அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, February 2, 2012

33 சிறுகதை - ஹராம்

தானே புயல்... தானே உருவாகி, தானே மையங்கொண்டு, தானே பலம் பெற்று, தானே நகர்ந்து, தானே கரை கடந்து, தானே சுழன்றடித்து, தானே சேதப்படுத்தி, தானே வலுவிழந்து, தானே ஓய்ந்தும் போனது... ஆகிய அனைத்தும் தானேவா நிகழந்தது..? இல்லை... இது இறை விதியா..? இது மனிதர்களுக்கு இறைவனின் சோதனையா..? ...போன்ற கேள்விகளெல்லாம் மனதை ஆக்கிரமிக்க இடமே இன்றி... பெருந்துயருடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்து என் மனதை போலவே சுக்கு நூறாய் உடைந்து போன எனது தள்ளு வண்டி இட்லி கடையின் முன்னே அமர்ந்து இருந்தேன். 'இங்கே கடையை நிறுத்தினால், சாலையின் நியான் விளக்கின் உதவியுடன் இரவு வியாபாரம் களைகட்டும்' என்று நிறுத்தும்போது தெரியவில்லை... இப்படி புயல்வரும்... அதனால், இந்த மின்சார விளக்குத்தூண் என்  பொருளாதாரத்தின் மீதே விழுந்து இப்படி உடைத்து தொலைக்கும் என்று..!

Sunday, January 29, 2012

31 'மதஎதிர்வாதி' -- ஓர் ஆபத்து அறிமுகம்..!

இவ்வுலகில் மனிதனை தம் சுய அறிவுடன் காரியமாற்றும் படி படைத்த இறைவன் அவனை சும்மா வெறுங்கையுடன் விட்டுவிடவில்லை ..! 'எப்படி இவ்வுலகில் வாழவேண்டும்' என்று தான் படைத்த முதல் மனிதனுக்கே அறிவுறுத்தும் வண்ணம் 'இஸ்லாம் எனும் நேரிய வாழ்வியல் நெறி' ஒன்றை அவருக்கு அருளிய இறைவன், அவரை தம் இறைத்தூதராகவும் ஆக்கி அவரின் மனைவிக்கும் அனுப்பி அந்த வாழ்வியல் நெறியை பகிரவும், தம் சந்ததிக்கும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் வைத்தார். காலப்போக்கில் சிலர் இந்த இறைவழியை புறக்கணித்து தம் மனம் விரும்பிய வழியில் செல்லத்துணியும்போது, வாழ்வியல் நெறியை அப்போதும் பேணுவோர், ஓரிறை நெறி பிரழ்ந்தவோர் மீது பிரச்சாரம் செய்வதும், அவர்களில் ஒரு சாரார் மீள்வதும் மற்றொரு சாரார் அதனை புறக்கணிப்பதும் அன்றிலிருந்து தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், "நம் பணி இறைச்செய்தியை தெளிவாக இவர்களிடம் சொல்வது மட்டுமே... சொல்லியாயிற்று... இனி இவர்களுக்கு இறைவன் விட்ட வழி" என்று இந்த ஆத்திக இறைப்பற்று கொண்டவர்கள் எண்ணினால்... அவர்களை 'மதப்பற்று' கொண்டவர்கள் எனலாம்.

அவ்வாறின்றி, 'நான் சொல்வதை கேட்காத உன்னை விட்டேனா பார்' என்று இறைநெறி மறுப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பதும், கொடுமை புரிவதும், கொலை செய்வதும்  'மதவெறி' ஆகிவிடுகிறது.

Friday, January 27, 2012

27 citizen of world : இந்திய எதிர்ப்பா..?


citizen of world  - எனக்கு நான் இப்படி பெயர்சூட்டி பல மாதங்கள் ஆகியும் ஒருவருமே இதைப்பற்றி கேட்டதில்லை. முதன்முதலாக சகோ. அஸ்மாவின் 'பொங்கல் பொதுவான திருநாளா?' பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவரின் பெயருக்கு நான் விளக்கம்  கேட்கப்போய், பதிலுக்கு அவர் என்னுடைய citizen of world-ற்கான பெயர்க்காரணத்தை கேட்டார். 10 நாள்கூட பொறுக்க முடியாதவர், என் பெயருக்கான வேறு பொருளை தன் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி, தவறான கருத்தை இன்னொரு தளத்தில் பரப்புகிறார். இதுபோன்ற அநாகரிக செயல்களை நல்லோர் செய்யார்..!
.
இனி... எனது citizen of world பெயருக்கான பின்னணி விளக்கம்...

Monday, January 23, 2012

78 போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு

பொதுவாக  நாத்திகர்கள் என்போர்... RSS-சங் பரிவார-ஹிந்துத்வா பாசிஸ கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தீண்டாமை-வர்ணாசிரம சாதி பாவிக்காத சக ஆத்திக மனிதர்களுடன் அன்போடு பழகுவார்கள். தம் திருமணத்தில் கூட  ஆத்திக/மத நம்பிக்கையை அனுமதிக்க மாட்டார்கள். ஒருவன் செய்த தீய செயலுக்காக ஒட்டுமொத்த  சமூகத்தையே  இழிவாக ஏச மாட்டார்கள். இந்த நான்கு பண்புகளும் இல்லாதவர்களே நம் பதிவின் 'போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு' போட்டவர்கள். தங்களை இவர்கள் நாத்திகர்கள் என்று அழைத்துக்கொண்டாலும் இவர்களின் இலக்கு இஸ்லாம் & முஸ்லிம்கள் மட்டுமே. (கூடவே சவூதியும்..!) :-((

நாம் சாந்தியை, சமாதானத்தை முன்னிறுத்தி கைகுலுக்க பின்னூட்டினால், நடுநிலை முகமூடி அணிந்த இந்த போலி நாத்திகர்கள் ஒரு சிலர் காந்தியை சுட்ட  கோட்சேயாய் மாறி, உண்மைக்கு புறம்பான விஷயங்களையும், தவறான திரிபு ஒப்பீடுகளையும் கூறி வஞ்சினப்பதிவு இடுகிறார்கள். இவர்களிடம் போய் நமது உண்மையை சொல்லவும் கூடாது, அவர்களின் பதிவில் உள்ள பொய்யை எதிர்க்கவும் கூடாது என்கிற அவர்களின் 'தான்சொல்வது மட்டுமே சரி' என்ற நிலை நமக்கு புரிவதுமில்லை. இதனால் நமது எதிர்வாதம் கூட விழலுக்கு இரைந்த நீராய்... வீணாய்ப்போகிறது.

Friday, January 20, 2012

20 உங்களிடம் SBI A/c இருந்தால் உடனே பாருங்கள்: 50000 கோடி இருக்கலாம்..!

அவர், மேற்கு வங்க மாநில தென் தினாஜ்பூரில் உள்ள பாலுர்காட் என்ற ஊரில் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர். மாதச் சம்பளம் சுமார் ரூ 35,000. அவரின் இந்த மாத செலவுக்கு அவ்வப்போது எடுத்தது போக மீதி அநேகமாக ரூ 10,000 இருக்கலாம் என்று எதேச்சையாக தம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக்கணக்கை இந்த வார ஞாயிறு அன்று நெட்டில் திறந்து பரிசோதித்த அந்த ஆசிரியருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி..! பேரதிர்ச்சி..!

காரணம், அவர் அக்கௌண்டில் இருந்த பணம்... ரூ 49,570,08,17,538 (அதாகப்பட்டது... சுமார்  ஐம்பதாயிரம் கோடி ரூபாய்..!) யார் அவர்..? அந்த பணம் எப்படி வந்தது இவர் அக்கௌண்ட்டிற்கு..? இவர் கணக்கில் போட்டது யார்..? அது அவ்வளவும் யாருடைய பணம்..? எப்படி இது நடந்தது..?

Tuesday, January 17, 2012

32 தினமணியின் அறியாமை

"திருவள்ளுவர்  தினம் -தை முதல் நாள்- தமிழ்ப்புத்தாண்டு- தமிழர் திருநாள்" என்று சென்ற வருட தமிழக அரசு சார்பாக திமுகவினர் சொல்ல... 

"இல்லை... இல்லை... சித்திரை ஒண்ணுதான் தமிழ்புத்தாண்டு என்று இன்றைய தமிழக அரசு சார்பில் அதிமுக சொல்ல... 

தமிழர்கள் நாம் எது 'ரியல் புத்தாண்டு' என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறோம்..! நம் பூமி எந்த இடத்தில் இருந்து சூரியனை சுற்ற ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. எனவே, எந்த மாதம் வேண்டுமானாலும் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம். இந்நிலையில், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று பள்ளியில் பழமொழி படித்தோம். இப்போதெல்லாம் தை பிறந்தால் அது சண்டைக்குத்தான் வழி அமைக்கிறது. அதிலாவது அர்த்தம் இருந்தால் கூட பரவாயில்லை. முட்டாள்த்தனமாக சண்டை நடக்கிறது. 

Friday, January 13, 2012

27 General : தமிழர்களின் தவறான புரிதல்..!

General என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் உள்ளது. பொதுமை, முழுமை, பெரும்பாண்மை என்ற பொருள் மட்டுமின்றி, தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் என்றும் பொருள் உண்டு..! ஆனால், நாம் பொதுவாக இந்த ஆங்கில வார்த்தைக்கு 'பொது' என்ற ஒரே அர்த்தத்தையே எல்லா இடங்களிலும் கொடுத்து விடுகிறோம். இது நிச்சயம் தவறான புரிதல். சில இடங்களில் சரியாக இருக்கும்; எல்லா இடங்களுக்கும் சரியாக இல்லை. மேலும் இது, 'தவறு' என்று அறிந்தவுடன், உடனே சரியான பொருளுக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தவறுங்கூட..!

உதாரணமாக....., 

Sunday, January 8, 2012

73 பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியரிதல்களும் குறைந்து கண்டன குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும். எனவே, இங்கே சிலரை அவர்களின் நேரிய நற்செயல்களுக்காக நன்றியோடு பாராட்ட இருக்கிறோம் சகோ..! அதில் ஒருவர் பதிவர்..!

Tuesday, January 3, 2012

36 இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..!


இங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே  23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், "பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.

Sunday, January 1, 2012

18 தேவையா புத்தாண்டு கொண்டாட்டங்கள்..?

2011 நவம்பர் 26 - அன்றே இங்கே சவூதியில் புத்தாண்டு..!?! புரியவில்லையா..?
ஹிஜ்ரி 1432 முடிந்து அன்றுதான் 1433 ஆரம்பித்தது. அன்றுதான் அவ்வருடத்தின் முதல் நாள். அன்று சவூதியில், யாரும் யாரிடமும் வாழ்த்து கூறியோ, இது பற்றியோ, இந்த நாளை நினைவு படுத்தியோ ஏதும் தனிச்சிறப்பாக கூறிக் கொள்ளவும் வாழ்த்திக் கொள்ளவும் இல்லை; எக்ஸ்ட்ராவாக மகிழவும் இல்லை. அடுத்தநாள் அலுவலகத்தில் புதிய காலண்டர்  (அதில் ஹிஜ்ரி/கிரிகோரியன் இரண்டும் இருக்கும்) மாட்டினார்கள். அவ்ளோதான்..! நான் இங்கு வந்த ஏழு வருஷமாக இப்படித்தான் பார்க்கிறேன். ஹிஜ்ரி வருடப்பிறப்பெல்லாம் இங்கே ஒரு விஷயமே இல்லை..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...