அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, July 27, 2013

2 என்னாது..? ரமளான் புனித மாதமா..!?



கேள்வி : இஸ்லாத்தில் ரமளான் புனித மாதமா..? 
பதில் : இல்லை..!

சில விஷயங்கள் நாளடைவில் நமது பேச்சு வழக்கில் "புனிதமிக்க மாதமான ரமளான்... ரமளான் எனும் புனித மாதம்..." என்று திரும்ப திரும்ப பேசி எழுதி எல்லா இடத்திலும் தவறான கருத்துருவாக்கம் கொண்டு மனதின் ஆழத்தில் அதுவே சரிபோல பதிந்து விடுகிறது. பின்னர் அதை எப்பாடு பட்டு நீக்க போராடினாலும் மிகவும் கடினமாகிவிடுகிறது. மார்க்கத்தில் பல்வேறு விஷயங்கள் இப்படித்தான் சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. இதற்கு இன்னொரு உதாரணம் தான் "ரமளான் ஒரு புனிதமாதம்" என்ற நமது தவறான புரிதல்..!

இதை அதிகமாக முஸ்லிம் அல்லாத மக்களே... 'சிறப்பித்து உயர்வாக சொல்ல வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி சொல்லப்போக நாளடைவில் முஸ்லிம்கள் மனதிலும் அப்படியே அழுத்தமாக அமர்ந்து விட்டது..!

'ரமளான் புனித மாதம்'  இது இஸ்லாமிய அடிப்படையில் தவறு..! 

ரமளான் புனித மாதம் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை. வேறு பல சிறப்புகள் கொண்ட மாதமே ரமளான்..! அதே நேரம் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ்வும் வேறு நான்கு மாதங்களைத்தான் முஸ்லிம்களுக்கு புனித மாதங்களாக்கி இருக்கிறார்கள். அந்த நான்கில்  ரமளான்  இல்லை..!

எனவே... நாம் நம் இஷ்டத்துக்கு அஞ்சாவதா ஒரு மாசத்தை சேர்க்க கூடாது. அதற்கு நமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை.

Tuesday, July 23, 2013

9 தமிழக காலிக்கல்வி கூடங்கள்

தமிழக அரசுப்பள்ளிகளைப்பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!



Rashatriya Madhayamic Shikasha Abhiyan (‪‎RMSA‬) என்ற அமைப்பு எடுத்த 2012-13 கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, July 3, 2013

1 '#பயங்கரவாதம்' - ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?

'#பயங்கரவாதம்'
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை

நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும்  காரணம் அல்ல..! எனில், 'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' எல்லாம் எப்படி முளைக்கிறது...?

அநீதமான ஆட்சியாளர்களால்தான்..!

Sunday, June 9, 2013

3 நம்மிருவரில் யார் மிகப்பெரிய தீயவன்?


"நம்ம ரெண்டு பேர்லே எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும், இதுதான் ரூல்ஸ். குறுகிய காலத்தில் நாந்தான் மிகப்பெரிய கெட்டவன் ஆகிருக்கேன். ஸோ, நீ ரிடயர்ட் ஆகிறு..."


"தப்பு... தப்பு..! இந்த ரூல்ஸ் படி பார்த்து இருந்தால்... நானல்லவா 3 முறையும் தலைவர் ஆகி இருந்திருக்கணும்..? 13 நாள், 13 மாசம், 5 வருஷம்ன்னு தொடர்ச்சியா படாபாய்க்கே வழி விட்டுகொடுத்தேன்லே..? யூ மஸ்ட் ஃபால்லோ தட் சேம் ரூல்ஸ்".

Thursday, June 6, 2013

9 @ Co-Education Girls : அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை..?


இப்போதெல்லாம்... ஊடகங்களில் அடிக்கடி தென்படும்  கெட்ட செய்திகள்... 'மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியன் கைது', 
'மாணவனோடு கள்ளகுடித்தனம் நடத்திய ஆசிரியை சஸ்பென்ட்', 
'மாணவி கர்ப்பம், ஆசிரியன் தலைமறைவு', 
'மாணவனோடு ஆசிரியை ஓட்டம்'... ... ...இப்படி..!  

கல்வி கற்கும் ஓர் உயர்ந்த இடத்தில், கற்பிக்கும் ஆசிரியப்பணி எனும் ஓர் உன்னத தொழிலில்... எப்படி இப்படி இவர்களால் கலவிக்கும் இடம் தர முடிகிறது..? 

Thursday, May 9, 2013

28 மதினாவின் மலர்ந்த மின்குடை மொட்டாகி காம்பாகி ஒளியாகி (Photo Gallery)

வியாழன் காலையில் மதினா பள்ளிக்கு உள்ளே செல்லும்போதே எல்லா நிழற்குடைகளும் விரிக்கப்பட்டே இருந்தன..! விரியும்போது இம்முறையும் நேரில் பார்க்க முடியவில்லை..! என்ன செய்ய..? மதினா போய் சேர்ந்ததே ஏழரை மணிக்குத்தானே..! ஆகவே, வீடியோவில்தான் பார்க்க வேண்டும்..! இதற்கு முன்னர் பார்த்திராவிட்டால் நீங்களும் இந்த யூ ட்யூப் வீடியோ பார்த்துக்கொள்ளுங்கள்..!




'அட்லீஸ்ட்... இன்று மாலை குடை மடங்கும் போதாவது மறக்காமல் பார்த்து வீடியோ எடுக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேன்..!

Tuesday, April 9, 2013

30 தர்கா வழிபாடு எனும் மூடநம்பிக்கை ஒழிக

“பிராத்தனையும் வணக்கமாகும்" :- நபி(ஸல்) (அபூதாவூத், திர்மிதி)
“அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத்தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” :-இறைவன்  (குர்ஆன் 31:30)
சாலையோர கி.மீ. கல்லை எல்லாம் கடவுளாக வணங்குவது அறியாமை என்றால்...  ஒரு மனிதரை அடக்கம் செய்து அதற்கு மேல் கல்லை கட்டி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்திப்பதும் அறியாமேயே..! அந்த கல்லுக்கு பக்கச்சுவரும் கூரையும் போட்டுவிட்டால் அதுதான் தர்காஹ்..! தர்கா வழிபாடு தாங்கொணா வழிகேடு..!
 
நன்றி : ஏகத்துவ அழைப்பாளன்.ஹுசைன்


பிரபலமான பெரிய தர்கா எனில், அங்கே முஸ்லிம் அல்லாத மாற்று மத மக்களும் ஏராளமாக வருவது சகஜம். அப்படியான ஒரு தர்காவுக்கு காரில் வந்து இறங்கி, அங்கே தாடி தொப்பி பச்சை ஜிப்பா வெள்ளை கைலி சகிதம் உட்கார்ந்திருந்த பெரியவரிடம், ஒரு சர்க்கரை பொட்டலம், ஊதுபத்தி பாக்கெட், மூன்று வாழைப்பழம் எல்லாம் தந்து ஃபாத்திஹா ஓத சொல்லி கேட்டு... நேர்ச்சை தாயத்து வாங்கி கட்டி, தர்ஹாவில் அங்க பிரதட்சணம் எல்லாம் செய்து, உண்டியலில் பயக்தியுடன் காணிக்கை செலுத்திவிட்டு, நீண்ட நேரம் சமாதியை கண்மூடி கும்பிட்டு பிரார்த்தித்துவிட்டு, அங்கே ஓரமாக ஒரு கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை நெற்றியில் திருநீறு போல பூசிக்கொண்டு வந்த  ஒரு படு டீக்காக ட்ரெஸ் போட்டிருந்த மாற்று மத நண்பரிடம்... மெல்ல பேச்சு கொடுத்தேன்...... 
.

Sunday, March 31, 2013

63 சில தனித்தமிழ் ஆர்வலர்களின் முகமூடி கிழிகிறது

முன்  சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார் சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமென சகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.

'மரூஉ' என்பது தமிழ்ப்பெயர்ச்சொற்களில், காலமாற்றத்தினால் அதன் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று  மருவி, இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல். உதாரணமாக, தஞ்சாவூர்=> தஞ்சை ஆகும். உபாத்தியாயர்=> வாத்தியார் ஆவார். சர்க்கரை=> சக்கரை ஆகிவிடும். இதுபோல தமிழில் 'மரூஉச்சொல்' நிறைய இருக்கின்றது=> இருக்கிறது=> இருக்குது=> இருக்கு=> ஈக்கிது=> கீது..! 

ஆனால், 'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தை அதுபோல... மஸ்ஜித் - மஸ்சித் -மசித் என்றுதான் மருவி இருக்கலாம். 'மசூதி' என்று பொருந்தா ஒலியாக மருவ வேண்டுமானால் யாரோ சிலர் அந்த பெயரை புதிதாக வேண்டுமென்றே உண்டாக்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்..?
நன்றி : www.thangampalani.com

Saturday, March 30, 2013

5 நம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..?



கொலைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் மரணதண்டனை என்பது சரியான சட்டம்தான், அப்போதுதான் அக்குற்றம் செய்வோரின் மனதில் பயத்தை உண்டாக்குவதன்மூலம் அக்குற்றங்கள் குறையும், பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதியாகவும் அமையும் என்கிற வாதமும் சரியே..! இதை அப்படியே 100% ஏற்கிறேன்..!

ஆனால்... நம் நாட்டில் கொலைக்கு மரண தண்டனை சட்டம் பல்லாண்டுகளாக இருந்தாலும்... கொலைகள் ஏன் குறையவில்லை..? எப்படி அதிகரிக்கிறது..? எதற்கு மக்கள் மனதில் பயம் வரவில்லை..?

பாலியல் வல்லுறவுக்கு புதிதாக மரண தண்டனை சட்டம் வகுத்தாலும்... பாலியல் வல்லுறவு குறையுமா..? அல்லது கொலை போலவே அதுவும் கூடுமா..?

நம் நாட்டில் மரண தண்டனையே கூடாது என்று போராடுவோருக்கும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போருக்கும் இதில்   ஒரு தெளிவான புரிதல் அவசியம் வேண்டும்.  அதை நோக்கியே இப்பதிவு..!

Sunday, March 24, 2013

21 செம்மொழியில் இதெல்லாம் சரியா..?

சில சமயம் வேற்று மொழி வார்த்தைகள் சொல்ல விழையும் பொருளை சரியாக புரியாமல் எவரோ ஒருவர், முதலில் தவறாக ஒரு தமிழ் பெயரை இட்டுவிடுகிறார். பின்னாளில் அதுவே சரிகாணப்படாமல் பிரபலமாகி விடுகிறது. அதன் பின்னர் எந்நாளோ ஒரு நந்நாள் சரியான மொழியாக்கத்தை ஒரு நல்லார் சொன்னாலும் அது எடுபடுவதில்லை. அப்படி சிலபல பதங்கள் இருந்தாலும் நாம் நன்கு அறிந்த ஒன்று "பள்ளிவாசல்"..! 'மஸ்ஜித்' என்ற அரபி பதத்திற்கு மொழியாக்கமாம்..! யாரு வச்சாங்களோ தெரியலை. School Gate / School Entrance என்றுதான் அர்த்தம் ஆகிறது..! இது தவறானது என்று அறிவுக்கு புரிந்தாலும், சரியான ஒரு தமிழ் வார்த்தையை எவரேனும் இன்று சொன்னாலும் அது எடுபடாது..! புறக்கணிக்கப்படும்..! ஏனெனில்... தவறே பழகி விட்டது..! இதுதான் இன்றைய நமது நிலை..! இந்நிலையை நாம் இனியாவது மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...