அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label பிரவோம். Show all posts
Showing posts with label பிரவோம். Show all posts

Sunday, December 18, 2011

7 முல்லை பெரியாறு: அமைச்சர் ப.சிதம்பரம் வலுக்கட்டாய வாபஸ்..!

நேற்று.....

சென்னை காமராஜர் அரங்கில், நேற்று "முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை -- ஒரு விளக்கம்" என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "முல்லைப் பெரியாறு பிரச்னை, கேரளாவில் நடக்க உள்ள 'பிரவோம்  (PIRAVOM) தொகுதி' இடைத்தேர்தலுக்காக கிளப்பப் பட்டுள்ளது" என்றார்..! வார்ரே வ்வா..! இதே கருத்தைத்தான் இவருக்கும் முன்னாடியே நானும் என்னுடைய சென்ற வார பதிவிலேயே... (முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!) மிகத்தெளிவாக புகைப்படங்களுடனும், கேரள அரசியல் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எல்லாம் வைத்து லாஜிக்கலாகவும், முந்திய ராமஜென்மபூமி, ஒகேனக்கல் இவற்றுடன் ஒப்பிட்டு விளக்கமாக எழுதி இருந்தேன்..! எனது கருத்துக்கு வலுவூட்டும் விதமாக அமைச்சர் சொன்னது மட்டும் முக்கிய விஷயம் அல்ல..! இன்னொன்றும் உள்ளது..!

Sunday, December 11, 2011

32 முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!

இனவாதம் / இனவெறி என்றால் என்ன தெரியுமா சகோ..? 

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை. தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்) 

அப்படித்தான், பாபர் மசூதி விவகாரத்தில் பெரும்பான்மை நடுநிலை இந்து மக்கள் முதல்... உ.பி.போலிஸ், இந்திய ராணுவம், மத்திய அரசு... வரை, கரசேவை கொடுமைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது..! அலஹாபாத் ஹைக்கோர்ட் சொன்ன தீர்ப்பும் இதைத்தான் உணர்த்துகிறது..! காரணம்... 'ராமஜென்ம பூமி அரசியல்' என்பது தனது சமுதாயக்கடவுளுக்கு சாதகம் என்பதால்..! இது மதவெறி..!

இதேபோலத்தான்...  முல்லை-பெரியாறு விவகாரமும். நடுநிலை மக்களுக்கு நன்கு புரியும். என்றாலும், தாங்கள் கேரளாக்காரர்கள் என்பதால் அவர்கள் கேரள அரசும், மலையாள ஊடகமும் செய்து வரும் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். காரணம்... முல்லை-பெரியாறு ஒழிந்தால் அது தனது மொழிக்காரர்களுக்கு சாதகம் என்பதால்..! இது மொழிவெறி..!

நான், தமிழ் மொழி பேசுகிறேன் என்பதால் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுதவில்லை சகோ..! எனக்குப்பட்ட நியாயத்தை மட்டுமே எழுதுகிறேன்..!
previous home
Related Posts Plugin for WordPress, Blogger...