தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது. மட்டுமின்றி, விட்டுக்கொடுக்கவே இயலாத விஷயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன்மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழவே இயலாது போனால்... பிரிவதை தவிர வேறு வழி இல்லை..!
இந்நிலையில் மனம் ஒத்துப்போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரபூர்வமாக பிரிதலே விவாகரத்து..! ஏனெனில், பிரிந்தவர்கள் தம் மனம் ஒத்த வேறொவருடன் மறுமணம் புரிய வேண்டுமானால்... இப்படி பிரிந்த தம்பதியர் அரசிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரமான விவாகரத்து பெற்றாக வேண்டும். இல்லையேல்... மறுமணத்தில் சட்டசிக்கல் வரும்..!
