அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, July 27, 2012

6 பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)

கண்ணால் காணப்பட்ட 27 மணி நேர பிறை ~Time 8:07 pm EDT Date April 9, 2005 Location: Batsto, NJ, USA
இதற்கு முந்திய பதிவில் பிறை குறித்த Basics பார்த்தோம்..!

அதாவது, பூமியில் பூர்ண அமாவசை எந்த நேரத்தில் ஏற்படுகிறது, அதே இடத்திற்கு பூர்ண பெளர்ணமி எந்த நேரத்தில் ஏற்படுகிறது, வளர் பிறை, பவுர்ணமி & தேய்பிறை ஆகியன எங்கே எப்போது எப்படி உதிக்கின்றன,  எங்கே எப்போது எப்படி மறைகின்றன, சூரிய கிரகணம், சந்திரநாள், சந்திரமாதம், சந்திர சுருள் சுற்றுவட்டப்பாதை, பிறையை உறுதியாக கணிக்க முடிந்த அறிவியலுக்கு பார்ப்பதற்கு உறுதி தர இயலாமை... குறித்தெல்லாம் பார்த்தோம். 

இனி கொஞ்சம் Advanced stage..! இதில் முதலில் பிறை பார்ப்போருக்கான குறைந்தபட்ச அத்தியாவசிய புரிதல்கள் பற்றி பார்த்து விட்டு "எல்லோப் பிறை வரைபடங்கள்" பற்றி பார்ப்போம். ஏனெனில், அந்த முன்னேற்பாட்டோடு சென்றால்தான்... ஒரு தலைப்பிறை, அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் இந்த வானியல் ஆய்வாளர் பெர்னார்ட் டேவிட் எல்லோப் கூறுவதை பற்றியும் இன்னும் தெளிவாக விளங்க முடியும்..!

Tuesday, July 24, 2012

14 பிறை : - அப்டீன்னா...? (for dummies)




பிறை : ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வருஷத்துக்கு இரண்டு பிறை மட்டும் பார்க்கும் மக்கள் வாய்களில் பிறக்கும் ஒரு வார்த்தை அல்ல இது..! 

அல்லது...  

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் முடியும் நேரம் நெருங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு "ரம்ஜான் பண்டிகை என்றைக்கு..?" என்று ஊடகங்கள் வாய்களில் தப்பிப்பிழைக்கும் ஒரு வார்த்தையும் அல்ல இது..!

மாறாக, மாசாமாசம்... அதாவது ஒவ்வொரு மாதமும்... மேற்கில் சற்றுமுன்னர் மறைந்த சூரியனின் ஒளி அடுத்த சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரத்தில் மேற்கில் மறையப்போகும் சந்திரனின் பக்க-அடிப்பகுதியில் ஏற்படுத்தும் ஒரு ஒளிக்கீற்று தான் பிறை எனப்படுவது..!


Monday, July 16, 2012

17 கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............



16 வருடங்களுக்கு முன்னர் நான் எனது முந்தைய தொழிற்சாலையின் Training Period இல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த Industrial Hygiene & First Aid வகுப்பில் இரண்டு மருத்துவர்களின் இரண்டு மணி நேர lectures செவிமடுத்து விட்டு அது முடிந்ததும் கேள்வி நேரத்தில் அமர்ந்து இருக்கிறேன். அந்த வகுப்பில் இரு டாக்டர்களுமே இரவில் விரைந்து தூங்கி அதிகாலை விரைந்து எழுந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு... என் இயல்பான வாழ்க்கை(systematic life) பற்றி  அதை வலியுறுத்தி கூறினர். இதனைக்கேட்ட... அறைத்தோழன் நந்தகுமார் எழுந்தார்; கேள்வி நேரத்தில் இந்த கேள்வி கேட்டார்:-

Tuesday, June 26, 2012

57 'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..? (China Tissue Factory - Photo Gallery)

பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!

பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.

 .
ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கிவிட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டார்கள்..?

Saturday, June 16, 2012

35 அமீர்கான் திருந்துவாரா..?

'Bollywood' என்றழைக்கப்படும் ஹிந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் என்பவர், 'சத்யமேவ ஜெயதே' எனும் பெயரில் 'ரியாலிட்டி ஷோ' என்ற வகைப்படும்... சமூக விழிப்புணர்வை தூண்டும் ஒரு நிகழ்ச்சியை  ஸ்டார் தொலைக்காட்சியில் நடத்தி வருவது... பொதுவாக தற்போது பல தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி... ஏதோ நல்ல நிகழ்ச்சிதான்..! ஆனால்.... அதை நடத்துபவர்..?!?!?

'நிகழ்ச்சி நடத்தும் ஹிந்தி சினிமா நடிகர் அமீர்கான்'

Friday, June 8, 2012

33 நைட் ஷிப்டா..? அஸிடிட்டியா..? தீர்வு இதோ..!

சென்ற இரு பதிவிற்கு முந்தைய பதிவில், பகல் நேரப்பணியில் கடும் கோடையில் உண்டான பிரச்சினையும் அதற்கு கண்ட தீர்வையும் சொல்லி இருந்தேன் அல்லவா..? இப்போது... இரவுப்பணியில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையையும் அதற்கு கண்ட தீர்வையும் எழுதப்போகிறேன்..! யாருக்கேனும் எனது அனுபவம் பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி..! வழக்கம்போல சகோஸ்... நீங்களும் பின்னூட்டத்தில் மேலும் சில ஐடியாக்களை தாருங்கள்..! :-))

Tuesday, June 5, 2012

49 That is why... என் விக்கி சகோதரா..!

'விக்கியுலகம்' பதிவர் சகோ.விக்கி... நல்லவர், வல்லவர், நாலும் நன்றாக அறிஞ்சவர்..! ஆனால், அஞ்சாவதா ஒரு விஷயத்தில் தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்..! :-)) சென்றமாதம் ஒரு குழு தப்பு தப்பா தன் வயலில் நாற்று நட்டதை நோட்டம் இட்டபோது... 'அது சரி' என்று நம்பி //இப்படி// சொல்லி இருந்தார்..! //அவர் சொன்னதை// எடுத்துப்போட்டு... நான், 'அதை சரியா' என்று அவரை அங்கே கேள்வி கேட்டிருந்தேன்..! 
Mohamed Ashik ///ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா../// ===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!

Mohamed Ashik விக்கி சகோ, நீங்க சொன்னதிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஒருத்தனுக்கு ரெண்டு மூணு என்று மனைவிகள் இருந்தால் இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் என்று சொல்ல வருகிறீர்கள் என்றும்.... அதுவே, ஒருத்தனுக்கு ஒருத்தி என்றால் ஜனத்தொகை குறையும் என்றும் சொல்ல வருகிறீர்கள் என்றும், புரிந்து கொண்டேன். சரிதானே சகோ..?


அதுக்கு கேள்வி கேட்டிருந்த அந்த இடத்தை விட்டுவிட்டு தன் வலைப்பூவில் வந்து, 'என் சகோதரா...Why?' என்றொரு பதிவு போட்டு இருந்தார்..! அதில்...

Thursday, May 31, 2012

25 அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

சகோ... இப்படி நீங்களோ நானோ அல்லது எவரா இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே... ஏதோ ஒரு சூழலிலே... யாரோ ஒருத்தரிடமிருந்து... மேற்படி அர்ச்சனையை நாம் எப்படியோ பெற்றிருப்போம்..! இப்போது நம் நினைவை சற்று மெல்ல மீட்டிப்பார்த்தால்... எங்கே, எப்போது, எதற்காக, யார் நம்மை அப்படி கடிந்து கொண்டது என்று நியாபகம் வந்து விடும்..! அதன்படி நியாபகம் வராவிட்டால்... இதோ உங்களுக்காக சில க்ளூஸ்..! இதன்படியும் நியாபகம் வராவிட்டால்... ஸாரி... பதிவுலக சொல்வழக்குப்படி 'இதற்கு கம்பெனி பொறுப்பல்ல'..!
.

Saturday, May 26, 2012

35 கோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents)

முன்குறிப்பு :- இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு..!
.
என் பள்ளி காலங்களிலும் சரி... கல்லூரி காலங்களிலும் சரி... எங்கள் வீடு ர்ர்ர்ரொம்பவே ஸ்ட்ரிக்ட்..! பகலில் சட்டையை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தால் போதும்..... "வேகாத வெயிலில் வெளியே போகாதே...?"(---மை மதர்)  "வெயிலை வீணாக்காமல் விளையாட்டு வேண்டி கிடக்கா...?" (---மை ஃபாதர்) ...என்ற கட்டளைகள் தூள்பறக்கும்..! விடுமுறை நாள் ஆனாலும் கூட... மாலை நான்கு மணிக்கு அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே போகலாம், விளையாட..! இப்படியாக வெயில் படாமல் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள்..!

Tuesday, May 22, 2012

16 இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!

சென்ற மாதம், எதேச்சையாக டிவி நியூசில் கேட்ட செய்தி..!


'உழைப்பவருக்கே நிலம் சொந்தம்', 'இருப்பவருக்கே இல்லம் சொந்தம்' போன்ற வெற்று ஓட்டரசியல் கற்பிக்கும் பிற்போக்கு சித்தாந்த உந்துதலுக்கு உள்ளாகி... 'சில வருடம் உழைத்து பராமரித்த தோட்டம்... தனக்கே சொந்தம்' என்று ஒரு தோட்டக்காரர், உரிமையாளருக்கு எதிராக அத்தோட்டத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்க, நீதிபதியோ... 'அந்த தோட்டம் உரிமையாளருக்கே சொந்தம்' என்றும்... இப்படி ஒரு அநியாய வழக்கை போட்டதற்காக, தோட்டக்காரருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்..! அபூர்வமான இதுபோன்ற "மெயின் தீர்ப்புடன் இணைந்த இலவச தீர்ப்பு"... அதாவது '2 in 1 நல்ல தீர்ப்புகள்' நாட்டுக்கு ஆரோக்கியமானவை..! தீர்ப்பை வரவேற்கிறேன்..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...