அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label இடைத்தரகர். Show all posts
Showing posts with label இடைத்தரகர். Show all posts

Monday, February 6, 2012

11 உழவர்சந்தை போல், இடைத்தரகர் இல்லா மீனவர்சந்தை..!

தற்போதய பறந்து விரிந்து வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரு மணமகன் அல்லது மணமகள் தேடுவதற்கோ, அல்லது நமக்கு ஒரு நிலம், வீடு, வாகனம் போன்றன வாங்க/விற்க வேண்டும் என்றாலோ 'அவை எங்கெங்கே உள்ளன' என்பதையோ, 'அதற்கான தேவைகள் உள்ளவர்கள் எங்கெங்கு உள்ளனர்' என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. இந்த இடத்தில் 'தரகு' என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிறது.


இதற்காகவே சிலர், அவர்களாக முயற்சித்து அதற்கான தகவல்களை முன்னமேயே திரட்டி வைத்திருந்து, பயனாளிகளுக்கு உடனுக்குடன் தருவதை தமது முழு நேரத்தொழிலாகவே செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட தொழிலை செய்வோரான இந்த 'தரகர்கள்' என்போர் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் சுணங்கும், இழுத்தடிக்கும் அல்லது தடைபட்டும் விடும்.

ஆனால் தரகர்களில் சிலர்,  பணம் பண்ணுவதற்காகவே எவ்வித பித்தலாட்ட-பதுக்கல்-மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இதனால், மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட இந்த தரகுத்தொழிலை முழுமையாக 'தவறு' என நிராகரிக்கவோ அல்லது 'சரி' என அப்படியே ஏற்றுக்கொள்ளவோ முடியாத குழப்ப சூழல்தான் இப்போது நிலவுகிறது. 
previous home
Related Posts Plugin for WordPress, Blogger...