அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, February 23, 2013

69 இது 'திராவிட பயங்கரவாதம்' இல்லையா..?


ஒரு தனி மனிதர் செய்யும் தவறுக்காக அல்லது அவர் சார்ந்த சமூகத்தின் தவறான கொள்கைக்காக அவரின் ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பார்வை பார்த்தலும் அதற்கு தண்டனையாக அந்த சமூகத்தின் பிற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தலும் பயங்கரவாதம். 

இதைத்தான் ஹிட்லர் அன்று ஒட்டுமொத்த ஜெர்மானிய யூதர்கள் மீது நடத்தினார். ஜார்ஜ் புஷ் ஒட்டுமொத்த ஆப்கானியர் மீது நடத்தினார்.  ராஜபக்சே ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீது நடத்தினார். மோடி ஒட்டுமொத்த குஜராத் முஸ்லீம்கள் மீது பொய்ப்பழிபோட்டு நடத்தினார். ஆனால், இவர்கள் செய்த செயலை உலகரிய நல்லிதயம் கொண்ட நன்மக்கள், நடுநிலை சான்றோர் அனைவருமே குற்றம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த கொடுங்கோளர்கள் எல்லாம் விஷச்செயல்களில் காட்டியதை ஒருவர் விஷக்கருத்தாக மக்கள் மனதில் பதிய வைத்தார். அவர்... 'தந்தை'(?) பெரியார்..! 

Tuesday, February 19, 2013

20 சவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..!



நான் சவூதிக்கு அடிமை அல்லன். சவூதிக்கு ஆதரவாளனும் அல்லன். ஆனால்...

சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா..? அதுதானே நியாயம்..? ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது..! இது அநீதியன்றோ..? அராஜமன்றோ..?

Monday, February 11, 2013

18 பதிவருள் பத்தரைமாற்றுத்தங்கம் சகோ.மாயன்:அகமும் புறமும்


மீடியாவை பொருத்தமட்டில் பொதுவாக இஸ்லாம் என்றாலே உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதிலும், உண்மைகளை  மறைப்பதிலும், நடந்ததை திரிப்பதிலும் ஊடகங்களுக்கு அப்படி ஓர் அதீத ஆர்வம். காரணம், உலக அளவில் அமெரிக்க யூத ஜியோனிச அரசியல் சார்பு ஊடகங்களும், இந்திய அளவில் அவர்களை அப்படியே அடியொற்றி செயல்படும் ஹிந்துத்துவா அரசியல் சார்ந்த ஃபாஸிச ஊடகங்களும். ஆனால் இவற்றில் மிகவும் சிறு அளவில் நேர்மையான விதிவிலக்குகள் உள்ளன. அவற்றின் மூலமாக உண்மைகள் அவ்வப்போது சிறு வாய்க்காலாக வெளியே வந்தாலும் அவை மேற்கண்ட ஊடக சுனாமியில் இருப்பிடம் தெரியாமல் அடித்து செல்லப்பட்டு விடுவதுண்டு.

இதொன்றும் நமக்கு புதிது அல்ல..! ஏகாதிபத்தியத்தில் முன்னர் காலணி நாட்டினருக்கு எதிராக,  பின்னர் நம் நாட்டு ஜனநாயகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக, அமெரிக்க ஐரோப்பிய வல்லதிகத்தில் ஒடுக்கப்பட்ட நிறத்தினருக்கு எதிராக நடப்பதுதான் என்றாலும்... முஸ்லிம்களுக்கு - அவர்களின் மார்க்கமான இஸ்லாத்துக்கு எதிராக என்றால்மட்டும்... ஒட்டுமொத்த உலகமே உடனடியாக ஒன்றுபட்டு கைகோர்த்துக்கொள்வதை நாம் நன்கு அறிவோம்.

Thursday, January 31, 2013

26 முஸ்லிமல்லாதோருக்காக...



நாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,
நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,
நம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,

இவற்றுக்கு நடுவே...
//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்..? தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..?//
...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.

Thursday, January 17, 2013

44 If prostitution legalised... விளைவு..? ---ஓர் அலசல்.


டெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந்திய சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.ஷர்மா கமிட்டி ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியிடம் 'பாரதிய பாட்டிடா' என்றதன்னார்வ தொண்டு நிறுவனம் (!!?!!) ''விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ''நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காததுதான்'' என்றும் கூறியுள்ளது..! 

பொதுவாக உலக அளவில் உள்ள NGO க்கள் எல்லாருமே இதே மாதிரியான புரிதலில்தான் உள்ளனர். இது சரியா, இதனால் raping குறையுமா, வேறு என்ன பக்க விளைவுகள் ஏற்படும்... என்பதை இப்பதிவில் அலசுவோம்.

Monday, January 14, 2013

16 என் ஜல்லிக்கட்டு அனுபவம்

ஜல்லிக்கட்டு..!
ஊரெல்லாம் இதே பேச்சு..!
செங்கல் ஜல்லியோ..? கருங்கல் ஜல்லியோ..? ஜல்லியை கட்டுன்னா... இதில் எதை கட்டுவது..?
அப்படியே கட்டினாலும், ஜல்லியை எப்படி கட்டுவது,  கயிற்றாலா... கம்பியாலா... அல்லது வாழை நாராலா..?

இப்படி எல்லாம் சந்தேகம் எனக்கு சிறு வயது முதலே ரொம்ப காலமாகவே உண்டு.  உங்களுக்கும் இதே ஐயம் இருக்கலாம். எனக்கு மட்டும் எப்படி அர்த்தம் தெரியும்..? வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்... இன்றும் கூட 'ஜல்லிக்கட்டு' என்றால் என்ன அர்த்தம் என்று நிறைய பேருக்கு தெரியவில்லையே..! அதன் பெயர்க்காரணம் பற்றி அறிய முற்படுதலே இப்பதிவு.


எனது அந்த ஜல்லிக்கட்டு அனுபவம்... ஓர் அலாதியான அதிபயங்கர அனுபவம். நம்பிக்கை மோசடி, வெறித்தனமான துரத்தல், , காயங்கள், உயிருக்கு பயந்து ஓடுதல், த்ரில், காமடி, டிராஜடி... இப்படி எல்லாமே உண்டு. என்னால் மறக்க முடியாதது. ஏனெனில் அன்று நான் விரட்டப்படும் போது... ஓடு ஓடு ஓடு என்று அப்படி ஓடி இருக்கிறேன்... தலைதெறிக்க ஓடி இருக்கிறேன்..!

Saturday, January 5, 2013

20 இந்திய கிரிக்கெட் அணியில் "_வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)"

இன்றைய செய்தி... 

Parvez Rassol, the Jammu and Kashmir allrounder, has been included in the 14-member India A squad to play the warm-up one-day match against England on January 6 in Delhi.

இவரை நியாபகம் உள்ளதா சகோஸ்..? 


Sunday, December 30, 2012

29 தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி

சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு புத்தர் சிலையை ஆப்கானில் இடிக்க கிளம்பிவிட்டன...!  அதாவது தாலிபான் செய்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன..! ஆனால்... இடிப்பு பின்னணியை பார்த்தால்... தாலிபான் எவ்வளவோ தேவலை என்பீர்கள்..! 


Friday, December 7, 2012

8 'விமர்சகன்' : ஒரு விமர்சனம்..!


நல்ல பக்கமும் தீய பக்கமும் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. 

அவற்றில் எந்த பக்கம் மிகுதியோ அதைவைத்துத்தான் அவன் நமது 'நல்ல சமூகத்தில்' நல்லவன் அல்லது தீயவன் எனப்படுகிறான்..! 

('தீய சமூகத்தில்'... நல்லவன்... 'தீயவன்' என்றும் தீயவன்... 'நல்லவன்' என்றும் பெயர்பெற்று உல்ட்டாவாகிவிடுவது தனிக்கதை. அதுபற்றி இப்பதிவில் வேண்டாம்..! )

சரி, நமது வாழ்க்கை புத்தகத்தில் அந்த இரண்டு பக்கத்தையும் படித்து இரண்டையும் நேர்மையான முறையில் கூட்டி குறைக்காமல் உள்ளது உள்ளபடி பொதுவில் கருத்து சொல்பவர்கள்தான் 'விமர்சகர்கள்'..!

ஆனால், இவர்கள் உண்மையில் தமது விமர்சனத்தில் பெரும்பாலும் நேர்மையாக நடப்பதில்லை..! 

Saturday, November 17, 2012

42 நமது 'துப்பாக்கி' எதிர்ப்பின் விஸ்வரூபம்...

 இந்தியாவில் நடந்த ர(த்)தயாத்திரை - பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த "பயங்கரவாத குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை" பொருத்த மட்டில்... அதை நாம் "கார்கரேக்கு முன்" என்றும், "கார்கரேக்கு பின்" என்றும் இரண்டாக பிரிக்கிறோம். சினிமாவையும் ஊடகத்தையும் இதற்குள் அடக்கித்தான் அலச வேண்டும் நாம்..!


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...