விவாதிக்கும் போது, பெரும்பாலோர் இன்னும் இஸ்லாம் பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வரலாறுகள் கூட அறியாமல் இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. 

இதற்கு காரணம், சிறு வயது பள்ளிக்கூட பாடத்திட்டம் முதல் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பு வரை... இஸ்லாம் பற்றி தவறான கல்வியே நம் நாட்டு பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டு வருகிறது. 

அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய வரலாறு என்றால் மட்டும் அது, தவறாகவோ... திரிக்கப்பட்டோ... பொய்யும் புரட்டாகவுமே கயமைத்திட்டம் போட்டு, நமது கல்விப்பாடத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையன்று. 

இதனால், அந்த பெரும்பாலோரின் அறியாமைக்கு அவர்கள் மட்டுமே  காரணம் என்பதை விட நம் நாட்டு பாடத்திட்டம்தான் முக்கிய காரணம் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Saturday, October 8, 2011

49 'கையுங்காபி-பேஸ்ட்டுமாய்' அகப்பட்டேன் :-(

ந்த வினாத்தாளில் மொத்தம் 100 கேள்விகள். அனைத்தும் சிறு சிறு பதில்களுக்கான கேள்விகள்தான். 94 கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதினாலும் அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. விடை தெரியாத அந்த 6 கேள்விகளை சும்மா விட மனசு வரவில்லை. :-(  அந்த 6 கேள்விகளும் பூதாகரமாக உயர்ந்து நின்று... என்னை கேவலமாக பார்த்தது. ஏனெனில், என் வாழ்வின்  எதிர்காலத்திற்கான தேர்வுகளில் அது ஒரு மிக முக்கியமான தேர்வு.

அதுவரை குனிந்து என் பேப்பரை பார்த்தே தேர்வு எழுதியவன் முதன்முதலாக நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தால்... பக்கத்து டெஸ்க் நண்பன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்..!

'ஸ்ஸ்.. ஸ்ஸ்.. இந்த 5-க்கும் விடை  என்ன' என்றான்... கை விரித்து காட்டி, சைகையில்..!

Friday, September 9, 2011

36 " படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..? "

"குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய "படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்?"  --க்கு எதிர்பதிவு இது..!

அதிராம்பட்டினத்தில் 1வது முதல் 5வது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-இல் படித்திருக்கிறேன். பின்னர்... காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில்  படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும்... +1  மற்றும் +2  மட்டும் co-education..!  ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2  வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்... 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..! அப்போது நான்...

Sunday, April 10, 2011

26 இனி... கடல்நீர் எரிபொருள்..!


 
           ஆமாம்...! அதிசயம்தான்..! ஆனால் உண்மை..! 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்..! ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...!

Monday, March 7, 2011

16 நான் பதிவுலகிலிருந்து விடைபெற விரும்புகிறேன்.

அதிர்ச்சி அடைய வேண்டாம்..! மார்ச் மாதம் வந்து விட்டது..! பள்ளி இறுதித்தேர்விற்கு பிள்ளைகள் முழுமூச்சோடு படிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க, வீட்டிலேயே மீள்பார்வை தேர்வுகள் வைக்க, படித்ததை சொல்லச்சொல்லி செவிமடுத்து சரிபார்க்க, அவர்களின் படிப்பிற்கான தக்கவசதிகளை செய்துகொடுக்க... என நாம், நம் பிள்ளைகளோடு ரொம்ப 'பிசி'யாகி விட்டோம்.

"எனக்கு பிள்ளைகள் எல்லாம் இல்லை, நான் எப்பவுமே ஃப்ரீ" என்றால்.....
தம்பி/தங்கை..? அவர்களுக்கு பயிற்சி/பாடம் சொல்லிக்கொடுக்கலாமே....?
அப்படியெல்லாம் யாரும் இல்லை....... என்றாலோ............
"பிள்ளைகள் இருந்தும் எனக்கு நேரம் இருக்கிறது"....... என்றாலோ............
"இல்லை நான் ஒண்டிக்கட்டை, ஃப்ரீயாத்தான் இருக்கேன்"........ என்றாலோ............

Tuesday, March 1, 2011

28 'மூன்றாம் பாலினம்(?)' பற்றி இஸ்லாம்



டிஸ்கி: 
இது, இத்தொடரின் இறுதிப்பதிவு..! இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள், முதல் 5 பதிவுகளான...
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, February 26, 2011

9 மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-5

டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் நான்கு பதிவுகளான...
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Wednesday, February 23, 2011

19 மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-4

டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் இத்தொடரின் முதல் 3 பதிவுகளான... 
மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, February 20, 2011

28 மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-3


டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் இரண்டு பதிவுகளான... மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, February 15, 2011

18 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்-2

டிஸ்கி : எனது சென்ற பதிவின் ‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’ தொடரின் இரண்டாவது பாகமான இது... முந்தைய பதிவின் தொடர்ச்சி. இதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் பதிவை படித்து விட்டு தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, February 10, 2011

71 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்

முக்கிய அறிவிப்பு :- (21-12-2011)
இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சகோ. அதனை தரவிறக்க விரும்புவோர் இங்கே >>>"கிளிக்"<<< சுட்டுங்கள் சகோ..!
========================================================================

'அரவாணி' என இதிகாச புராணம் சார்ந்த பெயரிலும், 'திருநங்கை' என திரித்தும் 'பொன்னைக்கா' அல்லது 'அலி' அல்லது 'ஒம்போது' என்று கண்ணியமற்ற, பொருளற்ற வார்த்தைகளாலும், ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று அறிவியல் அறியாமல் தவறாகவும் அழைக்கப்படும் "இவர்கள்" பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். உண்மையை சொன்னால், நமக்கு அறிந்துகொள்ள ஆர்வம் இல்லை. ஏன் அப்படி?  

'அவர்களை'-க் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல், அவர்களை பிச்சைகாரர்களாகவும் பணம் பறிப்பவர்களாகவும் மற்றும் விபச்சாரம் செய்பவர்களாகவுமே ஊடகங்கள் மூலமும், சமுதாயத்தில் சிலசமயம் நேரடியாகவே அவர்களில் பெரும்பாலோரின் நடவடிக்கைகளை நாம் கண்ணுற்றோ செவியுற்றோ அறிவதினாலும்தான் இந்த ஆர்வமற்ற நிலை. மேலும்... 'மிகப்பெரும்பான்மையான நாம் அவர்களாய் இல்லை...!

Sunday, October 17, 2010

23 மக்கள்தொகையா? மனிதவளமா?

இந்திய வரலாற்றில் 1985, செப்டம்பர் – 26’ம் தேதி ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன? 

இவையால்தான் அது இங்கே இல்லை... 
அவை இல்லை என்பதால்தான் இது எல்லாம் இங்கே இருக்கு...
என்பது தவறான புரிதல்.
previous home
Related Posts Plugin for WordPress, Blogger...