அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label RSS. Show all posts
Showing posts with label RSS. Show all posts

Monday, December 5, 2011

26 பாபர் மசூதி : ஹிஸ்ட்-ஜியோ டேட்டா


ஃப்ளாஷ் பேக்

1992 December - 6 அதிகாலை
1949 டிசம்பர் 22 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் 'இஷா' எனும் இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். வைகறை ஃபஜ்ர் தொழுகைக்காக  அன்று பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி..! கதவு உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார்' என்று ஒரு கும்பல் வெளியே கலாட்டாவில் இறங்கியது.

"வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக" ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் 'முதல் தகவல் அறிக்கை' (FIR) பதிவு செய்யப்பட்டது. அப்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத்தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

Wednesday, January 12, 2011

36 பயங்கரவாதம் Vs. அடிப்படைவாதம் : சொல்ல மறைத்த நிஜம்

மாதக்கணக்கில் வருஷக்கணக்கில் தங்கள் குடும்பம், ஆசை இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது உயிரைக்கூட பணயம் வைத்து தெஹல்கா, ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, ரிப்போர்ட்டர்கள் மற்றும் மாலேகான் புகழ் மாவீரர் ஹேமந்த் கார்கரே, தென்காசி டி.ஐ.ஜி. P.கண்ணப்பன்  போன்ற அஞ்சாநெஞ்சம் கொண்ட காவலர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு சிந்தித்து உழைத்து நேர்மையாக வெளிக்கொண்டு வந்த பல RSS, சங்பரிவார ஹிந்துத்துவாக்களின் பயங்கரவாத அட்டூழியங்களை நாம் அறிவோம்.(இவர்கள் போல இன்னும் நிறையபேர் நம் நாட்டில் உருவாக இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோ..!) 

ஆனால், அவற்றை வெளிக்கொணர எடுக்கப்பட்ட எண்ணற்ற நடவடிக்கைகள், அதனால் விளைந்த பயன்களை விட மிகப் பெரிய பலன் ஒன்று இவ்வாரம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான பிரபல வெகுஜன ஊடகங்கள் தலைப்புச்செய்தியாய் சொல்ல மறைத்த நிஜம். ஆனால், அது மிக மிக எளிதாக... ஒரு சாதாரண மனிதனால்.... சாத்தியமாகி உள்ளது.  அதேநேரம் ஆழ்ந்து சிந்தித்தால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புலப்படும்.  

previous home
Related Posts Plugin for WordPress, Blogger...