அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, December 30, 2012

29 தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி

சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு புத்தர் சிலையை ஆப்கானில் இடிக்க கிளம்பிவிட்டன...!  அதாவது தாலிபான் செய்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன..! ஆனால்... இடிப்பு பின்னணியை பார்த்தால்... தாலிபான் எவ்வளவோ தேவலை என்பீர்கள்..! 


Friday, December 7, 2012

8 'விமர்சகன்' : ஒரு விமர்சனம்..!


நல்ல பக்கமும் தீய பக்கமும் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. 

அவற்றில் எந்த பக்கம் மிகுதியோ அதைவைத்துத்தான் அவன் நமது 'நல்ல சமூகத்தில்' நல்லவன் அல்லது தீயவன் எனப்படுகிறான்..! 

('தீய சமூகத்தில்'... நல்லவன்... 'தீயவன்' என்றும் தீயவன்... 'நல்லவன்' என்றும் பெயர்பெற்று உல்ட்டாவாகிவிடுவது தனிக்கதை. அதுபற்றி இப்பதிவில் வேண்டாம்..! )

சரி, நமது வாழ்க்கை புத்தகத்தில் அந்த இரண்டு பக்கத்தையும் படித்து இரண்டையும் நேர்மையான முறையில் கூட்டி குறைக்காமல் உள்ளது உள்ளபடி பொதுவில் கருத்து சொல்பவர்கள்தான் 'விமர்சகர்கள்'..!

ஆனால், இவர்கள் உண்மையில் தமது விமர்சனத்தில் பெரும்பாலும் நேர்மையாக நடப்பதில்லை..! 

Saturday, November 17, 2012

42 நமது 'துப்பாக்கி' எதிர்ப்பின் விஸ்வரூபம்...

 இந்தியாவில் நடந்த ர(த்)தயாத்திரை - பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த "பயங்கரவாத குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை" பொருத்த மட்டில்... அதை நாம் "கார்கரேக்கு முன்" என்றும், "கார்கரேக்கு பின்" என்றும் இரண்டாக பிரிக்கிறோம். சினிமாவையும் ஊடகத்தையும் இதற்குள் அடக்கித்தான் அலச வேண்டும் நாம்..!


Wednesday, November 7, 2012

26 360 Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )

பிரபல 'The American Board of Orthopaedic Surgery' மருத்துவர்களின் இணையதளம்
தர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், இறைவனை தியானிப்பது பற்றியும் இறைத்தூதர் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளில் இரண்டை மட்டும் தலைப்பு தொடர்பாக நாம் பார்ப்போம், வாருங்கள் சகோஸ்...!

Saturday, November 3, 2012

11 உம்மன் 'சாண்டி' & 'நீலம்' சஞ்சீவரெட்டி : புயலானது எப்படி..?!


லில்லி, இசபெல், கேத்ரீனா, ஐரின், ரீட்டா... இதுபோன்ற அமெரிக்க புயல் பெயர்களை செய்திகளில் கேட்டுக்கேட்டு, 'ஏன் இப்படி புயலுக்கு பெண்கள் பெயர் வைக்கிறார்கள்' என்று யோசித்து அதுபற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம்... அந்த புயலால் விளைந்த நாசத்தினால் உண்டான சோகத்தினால் பின்னர் அறவே மறந்துவிடும். 


அதேபோல... நம்ம ஊர்களில் வீசும் புயலுக்கும்... மாலா, அய்லா, லைலா, நர்கிஸ், நிஷா... என்ற பெயர்களை கேட்கும்போது... 'அமெரிக்காக்காரனின் வழிகாட்டுதலில், இன்றைய உணவு-உடை-வீடு- மொழி-அறிவியல்-தொழில்நுட்பம்- கலவி-இசை-சினிமா- வாழ்க்கை-பண்பாடு-நாகரிகம் என்று எல்லாவற்றையும் அடியொற்றி பின்பற்றும்  'முற்போக்கு(?)நாகரிக' கூட்டமொன்று... புயலுக்கு பெயர் வைப்பதில் மட்டும் விதிவிலக்காகுமா, என்ன..?!'

Tuesday, October 30, 2012

14 உங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...


கஷ்டப்பட்டு உழைத்து, மாதம் பிறந்தால் பெற்றதைக்கொண்டு, செலவு செய்ய வேண்டிய பலவற்றில் கட்டுப்பாடாக இருந்து, அதை சிறுக சிறுக சேமித்து, கடைசியில்... 'இதுவும் ஒரு பெருகக்கூடிய சேமிப்பே..' என்று, அவ்ளோ காசு போட்டு தங்க நகை வாங்கினால்... அது, புதுசிலேயே அறுந்தாலோ-விட்டாலோ-முறிந்தாலோ-உடைந்தாலோ-நெளிந்தாலோ-நசுங்கினலோ-விரிந்தலோ... நம் மனம் என்னமாய் படாத பாடுபடுகிறது..? அதே நகை இதே காரணமாக எங்கோ தவறி, தொலைந்தாலோ... அப்போதைய நம் மனநிலையை கேட்கவே வேண்டாம்..! எத்தனை மாத உழைப்பின் சேமிப்பு..?

Thursday, October 11, 2012

64 PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

 
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!

Sunday, October 7, 2012

33 சகோ, இது உங்க கம்பெனி கதைதானே..?

ஒரு ஊருலே... ஒரு தொழிற்சாலையாம். அதிலே, ஒவ்வொரு நாளும் விடிகாத்தாலேயே சுறுசுறுப்பா எழுந்து வேலைக்கு வந்து முழுமூச்சா உழைச்சிட்டு இருந்துச்சாம் நிறைய எறும்புகள்.


Friday, October 5, 2012

12 மானிட வெறி

இனவெறி-மதவெறி-மொழிவெறி-தேசவெறி-சாதிவெறி-கட்சிவெறி என்று  மனிதன் சக மனிதனை கொல்லும் செய்திகள் ஒரு எக்ஸ்ட்ரீம்மில் இருந்தாலும்... இன்னொரு புறம், ஒரு மிருகத்துக்காக தனது சொந்த மகனையே அநியாயமாக கொலை செய்த மனுநீதி சோழன் நடித்த நீதி வெறிக்கதைகளும் இன்னொரு எக்ஸ்ட்ரீம்மில் உலா வருகின்றன..! இரண்டுமே தவறானவையே..! நிலைமை இப்படி இருக்க, 'சிறு எறும்புக்கும் கூட நாம் தீங்கு நினைக்காமல், மட்டன் பிரியாணி சாப்பிடுவது எப்படி' என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.

முன்பு ஒரு முறை நான் எனது நண்பன் வீட்டு தோட்டத்தில் நீர்பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நண்பன் குடும்பம் முழுக்க எனக்கு சில ஆண்டு பழக்கம். பள்ளியிலிருந்தே நட்பு. நன்கு அறிமுகமான வீடு. 
.

அன்று நண்பனின் உறவினர்கள் வந்து இருந்தனர். அதில் ஒரு சுட்டிக்கார துவக்கப்பள்ளி மாணவன் கையில் ஒரு லென்ஸ் வைத்து இருந்தான். "அண்ணே... இதிலே நெருப்பு வருமாமே..? நெசமாவாண்ணே..?" என்று கேட்க... நான் அறிந்த எனது இயற்பியல் அறிவை அவனுக்கு ஊட்ட வேண்டிய கடமையை உணர்ந்தவனாக........................

Sunday, September 30, 2012

29 'சீனியர் சிட்டிசன்' : அரசின் சலுகைகள்


சென்ற முறை ஊரில் BSNL அலுவலகம் சென்று இணைய இணைப்புக்காக நான் மனுச்செய்யும் பொழுது... 'எந்த Internet Package சிறந்தது' என்று தேர்ந்தெடுக்க, அலுவலர் தந்த ஒரு குறிப்பேட்டை பார்த்தபோது... அதன் அடியில் இருந்த கடைசி வரி... "ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்கள் எனில் 20% மாதாந்திர கட்டணத்தில் சலுகை உண்டு" என்று போட்டிருப்பதை பார்த்தேன்..! அப்புறம் என்ன..? எனது தந்தையை மனுச்செய்ய வைத்து, சலுகையுடன் வீட்டுக்கு இணைப்பு வாங்கிவிட்டேன்..! :-))
---------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
1-5-2013 முதல்... 
இச்சலுகையை BSNL நிறுவனம்  10% குறைத்து விட்டது. 
எனவே... என் இணையக்கட்டணம் 10% கூடி விட்டது. :-((
---------------------------------------------------------------------
இப்படியான பல சலுகைகளை மத்திய-மாநில அரசுகள் பல இடங்களில் வழங்குகின்றன. அது ஏனோ நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல்லை. கூடவே, பயன்படுத்திக்கொள்ள தேவையற்ற தயக்கம். இவற்றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!
.

Thursday, September 27, 2012

27 Supreme Court : அதிரடி தீர்ப்பில் நெத்தியடி கருத்து..!

H.L. Dattu --- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் --- C.K. Prasad

"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது.  குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!

Friday, September 21, 2012

15 ஓட்டரசியலில் காவிரி ஓர் அநாதை

1980கள்- அது ஒரு பொற்காலம் சகோ..! என்னதான் கடுங்கோடை ஆனாலும், வீதிக்கு வீதி - வீட்டுக்கு வீடு... கையால் அடிக்கும் ஒரு இரும்பு பம்பு (எங்க ஊரு பக்கம்  -தஞ்சை மாவட்டம் பாபநாசம்/பண்டாரவாடை/ராஜகிரி- 'வேம்பா' என்று சொல்வோம்) ஒன்று ஆங்காங்கே இருக்கும். அப்போது அதன் உயரம் கூட நான் இருக்கமாட்டேன். ஒரு கையால் கைப்பிடியை பிடித்து நான் இழுத்தாலே அதன் வாய் நிறைய தண்ணீர் கொட்டும். அத்தனை தெளிவான சுவையான குடி நீர் வரும்..! இப்போது... அதெல்லாம் அது ஒரு கனாக்காலம் சகோ..! ஏன் இந்த நிலை..? பதில் :- காவிரி..! இப்போதெல்லாம் போர் போட்டாலே சில இடங்களில் தண்ணீர் வருவது இல்லை என்பது ஒரு புறமிருக்க... வறண்ட காவிரி ஆற்றில் மணலைக்கூட காண முடியவில்லையே சகோ..! :-(( என்ன காரணம்..? யார் காரணம்..?

Thursday, September 13, 2012

44 காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!


அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!

பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!

இதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!

அன்னார் பற்றி புனைவாக ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? ஆம்..! எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!

Thursday, August 30, 2012

14 Delete செய்த 'பிரபல' Post ஐ மீட்பது எப்படி..?

Blogger > Dashboard > Posts இங்கே சென்று எழுத்துப்பிழையை Edit பண்ணவேண்டிய சென்ற பதிவை  அவசரத்தில் நான் Delete பண்ணிவிட்டேன்..! :-((


Edit  | View | Delete மூன்றும் பக்கம் பக்கம் இருந்ததால்... அவசரத்தில் டெலிட் அழுத்தி, 'நடப்பு பின்னூட்டப்போர்' டென்ஷனில்... அடுத்து வந்த ஒரு சாளரத்தில் "Are you sure you want to delete the selected post(s)?" என்பதற்கு உடனே "OK" யும் கொடுத்துவிட்டேன்..! போச்சு..! பிரபல(!)பதிவர் 'டீக்கடை சிராஜுதீன்' இலை மடித்த பதிவு "Deleted" என்றாகி காணாமல் போச்சுங்க சகோ..! 

Monday, August 27, 2012

138 'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?



எப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..! அதற்காக நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டியது பேரானந்தம்..! இந்த சந்திப்பு சென்னையில் சீரும் சிறப்புமாக அமைய முயற்சி எடுத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது இனிய நன்றிகள்..! என்னால் கலந்து கொள்ள இயலாவிடினும் நேரலையில் காண முடிந்தது..!


இந்த பதிவர் சந்திப்பு பற்றி பரபரப்பு தலைப்பு வைத்து, அதன்மூலம் ஏகப்பட்ட ஹிட்ஸ் அள்ளுவது என்பது இவ்வார பதிவுலக ஹிட்ஸ் நோய் ஆகிவிட்டது..! பொதுவாக அந்தந்த வாரத்தில் என்னன்ன விஷயங்கள் 'ஹாட் டாப்பிக்'கோ அதை வைத்து தங்கள் பதிவுக்கு தலைப்பு போடுவார்கள் நம் பதிவர்கள்..! 

உதாரணமாக... 

Thursday, August 23, 2012

72 மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்

கழக ஆட்சிகளின் கடந்த நாற்பதாண்டு சாதனை... எதிர்கால தமிழகத்துக்கு சோதனை..!

கடந்த சில நாட்களாக பதிவுலகில் குடிக்கு எதிரான திவுகள் ஒருபுறமிருக்க... குடிக்கு ஆதரவான குடிகாரபதிவர்கள் தங்கள் பங்குக்கு குடியை ஆதரித்து பதிவுகள் போட்டு வருவதை காண்கிறோம். கூடவே, குடியை எதிர்ப்போருக்கு 'மதவெறியர்கள்' என்ற பட்டமும் தரப்படுகிறது. குடியை வெறுத்து குடிக்காமல் நல்லவர்களாக இருப்போர் அனைத்து சமயங்களிலும் உள்ளனர் எனபது உண்மைதான்..! எனில், நாத்திகர்கள் எல்லாருமே குடிகாரர்கள் என்கிறார்களா...?! புரியவில்லை..! :-))

நம்மை சுற்றி உள்ள எவ்வளவோ சமூக தீமைகளில் ஒன்றுதான் 'குடி'. எத்தனையோ சமூக தீமைகளை எதிர்த்து பதிவு போட்டு இருக்கிறோம். அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு குடியை எதிர்த்து பதிவு போட்டதும் வருகிறதென்றால்... குடி போதை வெறி மக்களிடம் ரொம்ப விபரீதமாக ஊடுருவி உள்ளது..! எனவே, இனி குடியை எதிர்த்து அவ்வப்போது விழிப்புணர்வூட்டி பதிவு போட வேண்டியது, சமூக நலன் நாடும் பதிவர்களின் அவசியமாகி விட்டது..!  

Wednesday, August 15, 2012

46 இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கருதுகிறேன்..! ஏதோ எதேச்சையாக நடந்த விபத்து போல தெரியவில்லை..! நிச்சயமாக இது திட்டமிட்ட சதியாகவே எனக்கு படுகிறது..! மனது கனத்தாலும்... மறைக்கப்பட்ட வரலாற்றை இன்று உலகெங்கும் அறியவைக்க எனக்கு நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கே புகழனைத்தும்..! இதற்கு கருவியாக உதவும்.. இணையம்... கூகுள் பிளாக்கர்... சமூக வலைத்திரட்டிகள்... என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்..! அத்துடன்... இந்த பதிவு... சிலரின் கடும் உழைப்பு..! முக்கியமாக வரலாற்றினை தேடி எடுத்து எழுதிய பேராசிரியர் மு. அப்துல் சமது, தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்., அவர்களுக்கு மிக்க நன்றி. அன்னாரின் அளப்பறிய பங்குக்கு... அல்லாஹ் இவருக்கு பேரருள் புரிந்து நற்கூலியினை அளிக்க பிரார்த்திக்கிறேன்..! அடுத்து... கீற்றுவில் எழுதிய (திப்பு சுல்தான் பகுதி) சகோ.முத்துப்பேட்டையாருக்கும்,  சகோ.சுவனப்பிரியன் ('தாதா அப்துல்லாஹ் கம்பெனி' ஜவேரி சகோதரர்கள்) சகோ.அப்துல்லாஹ் (குஞ்சாலி மரைக்காயர் மற்றும் பல) சகோ.யூசுப் கான்  (நேதாஜி லிஸ்ட்) அவர்களுக்கும் மிக்க நன்றி..! இவர்களுக்கு இறைவனின் பேரருளும் நற்கூலியும் கிட்டட்டுமாக..! ஆமீன்..!



கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் போட்டு வாங்கித்தந்தது யார்....?
நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்... ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஸ்பான்சர்  யார்....?
காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....? 
காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்...?
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?

------------எல்லா கேள்விக்கும் விடை... 'முஸ்லிம்'..! 

இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத... நாம் இதுவரை பள்ளி பாட எழுத்து காட்சி ஊடக வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..! 


Saturday, August 11, 2012

15 3 பெருநாட்கள் வருவது யாரால்..?

நாம் இதுவரை கடந்து வந்த கடந்த மூன்று பதிவுகளில், நான் சொன்னதில் இருந்து...

ஒரே கிழமையில் ஒரே தேதியில் உலகம் முழுதும் பெருநாள் வராது... என்பதிலும், இரண்டு கிழமை இரண்டு தேதிகளில்தான் பெருநாள் வந்தே தீரும் என்பதிலும், படித்துணர்ந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!

ஆனால், உலகம் முழுக்க எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் ஒரே கிழமையில் ஒரே தேதியில் பிறை தெரிய சாத்தியமே இல்லையா...? ஆம் இருக்கிறது..! விதிவிலக்கு என்று சொன்னேன் அல்லவா..? இது பற்றி பார்போம்..!

சென்ற பதிவில்...  "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று சொல்லி இருந்தேன். அதென்ன விதிவிலக்கு..?

Saturday, August 4, 2012

47 2012 தீபாவளி : 2 தேதிகளில் 2 கிழமைகளில்..?!


பொதுவாக முஸ்லிம்கள் இரண்டு தேதியில் இரண்டு கிழமைகளில் பெருநாள் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்பதை அது ஏதோ ஒற்றுமையின்மையின் அடையாளமாகவோ அல்லது காலண்டர் குளறுபடியாகவோ மற்ற சமயத்து மக்களால் பார்ப்பது பற்றி நாம் அறிவோம். வெகுஜன நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் அல்லது வியாபாரத்துக்காக உண்மையை மறைக்கும் ஊடகங்களும், இதை அதே பாமர கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றன. ஆனால், புவியியல் அறிவு உடைய வானியல் அறிந்த அறிவியல் உலகக்கு நன்கு தெரியும், "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று..! 

இதை எனது பிறை பற்றிய... 
பிறை : - அப்டீன்னா...? (for dummies)
பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)
...ஆகிய சென்ற இரண்டு பதிவுகளில் படித்தறிந்துணர்ந்திருந்திருப்பீர்கள்..! 
 .
இதுவரை பெருநாள் மட்டுமே அப்படி இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வருவதை அறிந்து வைத்து இருக்கும் நமக்கு, தீபாவளியும் அப்படி இவ்வருடம் வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா..?

பொதுவாக நாம் இதைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள,  "சர்வதேச தேதி -கிழமை கோடு" அல்லது "பன்னாட்டு நாள் கோடு" என்ற கோட்டைப்பற்றி ஓரளவுக்காவது அலசி ஆய்ந்து அறிந்து இருக்க வேண்டும்..!  

Friday, July 27, 2012

6 பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)

கண்ணால் காணப்பட்ட 27 மணி நேர பிறை ~Time 8:07 pm EDT Date April 9, 2005 Location: Batsto, NJ, USA
இதற்கு முந்திய பதிவில் பிறை குறித்த Basics பார்த்தோம்..!

அதாவது, பூமியில் பூர்ண அமாவசை எந்த நேரத்தில் ஏற்படுகிறது, அதே இடத்திற்கு பூர்ண பெளர்ணமி எந்த நேரத்தில் ஏற்படுகிறது, வளர் பிறை, பவுர்ணமி & தேய்பிறை ஆகியன எங்கே எப்போது எப்படி உதிக்கின்றன,  எங்கே எப்போது எப்படி மறைகின்றன, சூரிய கிரகணம், சந்திரநாள், சந்திரமாதம், சந்திர சுருள் சுற்றுவட்டப்பாதை, பிறையை உறுதியாக கணிக்க முடிந்த அறிவியலுக்கு பார்ப்பதற்கு உறுதி தர இயலாமை... குறித்தெல்லாம் பார்த்தோம். 

இனி கொஞ்சம் Advanced stage..! இதில் முதலில் பிறை பார்ப்போருக்கான குறைந்தபட்ச அத்தியாவசிய புரிதல்கள் பற்றி பார்த்து விட்டு "எல்லோப் பிறை வரைபடங்கள்" பற்றி பார்ப்போம். ஏனெனில், அந்த முன்னேற்பாட்டோடு சென்றால்தான்... ஒரு தலைப்பிறை, அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் இந்த வானியல் ஆய்வாளர் பெர்னார்ட் டேவிட் எல்லோப் கூறுவதை பற்றியும் இன்னும் தெளிவாக விளங்க முடியும்..!

Tuesday, July 24, 2012

14 பிறை : - அப்டீன்னா...? (for dummies)




பிறை : ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வருஷத்துக்கு இரண்டு பிறை மட்டும் பார்க்கும் மக்கள் வாய்களில் பிறக்கும் ஒரு வார்த்தை அல்ல இது..! 

அல்லது...  

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் முடியும் நேரம் நெருங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு "ரம்ஜான் பண்டிகை என்றைக்கு..?" என்று ஊடகங்கள் வாய்களில் தப்பிப்பிழைக்கும் ஒரு வார்த்தையும் அல்ல இது..!

மாறாக, மாசாமாசம்... அதாவது ஒவ்வொரு மாதமும்... மேற்கில் சற்றுமுன்னர் மறைந்த சூரியனின் ஒளி அடுத்த சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரத்தில் மேற்கில் மறையப்போகும் சந்திரனின் பக்க-அடிப்பகுதியில் ஏற்படுத்தும் ஒரு ஒளிக்கீற்று தான் பிறை எனப்படுவது..!


Monday, July 16, 2012

17 கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............



16 வருடங்களுக்கு முன்னர் நான் எனது முந்தைய தொழிற்சாலையின் Training Period இல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த Industrial Hygiene & First Aid வகுப்பில் இரண்டு மருத்துவர்களின் இரண்டு மணி நேர lectures செவிமடுத்து விட்டு அது முடிந்ததும் கேள்வி நேரத்தில் அமர்ந்து இருக்கிறேன். அந்த வகுப்பில் இரு டாக்டர்களுமே இரவில் விரைந்து தூங்கி அதிகாலை விரைந்து எழுந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு... என் இயல்பான வாழ்க்கை(systematic life) பற்றி  அதை வலியுறுத்தி கூறினர். இதனைக்கேட்ட... அறைத்தோழன் நந்தகுமார் எழுந்தார்; கேள்வி நேரத்தில் இந்த கேள்வி கேட்டார்:-

Tuesday, June 26, 2012

57 'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..? (China Tissue Factory - Photo Gallery)

பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!

பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.

 .
ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கிவிட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டார்கள்..?

Saturday, June 16, 2012

35 அமீர்கான் திருந்துவாரா..?

'Bollywood' என்றழைக்கப்படும் ஹிந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் என்பவர், 'சத்யமேவ ஜெயதே' எனும் பெயரில் 'ரியாலிட்டி ஷோ' என்ற வகைப்படும்... சமூக விழிப்புணர்வை தூண்டும் ஒரு நிகழ்ச்சியை  ஸ்டார் தொலைக்காட்சியில் நடத்தி வருவது... பொதுவாக தற்போது பல தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி... ஏதோ நல்ல நிகழ்ச்சிதான்..! ஆனால்.... அதை நடத்துபவர்..?!?!?

'நிகழ்ச்சி நடத்தும் ஹிந்தி சினிமா நடிகர் அமீர்கான்'

Friday, June 8, 2012

33 நைட் ஷிப்டா..? அஸிடிட்டியா..? தீர்வு இதோ..!

சென்ற இரு பதிவிற்கு முந்தைய பதிவில், பகல் நேரப்பணியில் கடும் கோடையில் உண்டான பிரச்சினையும் அதற்கு கண்ட தீர்வையும் சொல்லி இருந்தேன் அல்லவா..? இப்போது... இரவுப்பணியில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையையும் அதற்கு கண்ட தீர்வையும் எழுதப்போகிறேன்..! யாருக்கேனும் எனது அனுபவம் பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி..! வழக்கம்போல சகோஸ்... நீங்களும் பின்னூட்டத்தில் மேலும் சில ஐடியாக்களை தாருங்கள்..! :-))

Tuesday, June 5, 2012

49 That is why... என் விக்கி சகோதரா..!

'விக்கியுலகம்' பதிவர் சகோ.விக்கி... நல்லவர், வல்லவர், நாலும் நன்றாக அறிஞ்சவர்..! ஆனால், அஞ்சாவதா ஒரு விஷயத்தில் தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்..! :-)) சென்றமாதம் ஒரு குழு தப்பு தப்பா தன் வயலில் நாற்று நட்டதை நோட்டம் இட்டபோது... 'அது சரி' என்று நம்பி //இப்படி// சொல்லி இருந்தார்..! //அவர் சொன்னதை// எடுத்துப்போட்டு... நான், 'அதை சரியா' என்று அவரை அங்கே கேள்வி கேட்டிருந்தேன்..! 
Mohamed Ashik ///ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா../// ===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!

Mohamed Ashik விக்கி சகோ, நீங்க சொன்னதிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஒருத்தனுக்கு ரெண்டு மூணு என்று மனைவிகள் இருந்தால் இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் என்று சொல்ல வருகிறீர்கள் என்றும்.... அதுவே, ஒருத்தனுக்கு ஒருத்தி என்றால் ஜனத்தொகை குறையும் என்றும் சொல்ல வருகிறீர்கள் என்றும், புரிந்து கொண்டேன். சரிதானே சகோ..?


அதுக்கு கேள்வி கேட்டிருந்த அந்த இடத்தை விட்டுவிட்டு தன் வலைப்பூவில் வந்து, 'என் சகோதரா...Why?' என்றொரு பதிவு போட்டு இருந்தார்..! அதில்...

Thursday, May 31, 2012

25 அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

சகோ... இப்படி நீங்களோ நானோ அல்லது எவரா இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே... ஏதோ ஒரு சூழலிலே... யாரோ ஒருத்தரிடமிருந்து... மேற்படி அர்ச்சனையை நாம் எப்படியோ பெற்றிருப்போம்..! இப்போது நம் நினைவை சற்று மெல்ல மீட்டிப்பார்த்தால்... எங்கே, எப்போது, எதற்காக, யார் நம்மை அப்படி கடிந்து கொண்டது என்று நியாபகம் வந்து விடும்..! அதன்படி நியாபகம் வராவிட்டால்... இதோ உங்களுக்காக சில க்ளூஸ்..! இதன்படியும் நியாபகம் வராவிட்டால்... ஸாரி... பதிவுலக சொல்வழக்குப்படி 'இதற்கு கம்பெனி பொறுப்பல்ல'..!
.

Saturday, May 26, 2012

35 கோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents)

முன்குறிப்பு :- இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு..!
.
என் பள்ளி காலங்களிலும் சரி... கல்லூரி காலங்களிலும் சரி... எங்கள் வீடு ர்ர்ர்ரொம்பவே ஸ்ட்ரிக்ட்..! பகலில் சட்டையை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தால் போதும்..... "வேகாத வெயிலில் வெளியே போகாதே...?"(---மை மதர்)  "வெயிலை வீணாக்காமல் விளையாட்டு வேண்டி கிடக்கா...?" (---மை ஃபாதர்) ...என்ற கட்டளைகள் தூள்பறக்கும்..! விடுமுறை நாள் ஆனாலும் கூட... மாலை நான்கு மணிக்கு அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே போகலாம், விளையாட..! இப்படியாக வெயில் படாமல் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள்..!

Tuesday, May 22, 2012

16 இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!

சென்ற மாதம், எதேச்சையாக டிவி நியூசில் கேட்ட செய்தி..!


'உழைப்பவருக்கே நிலம் சொந்தம்', 'இருப்பவருக்கே இல்லம் சொந்தம்' போன்ற வெற்று ஓட்டரசியல் கற்பிக்கும் பிற்போக்கு சித்தாந்த உந்துதலுக்கு உள்ளாகி... 'சில வருடம் உழைத்து பராமரித்த தோட்டம்... தனக்கே சொந்தம்' என்று ஒரு தோட்டக்காரர், உரிமையாளருக்கு எதிராக அத்தோட்டத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்க, நீதிபதியோ... 'அந்த தோட்டம் உரிமையாளருக்கே சொந்தம்' என்றும்... இப்படி ஒரு அநியாய வழக்கை போட்டதற்காக, தோட்டக்காரருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்..! அபூர்வமான இதுபோன்ற "மெயின் தீர்ப்புடன் இணைந்த இலவச தீர்ப்பு"... அதாவது '2 in 1 நல்ல தீர்ப்புகள்' நாட்டுக்கு ஆரோக்கியமானவை..! தீர்ப்பை வரவேற்கிறேன்..!

Tuesday, May 1, 2012

51 திருமணமா...? விபச்சாரமா..? எதை ஆதரிப்பீர்..?

தமிழகத்தின் வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.

இந்நிலையில், அதுவரை இவர்மீது அதீத பக்திகொண்டு கடவுளாக கருதி வணங்கியோரும் எண்ணற்ற ஆத்திகரும் அதிர்ந்துதான் போயினர். இது, நாத்திகர்களுக்கு ஏகக்கொண்டாட்டமானது. வழக்கம் போலவே... முடிந்தவரை ஹிந்துமதத்தையும் அதன் கடவுள் கொள்கையில் உள்ள கோளாரையும் எடுத்துக்காட்டி அவரின் பக்தர்களையும் கிண்டல்-கேவலப்படுத்தி எக்கச்சக்க 'டவுசர் - கோமண பதிவுகள்' எல்லாம் தொடர்ந்து வெளியிட்டனர்.

இப்படியாக அந்த சாமியார் தலைமறைவு...போலிஸ் வலைவீச்சு... கைது... கோர்ட்டு... சிறை... ஜாமீன்... வழக்கு... வாய்தா என்று கேவலப்பட்டு கிடந்தவர், திடீரென இந்துமத ஆன்மிக குருவாக.. இளைய மதுரை ஆதினமாக பதவிப்பிரமாணம் செய்து முடிசூட்டப்பட்டு கெளரவிக்க பட்டபோது...  அப்போது அசிங்க அசிங்கமாக பதிவு பின்னூட்டங்கள் போட்டு அவரை திட்டியவர்களை ஏனோ இப்போது காணவில்லை..!

Saturday, March 31, 2012

31 Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை



80-கள்  மற்றும் 90-களின் ஆரம்பத்தில் எல்லாம் தமிழ் சினிமாக்களில் கிராமிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வரும். அவற்றில் மிக முக்கியமாக, நாம் கேள்விப்பட்டிராத ஒரு புதுவகையான மூடநம்பிக்கை ஏதேனும் ஒன்று கட்டாயம் இடம்பெறும்..! இப்பதிவுக்கு தொடர்புடைய மூடநம்பிக்கைகளாக... உதாரணமாக... அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஒரு ஹீரோயின் மனைவி, தன் அதிதீவிர சாமி பக்தியின் காரணமாக 'வாரத்துக்கு ஏழு நாட்கள் மட்டும்(!?) விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ(?) கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில்,  'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில  பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'(?) சொல்வார்கள் சகோ..!

Monday, March 26, 2012

26 புதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..!

தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது. மட்டுமின்றி, விட்டுக்கொடுக்கவே இயலாத விஷயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன்மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழவே இயலாது போனால்... பிரிவதை தவிர வேறு வழி இல்லை..! 


இந்நிலையில் மனம் ஒத்துப்போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரபூர்வமாக பிரிதலே விவாகரத்து..! ஏனெனில், பிரிந்தவர்கள் தம் மனம் ஒத்த வேறொவருடன் மறுமணம் புரிய வேண்டுமானால்... இப்படி பிரிந்த  தம்பதியர் அரசிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரமான விவாகரத்து பெற்றாக வேண்டும். இல்லையேல்... மறுமணத்தில் சட்டசிக்கல் வரும்..! 

Sunday, March 18, 2012

58 பல்லண்டம்... அது பிரம்மாண்டம்..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்... 10,000,00,00,000 சூரியன்கள்....... ஐ மீன்....... விண்மீன்கள் உள்ளனவாம்..! 
.
Ours Milky-Way Galaxy...நமது பால்வீதி மண்டலம் (அதன் மையம் ஒரு... கருந்துளையாம்..!!!)

இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்... பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!

அப்புறம் இது போல இன்னும் "ஆறு பிரபஞ்சங்கள்" வேறு இருக்கின்றனவாம்..!!!

எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு... ஹி...ஹி... அங்கிருந்தபடியே... பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?

Wednesday, March 14, 2012

41 தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)

தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!  

தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும், மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும் அவசியத்தேவை..!

Friday, March 9, 2012

62 கின்னஸ் சாதனையா? சமூக சோதனையா?

நான் சிறுவனாக இருந்தபோது, கின்னஸ் உலக சாதனை என்பது மிகப்பெரிய விஷயமாக போற்றப்படும். அப்போது, உடல் பலத்திலோ அல்லது மதி நுட்பம் மூலமாகவோ செயற்கரிய சாதனைகளை செய்த வீரர்கள் தங்கள் வீரதீரச்செயல்கள் மூலம் உலக சாதனை நிகழ்த்தி அப்புத்தகத்தில் இடம்பிடித்தனர். ஆனால், காலப்போக்கில் சுவாரசியம் மற்றும் புத்தக சர்குலேஷன் கூடவேண்டும் என்பதற்காக... நோஞ்சான்கள், சோம்பேறிகள், சாப்பாட்டு ராமன்கள், கயவர்கள், அயோக்கியர்கள், வேலைவெட்டி இல்லாத போழுது போக்கிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் செய்யும் உப்புசப்பில்லாத விஷயங்கள் எல்லாம் உலக சாதனைகள் என்ற பெயரில் அந்த கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறத்துவங்கின.

இவை கின்னஸ் சாதனையாக மக்களிடம் போகும் போது, "ச்சே... என்னடா இது...!? இப்படியாக தன் நேரத்தை, பணத்தை, திறமையை வெட்டியாக வீணாக்கி உள்ளார்களே..."  என்று அவர்கள் மீது வெறுப்பையும், பரிதாபத்தையுமே வரச்செய்தன. இதனால் கின்னஸ் சாதனை புத்தகம் தனக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நிஜ வீரர்களிடம் இழந்தது. ஆனால்... மூடர்களிடம் 'அதில் நாமும் சுலபமாக இடம்பெற்றிடலாமே' என்ற ஆர்வம் அவர்களை எதையும் செய்ய வைத்தது..! அப்படி ஒரு மூடத்தனம்தான் சென்ற வாரம் உலக சாதனையாக போற்றப்பட்டது..! அது என்ன தெரியுமா சகோ..?

Friday, March 2, 2012

31 'பகுத்தறிவாளர்கள்' என்போர் ஓரறிவு ஜீவிகளா..?

சில நாட்கள் முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக, உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், "இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..! 



"கடவுள் இல்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது" என்று ஒத்துக்கொண்டு விட்டார்..!

[Agnostic - கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்புபவர்;  Atheist - கடவுள் நம்பிக்கை இல்லாதவர். (நன்றி: Google translation) ]

Sunday, February 26, 2012

65 எச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்

சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான் தோன்றியது. காரணம், இதில் உள்ள விஷயம் சிலருக்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். சிலருக்கு மிக அவசியமான அறிவுரையாக இருக்கலாம். அத்தவறை செய்யும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன். பதிவில் ஆங்காங்கே சிகப்பில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ..!

Tuesday, February 21, 2012

36 இடைத்தேர்தல் வெற்றிக்கு இலவச டிப்ஸ்..!

தமிழக அரசியலில் பொதுத்தேர்தலை பொருத்தமட்டில் பல காரணிகள் வெற்றி தோல்வியை நிர்ணயித்தாலும், இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளுக்கு மட்டும் ஒரு மகத்தான இடம் உண்டு..! அப்படித்தான் இப்போதைக்கு முந்திய பொதுத்தேர்தலில்.... இலவச சைக்கிள், இலவச டிவி, இலவச Gகேஸ் ஸ்டவ், ரெண்டு ரூபா அரிசி (கிட்டத்தட்ட இலவசம்தானே இது?) என, இதுமாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசியவுடன், பெரும்பான்மையான மக்கள் இலவசங்களுக்கு மயங்கி திமுகவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கி அதை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அதனாலேயே 2006ல், 'க.'தமிழக முதல்வர் ஆனார்.

அதேபோல, அதுவரை வழங்கப்பட்டு வந்த இலவசங்களை கன்னாபின்னா என்று திட்டித்தீர்த்த எதிர்க்கட்சித்தலைவர் ஜெ. கடந்த பொதுத்தேர்தலில், மக்களின் நாடியை புரிந்தவராக, தானும் தன் இஷ்டத்துக்கு இலவச லாப்டாப், இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன்...என்று அடிச்சு விட்டார். வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துவிட ஆட்சியை பிடித்தார் 'ஜெ'..!

Saturday, February 18, 2012

50 பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..!


உலகின் பற்பல சமூக மக்களிடம் எப்படியோ இப்படி ஒரு மூடப்பழக்க வழக்கம் தொற்றிவிட்டது. அனேகமாக வருடாந்திர காலண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த மடத்தனம் ஆரம்பித்து இருக்க வேண்டும்..! 

தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை  என்ற ஒருநாளை...  அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... "தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று" என்கிறார்..! இது எப்படி சரி..? லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..? விளக்கமாக காண்போம்.

குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..? 

இப்படி... கேட்டால்... Birth Day  என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி "wish you happy birthday to you" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்..! அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்..! கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்..! கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்..! எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..? 

Tuesday, February 14, 2012

57 குர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)

'இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்' என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது... அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..!

உதாரணமாக சில:-
வானத்தின் மீது சத்தியமாக 86:1
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக  91:2
இரவு, பகல் மீது சத்தியமாக 92:1
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
காலத்தின் மீது சத்தியமாக 103:1

ஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக "மகத்தான சத்தியமாக" ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ...?

Sunday, February 12, 2012

37 மகிழ்வுடன் ஒரு பகிர்வு

நான் பணிபுரியும் சவூதி அரேபிய அரசு அனல் மின் உற்பத்தி மற்றும் கடல்நீரை குடிநீராக மாற்றும் (SWCC) நிறுவனத்தில், சென்ற வருட நவம்பர் மாத இறுதியில், தானாக ஏற்பட்ட ஒரு திடீர் விபத்தில், உடனடியாக சிந்தித்து, சமயோசிதமாக செயல்பட்டு, தொழிலாளர் எவர் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து இன்றி, 600 MW (5 units) மொத்த மின்னுற்பத்தி திறன் மற்றும் மணிக்கு 20,000 cubic meter குடிதண்ணீர் உற்பத்தி திறன் கொண்ட ஆலையின் மற்ற எந்த உடமைக்கும், இயந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் யாதொரு சேதமுமின்றி, ஏக இறைவன் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், அன்று ஷிஃப்டில் இருந்த நாங்கள் பத்து பேர், கடுமையாக உழைத்து  சரியாக trouble shoot செய்து பழுதை சரி செய்தற்காகவும், எங்களை தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு பாராட்டி, நிறுவனம் அளித்த Glass shield மற்றும் Certificate  ஆகியவற்றை தங்களுடன் இங்கே மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்..! 
:-) பாரக்கல்லாஹு ஃபீஹி..! :-)

Thursday, February 9, 2012

22 சுவாசிக்க 100% ஆக்ஸிஜன் நல்லதா..?

நம் பூமியை சூழ்ந்த பல வாயுக்களின் தொகுப்பான இந்த வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 %ம், ஆக்ஸிஜன் 21 %ம், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 %ம், ஆர்கான் 0.934 %ம், நியான் 0.0018 %ம், ஹீலியம் 0.00052 %ம், மீதம் மீதேன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் மிகக்குறைந்த அளவிலும் கலந்துள்ளன..!

நாம் சுவாசிக்கும் அந்த காற்றில், ஆக்ஸிஜன் 21% தான் உள்ளது. ஆனால், காற்றில் மனிதனுக்கு தேவையான குறைந்த பட்ச உடல்நலன் பாதிப்பில்லாத ஆக்ஸிஜன் அளவு 19%..! சில சமயம் நோயாளிகளுக்கு 'ஆக்ஸிஜன் மாஸ்க்'... நீருக்கு அடியில் நீந்த செல்வோருக்கு 'ஆக்ஸிஜன் சிலிண்டர்'... என்று சொல்ல/எழுத கேள்விப்பட்டிருப்பீர்கள். இது சரியா..? இதனால், 'நாம் மூச்சு விட 100% ஆக்ஸிஜன் இருந்தால் நமக்கு நல்லது' என்று நாம் நினைத்தால் - இல்லை, உண்மையில் அது தீங்குதான் விளைவிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..!

Monday, February 6, 2012

11 உழவர்சந்தை போல், இடைத்தரகர் இல்லா மீனவர்சந்தை..!

தற்போதய பறந்து விரிந்து வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரு மணமகன் அல்லது மணமகள் தேடுவதற்கோ, அல்லது நமக்கு ஒரு நிலம், வீடு, வாகனம் போன்றன வாங்க/விற்க வேண்டும் என்றாலோ 'அவை எங்கெங்கே உள்ளன' என்பதையோ, 'அதற்கான தேவைகள் உள்ளவர்கள் எங்கெங்கு உள்ளனர்' என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. இந்த இடத்தில் 'தரகு' என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிறது.


இதற்காகவே சிலர், அவர்களாக முயற்சித்து அதற்கான தகவல்களை முன்னமேயே திரட்டி வைத்திருந்து, பயனாளிகளுக்கு உடனுக்குடன் தருவதை தமது முழு நேரத்தொழிலாகவே செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட தொழிலை செய்வோரான இந்த 'தரகர்கள்' என்போர் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் சுணங்கும், இழுத்தடிக்கும் அல்லது தடைபட்டும் விடும்.

ஆனால் தரகர்களில் சிலர்,  பணம் பண்ணுவதற்காகவே எவ்வித பித்தலாட்ட-பதுக்கல்-மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இதனால், மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட இந்த தரகுத்தொழிலை முழுமையாக 'தவறு' என நிராகரிக்கவோ அல்லது 'சரி' என அப்படியே ஏற்றுக்கொள்ளவோ முடியாத குழப்ப சூழல்தான் இப்போது நிலவுகிறது. 

Thursday, February 2, 2012

33 சிறுகதை - ஹராம்

தானே புயல்... தானே உருவாகி, தானே மையங்கொண்டு, தானே பலம் பெற்று, தானே நகர்ந்து, தானே கரை கடந்து, தானே சுழன்றடித்து, தானே சேதப்படுத்தி, தானே வலுவிழந்து, தானே ஓய்ந்தும் போனது... ஆகிய அனைத்தும் தானேவா நிகழந்தது..? இல்லை... இது இறை விதியா..? இது மனிதர்களுக்கு இறைவனின் சோதனையா..? ...போன்ற கேள்விகளெல்லாம் மனதை ஆக்கிரமிக்க இடமே இன்றி... பெருந்துயருடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்து என் மனதை போலவே சுக்கு நூறாய் உடைந்து போன எனது தள்ளு வண்டி இட்லி கடையின் முன்னே அமர்ந்து இருந்தேன். 'இங்கே கடையை நிறுத்தினால், சாலையின் நியான் விளக்கின் உதவியுடன் இரவு வியாபாரம் களைகட்டும்' என்று நிறுத்தும்போது தெரியவில்லை... இப்படி புயல்வரும்... அதனால், இந்த மின்சார விளக்குத்தூண் என்  பொருளாதாரத்தின் மீதே விழுந்து இப்படி உடைத்து தொலைக்கும் என்று..!

Sunday, January 29, 2012

31 'மதஎதிர்வாதி' -- ஓர் ஆபத்து அறிமுகம்..!

இவ்வுலகில் மனிதனை தம் சுய அறிவுடன் காரியமாற்றும் படி படைத்த இறைவன் அவனை சும்மா வெறுங்கையுடன் விட்டுவிடவில்லை ..! 'எப்படி இவ்வுலகில் வாழவேண்டும்' என்று தான் படைத்த முதல் மனிதனுக்கே அறிவுறுத்தும் வண்ணம் 'இஸ்லாம் எனும் நேரிய வாழ்வியல் நெறி' ஒன்றை அவருக்கு அருளிய இறைவன், அவரை தம் இறைத்தூதராகவும் ஆக்கி அவரின் மனைவிக்கும் அனுப்பி அந்த வாழ்வியல் நெறியை பகிரவும், தம் சந்ததிக்கும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் வைத்தார். காலப்போக்கில் சிலர் இந்த இறைவழியை புறக்கணித்து தம் மனம் விரும்பிய வழியில் செல்லத்துணியும்போது, வாழ்வியல் நெறியை அப்போதும் பேணுவோர், ஓரிறை நெறி பிரழ்ந்தவோர் மீது பிரச்சாரம் செய்வதும், அவர்களில் ஒரு சாரார் மீள்வதும் மற்றொரு சாரார் அதனை புறக்கணிப்பதும் அன்றிலிருந்து தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், "நம் பணி இறைச்செய்தியை தெளிவாக இவர்களிடம் சொல்வது மட்டுமே... சொல்லியாயிற்று... இனி இவர்களுக்கு இறைவன் விட்ட வழி" என்று இந்த ஆத்திக இறைப்பற்று கொண்டவர்கள் எண்ணினால்... அவர்களை 'மதப்பற்று' கொண்டவர்கள் எனலாம்.

அவ்வாறின்றி, 'நான் சொல்வதை கேட்காத உன்னை விட்டேனா பார்' என்று இறைநெறி மறுப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பதும், கொடுமை புரிவதும், கொலை செய்வதும்  'மதவெறி' ஆகிவிடுகிறது.

Friday, January 27, 2012

27 citizen of world : இந்திய எதிர்ப்பா..?


citizen of world  - எனக்கு நான் இப்படி பெயர்சூட்டி பல மாதங்கள் ஆகியும் ஒருவருமே இதைப்பற்றி கேட்டதில்லை. முதன்முதலாக சகோ. அஸ்மாவின் 'பொங்கல் பொதுவான திருநாளா?' பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவரின் பெயருக்கு நான் விளக்கம்  கேட்கப்போய், பதிலுக்கு அவர் என்னுடைய citizen of world-ற்கான பெயர்க்காரணத்தை கேட்டார். 10 நாள்கூட பொறுக்க முடியாதவர், என் பெயருக்கான வேறு பொருளை தன் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி, தவறான கருத்தை இன்னொரு தளத்தில் பரப்புகிறார். இதுபோன்ற அநாகரிக செயல்களை நல்லோர் செய்யார்..!
.
இனி... எனது citizen of world பெயருக்கான பின்னணி விளக்கம்...

Monday, January 23, 2012

78 போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு

பொதுவாக  நாத்திகர்கள் என்போர்... RSS-சங் பரிவார-ஹிந்துத்வா பாசிஸ கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தீண்டாமை-வர்ணாசிரம சாதி பாவிக்காத சக ஆத்திக மனிதர்களுடன் அன்போடு பழகுவார்கள். தம் திருமணத்தில் கூட  ஆத்திக/மத நம்பிக்கையை அனுமதிக்க மாட்டார்கள். ஒருவன் செய்த தீய செயலுக்காக ஒட்டுமொத்த  சமூகத்தையே  இழிவாக ஏச மாட்டார்கள். இந்த நான்கு பண்புகளும் இல்லாதவர்களே நம் பதிவின் 'போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு' போட்டவர்கள். தங்களை இவர்கள் நாத்திகர்கள் என்று அழைத்துக்கொண்டாலும் இவர்களின் இலக்கு இஸ்லாம் & முஸ்லிம்கள் மட்டுமே. (கூடவே சவூதியும்..!) :-((

நாம் சாந்தியை, சமாதானத்தை முன்னிறுத்தி கைகுலுக்க பின்னூட்டினால், நடுநிலை முகமூடி அணிந்த இந்த போலி நாத்திகர்கள் ஒரு சிலர் காந்தியை சுட்ட  கோட்சேயாய் மாறி, உண்மைக்கு புறம்பான விஷயங்களையும், தவறான திரிபு ஒப்பீடுகளையும் கூறி வஞ்சினப்பதிவு இடுகிறார்கள். இவர்களிடம் போய் நமது உண்மையை சொல்லவும் கூடாது, அவர்களின் பதிவில் உள்ள பொய்யை எதிர்க்கவும் கூடாது என்கிற அவர்களின் 'தான்சொல்வது மட்டுமே சரி' என்ற நிலை நமக்கு புரிவதுமில்லை. இதனால் நமது எதிர்வாதம் கூட விழலுக்கு இரைந்த நீராய்... வீணாய்ப்போகிறது.

Friday, January 20, 2012

20 உங்களிடம் SBI A/c இருந்தால் உடனே பாருங்கள்: 50000 கோடி இருக்கலாம்..!

அவர், மேற்கு வங்க மாநில தென் தினாஜ்பூரில் உள்ள பாலுர்காட் என்ற ஊரில் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர். மாதச் சம்பளம் சுமார் ரூ 35,000. அவரின் இந்த மாத செலவுக்கு அவ்வப்போது எடுத்தது போக மீதி அநேகமாக ரூ 10,000 இருக்கலாம் என்று எதேச்சையாக தம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக்கணக்கை இந்த வார ஞாயிறு அன்று நெட்டில் திறந்து பரிசோதித்த அந்த ஆசிரியருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி..! பேரதிர்ச்சி..!

காரணம், அவர் அக்கௌண்டில் இருந்த பணம்... ரூ 49,570,08,17,538 (அதாகப்பட்டது... சுமார்  ஐம்பதாயிரம் கோடி ரூபாய்..!) யார் அவர்..? அந்த பணம் எப்படி வந்தது இவர் அக்கௌண்ட்டிற்கு..? இவர் கணக்கில் போட்டது யார்..? அது அவ்வளவும் யாருடைய பணம்..? எப்படி இது நடந்தது..?

Tuesday, January 17, 2012

32 தினமணியின் அறியாமை

"திருவள்ளுவர்  தினம் -தை முதல் நாள்- தமிழ்ப்புத்தாண்டு- தமிழர் திருநாள்" என்று சென்ற வருட தமிழக அரசு சார்பாக திமுகவினர் சொல்ல... 

"இல்லை... இல்லை... சித்திரை ஒண்ணுதான் தமிழ்புத்தாண்டு என்று இன்றைய தமிழக அரசு சார்பில் அதிமுக சொல்ல... 

தமிழர்கள் நாம் எது 'ரியல் புத்தாண்டு' என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறோம்..! நம் பூமி எந்த இடத்தில் இருந்து சூரியனை சுற்ற ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. எனவே, எந்த மாதம் வேண்டுமானாலும் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம். இந்நிலையில், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று பள்ளியில் பழமொழி படித்தோம். இப்போதெல்லாம் தை பிறந்தால் அது சண்டைக்குத்தான் வழி அமைக்கிறது. அதிலாவது அர்த்தம் இருந்தால் கூட பரவாயில்லை. முட்டாள்த்தனமாக சண்டை நடக்கிறது. 

Friday, January 13, 2012

27 General : தமிழர்களின் தவறான புரிதல்..!

General என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் உள்ளது. பொதுமை, முழுமை, பெரும்பாண்மை என்ற பொருள் மட்டுமின்றி, தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் என்றும் பொருள் உண்டு..! ஆனால், நாம் பொதுவாக இந்த ஆங்கில வார்த்தைக்கு 'பொது' என்ற ஒரே அர்த்தத்தையே எல்லா இடங்களிலும் கொடுத்து விடுகிறோம். இது நிச்சயம் தவறான புரிதல். சில இடங்களில் சரியாக இருக்கும்; எல்லா இடங்களுக்கும் சரியாக இல்லை. மேலும் இது, 'தவறு' என்று அறிந்தவுடன், உடனே சரியான பொருளுக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தவறுங்கூட..!

உதாரணமாக....., 

Sunday, January 8, 2012

73 பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியரிதல்களும் குறைந்து கண்டன குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும். எனவே, இங்கே சிலரை அவர்களின் நேரிய நற்செயல்களுக்காக நன்றியோடு பாராட்ட இருக்கிறோம் சகோ..! அதில் ஒருவர் பதிவர்..!

Tuesday, January 3, 2012

36 இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..!


இங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே  23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், "பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.

Sunday, January 1, 2012

18 தேவையா புத்தாண்டு கொண்டாட்டங்கள்..?

2011 நவம்பர் 26 - அன்றே இங்கே சவூதியில் புத்தாண்டு..!?! புரியவில்லையா..?
ஹிஜ்ரி 1432 முடிந்து அன்றுதான் 1433 ஆரம்பித்தது. அன்றுதான் அவ்வருடத்தின் முதல் நாள். அன்று சவூதியில், யாரும் யாரிடமும் வாழ்த்து கூறியோ, இது பற்றியோ, இந்த நாளை நினைவு படுத்தியோ ஏதும் தனிச்சிறப்பாக கூறிக் கொள்ளவும் வாழ்த்திக் கொள்ளவும் இல்லை; எக்ஸ்ட்ராவாக மகிழவும் இல்லை. அடுத்தநாள் அலுவலகத்தில் புதிய காலண்டர்  (அதில் ஹிஜ்ரி/கிரிகோரியன் இரண்டும் இருக்கும்) மாட்டினார்கள். அவ்ளோதான்..! நான் இங்கு வந்த ஏழு வருஷமாக இப்படித்தான் பார்க்கிறேன். ஹிஜ்ரி வருடப்பிறப்பெல்லாம் இங்கே ஒரு விஷயமே இல்லை..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...