முன்கதை சுருக்கம் :
இந்த உலகில் எண்ணெய் வள நாடுகளின் எண்ணெய் வளத்தை, தக்க கூலியை பெற்றுக்கொண்டு தன் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து, அவர்களை சிறு பணக்காரர்களாக்கி, பின்னர் தன் பலமிக்க ஆயுத அடக்குமுறை மற்றும் பரந்த பொருளாதார நிர்பந்தம் மூலம், மேலும் மேலும் எண்ணெயை உறிஞ்சி, இதன் மூலம் இந்நாடுகளை விட மிக அதிக பயன் அடைந்து பெரும்பணக்காரனாகி தன் வயிற்றை கழுவும்'தொழில்நுட்ப வல்லரசு நாட்டாமை' நாடுகள் இவ்வுலகில் சில உண்டு. 'இந்த அநியாயத்தை தட்டிக்கேட்பதால் தமக்கு பாதகத்தை தவிர வேறு எந்த ஒரு சாதகமும் இல்லை' என்பதை நன்கு உணர்ந்து, தன்னிடம் மனிதாபிமானம் என்ற ஒன்றையே கொன்று புதைத்துவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும் சுயநல நாடுகள் பல உள்ளன இவ்வுலகில்.