அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label விவாகரத்து. Show all posts
Showing posts with label விவாகரத்து. Show all posts

Monday, March 26, 2012

26 புதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..!

தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது. மட்டுமின்றி, விட்டுக்கொடுக்கவே இயலாத விஷயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன்மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழவே இயலாது போனால்... பிரிவதை தவிர வேறு வழி இல்லை..! 


இந்நிலையில் மனம் ஒத்துப்போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரபூர்வமாக பிரிதலே விவாகரத்து..! ஏனெனில், பிரிந்தவர்கள் தம் மனம் ஒத்த வேறொவருடன் மறுமணம் புரிய வேண்டுமானால்... இப்படி பிரிந்த  தம்பதியர் அரசிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரமான விவாகரத்து பெற்றாக வேண்டும். இல்லையேல்... மறுமணத்தில் சட்டசிக்கல் வரும்..! 
previous home
Related Posts Plugin for WordPress, Blogger...