பொதுவாக நாத்திகர்கள் என்போர்... RSS-சங் பரிவார-ஹிந்துத்வா பாசிஸ கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தீண்டாமை-வர்ணாசிரம சாதி பாவிக்காத சக ஆத்திக மனிதர்களுடன் அன்போடு பழகுவார்கள். தம் திருமணத்தில் கூட ஆத்திக/மத நம்பிக்கையை அனுமதிக்க மாட்டார்கள். ஒருவன் செய்த தீய செயலுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவாக ஏச மாட்டார்கள். இந்த நான்கு பண்புகளும் இல்லாதவர்களே நம் பதிவின் 'போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு' போட்டவர்கள். தங்களை இவர்கள் நாத்திகர்கள் என்று அழைத்துக்கொண்டாலும் இவர்களின் இலக்கு இஸ்லாம் & முஸ்லிம்கள் மட்டுமே. (கூடவே சவூதியும்..!) :-((
நாம் சாந்தியை, சமாதானத்தை முன்னிறுத்தி கைகுலுக்க பின்னூட்டினால், நடுநிலை முகமூடி அணிந்த இந்த போலி நாத்திகர்கள் ஒரு சிலர் காந்தியை சுட்ட கோட்சேயாய் மாறி, உண்மைக்கு புறம்பான விஷயங்களையும், தவறான திரிபு ஒப்பீடுகளையும் கூறி வஞ்சினப்பதிவு இடுகிறார்கள். இவர்களிடம் போய் நமது உண்மையை சொல்லவும் கூடாது, அவர்களின் பதிவில் உள்ள பொய்யை எதிர்க்கவும் கூடாது என்கிற அவர்களின் 'தான்சொல்வது மட்டுமே சரி' என்ற நிலை நமக்கு புரிவதுமில்லை. இதனால் நமது எதிர்வாதம் கூட விழலுக்கு இரைந்த நீராய்... வீணாய்ப்போகிறது.
நாம் சாந்தியை, சமாதானத்தை முன்னிறுத்தி கைகுலுக்க பின்னூட்டினால், நடுநிலை முகமூடி அணிந்த இந்த போலி நாத்திகர்கள் ஒரு சிலர் காந்தியை சுட்ட கோட்சேயாய் மாறி, உண்மைக்கு புறம்பான விஷயங்களையும், தவறான திரிபு ஒப்பீடுகளையும் கூறி வஞ்சினப்பதிவு இடுகிறார்கள். இவர்களிடம் போய் நமது உண்மையை சொல்லவும் கூடாது, அவர்களின் பதிவில் உள்ள பொய்யை எதிர்க்கவும் கூடாது என்கிற அவர்களின் 'தான்சொல்வது மட்டுமே சரி' என்ற நிலை நமக்கு புரிவதுமில்லை. இதனால் நமது எதிர்வாதம் கூட விழலுக்கு இரைந்த நீராய்... வீணாய்ப்போகிறது.
உதாரணத்திற்கு சில : 'குடித்து விட்டு வருவதும் பெத்தடின் போதை மருந்துட் கொள்வதும் தவறு' என்று விளங்கி இருக்கும் இவர்கள், குடி/போதையை மிகக்கடுமையாக எதிர்க்கும் இஸ்லாமை பின்பற்றுவோருக்கு மேற்கண்டவற்றை பொருந்தா உவமானமாக சொல்வதற்கு காரணம் அவர்களின் 'போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு'தானே..? இதுதானே இவர்களின் சிந்தை நேரிய பாதையில் செல்வதை தடுத்து, திக்கு தெரியாமல் தறிகெட்டு ஓட வைக்கிறது..?
'போலி நடுநிலை பேணும் போலி நாத்திகர்களே'... நீங்கள் பொது விமர்சனம் செய்வதில் தவறில்லை..! ஆனால், சுயமாக சிந்திக்காமல், "யாரோ எனக்கு சொன்ன என் முன் முடிவுகளோடு மட்டுமே விமர்சிப்பேன்" என்பதுதான் சரியாகப்படவில்லை. இப்படியே நீங்கள் இருப்பதால்... உங்களின் சுய கோபத்தை வெளிப்படுத்தும் போது அறிவுக்கு பொருந்தா சில தவறான ஒப்பீடுகளை செய்து விடுகிறீர்கள். "உனக்கு வந்தா தக்காளி ரசம்..! எனக்கு வந்தாதான் அது ரத்தம்"ங்கிற மாதிரி இருக்கிறது, உங்கள் பொது உலக 'போலி நாத்திக நடுநிலை முக்காட்டு' வாதங்கள்..!
ஈழமுஸ்லிம்களின் மீதான விடுதலைப்புலிகளின் கொலைபாதக அக்கிரமங்களை, போலி நாத்திக நடுநிலை முக்காடு போட்டு இருப்பதால் நீங்கள் அதை எழுத முடியாத நிலையில் உள்ளீர்கள். இந்நிலையில், அந்த புலிப்பாசிஸங்களை பாதிக்கப்பட்ட அந்த முஸ்லிம்கள் கூட எழுதக்கூடா தென்றால் வேறு எவர்தான் எழுதப்போகிறார்கள்..?
'புலி படுத்தால் எலியும் ஏறி விளையாடும்' என்ற உங்களின் இந்த உவமான துயர்நிலையே... புலிகள் எந்த அளவுக்கு இஸ்லாமிய தமிழர்களின் பேச்சுரிமை/ எழுத்துரிமை/ வாழ்வுரிமை ஆகியவற்றை பாசிச வன்மத்துடன் சிறைப்பிடித்து இருந்திருக்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக பிரதிபலிக்கிறதே..!?
'அதெல்லாம் முடிந்து போன ஒரு விஷயம் ஆதலால், இனி குறைந்தபட்சம் மௌனம் கொள்ளலாமே' என்கிறீர்கள்..! புலிபடுத்த பின்னும் எலியின் உரிமையை பறிக்க நீங்கள் என்ன புலிக்குட்டியா..? அவர்கள் எழுத்தில் குரூரம் இருப்பதாக இப்போது குதிக்கும் நீங்கள், நிஜத்தில் நடந்த புலிக்குரூரத்தை இதுவரை எழுதாமல் உங்களை தடுத்ததும் அந்த முக்காடுதானே..?
"விடுதலைப்புலிகள் இலங்கையில் வாழும் சிலரை (கேட்டுக்குங்க... சிலராம்..!?) அந்நியப்படுத்தியதில் மொத்த மதக்கோபம் கொள்ளும் பதிவுலக பத்தி!ஜீவிகள் காஷ்மீரிகளையும் மதம் என்ற பெயரால் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை" என்று சொல்லும் நீங்கள்... 'காஷ்மீர் பண்டிட்களை இடமாற்றம் செய்தது யார்' என்றும் சொல்லாமல் "அவர்கள் தற்போது எந்தெந்த(?) ஊரில், எத்தனை(?) முகாம்களில், எவ்வித உரிமைகளும்(?) அற்று நம் இந்தியாவில் அகதிகளாக(?) அடைக்கப்பட்டு உள்ளார்கள்" என்றும் சொல்லாமல் நழுவியதற்கு காரணம் அந்த முக்காடுதானே..? கொல்லப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை இருப்பதை போல... காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எண்ணிக்கை ("?சிலர்?")சொல்லாததும் ஏனோ..?
"விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் நீங்கள் பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தை மதமென்ற பெயரில் ஆதரிக்கும் தகுதிகள் இழந்து விடுகிறீர்கள்" என்று எப்படி திரிக்கிறீர்கள்..? புலிகளின் இன சுத்திகரிப்பை மட்டுமே அல்லவா எதிர்த்து எழுதுகிறார்கள்..? அவர்களின் சுதந்திர போராட்டத்தை யார் கொச்சை படுத்தியது..?
புலிகளையும் பாலஸ்தீன போராளிகளையும் தவறான ஒப்பீடு செய்யும் முன்னர், எந்த(?)எந்த உலக வல்லரசுகளின் ஆதரவோடு எந்த(?)எந்த நாடுகளில் இருந்தெல்லாம் சிங்களர்கள் இலங்கையில் குடியேறி(?) அங்கே வாழ்ந்து வந்த பூர்வகுடிகளான புலிகளை அவர்களின் இருப்பிடத்திலிருந்து(?) வெளியேற்றினார்கள் என்று சொல்லுங்களேன்..? உங்கள் 'ஒப்பீடு' முழுமை அடையட்டுமே..? மாறாக, இங்கே பூர்வகுடிகளை வெளியேற்றியவர்கள் புலிகள் அல்லவா..? எனில், புலிகளையும் இஸ்ரேலியர்களையும் அல்லவா நீங்கள் ஒப்பிட வேண்டும்..? ஹே...ஹே...ஹே...
இப்படியாக.... புலி ஆதரவாளர்கள் சொல்லும் இனசுத்திகரிப்பு என்ற ஒன்று முக்கியமே இல்லையென்ற வாதத்திற்கு ஆதரவு தருபவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நிகழவேயில்லை என்ற ராஜபக்சே வாதத்திற்கு துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்..!?
"ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை (ஒருமைதானே?) இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும். மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும்..." என்ற இந்த ஒப்பீடும் தவறல்லவா..?
ஆப்கான் மக்கள் வறுமையில் செத்துக்கொண்டு இருக்க, உதவிக்கு ஐநாவிடம் தாலிபான் அரசு பணம் கேட்டால், அது கொடுக்க மறுத்து விட்டது. ஆனால், அதுவரை தாலிபான்கள் கண்டுகொள்ளாத பாமியான் சிலையை 'world heritage center' என்று அறிவித்து அதனை காப்பாற்றி பாதுகாக்க பல மில்லியன் டாலர் கொடுக்க முன் வந்தது.
"மனிதனுக்கு இல்லாத பணம் ஒன்றுக்கும் உதவாத கல்லுக்கா" என்று... 'குடிமகன் என்ற பெயரில் அந்த புத்தர் சிலைக்கு உரிமை கோர ஒரு ஆப்கானிய பவுத்தர் கூட இல்லாத நிலையில்' எத்தனையோ நூற்றாண்டு பாதுகாப்பாக இருந்த பாமியான் புத்த சிலையை தாலிபான் இடிப்பதாக அப்போதுதான் அறிவித்தார்கள்..!
அச்சமயம் ஜப்பான் போன்ற பவுத்த அரசுகள் கூட இடிப்பதற்கு பதிலாக அவர்கள் கேட்கும் ஈட்டுத்தொகை கொடுத்து அதனை தன்னகத்தே இடம் பெயர்த்துக்கொள்ள முன்வந்தும் கூட...
அச்சமயம் ஜப்பான் போன்ற பவுத்த அரசுகள் கூட இடிப்பதற்கு பதிலாக அவர்கள் கேட்கும் ஈட்டுத்தொகை கொடுத்து அதனை தன்னகத்தே இடம் பெயர்த்துக்கொள்ள முன்வந்தும் கூட...
பாமியன் சிலையை தாலிபான் காட்டுமிராண்டிகள் இடித்ததுக்கு எனது வன்மையான கண்டனங்கள், உங்களுக்காக இதோ மீண்டும்..!
அடுத்து... பாமியான் சிலை இடிப்பையும் பாபர் மசூதி இடிப்பையும் இணைக்கும் 'அறிவார்ந்த' உங்களிடம் இந்த கேள்வியை வைக்கிறேன்..!
பாமியான் புத்த சிலையை உடைப்பதற்கு பலத்த எதிர்ப்பு ஆப்கானிய எல்லைக்கு வெளியே இருந்துதானே வந்தது..? ஏனெனில், அப்போது(ம் இப்போதும்) ஆப்கானில் அந்த இடிப்பை எதிர்க்க ஒரு பவுத்தர் கூட இல்லை..!
ஆனால்,
பாபர் மசூதி இடிக்கப்படும்போது... அதுபோன்ற நிலைமையா இந்தியாவில்..? எத்தனை கோடி இந்திய முஸ்லிம்களின் உள்ளங்கள் அன்று மறைமுக அரசு ஒப்புதலுடன் இடிக்கப்பட்டன..?
இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு பேச்சுக்கு... இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரு நிலை இருப்பதாக வைத்துக்கொள்வோம்; அச்சமயம், ஐநா பாபர் மசூதியை world heritage center என்று அறிவித்து RSS சங் பரிவார ஹிந்துத்துவா அரசை பராமரிக்க சொல்லி இருந்து, அது இடிக்கப்பட்டால்... இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பாமியான் அளவுக்கு இதற்கு கண்டனம் வந்திருக்காது..! மேலும், 'இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை' என்றான பிறகு RSS சங் பரிவார ஹிந்துத்துவா அரசின் ஆட்சியில் முழு இந்தியாவில் ஒரு மசூதியாவது இருந்திருக்குமா..? :-) அடுத்த நொடியே 'அகில இந்திய கரசேவை' ஆரம்பித்து இருந்திருக்காது..? அப்போது... முஸ்லிம்களே நாட்டில் இல்லாவிட்டாலும், அவர்களின் மசூதிகள் இருக்கட்டும் என்பீர்களா..?
.
.
ஆக, கண்டனத்துக்குரிய இந்த இரண்டு இடிப்பும் ஒன்றெனும் உங்களின் தவறான ஒப்பீட்டுக்கு காரணம் அதே முக்காடுதானே..?
பாமியான்-தாலிபான் பற்றி எல்லாம் நன்கு பேசும் இந்த முக்காடுகள்...
சைவ மன்னனை வைணவ மன்னன் வெற்றி கொண்ட பிறகு சைவக்கோவில்களை இடித்து வைணவக்கோவில்களாக மாற்றியது...
வைணவ மன்னனை சைவ மன்னன் வெற்றி கொண்ட பிறகு வைணவக்கோவில்களை சைவக்கோவில்களாக மாற்றியது...
இந்த இரண்டு சைவ/வைணவ மன்னர்களும் பவுத்த மன்னனை வெற்றி பெற்றால்... புத்த கோவில்களையும், புத்த சிலைகளையும் இடித்தது... எல்லாம் வரலாற்றில் இருக்க...
ஒரு 'பாமியானு'க்கே நம்மை கேள்வி கேட்டு பொங்கும் இவர்களை 'இத்தனை பாமியான் இடிப்புகளை' கண்டும்காணாமல் இருக்கும் //கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக// இல்லையே..? இதற்கும் உங்களின் அந்த முக்காடுதானே காரணம்..?
9/11 "இரட்டைக்கோபுரம் இடிந்தது கூட இஸ்ரேலின் சதியென்ற கான்ஸ்பைரசி தியரிக்கு ஆமாம் போடுவதெல்லாம் மதம் என்ற ஒற்றை நோக்கால் மட்டுமே" என்று சொல்லும் நீங்கள்... வீடியோ ஆதாரங்களுடன் நிரூப்பிக்கப்பட்ட அந்த உண்மைக்கு, 'இல்லை' போடுவதற்கு காரணம் இந்த முக்காடுதானே..? இராக்கில் WMD இருப்பதாக போரை துவங்கினார்களே... அங்கே WMD இருந்ததா..? 9/11 பற்றி ஜார்ஜ் புஷ்ஷே உங்கள் காதில் வந்து ரகசியம் சொன்னாலும் நீங்கள் நம்பப்போவதில்லை..! பலமான முக்காடு..!
உங்களின் போலி நாத்திகம் என்ற சட்டங்கள் அற்ற கொள்கைக்கு... பொய் மற்றும் ஆதாரமற்ற இட்டுக்கட்டலுடன் அவதூறு எழுதாதிருத்தல் போன்ற 'இப்படித்தான் எழுத வேண்டும்' என்ற குறைந்தபட்ச வாழ்வியல் நெறி ஏதேனும் இருக்கிறதா..?
தோன்றியதை எல்லாம் இஷ்டத்துக்கு எழுதும் உங்கள் மீதுமட்டும் பதிவுலக கோபத்தின் வெறுப்பு மேகம் மெல்லப்படர்வதை உணர்ந்தும் உணராது இருக்கிறீர்களா..? இதற்கும் காரணம் இந்த முக்காடுதானே..?
இதனால் சமூக கலந்துரையாடலில் ஒன்றுக்கும் உதவாத இந்த நடுநிலை நாத்திக முக்காட்டை பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள். இந்த முக்காடுதானே உங்கள் //தட்டைப்பார்வைகளுக்கு// எல்லாம் காரணம்..? தேவையற்ற பயனற்ற அந்த முக்காட்டை கிழித்து எறிந்துவிட்டு போலி வேலியை உடைத்து விட்டு வெளியே வந்து பாருங்களேன்..!
அடுத்து.... போலி நாத்திகத்தில் உள்ளோரில் உங்களைவிட இன்னும் கேவலமான சிலர்... போலி ஐபி, ப்ராக்சி ஐபி, பெயரிலி, முகவரிலி, மெயிலிலி, ஃபோனிலி, ப்ரோஃபைளிலி... என்று இஷ்டத்துக்கு அசிங்கமாக அர்ச்சித்து பதிவுகள் போட்டுகொண்டு இருக்கிறீர்கள். அதில் சிலர் அப்பதிவுகளைவிட மோசமான எழுத்துக்களில் பின்னூட்டம் போடுகிறீர்கள். இதனால்... என்னால் பின்னூட்ட பெட்டியில் இவர்களுக்காக மட்டுறுத்தல் வைக்காமல் இருக்க முடியவில்லை.
உங்களுக்கு பெண்களின் ஆபாச புகைப்பட காணொளி பதிவு, மொக்கை அரட்டை, வெட்டி அரசியல் சண்டை, சினிமா விமர்சன கூத்து, கிசுகிசு, சமயங்கள் சம்பந்தமான ஆதாரமற்ற பொய்ப்பிரச்சார அவதூறு தனிமனித தாக்குதல் பதிவுகள் எழுதுவோர் மீதெல்லாம் கொஞ்சம் கூட கோபம் வருவதில்லை. அங்கே ஆதரவு தெரிவிக்கிறீர்கள். அல்லது அமைதியாக இருக்கிறீர்கள். இவற்றை பொதுவில் சிலர் வைப்பதை என்றைக்காவது எதிர்த்து உள்ளீர்களா..? இதற்கும் காரணம் இந்த முக்காடுதானே..?
இதுபோன்ற பதிவுகளை மிகப்பெரும்பாலான 'முகவரியுள்ள முஸ்லிம் பதிவர்கள்' எழுதுவதில்லையே..? எதனால்..? இப்படி, தமக்கென்று ஒரு வாழ்வியல் நெறி கண்டு, சரியான சத்திய பாதையில் கட்டுப்பாடுகளோடு சமூக நலனுக்காக மட்டுமே பதிவுகள் எழுதுவோர் மீது மட்டும் உங்களுக்கு கடுங்கோபம் வருகிறதே..? ஏன்..?
இப்படியெல்லாம் இவர்களிடம் நாம் கேட்டால்... "எதைப் படிக்க வேண்டும் படிக்கக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நினைக்கிறேன். நீங்கள் அதையேன் படிக்கவில்லையென்று எதிர்க்கேள்விகள் போடுகிறீர்கள்." என்கிறீர்கள்..!
இதுபோன்ற பதிவுகளை மிகப்பெரும்பாலான 'முகவரியுள்ள முஸ்லிம் பதிவர்கள்' எழுதுவதில்லையே..? எதனால்..? இப்படி, தமக்கென்று ஒரு வாழ்வியல் நெறி கண்டு, சரியான சத்திய பாதையில் கட்டுப்பாடுகளோடு சமூக நலனுக்காக மட்டுமே பதிவுகள் எழுதுவோர் மீது மட்டும் உங்களுக்கு கடுங்கோபம் வருகிறதே..? ஏன்..?
இப்படியெல்லாம் இவர்களிடம் நாம் கேட்டால்... "எதைப் படிக்க வேண்டும் படிக்கக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நினைக்கிறேன். நீங்கள் அதையேன் படிக்கவில்லையென்று எதிர்க்கேள்விகள் போடுகிறீர்கள்." என்கிறீர்கள்..!
எதை எழுத வேண்டும் எழுதக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நானும் நினைக்கலாம்தானே..? 'நீங்கள் அதையேன் எழுதவில்லை' யென்றும், 'இதையேன் எழுதுகின்றீர்கள்' என்றும் கேட்டுள்ளீர்களே..? இதற்கும் காரணம் அதே முக்காடு தானே..?
இஸ்லாம் தொடர்பான பதிவுகளை பொதுவில் ஏன் வைக்கிறீர்கள்? என்கிறீர்கள். 'எனது வாழ்வில் நன்மை பயக்கும் ஒன்றை பிறருக்கும் நன்மை பயக்கட்டுமே' என்று விரும்புவதும் கூட ஒரு குற்றமா..? அது உங்களுக்கு நன்மை என்றால் எடுத்துக்கொள்ளுங்கள். வேண்டாம் என்றால் விட்டுவிடுங்களேன்..?
இஸ்லாம் பற்றி தவறாக/அவதூறாக பொதுவில் நீங்கள் எழுதினால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தையும் பொதுவில் தந்துதானே மறுக்க முடியும்..? அல்லது அது தொடர்பான விளக்க சுட்டி தரவேண்டி இருக்குமே..? அப்போது, 'எதற்கு சுட்டி போட்டு என் பின்னூட்ட பெட்டியில் மதத்தை நுழைக்கிறீர்கள்?' என்ற உங்களின் கேள்வி எங்ஙனம் சரியாகும்..? குட்டக்குட்டக்குனிய வேண்டுமா நாம்..?
பரிணாமத்துக்கு எதிரான இந்த நூற்றாண்டு அறிவியல் உண்மைகளை அடுக்கடுக்காக பதிவுகள் போட்டு படிக்க கூப்பிட்டால், அதனை கண்டுகொள்ளாமல், அதை ஏற்றுக்கொண்டால், எங்கே உங்கள் நாத்திக முக்காடு கலைந்துவிடும் என்று பயந்து, இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டு கட்டுக்கதைகளில் மூழ்கி கிடப்பது ஏனோ..?
முஸ்லிம்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்ட ஈழத்தமிழ் போர் விதவை பெண்களின் விபச்சாரத்துக்கு அக்கறையாக தீர்வு என்று பதில் பதிவு போட்டால் கோபம் வருவது ஏனோ..?
நீர்வளம், நிலவளம் இல்லாத சவூதிக்கு இருக்கும் விவசாய வேட்கை, விளைநிலங்களை பிளாட் போட்டு 'விலை'நிலங்களாக்கி விற்கும் நமக்கும் வர வேண்டுமே என்ற ஆதங்கத்தில் பதிவு போட்டால்... 'கடல் நீரை குடிநீராக்க வேண்டாம்', 'அயல்நாட்டிடம் மண் வாங்க வேண்டாம்', 'இது பாலைவனமா, சோலைவனமா?' போன்ற பினாத்தல் எல்லாம் ஏன்மா ..?
நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், சூரியனை வணங்கி, பொங்கலை படையல் செய்யும் பண்டிகையை, (ஒரே இறைவனை வணங்கும்) "முஸ்லிம்களும் எதற்கு கொண்டாடவில்லை..? தமிழர் இல்லையா, நீங்கள்..?" என்று 'இந்துக்கள் மட்டுமே தமிழர்கள்' என்ற ஈழத்தில் ஊற்றிய விஷத்தை தமிழகத்திலும் ஊற்ற முயல்வது ஏனோ..?
இரண்டு ஆத்திகர்கள் தமக்குள் விவாதித்தால், நேர்மையானவர்களான நீங்கள், அவர்களின் விவாதம் முடிந்தவுடன், இரண்டு பேரிடமும் சென்று விவாதிக்க வேண்டுமே அன்றி, கேவலமான அவதூறு பதிவும் ஆபாச பின்னூட்டங்களும் இட்டு... இதெல்லாம் ஏனோ..?
சிலமாதம் முன்னர், பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய குடிமகனை கொண்ட ஒரு 'தேசம்' முஸ்லிம்கள் ஆள்வதால், இஸ்லாமை தூற்றினீர்கள். அதே 'தேசத்தை' சேர்ந்தவர்கள், இன்னொரு முஸ்லிம்கள் ஆளும் நாட்டில் தொழிலாளர்களாக சென்று வஞ்சிக்கப்படும்போது, பணத்தின் மீது மட்டுமே வெறி கொண்ட இறையச்சம் இல்லாத முதலாளிகள் உலகெங்கும் தொழிலாளிகளை சுரண்டுவார்கள் என்ற பொது நியதியை மறந்து, மீண்டும் ஆசிட் ஊற்றியவர்கள் சார்பாக இஸ்லாமிய தூற்றல் தலைப்பு ஏனோ..? அதே சவூதியில் இறைவாக்குப்படி தொழிலாளிகளிடம் நடக்கும் நல்ல முதலாளிகளை நாம் அடையாளம் காட்டினால் என்ன சொல்வீர்களோ..? சவூதி மட்டுமா இறைவனின் தேசம்..?
உங்கள் கோபங்களை மொத்தமாக குறிப்பிட்ட சமூகத்தின் மீது மட்டுமே சுமத்துவது ஏன்..? இனியும் உங்கள் எதிரிகள் முஸ்லிம்கள் அல்லர். போலி நாத்திக முக்காடு போட்டு ஹிந்துத்துவா யுத்தம் செய்யாதீர்கள். வருங்காலம் வரலாற்றை எழுதும்போது நல்லவர் கூட்டத்தில் இருக்க ஆசைப்படுங்கள்.
பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம். நாளை பொழுதொரு தினம் ஒரு வேளை நேரில் சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள் எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும். அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தில் இருந்தும் இல்லாதது நன்றே..!
உங்கள் முகத்தில் தக்காளி ரசமே வடிந்தாலும் 'அது ரத்தம்தான்' என்று எண்ணி ஓடிவந்து வாஞ்சையுடன் சுத்தம் செய்து ஒத்தடப்பதிவு எழுத நான் தயார். அதேநேரம், எனது மண்டை பிளந்து வழிந்தோடும் ரத்தத்தை... 'தக்காளி ஜூஸ்' என்று திரித்து பதிவிடாமலாவது நீங்கள் இருங்களேன்..! ப்ளீஸ்..!
.
எனில், இனி வேண்டாம் உங்களுக்கு அந்த போலி நாத்திக நடுநிலை முக்காடு. அகக்கண்ணை திறந்து பாருங்கள். சக மனிதனின் சிறு உரிமையைக்கூட பறிக்காமல், 'இவ்வுலகில் இப்படித்தான் வாழ வேண்டும்', 'எப்படியும் எல்லாம் வாழக்கூடாது' என்ற இஸ்லாமிய வாழ்வியல் நெறியை என்னவென்று இறைமொழி & இறைத்தூதர்வழி கொண்டு திறந்த மனதுடன் ஆராயுங்கள். பிடித்திருந்தால் உங்கள் வாழ்விலும் அவற்றை பேணுங்கள். இல்லையேல்... அதை பேணுவோரையும் பேணச்சொல்வோரையும் உங்கள் எழுத்துக்களால் தயவு செய்து ஹிம்சிக்காதீர்கள்..! இறைநாடினால் ஈருலக வாழ்வின் தித்திப்பு உங்களுக்கும் நிரந்தரமாக உரித்தாகட்டும்..!
.
எனில், இனி வேண்டாம் உங்களுக்கு அந்த போலி நாத்திக நடுநிலை முக்காடு. அகக்கண்ணை திறந்து பாருங்கள். சக மனிதனின் சிறு உரிமையைக்கூட பறிக்காமல், 'இவ்வுலகில் இப்படித்தான் வாழ வேண்டும்', 'எப்படியும் எல்லாம் வாழக்கூடாது' என்ற இஸ்லாமிய வாழ்வியல் நெறியை என்னவென்று இறைமொழி & இறைத்தூதர்வழி கொண்டு திறந்த மனதுடன் ஆராயுங்கள். பிடித்திருந்தால் உங்கள் வாழ்விலும் அவற்றை பேணுங்கள். இல்லையேல்... அதை பேணுவோரையும் பேணச்சொல்வோரையும் உங்கள் எழுத்துக்களால் தயவு செய்து ஹிம்சிக்காதீர்கள்..! இறைநாடினால் ஈருலக வாழ்வின் தித்திப்பு உங்களுக்கும் நிரந்தரமாக உரித்தாகட்டும்..!
டிஸ்கி:- ஒட்டுமொத்த சமூக தாக்குதலுக்கு எதிரானவன் நான். இந்தப்பதிவு முன்பு ஒரு கை ஓசையாய் பின்னூட்ட விவாதங்கள் செய்து நொந்த இரு தரப்பு சகோதரர்கள் சார்ந்தோ எதிரானதோ அல்ல. போலி நாத்திகர்கள் சிலருக்கு மட்டுமே பொதுவானது. பதிவின் பின்ணணி அவலத்தில் இருக்கும் சமூகத்தை இனியும் அடுத்தவர் வேண்டுமென்றே கொச்சை படுத்துவதை தவிர்க்கவே. கற்ற பொது மானுடத்தை பதிவுலகிலும் காக்க எனக்கு ஒரு கை கொடுங்கள் சகோ..!
78 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ...
நெத்தியடியாய் எழுதி உள்ளீர்கள்..
இதுதான் அசல் 'பொங்க'ல் பதிவு.
வெல்டன் சகோ.
மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.- - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"
ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள் தான் என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.
அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.
எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?
முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.
எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.
நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?
குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது
என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"
---------------------------------------------
பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.
நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.
நாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.
உலகம் முழுவதும் ம்க்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா கிறிஸ்துவர்கள் என்பதற்காக யாரும் கிறுஸ்தவத்தை விமர்சிப்பதில்லை.
ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.
இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஊடகங்களூம் , வலைப்பதிவர்களும் ஒன்றுபோல் உள்ளனர்.
ராஜபக்சே வுக்கு இந்தியாவில் பாதுகாப்பளித்து வரவேற்கப்படுவதை எதிர்ப்பவர்களே கண்டிப்பவர்களே! இதை பயங்கர படுங்கொலைகாரர்களான அத்வானிக்கும் நர மோடிக்கும் செய்தீர்களா?
---------------------------------------
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
பாஸிச வெறியர்களினால் இலங்கை முஸ்லிம்கள பாதிக்கப்பட்டவர்களாக, இருக்கிற இடமே தெரியாத நிலையில் இருக்கும் போது இந்தியா வாழ் தமிழர்களில் பலர் இந்தப்பிரச்சினை பற்றி தெளிவான அறிவின்றி இந்த கொடும் புலிகளை ஆதரிப்பதை நாம் காணும் போது மனம் வேதனையடைகிறது.
இவர்கள் தமிழனின் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்று வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் புலிகள் இயக்கத்தினர் தமிழர்களுக்கே எதிரானவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்துப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
CLICK AND READ.
1.
பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.
2.
பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
3.
பகுதி 3. புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..
.
ஸலாம் சகோ ஆஷிக்..
இந்த பதிவை ஒரு நாத்திகவாதியாவது முழுமையாக படிப்பாரா என்பது சந்தேகமே.. காரணம் நீங்கள் மதவாதி..
மதவாதியிடம் கண்ணை மூடிக்கொண்டு கேள்விகேட்கவே அவர்களுக்கு தெரியும்.. உங்களுக்கு பதில் சொல்ல அவர்களுக்கு ஏது அவகாசம்..
//இஸ்லாம் பற்றி தவறாக/அவதூறாக பொதுவில் நீங்கள் எழுதினால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தையும் பொதுவில் தந்துதானே மறுக்க முடியும்..?//
நீங்கள் இஸ்லாத்தை வெளியில் கழட்டிவைத்துவிட்டு பொது மனிதனாக அவர்கள் பதிவுகளுக்கு போக வேண்டுமாம் அப்பிடின்னு அவர்கள் சொல்லுகிறார்கள்..
அவர்கள் இஸ்லாத்தை கேலி செய்து பதிவுகள் போடுவார்களாம்..ஏன்னா மக்களை அறியாமையிலிருந்து மீட்பது அவர்கள் கடமையாம்..
சலாம் சகோ ஆசிக்,
ஹ..ஹ..ஹ... ஒரு வரி கூட விடல போல் இருக்கு.
பிரச்சனை என்னன்னா, நாத்திக வாதிகள் நாத்திகம் சொல்லலாம், ஜாலியை விரும்புவர்கள் ஜாலி பதிவிடலாம், சினிமாவை விரும்புவர்கள் சினிமாவை எழுதலாம், குத்து பதிவு வேணுமா தாராளமா எழுதுங்க, இஸ்லாத்தை தாக்குபவர்கள் இஸ்லாத்தை தாக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை சொல்லக்கூடாது, யாரேனும் தாக்கினாலும் கண்டுகொள்ளக் கூடாது, இது தான் பெரும்பாலானோர்கள் விரும்புவது. இதற்க்கு மாற்றமாக நடந்தால் நாம் மதவாதி.
அட நாத்திகன் சண்டை போடறத கூட ஏத்துக்கலாம் சகோ. அரைகுறை காவி நாத்திக வாதிகளும், அடுத்தவர்க்கு மட்டும் நாத்திகம் சொல்லும் வாலுகளும் பதிவிடுவதுதான்
இதில் பெரிய காமெடி. நெறைய பேரு நல்லா தெரிஞ்சுகிட்டாங்க, இஸ்லாத்த தாக்கி எழுதுனா ஹிட்ஸ் கிடைக்கும்னு. சோ, அந்த வழில நடக்குறாங்க.
விடுங்க சகோ, வரலாற்றில் நாம் பார்க்காத எதிர்ப்பா??? எல்லா எதிர்ப்பையும், பொய்ச் பிரச்சாரங்களையும் தாண்டி உலகில் அதி வேகமாக வளரும் மதம்(In terms of conversion ) என்ற பெருமையை இந்த நொடி வரை தக்க வைத்துள்ளோம். ஒப்பிடக்கூட நமக்கு அருகில் யாரும் இல்லை என்பதுதான் இதில் ஹைலைட் . இந்த நூற்றாண்டு நமக்கானது, இன்ஷா அல்லாஹ்.
மிக நல்ல பதிவு.
//சிராஜ் said...
விடுங்க சகோ,
வரலாற்றில் நாம் பார்க்காத எதிர்ப்பா??? எல்லா எதிர்ப்பையும், பொய்ச் பிரச்சாரங்களையும் தாண்டி உலகில் அதி வேகமாக வளரும் மதம்(In terms of conversion ) என்ற பெருமையை இந்த நொடி வரை தக்க வைத்துள்ளோம். ஒப்பிடக்கூட நமக்கு அருகில் யாரும் இல்லை என்பதுதான் இதில் ஹைலைட் . இந்த நூற்றாண்டு நமக்கானது, இன்ஷா அல்லாஹ்..
வரலாற்றில் நாம் பார்க்காத எதிர்ப்பா??? எல்லா எதிர்ப்பையும், பொய்ச் பிரச்சாரங்களையும் தாண்டி உலகில் அதி வேகமாக வளரும் மதம்(In terms of conversion ) என்ற பெருமையை இந்த நொடி வரை தக்க வைத்துள்ளோம். ஒப்பிடக்கூட நமக்கு அருகில் யாரும் இல்லை என்பதுதான் இதில் ஹைலைட் . இந்த நூற்றாண்டு நமக்கானது, இன்ஷா அல்லாஹ்..
வரலாற்றில் நாம் பார்க்காத எதிர்ப்பா???
எல்லா எதிர்ப்பையும், பொய்ச் பிரச்சாரங்களையும் தாண்டி உலகில் அதி வேகமாக வளரும் மதம்(In terms of conversion ) என்ற பெருமையை இந்த நொடி வரை தக்க வைத்துள்ளோம்.
ஒப்பிடக்கூட நமக்கு அருகில் யாரும் இல்லை என்பதுதான் இதில் ஹைலைட் .
இந்த நூற்றாண்டு நமக்கானது, இன்ஷா அல்லாஹ்.. // - சிராஜ்.
.
WELL SAID. THANK YOU SIRAJ.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
பதிவின் ஒவ்வொரு வரிகளும் நிதர்சனத்தை பிரதிபலிக்கின்றன. மெய்யுலகிலே தம்மை நாத்திகர் என்று அடையாளம் காட்டும் பலர் உள்ளுக்குள் அப்பட்டமான மத அபிமானியாகவும் அல்லது சாதிய அபிமானியாகவும் அல்லது மூட நம்பிக்கைகளை முதுகில் சுமக்கும் நபர்களாகவுமே காட்சி தருகின்றனர். வீரமணி முதல் கருணாநிதி வரை, டாகின்ஸ் முதல் ஹாகிங் வரை இந்த மூன்று அளவுகோல்களில் ஒன்றில் வந்துவிடுவார்கள்.
மெய்யுலகமே இவ்வாறிருக்க மெய்நிகர் உலகை பற்றி சொல்லவா வேண்டும். எவர் கண்டுகொள்ள போகிறார் என்று இஷ்டத்திற்கு தம்மை புரட்சியாளர் ரேஞ்சிற்கு கதையடித்து விடுபவர்கள் தான் இங்கே அதிகம். அதுவும் தம்மை நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்வதிலே அலாதி இன்பத்தை அடைகின்ற இவர்கள் அவ்வப்போது தம் சுய முகத்தை ஏதோவொரு வகையில் காட்டி அம்பலப்பட்டு விடுகின்றனர்.
பதிவுலகின் நாத்திகர்களை நாடி பிடித்தார் போன்று வரிக்கு வரி அலசியிருக்கும் உங்களுக்கு இறைவன் இன்னும் அறிவை விசாலமாக்கி வைக்கட்டும் என்ற பிரார்த்தனைகளுடன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதிவில் ரொம்பவும் சீரியஸா நிறைய கேள்வி பதில்கள் :-)
ஒரு இறை வசனம் - பய பக்தி உள்ளவர்க்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும் .இறை நிராகரிப்பவருக்கு அதையே இன்னும் அதிகப்படுத்தும் (குர்-ஆன் ).
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஆஷிக்
போலி நாத்திகம் பேசுபவர்களுக்கு எங்கே நடுநிலை பேண அவசியம் இருக்கிறது. இவர்களுக்கு எங்கே நடுநிலைவாதிகள் இஸ்லாத்தை புரிந்து கொண்டு அதன் வாழ்கை நெறியை ஏற்றிடுவர்களோ என்ற அச்சம் இருக்குமோ! என்னவோ! :)
சலாம் சகோ ஆஷிக்!
பல விளக்கங்கள். அறிவு கண் கொண்டு படித்தால் தெளிவடைவர். தெளிவடைவார்கள் என்று நாம் நம்புவோம்.
மாஷா அல்லாஹா நல்லதொரு பயனுள்ள பதிவை படித்த திருப்தி....
பெண்களை அடிமை படுத்தும் மார்க்கம், புர்க்கா போடச் சொல்றாங்க, 4 பொண்டாட்டி கட்டிகொள்கிறார்கள் என்று இவர்கள் புலம்பப் புலம்ப பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் எண்ணிக்கையை விட அதிகமாகவே உள்ளது(In terms of conversion ) , அதுவும் இவர்கள் நவ நாகரிக உலகு என்று கூறும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில். என்னே அல்லாஹ்வின் ஆற்றல்!!!!
மிகப் பெரும்பாலானவர்கள் 1 பெண்டாட்டிகூடத்தான் வாழ்கிறார்கள் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும்..ஹி..ஹி..ஹி ஏதாவது சொல்லணுமே.. அதான்.
மாஷா அல்லாஹா என்ன ஒரு அருமிய பதிவு !!!!!!!!!!!!
பிடிக்காதவன் கை பட்டாலும் குற்றம், தொட்டாலும் குற்றம். அது போலதான் நம்ம நிலமையும்...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
இந்த பதிவை படித்த பிறகு இன்னும் நாத்திக போலி முக்காடு போட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்து ஒன்றே ஒன்று சொல்லனும் போல இருக்கு
மதவாதியாக முழுக்க நனைந்தபிறகு எதற்கு நாத்திக முக்காடு
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல விடயங்களால் நானும் மன உலைச்சலுக்கு உள்ளானேன் ...
எத்தனை சொன்னாலும் இது இவர்களுக்கு விளங்கிடப்போவதில்லை, எத்தனையோ நட்புகள், எத்தனையோ தொடர்புகள் யாவும் இருந்தும் டிசம்பர் 6 பற்றி நாம் சொன்னால் யாரும் வந்து நேர்மை பதில் சொல்வதில்லை, அவங்களுக்கு அவங்க நிலை முக்கியம் ...
போகட்டும் ...
எனது வேண்டுகோள் ஒன்று, பதிவுலகில் இருக்கும் அத்தனை பேருக்கும்
நீங்கள் எந்த நம்பிக்கையில் இருக்கின்றீர்களோ அதனை தெளிவாக வலுவாக பின்பற்றுங்கள், சர்ச்சைகளை பதிவிடுவதைவிட எடுத்து இயம்பும் வேலையில் ஈடுபடலாம்.
நாம் இருக்கும் தெருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மளிகை கடை இருக்கையில், தரமான, மற்றும் நல்ல விலையில் கொடுக்கும் ஒரு கடைக்கே யாவரும் போவோம், சற்றே பழகிய புதிய நண்பருக்குக்கூட அந்த கடையையே பரிந்துரைப்போம், அதனை ஏற்றுகொள்ள வேண்டிய கட்டாயம் யாருக்குமில்லை, ஆனால் சொல்வது சொல்பவனின் கடமை ...
5/10 பைசா இலாபத்துக்கே இந்த நிலையென்றால், நான் முழுமையாக நம்பும் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியை பின்பற்றினால் சொர்க்கம் உண்டு என்ற எனது நம்பிக்கையை எனக்கு தெரிந்தவர்களுக்கு சொல்வது எனது கடமை, அது உங்கள் மீதான் திணிப்பு அல்ல, ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் இறைவன் விட்ட வழி.
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் மீது உங்களுக்கு உறுதியிருந்தால் அதனை பற்றி சொல்லுங்களேன், அடுத்தவரை மட்டுமே விமர்சிப்பதை விட்டு, உங்கள் நம்பிக்கையை பகிருங்கள் அது எதுவாகிலும் சரியே, உங்க நம்பிக்கையில் இல்லாதவர்கள் அழைப்பு கொடுங்கள் - இதுவுமே உங்கள் இஷ்டம் தான். இறை நம்பிக்கை என்பது ஒருவனின் தனிவிடயம் என்று நீங்கள் நினைத்தால் அதில் உறுதியாக இருங்களேன், அதையே அடுத்தவரும் கடைப்பிடிக்கனும்ன்னு ஏன் எதிர்ப்பார்க்குறீங்க ...
ஹூம் இப்படியே சொல்லிகிட்டே போகலாம் ...
பதிவுலகில் இருக்கும் இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களிடமும் ஒரு வேண்டுகோள், இது போன்றவர்களை உதாசினப்படுத்துங்கள், நம்பிக்கையில் இருப்பவர்களும் இல்லாதவர்களுமான "தாவா" பதிவுகளை இனி எழுதுவோம், சர்ச்சைகளை தவிர்ப்போம்
இன்ஷா அல்லாஹ் - அவன் நாடினால் அனைவருக்கும் ஹிதாயத் கிடைக்கட்டும்
--- ஆமின்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
தலிபான் கள் அவர்களின் சொந்த மண்ணில் கண்டெடுத்த ஒரு கல்லை உடைக்க அவர்களுக்கு உரிமையுண்டு அதனால் அந்த செய்கைகளுக்காக அவர்களை நீங்கள் கண்டித்திருப்பது அவசியம் இல்லை என நினைக்கிறேன்
அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
இறைவனுக்கு என்ன பிடித்தமானதோ அதனை செய்வோம், இன்று நம்மை எதிர்ப்பவர்களை நாளை இன்ஷா அல்லாஹ் இறைவன் நம்மை நேசிக்க செய்வான்.
அதுபோல, இவர்களுக்கு பிடிக்கும் ஒன்றை அதேநேரம் இறைவனுக்கு பிடிக்காத ஒன்றை நாம் செய்வோமானால், இன்று நம்மை விரும்புவர்களை நாளை நம்மை இறைவன் வெறுக்க செய்திடுவான்.
ஆகையால் இன்று நம்மை எதிர்ப்பவர்களை பற்றி சட்டை செய்யாமல் இறைவனுக்கு பிடித்தமான முறையில் ஆரோக்கியமாக செயல்படுவோம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நியாயமான பல கேள்விகளைக்கொண்ட அருமையான பதிவு
நான் உங்களை நேற்று எச்சரித்தேன்.ஆனால் எனக்கு விளக்க தெரியவில்லை.இன்று நீங்களே நான் நினைத்தபடி பதிவு இட்டுளிர்கள்
நினைத்தபடி பதிவு இட்டுளிர்கள்
பல நேரங்களில் இந்த நடுநிலை முகமூடியுடகளின் பதிவுகளை படித்து மனவுலச்சல் அடைந்தவர்களில் நானும் ஒருவன். என்னைப்போன்றவர்களின் ஆதங்கங்களை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி.
மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லுவது தான் நடுநிலை என்று சொல்லித்திரியும் இன்றைய நவீண நார்த்திகவாதிகள்.
நயவஞ்சகத்தனமே இன்றைய நார்த்தீகம்...
கடவுள் இல்லை என்று சொன்னவருக்கே சிலை வைத்து கடவுளாக்கி வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருப்பதை எவ்வகையான நார்த்தீகம் என்பது அவர்களுக்கே புரியாதது.
சகோதரர் ஆசிக் தொடருங்கள் எழுச்சியூட்டும் உங்கள் எழுத்துப்பணியை...
தரமான,அருமையான பதிவு. இதுவரை நடுநிலை வேடமிட்ட நாத்திகர்கள் மனதில் தங்களின் இப்பதிவு நிச்சயம் (இறைவன் நாடினால்) ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் இனி உண்மையான நடுநிலயாளர்களாக மாறுவார்கள்.
சொடுக்கி கேளுங்கள்
>>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.
இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லைஅனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<
.
//உள்ளத்தில் நோயுள்ளவர்கள் இப்பதிவை படித்து சிந்தித்தால் ....//
இன்ஷா அல்லாஹ் விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கட்டும்
அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்
என் முகமன், முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல,
இத் தளத்துக்கு வருகை புரியும் என் மாற்று மத சகோஸ்களுக்கும் உரியது...
சகோ முஹம்மது ஆஷிக், மிக நல்ல பதிவு ...
எந்த வரியை ஹைலைட் செய்து சொல்லவேண்டுமென்பது தெரியவில்லை,
அத்தனையும் அருமை ....
பயன் தரும் "மோரை" தெருத்தெருவாக வெய்யிலில் கூவி விற்றாலும்,
அதை வாங்குபவர்கள் மிகச் சிலரே அதே நேரத்தில் கேடு தரும் "சாராயத்தை"எங்கோ ஒரு மூலையில் திருட்டுத்தனமாக விற்றால், அதை வாங்கி குடிப்பவர்கள் தான் அதிகம்பேர் என்பேன் ....
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் இப்பதிவை படித்து சிந்தித்தால்
குணமடைவது நிச்சயம் .......
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நாத்திகம் குறித்து போலியாய் பேசி இணையத்தில் உலாவரும் நாத்திகர்களுக்கு தெளிவான பதிவு!
இனியாவது உணர்த்தட்டும் தம்மை உண்மை நாத்திகர்களென்று!
@NKS.ஹாஜா மைதீன்
அலைக்கும் சலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.'அதிரடி'ஹாஜா.
@அரபுத்தமிழன்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அரபுத்தமிழன்.
@VANJOORவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நிறைய தகவல்களுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
@Riyasஅலைக்கும் சலாம் வரஹ்...
அவர்களின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து காட்டி இருக்கிறன உங்கள் கருத்துக்கள்.
இனி அவர்கள் என்னதான் தலைகீழே நின்று காட்டுக்கத்தல் கத்தினாலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை இல்லாத அந்த கூட்டத்தை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளப்போவதில்லை நான்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றி சகோ.Riyas.
@சிராஜ்அலைக்கும் சலாம் வரஹ்...
இஸ்லாத்தை தாக்குபவர்கள் இஸ்லாத்தை தாக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை சொல்லக்கூடாது, யாரேனும் தாக்கினாலும் கண்டுகொள்ளக் கூடாது, இது தான் பெரும்பாலானோர்கள் விரும்புவது. இதற்க்கு மாற்றமாக நடந்தால் நாம் மதவாதி.----விளாசல்..!
மிச்சத்தை சகோ.வாஞ்சூர் ஹைலைட் பண்ணிட்டார்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@lcnathanவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.LC.நாதன்.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் சலாம் வரஹ்...
//மெய்யுலகமே இவ்வாறிருக்க மெய்நிகர் உலகை பற்றி சொல்லவா வேண்டும்//---சரியா சொன்னீங்க.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஷேக்தாவூத்.
@ஜெய்லானிஅலைக்கும் சலாம் வரஹ்...
நம்மால் முடிந்த வரையில் செய்யும் முயற்சிக்கு அவர்களுக்கு கிடைக்கிறதோ... நமக்கு உண்டு என்பதால், முயல்கிறோம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஜெய்லானி.
@M.Thameem Ansariஅலைக்கும் சலாம் வரஹ்...
//இவர்களுக்கு எங்கே நடுநிலைவாதிகள் இஸ்லாத்தை புரிந்து கொண்டு அதன் வாழ்கை நெறியை ஏற்றிடுவர்களோ என்ற அச்சம்//---நன்றாக சொன்னீர்கள் சகோ.
இவர்கள் கையில் 'மாற்று' என்று என்ன இருக்கிறது..? அதுதான் அச்சம். இவர்களால் என்ன செய்ய முடியும், தூற்றுவது தவிர..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.M.Thameem Ansari
@சுவனப்பிரியன் அலைக்கும் சலாம் வரஹ்...
//தெளிவடைவார்கள் என்று நாம் நம்புவோம்.//---நிச்சயமாக சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@Mohamed Shaheedவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.Mohamed Shaheed.
@சிராஜ்//...இவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும்..ஹி..ஹி..ஹி ஏதாவது சொல்லணுமே.. அதான்.//
நம்மை பார்த்து 'மதவெறியர்கள்' (?) என்கிறார்கள்... இவர்கள்தானே இப்படி செமை வெறியோடு அவதூறு பதிவுகள் & பின்னூட்டங்கள் என்று முதலில் ஆரம்பிக்கிறார்கள்..? சரியான 'மதஎதிர்வெறியர்கள்'... போல..! :-))
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சிராஜ்
@Mohamed Faaique //பிடிக்காதவன் கை பட்டாலும் குற்றம், தொட்டாலும் குற்றம். அது போலதான் நம்ம நிலமையும்...//---உங்கள் வலியை உணர முடிகிறது சகோ.ஃபாஇக்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
@ஹைதர் அலிஅலைக்கும் சலாம் வரஹ்...
//மதவாதியாக முழுக்க நனைந்தபிறகு எதற்கு நாத்திக முக்காடு//---ஹா..ஹா...ஹா....
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.
@நட்புடன் ஜமால்
அலைக்கும் சலாம் வரஹ்...
பதிவுலகில் இருக்கும் இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களிடமும் ஒரு வேண்டுகோள்,
இது போன்றவர்களை உதாசினப்படுத்துங்கள், நம்பிக்கையில் இருப்பவர்களும் இல்லாதவர்களுமான "தாவா" பதிவுகளை இனி எழுதுவோம், சர்ச்சைகளை தவிர்ப்போம்
இன்ஷா அல்லாஹ் - அவன் நாடினால் அனைவருக்கும் ஹிதாயத் கிடைக்கட்டும்
--- ஆமின்.
வருகைக்கும் தெளிவான கருத்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஜமால்.
@Rabbaniஅலைக்கும் சலாம் வரஹ்...
//கண்டித்திருப்பது அவசியம் இல்லை//
|||அச்சமயம் ஜப்பான் போன்ற பவுத்த அரசுகள் கூட இடிப்பதற்கு பதிலாக அவர்கள் கேட்கும் ஈட்டுத்தொகை கொடுத்து அதனை தன்னகத்தே இடம் பெயர்த்துக்கொள்ள முன்வந்தும் கூட...|||
'இதனால்...' கண்டனம் சரிதான் சகோ.ரப்பானி..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
@abdul
//நேற்று எச்சரித்தேன்...நீங்களே நான் நினைத்தபடி பதிவு இட்டுளிர்கள்//---ஜசாக்கலாஹு க்ஹயர் சகோ. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
@தாஜுதீன்
//மனவுலச்சல் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.//---மேலே சகோ.நட்புடன் ஜமால், நான்... என்று பெரிய லிஸ்டே இருக்கிறது சகோ. இவர்களின் நோக்கமே இது என்றால்... அது தமிழ்பதிவுலகிற்கு நிச்சயமாக கேடு..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.தாஜுதீன்.
@மஸ்தூக்கா//தங்களின் இப்பதிவு நிச்சயம் (இறைவன் நாடினால்) ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் இனி உண்மையான நடுநிலயாளர்களாக மாறுவார்கள்.//---அதுதானே சகோ. நமது பேராவல்..! நடந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.மஸ்தூக்கா.
@சுல்தான்//இன்ஷா அல்லாஹ் விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கட்டும்//---வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.சுல்தான்.
@Nasarஅலைக்கும் சலாம் வரஹ்...
தங்களின்... "மோர் -- கள்ளச்சாராயம்" உதாரணம் நிறைய சிந்திக்க வைக்கும் என்று நினைக்கிறேன் சகோ.நாசர்.
//உள்ளத்தில் நோயுள்ளவர்கள் இப்பதிவை படித்து சிந்தித்தால்
குணமடைவது நிச்சயம்.......//---இன்ஷா அல்லாஹ்.
வருகைக்கும் கருத்தான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.நாசர்.
@G u l a mஅலைக்கும் சலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.குலாம்.
சலாம் சகோ ஆஷிக்,
அருமையான சட்டையடி சில வார்தைகள் நான் முரன்படுகின்றேன். நாளு முட்டாள் சேர்ந்து நம்மலை முட்டாள் சொன்னா நம்ம கவலை பட வேண்டியதில்லை.
//(கூடவே சவூதியும்..!)//
நாத்திகம் பூஜ்ஜியம் இதனால் கூடா இருக்கலம்.
//பாமியன் சிலையை தாலிபான் காட்டுமிராண்டிகள் இடித்ததுக்கு எனது வன்மையான கண்டனங்கள், உங்களுக்காக இதோ மீண்டும்.//
தாலிபான் நல்ல வேளையை தான் செய்தார்கள். முஸ்லீம்கள் 100% உள்ள ஓர் நாட்டில் ஒரு கோவனங்குடி இல்லமா நடு ஊர்க்குள்ள நின்ன எவனக்குமெ கோபம் தான் வரும் (போலிகளை தவிர). நல்ல வேளை நீங்கா சொல்லரா ஆட்கள் மட்டும் அந்த நாட்டில் இல்லை. இருந்திருந்தா வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ மலை, பொண்ண்டை போத்தி முட்டாய் தந்திருப்பார்கள்.
//இஸ்லாமை தூற்றினீர்கள்//
முஸ்லீம் பெரை கேட்டலே கருப்புச்சட்டை வெளுத்து போயி அழுக்க நிற்கும்.
@Nizamஅலைக்கும் சலாம் வரஹ்...
//நாளு முட்டாள் சேர்ந்து நம்மலை முட்டாள் சொன்னா நம்ம கவலை பட வேண்டியதில்லை.//---சரிதான்.
ஆனால்,
அவங்களை ஊருக்கும் உலகுக்கும் தக்க ஆதாரங்கள்/வாதங்கள் உடன் அடையாளம் காட்ட வேண்டியுள்ளதே சகோ.நிஜாம்.
//தாலிபான் நல்ல வேளையை தான் செய்தார்கள்.//---இதற்கான விளக்கம்... சகோ.ரப்பானிக்கு நான் அளித்த பதிலை, பின்னூட்டம்#44-ல் பாருங்கள் சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.நிஜாம்.
வணக்கம் சகோ,
உங்கள் பதிவில் நிறைய இடத்தில் யாருக்கோ கேள்வி கேட்கிறீர்கள் அது யாரோ அவர் பதில் என்னவோ தெரியவில்லை.
ஒரு இடத்தில்
//நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், சூரியனை வணங்கி, பொங்கலை படையல் செய்யும் பண்டிகையை, (ஒரே இறைவனை வணங்கும்) "முஸ்லிம்களும் எதற்கு கொண்டாடவில்லை..? தமிழர் இல்லையா, நீங்கள்..?" என்று 'இந்துக்கள் மட்டுமே தமிழர்கள்' என்ற ஈழத்தில் ஊற்றிய விஷத்தை தமிழகத்திலும் ஊற்ற முயல்வது ஏனோ..?//
என்று எழுதியுள்ளீர்கள். இத பத்தி நான் கூட கொஞ்சம் எழுதியுள்ளேன். ஒருவேள என் பதிவ தான் எப்படி எழுதி உள்ளீர்களா அல்லது வேறு யாராவது எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஒருவேளை நீங்கள் என்னுடைய பதிவை படித்து இதை எழுதிருந்தால் மேற்கொண்டு படியுங்கள் இல்லை என்றால் இது உங்களுக்கு இல்லை.
இது பற்றி நீங்கள் என்னிடம் கேட்டிருக்கலாம். நான் பதில் சொல்லி இருப்பேன்.
//நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், சூரியனை வணங்கி, பொங்கலை படையல் செய்யும் பண்டிகையை, (ஒரே இறைவனை வணங்கும்) "முஸ்லிம்களும் எதற்கு கொண்டாடவில்லை..?//
என் பதிவை படித்து பாருங்கள். மேற்கூறிய படி நான் எழுத வில்லை.
(தமிழன் செய்யும் அனைத்தையும் அது பார்ப்பானின் திணிப்பு என்று கூறும் திராவிடவாதிகள் ஏன் இந்துக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனும் பொங்கல் பண்டிகையை தானும் கொண்டாடுகின்றனர். இதையும் இந்து பண்டிகை என்று சொல்லி ஒதுக்க வேண்டியது தானே?)
என்று திரவிட வாதிகளுக்கு தான் இந்த கேள்வி. இதை நீங்கள் திரித்து கூறுகிறீர்களா அல்லது தவறாக புரிந்து கொண்டீர்களா என அந்த இறைவனுக்குத்தான் தெரியும்.
தமிழர் திருநாள் என்று சொல்லிக்கொண்டு அனைத்து தமிழர்களும் இதை கொண்டாடவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் அது எழுதப்பட்டதே தவிர விஷம் ஊற்றுவதற்காக அல்ல.
மதத்தால் தமிழன் பிரிந்து விட கூடாது மதத்தை கடந்து அவன் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் ஆசை.
பொங்கல் இயற்க்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு நாள்.நமக்கு சோறு தந்த சூரியனுக்கும், ஏறு பூட்டி நிலம் உழுத மாட்டிற்கும் , சிலர் நன்றி சொல்கிறார்கள். கிருத்துவர்களும் சிலருக்கு நன்றி சொல்வதாக கொண்டாடுகிறார்கள் என்று கேள்வி. பொங்கல் அன்று நீங்களும் சோற்றுக்கு அரிசி தரும் அல்லாவுக்கு நன்றி சொன்னால் அவர் ஏற்றுகொள்ள மாட்டாரா?(நன்றி தான் சொல்ல சொல்கிறேன் பொங்கல் படைக்க சொல்ல வில்லை.). தமிழர் திருநாள் அன்று அனைத்து மதத்தினரும் அவர் அவர் கடவுளுக்கு, நன்றி சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
அவ்வாறு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக தமிழர் திருநாளை கொண்டாடினால் அது நமக்கு பெருமை இல்லையா சகோ.
அத விடங்க குறைந்த பட்சம் நாம் (தமிழர்கள்) ஒன்றாக கொண்டாடும் ஒரு விழாவாக அது இருந்துவிட்டு போகட்டுமே என்ன சொல்கிறீர்கள் சகோ?
நீங்கள் இப்பிநூடத்தையும்
என்னுடைய் பதிவையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஆரோக்யமான சிந்தனைக்கு எடுத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
ஒருவேளை நீங்கள் என் பதிவை படிக்கவில்லை என்றால் அதை உங்களுக்கு கொடுப்பதும் என் கடமை என்றே உணர்கிறேன்.
இதோ என்னுடைய பதிவு ------நன்றி சகோ.
(தமிழர் திருநாள்- முசுலிம்களும், கிருத்தவர்களும் தமிழர்கள் இல்லையா?
தமிழர் திருநாள், உழவர் திருநாள் எனும் பொங்கல் பண்டிகை உண்மையிலேயே அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றதா என்று எனக்கு தெரியவில்லை. குறிப்பாக முசுலிம்களும், கிருத்தவர்களும் எனக்கு தெரிந்து கொண்டாடுவதில்லை (தெரியப்படுத்தினால் மகிழ்வேன்).
ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா? மதம் எவ்வாறு தமிழர்களிடையே ஒரு பிளவை உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அவர்களது சுய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
தமிழர் திருநாளை இந்துக்களே பெருமளவில் கொண்டாடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகின்றது.
தமிழன் செய்யும் அனைத்தையும் அது பார்ப்பானின் திணிப்பு என்று கூறும் திராவிடவாதிகள் ஏன் இந்துக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனும் பொங்கல் பண்டிகையை தானும் கொண்டாடுகின்றனர். இதையும் இந்து பண்டிகை என்று சொல்லி ஒதுக்க வேண்டியது தானே?
(உடனே இது உழைப்பவர்கள் திருநாள்னு என் கிட்ட சொல்லகூடாது....சூரியனுக்கு ஏன் பொங்கல் படைக்கிறீர்கள் என்று நான் கேட்பேன்). ஆக இதை தன்னை திராவிடவாதிகள் என்று கூறுபவர்களின் சுய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
பொங்கல் பண்டிகையை நான் இந்துக்களின் பண்டிகையாக பார்க்கவில்லை. தமிழர் திருநாளை நான் இயற்கையின் பண்டிகையாக,உழவர்களின் பண்டிகையாக, தமிழர்களின் பண்டிகையாகவே பார்க்கின்றேன். மத பேதத்தை விடுத்து உழவர் திருநாளை, தமிழர் திருநாளை, இயற்க்கைக்கு நன்றி செலுத்தும் இத்திருநாளை அனைவரும் கொண்டாடவேண்டும் எனபதே என் ஆசை.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2012/01/blog-post_17.html)
@R.Puratchimani
சகோ.புரட்சிமணி,
இந்த பதிவு ஒருவருக்கு அல்ல... ஒரே மாதிரியான சிந்தனையில் உள்ள சிலருக்கு... அவர்களுடன் நடந்த விவாதத்தின் இடையில் நீங்கள் இல்லை என்பதால் வந்த குழப்பம்.
அந்த பொங்கல் பற்றிய வரிகள் கூட உங்கள் பதிவை படித்து அல்ல.
வேறு ஒருவர் பதிவும்,
இன்னொரு பதிவில் நடந்த விவாதமும்...காரணம்
//ஒருவேளை நீங்கள் என்னுடைய பதிவை படித்து இதை எழுதிருந்தால் மேற்கொண்டு படியுங்கள் இல்லை என்றால் இது உங்களுக்கு இல்லை.//----நன்றி சகோ.புரட்சிமணி.
நீங்கள் இப்படி சொல்லிவிட்டாலும், கடைசியில் பதிவு சுட்டி கொடுத்து என்னை படிக்க சொன்னதால்... தங்களுக்கான தக்க பதில் இந்த பதிவு==>
'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?
அவசியம் படியுங்கள் சகோ.புரட்சிமணி.
@R.Puratchimani
//பொங்கல் அன்று நீங்களும் சோற்றுக்கு அரிசி தரும் அல்லாவுக்கு நன்றி சொன்னால் அவர் ஏற்றுகொள்ள மாட்டாரா?(நன்றி தான் சொல்ல சொல்கிறேன் பொங்கல் படைக்க சொல்ல வில்லை.//
-----மிக அருமையாக தெளிவாக சொல்லி விட்டர்கள் சகோ.புரட்சிமணி. மிக்க நன்றி.
ஆக....
உணவு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதுதான் பொங்கல் திருநாள் என்றால்... இது முஸ்லிம்களுக்கு இரட்டிப்பு ஒப்புதல்..!
அரிசி விளைய சூரியன் மட்டுமே காரணம் அல்ல;ஏகப்பட்ட காரணிகள் உள்ளன என்றும்,
அரிசி மட்டுமே நமது உணவு அல்ல;கூடவே நிறைய உணவுகளை சாப்பிடுகிறோம் என்றும்,
உழவர்கள் மட்டுமே நமது சாப்பாட்டுக்கு நன்றிக்குரியவர்கள் அல்லர்;நமக்கும் அவர்களுக்கும் இடையில் நன்றி சொல்ல வேண்டிய நிறைய பேர் உள்ளனர் என்றும்,
இத்தனைக்கும் சேர்த்து மூல காரணியாக விளங்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது சிறந்தது என்றும்,
அதுவும், தினமும் மூன்று அல்லது நான்கு வேளை(?) உண்ணும் நாம் வருடத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது சரியல்ல என்றும்,
அனைத்து விளைச்சளுக்கும், அனைவர் உழைப்புக்கும் அதற்குரிய அனுசரணைகளை வழங்கி, அழிவிலிருந்து காத்து, அவர்களுக்கு வெற்றியை அளித்த...
அனைத்துக்கும் மூல காரணியாக இருக்கும் இறைவனுக்கு...
ஒவ்வொரு வேளையும், எந்த ஒரு உணவையும், உணவுத்துகளையும் வாய்க்குள் போட்டால், இறைவனின் கருணையை போற்றி நன்றி கூறி, "இறைவனின் பெயரால்..." (பிஸ்மில்லாஹ்) என்று சொல்லி சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் - "
எல்லா புகழும் இறைவனுக்கே"(அல்ஹம்துலில்லாஹ்)என்று நன்றி கூறி சாப்பிட்டு முடிக்கிறார்கள், முஸ்லிம்கள்..!
இதனால்... ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும்... அருந்தும்போதும்... நித்தம் நித்தம் தினம் தினம் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனரே..!!!
ஆண்டின் 366 நாளும்... ஒரு நாளில் பல முறையும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களை எதற்கு 'ஒரே ஒருநாள் மட்டும் பொங்கல் கொண்டாடினால் போதும்' என்று தடுக்கிறீர்கள் சகோ.புரட்சிமணி..? :-)
ஆக, நீங்கள் பொங்கல் அன்று மட்டும் இறைவனுக்கு நன்றி சொல்லும் பொழுது... அன்றும் கூட முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடித்தான் உள்ளனர் சகோ.புரட்சிமணி.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் விளக்கத்துக்கும் மிகவும் நன்றி சகோ.புரட்சிமணி.
சகோ புரட்சிமணி அவர்களே,
தாங்கள் பெயருக்கு ஏற்றார்போல் புரட்சியாக பல நியாயமான கேள்விகளை
கேக்கிறீங்க ..சரி விளக்கத்துக்கு வருவோம் ,
முஸ்லிம்கள் ஒவ்வெரு வேளை உணவு உட்கொண்டபின்பும், முன்பும் இறைவனுக்கு மறக்காமல் நன்றி செலுத்துகிறார்கள் உண்மை இவ்வாறு இருக்க,
குறிப்பிட்ட நாளில் மட்டும் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு மற்ற நாட்களில் நன்றி செலுத்தகூடாதா ?? அந்தநாளில் விடுமுறை தேவையா ?? பார்பானர்களைப்
போன்றே கோமாதாவை அந்நாளில் வணங்கும் போது முஸ்லிம்களும், கிறித்துவர்களும் பங்கேட்பார்களா?? அல்லது ஒருவேளை முஸ்லிம்களே
பொங்கல் நாளில் இந்துக்களும் ,கிறித்துவர்களும் வரணும் என்று சொன்னால், அவர்கள் வருவார்களா !!! வர மாட்டார்கள் .....ஒவ்வெருக்கும் தனித்தனியான மத,இயக்க கொள்கைகள் இருக்கிறபடியால் சில விசயங்களில் முரன்பட்டுதான் இருப்பாங்க...இப்படி பல முரண்பாடுகள்ள தான் உலகமே இயங்குது.. முரண்பாடு இல்லேன்னா எதுவுமே இல்லை அதாவது சூன்யம் ....சரி நேரமாகிவிட்டபடியால் பின்பு தொடருகிறேன்
தங்களின் விளக்கம் அருமை.
// ஆண்டின் 366 நாளும்... ஒரு நாளில் பல முறையும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களை எதற்கு 'ஒரே ஒருநாள் மட்டும் பொங்கல் கொண்டாடினால் போதும்' என்று தடுக்கிறீர்கள் சகோ.புரட்சிமணி..? :-)//
நீங்கள் தினமும் தொழுகை செய்தாலும் குரான் படித்தாலும் ரம்ஜான் கொண்டாடுகிறீர்கள் அல்லவா?அது ஏன்? :) அதைப்போல் தான் இந்த அழைப்பும். தமிழர் திருநாள் அன்று அனைத்து தமிழர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிவிட்டு அவரவர் மதப்படி கொண்டாட வேண்டும் என்பதே என ஆசை சகோ.
நீங்கள் என் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். அனைத்து தமிழர்களின் திருநாளாக இருந்த அத்தமிழர் திருநாளை மீண்டும் புதிப்பிக்க வேண்டும்,எந்த மதத்தையும் புண்படுத்தாமல். இதற்க்கு தாங்கள் ஒரு உபாயம் கூறினால் நன்றாக இருக்கும். :)....முஸ்லிம்களுக்கு ரம்ஜான் போல தமிழர்களுக்கு என்ன கொடுக்கலாம்? :)
மிக்க நன்றி சகோ :)
//Nasar said...
57
சகோ புரட்சிமணி அவர்களே,
தாங்கள் பெயருக்கு ஏற்றார்போல் புரட்சியாக பல நியாயமான கேள்விகளை
கேக்கிறீங்க ..சரி விளக்கத்துக்கு வருவோம் ,
முஸ்லிம்கள் ஒவ்வெரு வேளை உணவு உட்கொண்டபின்பும், முன்பும் இறைவனுக்கு மறக்காமல் நன்றி செலுத்துகிறார்கள் உண்மை இவ்வாறு இருக்க,
குறிப்பிட்ட நாளில் மட்டும் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு மற்ற நாட்களில் நன்றி செலுத்தகூடாதா ??//
கேள்விகள்நியாயம் என்று ஏற்றமைக்கு நன்றி சகோ.
ரம்ஜான் கொண்டாடுவது போல் தமிழர்களுக்கு தமிழர் திருநாள் இருக்கட்டுமே சகோ. நன்றி சொல்வதில் சிறிது வேறுபாடுடன்.
நீங்கள் கூப்பிட்டால் கண்டிப்பாக நான் வருவேன் சகோ.சிலர் வர மறுக்கலாம் சிலர் வருவார்கள்.
முடிந்த வரை முரண்பாடுகளை களைவோம் அல்லது அதையும் தாண்டி நட்புடன் வளம் வருவோம் சகோ :)
நன்றி
இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை பரப்புவோரை நசுக்கி "நச்" சென்று ஒரு பதிவு, அருமை சகோ ஆசிக்,
இறைவன் இன்னும் உங்களின் அறிவை விசாலமாக்குவானாக. ஆமின்.
@R.Puratchimaniசகோ.புரட்சிமணி,
இஸ்லாம் பொறுத்த மட்டில் கடமைகள் இருவிதம். ஒன்று மனிதனுக்கு செய்ய வேண்டியது. இன்னொன்று இறைவனுக்கு செய்ய வேண்டியது.
இதில், இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் எப்போதுமே(இறை நம்பிக்கை), தினமும்(தொழுகை), அவ்வப்போது(தருமம்), வருடத்துக்கு ஒருமுறை(ரம்ஜான் நோன்பு), ஆயுளுக்கு ஒருமுறை(ஹஜ்) ...என்று கடமைகள் வேறு படுகின்றன.
///நீங்கள் தினமும் தொழுகை செய்தாலும் குரான் படித்தாலும் ரம்ஜான் கொண்டாடுகிறீர்கள் அல்லவா?அது ஏன்? :) அதைப்போல் தான் இந்த அழைப்பும்.///
வருடத்துக்கு ஒருமுறை வரும் ஒரு மாதம் நோக்கும் நோன்போடு அது நிறைவுற்ற அன்று வருவதுதான் நீங்கள் குறிப்பிடும் ரம்ஜான் பண்டிகை.
'உணவுக்காக இறைவனுக்கு நன்றி' என்பது தினமும் உள்ள மேட்டர். அந்த பொங்கல் பண்டிகை ஏற்கனவே நடந்து கொண்டுதான் உள்ளது என்று சொல்லிவிட்டேன்.
அதனால் இரண்டையும் ஒப்புமை படுத்த இயலாது.
//தமிழர் திருநாள் அன்று அனைத்து தமிழர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிவிட்டு அவரவர் மதப்படி கொண்டாட வேண்டும் என்பதே என ஆசை சகோ.// ---நல்ல ஆசைதான் சகோ.
ஆனால், 'நாம் அனைவரும் தமிழர்' என்ற உணர்வு வருடத்துக்கு ஒருநாள் இல்லாமல் எப்போதும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனாலும் ஒரு குறிப்பால் உணர்த்தும் பொருட்டு... வருடத்துக்கு ஒரே ஒருநாள் திருநாள் என கொண்டாடலாம் என்றால்... //கொண்டாட்டம்// என்றால் உங்களைப்பொருத்த மட்டில் என்ன..? அன்று ஒருநாள் மட்டும் வித்தியாசமாக என்ன செய்வீர்கள்..? என்ன செய்ய வேண்டும்..!
இதில் நான் தெளிவு பெற்ற பின்னர்தான்...
//எந்த மதத்தையும் புண்படுத்தாமல். இதற்க்கு தாங்கள் ஒரு உபாயம் கூறினால் நன்றாக இருக்கும். :)....முஸ்லிம்களுக்கு ரம்ஜான் போல தமிழர்களுக்கு என்ன கொடுக்கலாம்? :)//---இதற்கு விடை அளிக்க முடியும்.
மிக்க நன்றி சகோ :)
@Syed Ibramshaவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.சையத் இப்ராஹீம் ஷா.
//'உணவுக்காக இறைவனுக்கு நன்றி' என்பது தினமும் உள்ள மேட்டர். அந்த பொங்கல் பண்டிகை ஏற்கனவே நடந்து கொண்டுதான் உள்ளது என்று சொல்லிவிட்டேன்.//
வருடம் முழுவதும் உழைத்த உழவன் அறுவடை செய்த புத்தம் புதிய அரிசியை அன்று தான் முதன் முதலில் சமைக்கிறான். அப்படி சமைக்கும் பொழுது அவன் இறைவனுக்கு/இயற்க்கைக்கு நன்றி தெரிவிக்கின்றான்.
// வருடத்துக்கு ஒருமுறை வரும் ஒரு மாதம் நோக்கும் நோன்போடு அது நிறைவுற்ற அன்று வருவதுதான் நீங்கள் குறிப்பிடும் ரம்ஜான் பண்டிகை.//
அது ஏன் அந்த ஒரு மாதம் சகோ. பிறகு அந்த ஒரு மாதத்தை நிறைவு செய்ய ஏன் ரம்ஜான் பண்டிகை?
உங்கள் மதத்தை அதன் நடைமுறையை கேள்வி கேட்பது என் நோக்கம் அல்ல.
ரம்ஜான் எப்படி கொண்டாடப்படுகிறதோ அவ்வாறே பொங்கல் எனும் தமிழர் பண்டிகையும். எப்படி ஒரு நாளை நீங்கள் ரம்ஜானாக கொண்டாடுகிறீர்களோ அதே போல் ஒரு நாளை தமிழர் திருநாளாக ஏன் கொண்டாட கூடாது?
ரம்ஜானை ஏற்றுக்கொள்ளும் உங்களால் பொங்கலை ஏன் ஏற்றுகொள்ள முடியவில்லை எனில் அது குர்ஆனில் சொல்லப்படவில்லை.
//ஆனாலும் ஒரு குறிப்பால் உணர்த்தும் பொருட்டு... வருடத்துக்கு ஒரே ஒருநாள் திருநாள் என கொண்டாடலாம் என்றால்... //கொண்டாட்டம்// என்றால் உங்களைப்பொருத்த மட்டில் என்ன..? அன்று ஒருநாள் மட்டும் வித்தியாசமாக என்ன செய்வீர்கள்..? என்ன செய்ய வேண்டும்..!//
நீங்கள் எனக்கு(முசுலிம்கள் மற்றும் இதர தமிழர்கள் ) அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லவேண்டும். உங்களுக்கு (முசுலிம்களுக்கு மற்றும் இதர தமிழர்கள் ) நான் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லவேண்டும்.
உங்கள் மதப்படி நீங்கள் இறைவனுக்கு அந்த நாளில் நன்றி சொல்லுங்கள். எனக்கு பிடித்த மாதிரி நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
(முடிந்தால் நீங்கள் எனக்கு பிரியாணி கொடுங்கள்...என்னால் முடிந்ததை நான் உங்களுக்கு தருகிறேன். :) சும்மா:) )
அவ்வளவே சகோ:)
மிக்க நன்றி சகோ :)
@R.Puratchimani//வருடம் முழுவதும் உழைத்த உழவன் அறுவடை செய்த புத்தம் புதிய அரிசியை அன்று தான் முதன் முதலில் சமைக்கிறான்.அப்படி சமைக்கும் பொழுது அவன் இறைவனுக்கு/இயற்க்கைக்கு நன்றி தெரிவிக்கின்றான்.//---ஆஹா, மிக அருமையான நன்றியறிதல் வரவேற்கிறேன்.
ஆனால், அதே சமயம்... ஆண்டுக்கு மூன்று போகம் செய்யும் பசுமை புரட்சி நடக்கும் காலத்தில் இருந்து கொண்டு இன்னும் 'சிங்கிள் போகமா'..? எந்த நூற்றாண்டில் உள்ளீர்கள் சகோ.புரட்சிமணி..?
இப்படி பார்த்தால்... ஆண்டுக்கு மூன்று முறை அல்லவா உழவர்கள்... விளைச்சல் அறுவடைக்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதாவது, வருஷத்துக்கு மூன்று பொங்கல் என்பதே சரி. நான் அறுவடை செய்த உழவராக இருந்தால் இப்படித்தான் சொல்வேன்.
ஆனால், ஆண்டுக்கு மூன்று தடவை மட்டும் சாப்பிடாமல், ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடும் நான் மூன்று முறை இறைவனுக்கு நன்றி சொல்வதே எனக்கு சரி என படுகிறது.
//அது ஏன் அந்த ஒரு மாதம் சகோ. பிறகு அந்த ஒரு மாதத்தை நிறைவு செய்ய ஏன் ரம்ஜான் பண்டிகை?//---நல்ல கேள்வி..! வருஷம் முழுக்க நோன்பு வைக்கலாமே என்று? இதே கேள்வியை அதென்ன ஐந்து வேளை மட்டும் ஒரு நாளைக்கு தொழுகை என்றும் கேட்கலாம். அதென்ன ஹஜ் மாசத்தில் மட்டும் ஹஜ்? எல்லா மாதத்திலும் இல்லை என்றும் கேட்கலாம்.
அதுதான் இறைக்கட்டளை என்றான பிறகு அதில் முஸ்லிம்களுக்கு விவாதிக்க ஒன்றுமில்லை.
//ரம்ஜானை ஏற்றுக்கொள்ளும் உங்களால் பொங்கலை ஏன் ஏற்றுகொள்ள முடியவில்லை எனில் அது குர்ஆனில் சொல்லப்படவில்லை.//---"அரிசி தரும் அல்லாவுக்கு நன்றி" சொல்வதே பொங்கல்... என்று நீங்கள் சொன்னதால்தான் இந்த விவாதமே.
மாறாக, குர்ஆனில் இதற்கு தடை இருந்திருந்தால் விவாதமே அவசியமில்லை.
@R.Puratchimani
//நீங்கள் எனக்கு(முசுலிம்கள் மற்றும் இதர தமிழர்கள் ) அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லவேண்டும். உங்களுக்கு (முசுலிம்களுக்கு மற்றும் இதர தமிழர்கள் ) நான் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லவேண்டும்.
உங்கள் மதப்படி நீங்கள் இறைவனுக்கு அந்த நாளில் நன்றி சொல்லுங்கள். எனக்கு பிடித்த மாதிரி நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
(முடிந்தால் நீங்கள் எனக்கு பிரியாணி கொடுங்கள்...என்னால் முடிந்ததை நான் உங்களுக்கு தருகிறேன். :) சும்மா:) )
அவ்வளவே சகோ:)//
அட... இவ்ளோதானா தமிழர் திருநாள்..! மிக அருமை சகோ..!
இதோ நான் இப்போது இறைவனுக்கு நன்றி சொல்லி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். அரிசிதான்... ஆனால், தோசை வடிவில்..!
இது எந்த போகம்... எந்த நாட்டு விளைச்சல்... என்று தெரியவில்லை.
எனினும், இந்த அரிசியை எனக்கு உண்ண அருளிய இறைவனுக்கு நன்றி.
நாம் இங்கே விவாதித்ததின் அடிப்படையில்... எனக்கு இன்று... இப்போது.... "தமிழர் திருநாள்"..!
எனவே...
தங்கள் விருப்பபப்டி,
அன்புள்ள ஆருயிர் சகோ.புரட்சிமணி...
தங்களுக்கும் மற்றும் அனைத்து தமிழ் பேசும் தமிழர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த தித்திக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..!
இதேபோல...உங்களிடம் இருந்தும் 'இன்றைய தமிழர் திருநாள் வாழ்த்தை' எதிர்பார்க்கிறேன் சகோ.புரட்சிமணி..!
((//அது ஏன் அந்த ஒரு மாதம் சகோ. பிறகு அந்த ஒரு மாதத்தை நிறைவு செய்ய ஏன் ரம்ஜான் பண்டிகை?//---நல்ல கேள்வி..! வருஷம் முழுக்க நோன்பு வைக்கலாமே என்று? இதே கேள்வியை அதென்ன ஐந்து வேளை மட்டும் ஒரு நாளைக்கு தொழுகை என்றும் கேட்கலாம். அதென்ன ஹஜ் மாசத்தில் மட்டும் ஹஜ்? எல்லா மாதத்திலும் இல்லை என்றும் கேட்கலாம்.
அதுதான் இறைக்கட்டளை என்றான பிறகு அதில் முஸ்லிம்களுக்கு விவாதிக்க ஒன்றுமில்லை.))
‘இறைனெறியை (தர்மத்தை) மேற்கொள்வதில் யாதொரு கட்டாயமோ – நிர்ப்பந்தமோ இல்லை.-அத்தியாயம் 2 வசனம் 256-
‘துதுச் செய்தியை எடுத்துரைப்பதே நபியின் பணியாகும்’ [13:40]
‘நிர்ப்பந்திப்பது உமது பணியல்ல’ [50:45]
என்று இஸ்லாம் தானே கூறுகிறது. ஆகவே இஸ்லாம் எதையும் நிர்பந்திக்க வில்லை, விவாதிப்பதை தடை செய்யவில்லை. விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை விட கேள்வி கேட்க, விவாதிக்க உண்மையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லை என்று வேண்டும் என்றால் சொல்லுங்கள்.
நாம் தமிழர்களாக, மனிதர்களாக பழகுவோம் என்பதே என் அழைப்பு. இல்லை நான் முஸ்லீமாக மட்டுமே அதவும் சிந்திக்க குரான் இடம் அளித்தாலும் சிந்திக்காத முஸ்லிமாகத்தான் நான் பழுகுவேன் என்றால் அது உங்கள் விருப்பம், உரிமை.
என் எழுத்துக்கள் உங்களை (ஒருவேளை) புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், எனக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் கேள்வி கேட்க்கும், சிந்திக்கும், உண்மையை அறியும் ஆற்றலை மென்மேலும் வழங்கி உலகில் அன்பும் அமைதியும் தருவானாக.
மிக்க நன்றி சகோ :)
@R.Puratchimaniமுதலில்....
//பொங்கல் அன்று நீங்களும் சோற்றுக்கு அரிசி தரும் அல்லாவுக்கு நன்றி சொன்னால் அவர் ஏற்றுகொள்ள மாட்டாரா?(நன்றி தான் சொல்ல சொல்கிறேன் பொங்கல் படைக்க சொல்ல வில்லை.)//---என்று சொன்னீர்கள்.
///உணவு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதுதான் பொங்கல் திருநாள் என்றால்... இது முஸ்லிம்களுக்கு இரட்டிப்பு ஒப்புதல்..!
ஒவ்வொரு வேளையும், எந்த ஒரு உணவையும், உணவுத்துகளையும் வாய்க்குள் போட்டால், இறைவனின் கருணையை போற்றி நன்றி கூறி, "இறைவனின் பெயரால்..." (பிஸ்மில்லாஹ்) என்று சொல்லி சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் - "
எல்லா புகழும் இறைவனுக்கே"(அல்ஹம்துலில்லாஹ்)என்று நன்றி கூறி சாப்பிட்டு முடிக்கிறார்கள், முஸ்லிம்கள்..!
இதனால்... ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும்... அருந்தும்போதும்... நித்தம் நித்தம் தினம் தினம் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனரே..!!! ///---என்றேன் நான்..!
இதற்கு பதிலாக...
//நீங்கள் தினமும் தொழுகை செய்தாலும் குரான் படித்தாலும் ரம்ஜான் கொண்டாடுகிறீர்கள் அல்லவா?அது ஏன்? :) அதைப்போல் தான் இந்த அழைப்பும். தமிழர் திருநாள் அன்று அனைத்து தமிழர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிவிட்டு அவரவர் மதப்படி கொண்டாட வேண்டும் என்பதே என ஆசை சகோ.//---என்று சொன்னீர்கள்.
குர்ஆன் ஓதுதல் மற்றும் தொழுகை எல்லாம் தினமும் நடப்பது... ரமலான் மாதம் வருடத்தில் ஒரு தடவை-அதையொட்டிய நீங்கள் சொல்லும் ரம்ஜான் பண்டிகையும் ஆண்டுக்கு ஒருமுறைதான்.
எனவே,
//'உணவுக்காக இறைவனுக்கு நன்றி' என்பது தினமும் உள்ள மேட்டர். அந்த பொங்கல் பண்டிகை ஏற்கனவே நடந்து கொண்டுதான் உள்ளது என்று சொல்லிவிட்டேன்.
அதனால் இரண்டையும் ஒப்புமை படுத்த இயலாது.//
---என்றும் தெளிவாக கூறிவிட்டேன்.
இப்போது நீங்கள் முன்பு சொன்ன "உணவுக்கு அல்லாவுக்கு நன்றி சொல்வதுதான் பொங்கல்" என்ற கருத்தை நீங்களே மாற்றிகொண்டவர் போல...
//வருடம் முழுவதும் உழைத்த உழவன் அறுவடை செய்த புத்தம் புதிய அரிசியை அன்று தான் முதன் முதலில் சமைக்கிறான். அப்படி சமைக்கும் பொழுது அவன் இறைவனுக்கு/இயற்க்கைக்கு நன்றி தெரிவிக்கின்றான்.//---என்று அறுவடை நாள் தான் பொங்கல்--அதாவது தமிழர் திருநாள் வருடத்துக்கு ஒரு முறைதான் என்று மீண்டும் சொல்ல முனைந்தீர்கள்..!
இதற்கு எனது பகுத்தறிவு சிந்தையுடன் கேள்வி என்னவென்றால்....
//ஆண்டுக்கு மூன்று போகம் செய்யும் பசுமை புரட்சி நடக்கும் காலத்தில் இருந்து கொண்டு இன்னும் 'சிங்கிள் போகமா'..? எந்த நூற்றாண்டில் உள்ளீர்கள் சகோ.புரட்சிமணி..?
இப்படி பார்த்தால்... ஆண்டுக்கு மூன்று முறை அல்லவா உழவர்கள்... விளைச்சல் அறுவடைக்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்..?//
என்று கேட்டுவிட்டு...
///வருஷத்துக்கு மூன்று பொங்கல் என்பதே சரி. நான் அறுவடை செய்த உழவராக இருந்தால் இப்படித்தான் சொல்வேன்.///---என்றேன்..!
ஆக, வருஷத்துக்கு மூன்று பொங்கல் கொண்டாட நான் உழவன் இல்லை. ஆனால், எப்போதெல்லாம் அரிசியை சாபிடுகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு தமிழர் திருநாள் என்ற நமது விவாத புரிதலின் அடிப்படையில்...
நேற்று இரவு நான் தோசை சாப்பிடும்போது...
///நாம் இங்கே விவாதித்ததின் அடிப்படையில்... எனக்கு இன்று... இப்போது.... "தமிழர் திருநாள்"..!
எனவே...
தங்கள் விருப்பபப்டி,
அன்புள்ள ஆருயிர் சகோ.புரட்சிமணி...
தங்களுக்கும் மற்றும் அனைத்து தமிழ் பேசும் தமிழர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த தித்திக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..!///--என்று சொன்ன பிறகும் கூட...
என்று நான் உங்களுக்கு வாழ்த்து சொன்ன பிறகும் கூட....
எனக்கு ஏன் இன்று "தமிழர் திருநாள் வாழ்த்து" சொல்லவில்லை சகோ.புரட்சிமணி..?
ஓ... ஒருவேளை நேற்று உங்கள் வீட்டில் கோதுமை சப்பாத்தி யாக இருந்திருக்கலாம்.
ஆனால்,
இன்று மதியம் சோறு சாப்பிட்டு இருப்பீர்கள். என் வீட்டிலும் சோறுதான்.
சகோ.புரட்சிமணி,
நீங்கள் தமிழர் என்பதால்...
நமக்கு இன்று தமிழர் திருநாள் என்பதால்...
நான் உங்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன் என்பதால்...
பதிலுக்கு எனக்கு நீங்கள் 'தமிழர் திருநாள் வாழ்த்து' சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
உடனே வாருங்கள் சகோ.புரட்சிமணி.
உங்களின் விவாதத்திறனை கண்டு வியக்கிறேன் சகோ :)
அருமை....
இந்த விவாதம் எப்படி போகிறது என்றால்
தாயை மதித்து நடக்க வேண்டும் என்று நான் சொன்னால்
ஏன் மதிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்க
உன்னை பத்து மாதம் சுமந்து பெத்திருக்காங்க அப்படின்னு நான் சொல்ல
ஆடு மாடு கூட தான் சுமந்து பெக்குதுன்னு நீங்க சொல்ல...(அதாவது தாயை மதிக்க பல காரணிகள் இருந்தாலும் பிற காரணிகளை சிந்திக்காமல் சொன்ன ஒரு காரணியை மட்டும் விவாதிப்பது. )
இப்படித்தான் இறைவனுக்கு உணவுக்காக நன்றி என்று நான் சொன்னதையும், புது அரிசிக்காக என்று சொன்னதையும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து... நீங்கள் மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறீர்கள்.
நான் ஒரு பரந்த நோக்கத்துடன் இசுலாமியர்களும் தமிழர் திருநாளை கொண்டாடவேண்டும் என்கிறேன்.
அவ்வாறு கொண்டாடும் பொழுது தமிழர்கள் அனைவரும் மதத்தை மறந்து ஒன்று கூட ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இசுலாமியர்கள் மட்டும் தமிழர் திருநாள் கொண்டாடவில்லை..அவர்கள் தமிழர்கள் இல்லையா என்ற கேள்விகள் நீங்கும்.
இசுலாமுக்கு களங்கம் ஏற்ப்படாமல் அன்றைய நாளை கொண்டாட முடிந்தால் அது ஒட்டு மொத்த தமிழனத்திற்கும் நல்லது.
எப்படி தமிழர் திருநாளை கொண்டாடமல் தவிர்க்கலாம் என்று சிந்திப்பதை விடுத்து...எப்படி இசுலாமியர்களும் தமிழர் திருநாளை கொண்டாடலாம் என்று சிந்தியுங்கள் சகோ. அது ஒட்டு மொத்த தமிழனத்தின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
உங்களுக்கு காலம் கடந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி சகோ :)
@R.Puratchimaniநீங்கள் தவறான உதாரணத்துடன் சம்பந்தமில்லாமல் சொன்னதை தவிர்த்து விட்டு....
//இசுலாமியர்கள் மட்டும் தமிழர் திருநாள் கொண்டாடவில்லை..அவர்கள் தமிழர்கள் இல்லையா என்ற கேள்விகள் நீங்கும்.//---சசகோ...புரட்சிமணி.... இது உங்களுக்கே நியாயமா..?
இப்படி ஒருவர் சொல்கிறார்... அது எவ்வளவு பெரிய தவறு என்றுதான் இந்த பதிவே போட்டு இருக்கிறேன்...
அப்படி சொன்ன அவரை ஒரு பிடி பிடிப்பதை விட்டுவிட்டு...
'நீங்கள் முதுகை காட்டாதீங்க... திருப்பிக்கங்க, இனி அவர் அப்படி அடிக்க மாட்டார்' என்றால் என்னங்க இது நியாயம்..?
அப்படி என்றால், 'நீங்களும் தமிழர் திருநாள் -பொங்கல் கொண்டாடாதவர்கள் தமிழர்கள் இல்லை' என்ற நச்சுக்கருத்தை பரப்புகின்றீர்களா..? தமிழன் என்றால் தமிழை தாய் மொழியாக கொண்டு இருந்தால் மட்டும் போதாதா..?
அப்படி என்றால், உலகம் முழுக்க ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விழா கொண்டாடினால்தான் அந்த மொழிக்காரர் என்ற அங்கீகாரம் கிடைக்குமா..?
பொங்கல் கொண்டாட்டத்திலுள்ள மதம் சார்ந்த திணிப்புகளை நீக்குவதற்கு அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையாவது நீங்கள் எடுத்து உள்ளீர்களா..? எடுக்காதவரை பொங்கல் அனைத்து தமிழருக்குமான பண்டிகை என்று எப்படி மற்றவர்களை அழைக்க முடியும் நான்..? பதில் சொல்லுங்க..!
இது தவறல்லவா..? அறிவுக்கு பொருந்தி வருகிறதா...? சிந்தியுங்கள் சகோ..!
@R.Puratchimaniசரி... தினமும் வேணாம்... வருஷதுக்கு மூணு நாள் வேணாம்... ஒரே ஒருநாள் அதுவும் அந்த தை ஒன்னாம் தேதிதான் கொண்டாடனுமா..?
///இசுலாமுக்கு களங்கம் ஏற்ப்படாமல் அன்றைய நாளை கொண்டாட முடிந்தால் அது ஒட்டு மொத்த தமிழனத்திற்கும் நல்லது.///---இப்படி கேட்கிறீர்கள் அல்லவா..? இத்தனை வருஷ காலம் இதுவரை முஸ்லிம்கள் கொண்டாடாமல் இருந்ததால்... கொண்டாடும் மற்றவருக்கு என்ன பிரச்சினை உருவானது..? இதனால் மொத்த தமிழினத்திற்கும் என்ன தீங்கு ஏற்பட்டது..? (பதில் தேவை)
ஆனால், தற்போது பொங்கல் கொண்டாடப்படும் விதத்தில்... /'ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்மை'/ பயக்கும் விதத்தில் அங்கே நடைபெறும் /'களங்கங்களை'/ நீங்கள் போக்க முயற்சி செய்து விட்டு வாருங்களேன்...!
இதோ பட்டியல்...
#வருடமெல்லாம் உழவுக்கு 'அடிமை'யாக உதவிய காளையை ஓடவிட்டு,கொடுமை படுத்தி 'அடிமையை அடக்குவதை' வீரம் என்று சொல்கிறார்கள். இதுதான் வீரமா? ஆனால், பலர் குடல் கிழிந்து மரணிக்கிறார்கள். பண்டிகை அன்று இழவு எதற்கு என்றுதான் உச்சநீதிமன்றமும் தடை விதிக்கிறது போல..!
#மாறாக, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மெல்ல மெல்ல வெட்டப்படும் உரமானியத்தை முழுதாக மீண்டும் தர அன்று ஒருநாள் நாம் போராட்டம் அரசுக்கு எதிராக செய்யலாமா..?
#விளை நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அல்லது மிரட்டி விற்கவைக்கப்பட்டு ஓரிரு வருடம் தரிசாக வேண்டுமென்றே போடப்பட்டு பின்னர் பிளாட் போட்டு 'விலை நிலங்களாக்கி' பன்மடங்கு விலைக்கு விற்கப்படுவதை எதிர்த்து அன்று ஒரு நாளாவது நாம் போராடலாமா..?
#காவிரி,பாலாறு,முல்லை பெரியாறு இவற்றுக்கெல்லாம் நிரந்தர தீர்வு கோரி அன்று ஒருநாள் போராடலாமா..?
#ஆற்றுமணலை அள்ளி நிலத்தடி நீரை ஆழத்திற்கு கொண்டு போகும் மடமையை அன்று ஒருநாள் எதிர்க்கலாமா..?
#பொதுவாகவே முஸ்லிம்களின் பண்டிகை தவிர்த்து, எல்லாமத பண்டிகைகளுமே ஏறத்தாழ வணிகமயமாக்கப்பட்டுள்ளன.(இங்கு முஸ்லிம்களின் பண்டிகையை தவிர்த்திருப்பது உங்களுக்கு நெருடலாக இருந்தாலும்,அது கசப்பான உண்மையே;இதுகுறித்து தேவையெனில் பிறகு பேசலாம்.)புதுப்படம்,சின்னத்திரை நிகழ்ச்சிகள்,ஆட்டம்,பாட்டம்,பட்டாசு,மஞ்சுவிரட்டு,சூதாட்டம் etc.கேளிக்கைகளும் கொண்டாட்டங்களுமே பண்டிகை என்ற முதலாளித்துவ சுரண்டல் மாயையில் கிட்டத்தட்ட எல்லா நம்பிக்கையாளர்களும் மயங்கியுள்ளனர். முஸ்லிம்கள் இவற்றிலிருந்து விலகியிருப்பதால்தான், அவர்கள் பழமைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் வசதிப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளனர். அன்று ஒருநாளாவது சினிமா, டிவி, பட்டாசு இல்லாமல் இருக்கலாமா..?
(தொடரும்)
@R.Puratchimani
#உழவனுக்கு நன்றி செலுத்துவதற்கே பொங்கல் என்றால்,விவசாயத்திற்கு அவன் வாங்கிய கடனை வேண்டாம், வட்டியையாவது அரசை தள்ளுபடி செய்ய சொல்லியாவது நாம் போராடலாமா..? இதுவல்லவா உழவனுக்கு நன்றியாக இருக்கும்..?
#சாதாரணமாக பத்து நிமிஷத்தில் பிளாட்பார்மில் உட்கார்ந்து ஒரு பஜ்ஜி போட்டு விற்றால்... அவன் அஞ்சு ரூபான்னா அதுதான் விலை. இல்லை... பத்து ரூபாய்னா, அதுதான் விலை. அவன் பொருளுக்கு விலை நிர்ணயம் அவன்தான்.
ஆனால்,உழவனான விவசாயிக்கு...?
உரமானியம் கட்,
ஆற்றில் தண்ணீர் இல்லை,
சரி கிணற்றில் எடுக்கலாம் என்றால்... இலவச மின்சாரம்னு சொல்லி மின்சாரம் கட்,
ஜெனேரெட்டார் போடலாம்னா டீசல் விலை எவரெஸ்டில்,
பூச்சிக்கொல்லி உரம் விலை எல்லாம் உச்சத்தில்,
நடவு ஆல் கூலி விற்கும் விலைவாசிக்கு ஏற்றபடி உச்சத்தில்,
போர் அடிக்கும் மெஷின் வாடகைக்கு பதிலாக மாடு வாங்கிடலாம் போல...
இவ்வளவு தடைகளையும் தாண்டி முடிந்து ஒருவழியா அறுத்து மூட்டைகட்டி கொண்டு வந்து சந்தையில் விற்கலாம் என்றால்... "அரசு கொள்முதல் நிலையம் போ..." "குவிண்டாலுக்கு இதுதாண்டா ரேட்..." "இதுக்கு வித்தா வித்துக்க... இல்லைன்னா ஓடு.." என்று அரசின் அடிமட்ட விலை நிர்ணயம்..! அவன் என்ன செய்வான்..? 'போடா, விவசாயமும் வேண்டாம் மண்ணும் வேண்டாம்' என்று ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டு போறான். போற போக்கில் உழவனே இலலாமல் விவசாயமே இலலாமல்.. உழவர் திருநாள்/பொங்கல் பண்டிகையாக தமிழராக மட்டும் இருந்து கொண்டு கொண்டாட முடியுமா..?
#உழைத்தவனது வியர்வை சொட்டு நிலத்தில் விழும் முன்பாக உழைப்புக்கேற்ற கூலியை இஸ்லாமிய அடிப்படையில் வழங்கினால், அவனுக்கு எல்லா நாளுமே பொங்கல் பண்டிகையே..! முதலில் அதற்கான ஏற்பாட்டுகளைச் செய்துவிட்டால் அதுவே உழவனுக்கு உண்மையான நன்றியாகும்..! செய்வோமா..? அன்று ஒருநாள் இதற்கு எல்லாம் போராடலாமா..?
#விவசாய மந்திரி மாநிலத்திலேயே ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் வேளையில்... மன்னியுங்கள் சகோ... 'உழவனுக்கு நன்றி செலுத்துகிறோம்' என்ற பெயரில்... அவர்களுக்காக அவர்களின் நலனுக்காக ஒரு மண்ணையும் நாம் செய்யாமல் இருந்துவிட்டு... உழுபவனை ஏமாற்றி இரண்டு ரூபாய்க்கு ரேஷன் அரிசி வாங்கி பொங்கல் பொங்கி திண்ணும் எனக்கெல்லாம் பொங்கல் ஒரு கேடா..? ஒருநாளுக்கு மட்டும் அடிபட்டவனின் வயிற்றில் ஏறி நின்று கொண்டு கொண்டாடுவதும் உங்களுக்கு வாழ்த்து சொல்வதும் என் பகுத்தறிவில் கொடிய வஞ்சக செயலாகவே படுகிறதே சகோ..!
இன்னும் நிறைய இருக்கிறது... இப்போதைக்கு இதுதான்....
இதற்கு எல்லாம் என்ன தீர்வு என்று முதலில் கவனிப்போம்...
உழுபவர்களுக்கு உண்மையான தமிழராய்..!
ஓகேவா சகோ.புரட்சி மணி..?
@R.Puratchimani
பின்குறிப்பு:-
ரம்ஜான் பண்டிகை : அன்று பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அன்று கட்டாய கடமை என்னவெனில்... ஊரில்... ஒரு முஸ்லிம் கூட அன்று உணவில்லாமல் அதாவது அன்றைய உயர்ந்த வகை உணவுக்கு முதல் நாளே வழி செய்துவிட்டுத்தான் அன்று பண்டிகை..!
பக்ரீத் பண்டிகை : அன்று ஏழைகள் உறவினர்கள் அனைவருக்கும் குர்பானி இறைச்சி அனுப்பிவிட்டு அவர்களையும் பண்டிகை கொண்டாட தகுதி ஆக்கிவிட்டுத்தான் வசதியானவர்களுக்கு பண்டிகை..!
தமிழர் திருநாளும் இதேபோல... அன்று உழுபவன் சந்தொஷமாக இருக்க வேண்டாமா..? ஆனால், அவன் தற்கொலை செய்து கொள்ள மற்றவன் கொண்டாடுவது எங்கனம் தகும..? முதலில் இதற்கு தீர்வு. பண்டிகை அப்புறம் என்பதுதானே சகோ சரியாகும்..?
///எப்படி இசுலாமியர்களும் தமிழர் திருநாளை கொண்டாடலாம் என்று சிந்தியுங்கள் சகோ.///---என்று சொன்னதால் நானும் இஸ்லாமிய அடிப்படையில் சிந்தித்து விட்டேன் சகோ.புரட்சி மணி..!
வணக்கம் சகோ,
உண்மையில் நீங்கள் விவாதிப்பதில் வல்லவர் தான் ஒப்புக்கொள்கிறேன்.
சமுதாயத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்ற உங்கள் கேள்வி நியாயமானது.
அதே நேரத்தில் ஒரு
கப்பலில் நிறைய இடங்களில் ஓட்டை இருந்தால் எப்படி எல்லா ஓட்டைகளையும் அடைக்க வேண்டுமோ அப்படித்தான் நாம் சமுதாயத்தின் சிக்கல்களையும் தீர்க்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு ஓட்டையை அடைக்கும் பொழுது ஏன் இந்த ஓட்டையை அடிக்கிறீர்கள் முதலில் அந்த ஓட்டையை அல்லவா நீங்கள் அடைக்க வேண்டும் என்று கேட்டால் நம்மால் எந்த ஓட்டையும் அடைக்க முடியாது. உங்கள் விவாதம் அல்லது நமது விவாதம் இவ்வாறு தான் செல்கிறது.
ஏதோ என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்...சொல்கிறேன் அவ்வளவே சகோ.
கிரிக்கெட்-ல் டெஸ்ட் மேட்ச் என்று உள்ளது. அது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.
அது ஐந்து நாளைக்கு நடக்கும். அதில் ஐந்து நாள் ஆனாலும் சில நேரம் முடிவு வராது. சில நேரம் ஐந்தாவது நாள் முடியம் முன்பே ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி முடித்து கொள்வார்கள். தொடர்ந்து விளையாடினால் ஐந்து நாள் தாண்டியும் கண்டிப்பாக ஒருவர் வெற்றி பெறுவார். இருப்பினும் காலம் கருதி ஆட்டத்தை கைவிடுவர்.
இங்கே நம் விவாதத்தில் வெற்றி தோல்வி என்று ஒன்றும் இல்லை. (என்னைபொறுத்த வரை).
இதில் தொடர்ந்து விவாதிக்க பொருள் பல இருப்பதால் அதற்க்கு காலம் நிறைய தேவை படுகிறது என்பதாலும்.
உங்கள் பொன்னான நேரமும் என்னுடைய பொன்னான நேரமும் வேறு சில நல்ல வேலைகளுக்கும் பயன்படட்டும் என்ற நன்னோக்கில் இத்துடன் நம் விவாதத்தை நான் முடித்துக்கொள்ள விருப்பபடுகிறேன். உங்கள் சம்மதத்துடன்.
மிக்க நன்றி சகோ.
@R.Puratchimani///ஒரு ஓட்டையை அடைக்கும் பொழுது ஏன் இந்த ஓட்டையை அடிக்கிறீர்கள் முதலில் அந்த ஓட்டையை அல்லவா நீங்கள் அடைக்க வேண்டும் என்று கேட்டால் நம்மால் எந்த ஓட்டையும் அடைக்க முடியாது.///---தவறான புரிதல்..!
சகோ.புரட்சிமணி, நான் இருக்கும் ஓட்டைகளை பட்டியல் இட்டு அடைக்க வேண்டும் என்கிறேன். நீங்களோ "நீயும் பொங்கல் கொண்டாடினால்தான் தமிழன்" என்று புதிதாக இன்னொரு ஒட்டை போட முயல்கிறீர்கள்..!
///உங்கள் பொன்னான நேரமும் என்னுடைய பொன்னான நேரமும் வேறு சில நல்ல வேலைகளுக்கும் பயன்படட்டும் என்ற நன்னோக்கில் இத்துடன் நம் விவாதத்தை நான் முடித்துக்கொள்ள விருப்பபடுகிறேன். உங்கள் சம்மதத்துடன்.///---நீங்கள்தான் ஆரம்பித்தீர்கள்; நீங்களே முடித்ததும் வைக்கிறீர்கள். உங்கள் விருப்பம்..!
வருகைக்கும் நல்ல முறையில் என்னை சிந்திக்கவைக்கும் வண்ணம் விவாதித்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி சகோ.புரட்சிமணி.
ஆஹா! என்ன அருமையான விளக்கங்கள், இதே கருத்தை வேறு யாரவது ஒரு தலைவர் கூறியிருந்தால் அது புரட்சிகரமான கருத்தாக வரலாற்றில் பொண்ணெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அது ஒரு சிலரால் கூட பின்பற்றப்பட்டிருக்கும்.
ஆனால், நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஏனெனில் நீங்கள் ஒரு ...................... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியல.
உண்மையான நன்றியறிதலையும், தற்பொழுது நாம் காட்டிக் கொண்டிருக்கும் நன்றியையும் தங்களது பின்னூட்டம் தெளிவாக விளக்கிவிட்டது. இது ஒரு சிலருக்கு வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கும், ஆனால் எதார்த்ததில் இதுதான் உண்மை.
ஆங்கிலம் தெரியாத காரணத்தால், ரூம் பாய் வேலை கூட கொடுக்க மறுக்கும் எத்தனையோ பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் சென்னையில் (தமிழகத்தில்) உள்ளது, ஆங்கிலம் தெரிந்திருந்தால் ஓரளவு நல்ல வேலைக்குச் செல்லமுடியும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுவது உண்மையா? இல்லையா?. (ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரியாமல் தமிழ் மொழி மட்டுமே தெரிந்த காரணத்தினால் வேலை மறுக்கப்பட்டு துறத்தப்பட்டவனில் நானும் ஒருத்தன்).
“Language is just a communication tool”,மச்சி என்று நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவோறால், தமிழ் மொழியை கிட்டத்தட்ட ஆங்கிலம் அபகரிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம், தலைநகருக்கு வந்தாலே அது புரியும்.
நம் முன்னோர்கள், இந்தி தமிழகத்தை ஆக்கிரமித்து விடக்கூடாது என்ற காரணத்தால் எதிர் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்தான் எத்தனை? எத்தனை?, ஆனால் இன்றோ தமிழன் தன் மொழியை ஆங்கிலத்திற்கு தத்துக் கொடுத்து விட்டு நம் முன்னோர்களின் போராட்டங்களை எல்லாம் வீணடித்து கேலிக்கூத்தாகி விட்டானே?, "தற்கால வாழ்விற்கு தமிழ் மொழி தேவையா? இல்லையா?" என்று நீயா? நானா? நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு நமது நிலை சென்று விட்டது.
ஆங்கிலத் திணிப்புக்கு எதிராக இப்பொழுது எத்தனை போராட்டங்கள் நடக்கின்றன, மாறாக ஆங்கில கல்லூரிகள் நோக்கி படையெடுப்புக்கள் அல்லவா நடக்கிறது. தன் பிள்ளை ஆங்கிலத்தில் தேர்ந்தால்தான் வேலை என்று நினைப்போரிடம் தமிழை மட்டும் உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளும் மன நிலையிலா அவர்கள் இருக்கிறார்கள்?.
இப்படி தமிழுக்கெதிராக துரோகம் இழைத்து விட்டு தமிழர் திருநாள் கொண்டாடுவது எந்தவகையில் நியாயம்?.
டிஸ்கி: இது சகோ. புரட்சிமணிக்கான எதிர்ப் பின்னூட்டம் இல்லை, இது என் மனதில் தோன்றிய சங்கடங்கள் அவ்வளவுதான்.
//நீங்கள்தான் ஆரம்பித்தீர்கள்; நீங்களே முடித்ததும் வைக்கிறீர்கள். உங்கள் விருப்பம்..!
வருகைக்கும் நல்ல முறையில் என்னை சிந்திக்கவைக்கும் வண்ணம் விவாதித்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி சகோ.புரட்சிமணி.//
எங்கே என்னை நினைத்து எழுதினீர்களோ என்று தான் ஆரம்பித்தேன். :)
எமக்கும் சிந்திக்கவும் விவாதிக்க வாய்ப்பளித்தமைக்கும் மிக்க நன்றி சகோ. :)
//Syed Ibramsha said...
ஆஹா! என்ன அருமையான விளக்கங்கள், இதே கருத்தை வேறு யாரவது ஒரு தலைவர் கூறியிருந்தால் அது புரட்சிகரமான கருத்தாக வரலாற்றில் பொண்ணெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அது ஒரு சிலரால் கூட பின்பற்றப்பட்டிருக்கும்.
ஆனால், நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஏனெனில் நீங்கள் ஒரு ...................... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியல.//
‘நிர்ப்பந்திப்பது உமது பணியல்ல’ [50:45]
‘இறைனெறியை (தர்மத்தை) மேற்கொள்வதில் யாதொரு கட்டாயமோ – நிர்ப்பந்தமோ இல்லை.-அத்தியாயம் 2 வசனம் 256-
‘துதுச் செய்தியை எடுத்துரைப்பதே நபியின் பணியாகும்’ [13:40]
வருகிறேன் சகோ :)
என் மனதில் உள்ள சங்கடங்களை பகிர்வதற்கு வாய்ப்பை கொடுத்ததற்கும்,
இறைநெறி வசனங்கள் மூலம் அறிவுரை வழங்கியதற்கும் மிக்க நன்றி, சகோ. R. புரட்சிமணி.
நான் முலுமையாக வலிமொலிகிறேன்....உங்கலுடைய மார்க்கம்...உஙகலுடையது..அவர்கலுடைய மார்க்கம் அவர்கலுடையது....யரையும் யாரும் திட்டி பேசாதீர்கள்.......
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!