தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது. மட்டுமின்றி, விட்டுக்கொடுக்கவே இயலாத விஷயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன்மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழவே இயலாது போனால்... பிரிவதை தவிர வேறு வழி இல்லை..!
இந்நிலையில் மனம் ஒத்துப்போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரபூர்வமாக பிரிதலே விவாகரத்து..! ஏனெனில், பிரிந்தவர்கள் தம் மனம் ஒத்த வேறொவருடன் மறுமணம் புரிய வேண்டுமானால்... இப்படி பிரிந்த தம்பதியர் அரசிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரமான விவாகரத்து பெற்றாக வேண்டும். இல்லையேல்... மறுமணத்தில் சட்டசிக்கல் வரும்..!
தற்போது, மனதால் பிரிந்த தம்பதியர் 'பரஸ்பரம் விவாகரத்து கோரி' குடும்ப நலநீதி மன்றத்தில் விண்ணப்பித்தால்,
குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற
காத்திருக்க வேண்டும்..! அதுவரை 'கவுன்சிலிங்' என்று சேர்த்துவைக்க முயல்வதாக இழுத்தடிப்பார்கள். இந்த நாட்களில் மீண்டும் மனம் மாறி, தம் தவறுணர்ந்து, பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, விவாகரத்து இனி தங்களுக்கு தேவை இன்றி குடும்ப வாழ்வில் மகிழ்வோடு இணைந்தோரும் உண்டு..! ஆனால், இது மிக மிக சொற்பம்.
மனம் வெறுத்த தம்பதிகளின் மறு இணைப்புக்கு சிலமாதம்
பேசிப்பார்க்கலாம். ஆனால், ஒன்றரை வருடம் என்பதெல்லாம் அதிகம்..! தேவை அற்ற கால விரயம்..! இதனால்,
எண்ணற்ற செக்ஸ் & கிரைம் குற்றங்கள் பெருகுவதைத்தான் நாம் பார்க்கிறோம்..! பெரும்பாலும் இளமையில் விவாகரத்து கோருவோர், இதுபோல ஒன்றரை வருஷம் எல்லாம் காத்திருக்க முடியாமல், பகிரங்க சட்டபூர்வ திருமணம் செய்யாமல் கள்ளத்தனமாக தமக்கு பிடித்தவருடன் உறவு கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் 'என்னை ஏமாற்றி விட்டான்/ள்' என்று வேறொரு புதிய வழக்கு முளைத்து விடுகிறது.
வேறு சிலர், மனைவியை கொன்று விடுகின்றனர். சிலநாட்களில் சட்டப்படி புதுமாப்பிள்ளை ஆகவேண்டி..! இல்லையேல்... கள்ளக்காதலனோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ கணவனை கொன்று விடுகின்றனர். உடன் சட்டப்படி மணப்பெண் ஆகிவிடலாம் என்று..! ஆனால், சில சமயம் தம் கொலைக்குற்றம் வெளியே தெரிந்து, கைதாகி "மாமியார் வீட்டில் கம்பி எண்ண" செல்வோர் மூலம் இது போன்ற உண்மைகள் தினசரிகளில் அவ்வப்போது வெளிவருகிறது.
இத்தனை வருஷம் கழித்து இதையெல்லாம் அவதானித்த மத்திய அரசு... புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருகிறது..! இதற்கு, மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 23 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற, இதன்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை வருட காத்திருப்புக்கு இனி வேலை இருக்காது. "சேர்ந்து வாழவே முடியாத திருமணம்" (“irretrievable breakdown of marriage” clause) என்ற புதிய விதிமுறை ஒன்று இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதில்... விவாகரத்து கோரியவர்கள் காத்திருப்பு இன்றி விரைவில் அதை பெற்று விட முடியுமாம்..!
'பரஸ்பரம்' (mutual consent) மூலம் விவாகரத்து மனுச்செய்துவிட்டு... 6 மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இனி ஏற்படாது என்று மட்டும் சொல்கிறார்கள்..! இவ்வகையில் இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய சட்டம்..!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத்தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புஹ்காரி 5273, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். பெண்கள் விவாகரத்துப்பெற இதை விட எளிமையான வழி எங்குமே காண முடியாததாகும்.
இந்த 21-ம் நூற்றாண்டில் கூட இன்றுவரை நம் நாட்டில் வழங்கப்படாத உரிமையை, இஸ்லாம் சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
ஆனால்... அதேநேரம்... 'பரஸ்பரம்' (mutual
consent) என்று இல்லாமல்... தம்பதியரில் மனைவியோ கணவனோ யாரேனும் ஒருவர்
மட்டும் தனியாக சென்று விவாகரத்து கோரினால், கணவனோ மனைவியோ எவரும் அந்த
விவாகரத்தை எதிர்க்க முடியும் ஒரு நிலை இதுவரை இருந்தது..!
இப்போது.... இந்த புதிய சட்டத்தில் ஒரு விபரீத சட்டத்திருத்தம் உள்ளது..!
"சேர்ந்து வாழவே முடியாத திருமணம்"
என்ற இப்புதிய விதிமுறையின் கீழ், கணவன் தனியாக சென்று விவாகரத்து கேட்டால்,
அதை எதிர்த்து வழக்காட... மனைவிக்கு மட்டும் உரிமை உண்டாம்..!
ஆனா....ல்ல்ல், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்த்து வழக்காட கணவனுக்கு எவ்வித உரிமையும் இல்லையாம்..!
மேற்படி சட்டத்திருத்ததில், பெண்களுக்கு மட்டும் உரிமையை தந்துவிட்டு ஆண்களுக்கு இல்லை என்றது நிச்சயமாக சரியல்ல..! சமநீதியும் அல்ல..! இருவருக்கும் இல்லை என்று சொல்லி இருக்கலாம். அல்லது இருவருக்கும் எதிர்க்கும் உரிமையை அளித்திருக்கலாம். நிறைய பிரச்சினைகளுக்கு இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கும்..! எப்படி..?
எங்கோ.. ஒரு சில பாதிக்கப்படும் மனைவிகள், அக்கிரம அராஜக கொடுமைக்கார கணவனிடம் இருந்து உடனடி விடுதலை பெறுவது
நடக்கலாம்..! அதேநேரம், மனைவி சொல்வது உண்மையா... சரியா.... என்று சட்டத்துக்கு தெரியாத நிலையில்... தனது நிலையை எடுத்துச்சொல்லும் உரிமையைக்கூட
ஒரு கணவனுக்கு மறுப்பது சட்டப்படி நீதியா..? அதே உரிமை மனைவிக்கு இருக்கும்போது
கணவனுக்கு மட்டும் மறுப்பது சமநீதியா..?
கணவனை பழிவாங்க நினைக்கும் ஒரு மனைவி அல்லது ஜீவனாம்சம் என்ற பெயரில் கணவன் சொத்தை பங்கு கோரும் திட்டத்தில் அவன் மீது ஏதேனும் பெரிய அவதூறு கூறி விவாகரத்து கோரினால்... அதனை மறுத்து எதிர்க்க கணவனுக்கு முடியுமா என்று தெரியவில்லை..! தற்போது தவறாக பயன்படுத்தப்படும் இன்னொரு 'வரதட்சிணை வன்கொடுமை சட்டம்' IPC 498A போன்று இதுவும் ஆகிவிடுமோ என்ற கவலை எழாமல் இல்லை..!
கணவனை பழிவாங்க நினைக்கும் ஒரு மனைவி அல்லது ஜீவனாம்சம் என்ற பெயரில் கணவன் சொத்தை பங்கு கோரும் திட்டத்தில் அவன் மீது ஏதேனும் பெரிய அவதூறு கூறி விவாகரத்து கோரினால்... அதனை மறுத்து எதிர்க்க கணவனுக்கு முடியுமா என்று தெரியவில்லை..! தற்போது தவறாக பயன்படுத்தப்படும் இன்னொரு 'வரதட்சிணை வன்கொடுமை சட்டம்' IPC 498A போன்று இதுவும் ஆகிவிடுமோ என்ற கவலை எழாமல் இல்லை..!
இந்த சமநீதியற்ற சட்டம்... 'திடுமென என்னை விலக்கிவிட்டு மறுமணம் செய்யும் உன்னை சந்தோஷமா வாழ விட்டுருவேனா பார்' என்று மனைவியின் மானத்துக்கும் உயிருக்கும் கெடுதல் செய்யத்தான் பாதிக்கப்பட்ட கணவனை தூண்டும்..!
பெண்ணை சட்டப்படி திருமணம் செய்தால்தானே ஆணுக்கு இவ்வளவு சட்டப்பிரச்சினையும்..? திருமணமே செய்யாமல் முடிந்தவரை 'லிவிங் டுகெதர்' மாதிரி... டேட்டிங் மாதிரி... 'வாழ்ந்தால்' என்ன..? -- என்றும் எண்ண வைக்கும்..!
முடிந்தவரை அனுபவித்துவிட்டு, பின்னர் வேறொன்று கிடைத்தாலோ... அல்லது இது கசந்தலோ... அல்லது இம்முறை அபார்ஷன் செய்ய முடியாத அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிட்டாலோ... அல்லது "மனைவி(?)"யின் உயிருக்கே ஆபத்து என்றாலோ... வயதாகி அழகு குலைந்து விட்டாலோ... "டாட்டா.. பை..பை..." என்று கூறி "கணவன்(?)" தப்பித்துக்கொள்ளலாமே..!?
ஒருவேளை அவள் வழக்கு தொடுத்தால்... 'அவளுடன் வாழ்ந்த பலரில் நானும் ஒருவன்' என்று எவனையாது ரெண்டு பேரை பிடித்து இவன் சாட்சி சொல்லவைத்து விட்டால்... இவனுக்கு முடிந்தது பிரச்சினை..! மானப்பிரச்சினைக்கு அவள் என்ன இவனுக்கு மனைவியா...?!
முடிந்தவரை அனுபவித்துவிட்டு, பின்னர் வேறொன்று கிடைத்தாலோ... அல்லது இது கசந்தலோ... அல்லது இம்முறை அபார்ஷன் செய்ய முடியாத அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிட்டாலோ... அல்லது "மனைவி(?)"யின் உயிருக்கே ஆபத்து என்றாலோ... வயதாகி அழகு குலைந்து விட்டாலோ... "டாட்டா.. பை..பை..." என்று கூறி "கணவன்(?)" தப்பித்துக்கொள்ளலாமே..!?
ஒருவேளை அவள் வழக்கு தொடுத்தால்... 'அவளுடன் வாழ்ந்த பலரில் நானும் ஒருவன்' என்று எவனையாது ரெண்டு பேரை பிடித்து இவன் சாட்சி சொல்லவைத்து விட்டால்... இவனுக்கு முடிந்தது பிரச்சினை..! மானப்பிரச்சினைக்கு அவள் என்ன இவனுக்கு மனைவியா...?!
ஸ்கேனில் பெண்சிசுவாக இருந்தால் அபார்ஷனை சட்டப்படி அனுமதிக்காத நல்ல அரசு... அது ஆணா/பெண்ணா என்று பார்க்கப்படாத நிலையில் அபார்ஷனை அனுமதிக்கிறது..!?! இதனால்... இப்படியான தடை இல்லாமல் அல்லது சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படாமல்... 'மறைமுக அரசு ஆதரவுடன்' நடைபெறும் கலாச்சார சீர்கேடுகளான...
கற்பழிப்பு, டேட்டிங், டிஸ்கோத்தே, பப், (தண்ணி)பார்ட்டி, லிவிங்-டுகெதர், இருவர் மனம் விரும்பிய உடலுறவு, அபார்ஷன்கள்... இன்னும் அரசு ஆதரவோடு நடக்கும் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை... என இவையெல்லாம் மென்மேலும் கொடிகட்டி பறக்கும்..!
திருமணம் செய்யாமல் பெண்களுடன் வாழ்ந்து அவர்களை நட்டாற்றில்
விட்டுச்செல்லுதலில் சட்ட ரீதியாகவே ஏகப்பட்ட 'பாதுகாப்பு லூப் ஹோல்கள்' ஆண்களுக்கு
தற்போது இருக்கிறது. உடல்/உள்ள ரீதியாக நஷ்டம் அனைத்தும் பெண்களுக்குத்தான். திருமணத்துக்கு முன்னர் சட்டத்தில் அந்த அளவு பெண்களுக்கு
பாதுகாப்பும் இல்லை..! ஆனால், 'பாதுகாப்பு' என்று நினைத்து இன்னும் சீர்கேட்டுக்குத்தான் வழிகோலும் போலிருக்கிறது இந்த சட்டத்திருத்தம்..!
எனவே, மனைவிக்கு மட்டும் இருக்கும் 'விவாகரத்தை எதிர்த்து வழக்காடும் உரிமை'யை சட்டம் கணவனுக்கும் தர வேண்டும்..!
Thanks to the News Source
26 ...பின்னூட்டங்கள்..:
.
“புதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..! “
பதிவுக்கு
தமிழ்மணத்தில் “ இங்கு “ சொடுக்கி வாக்களிக்கவும்.
.
சலாம் சகோ...
ஆமாம்..அது என்ன ஓர வஞ்சனை...!எந்த பக்கம் உண்மையான தவறு இருக்கும் என யாருக்கு தெரியும்..?ஆட்டத்தில் ஓட்டை இருக்கலாம்..ஆனால் ஓட்டையே சட்டமாக இருந்தால்?
சலாம் சகோ...
ஆமாம்..அது என்ன ஓர வஞ்சனை...!எந்த பக்கம் உண்மையான தவறு இருக்கும் என யாருக்கு தெரியும்..?சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்..ஆனால் ஓட்டையே சட்டமாக இருந்தால்?
அருமையான விளக்கங்கள்.
சட்ட திட்ட மசோதாவை கொண்டு வரும் போது அதில் இருக்கும் சாதக பாதகங்களை ஆராய்ந்து யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சம நீதி கிடைக்கும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்.
இதை பற்றியான விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்தலாமே.
@VANJOORதங்கள் வருகைக்கும் இச்செய்தி மேலும் பலரை சென்றடைய தாங்கள் எடுக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
இஸ்லாமிய சட்டங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும், அவசியமானதும் கூட..,
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம்
//சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்.. ஆனால் ஓட்டையே சட்டமாக இருந்தால்?//---ம்ம்ம்... நிலைமை இப்ப்ப்ப்ப்ப்படி ஆயிருச்சே சகோ.NKSHM..!
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
//இதை பற்றியான விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்தலாமே.//---இது அரசு சார்பான சட்டத்திருத்தம். இனி யாரேனும் பொதுநல வழக்கு போட்டால்... நீதிமன்றம் தலையிடும் என்று நினைக்கிறேன்..!
@thariq ahamedவிவாகரத்து ஆகுதோ இல்லையோ... மஹர் என்ற பெயரில் அட்வான்சாக பெண்ணின் தியாகத்துக்கும் படும் சிரமத்துக்கும் திருமணத்தன்றே தரப்படும் 'ஈட்டுத்தொகை... விவாகரத்து ஆனால் மட்டுமே இந்திய சட்டத்தில் தரப்படுகிறது..!
கணவன், 'நான் போண்டி' என்று மஞ்சள் கடுதாசி தந்துவிட்டால் எதுவும் கிடைக்காது.
அல்லது... பெண் மறுமணம் செய்துவிட்டால் மாதந்திர ஜீவனாம்சம் ஸ்டாப்..!
இனி எதிர்காலத்தில் "திருமணம் அன்று மணப்பெண்ணுக்கு மணமகன் தரவேண்டிய தொகை" என்று ஒன்றை அரசே நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..!
//இஸ்லாமிய சட்டங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும், அவசியமானதும் கூட..,//---சரியாக சொன்னீர்கள் சகோ.தாரிக்.
சகோதரிகளே.......... சொல்வீர்களா ?
1. “வரதட்சனை” இல்லாத “நிக்காஹ்” வாக எங்களுக்கு இருக்கவேண்டும் என்று உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.
2. “வரதட்சனை வேண்டாம்” என்று கேட்டுவரும் மணமகனைத்தான் நாங்கள் மணம் முடிப்போம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள்.
3. “வரதட்சனை வேண்டும்” எனக் கேட்கும் மணமகனை உங்கள் பெற்றோரிடம் சொல்லி அடித்து விரட்டச் சொல்லுங்கள்.
4. நாங்கள் மணமகனின் பாதியாக இருக்கத்தான் விரும்புகிறோம்...............மீதியாக அல்ல என்பதைச் சொல்லுங்கள்.
சொல்வீர்களா ?
@சேக்கனா M. நிஜாம்//சகோதரிகளே.......... சொல்வீர்களா ?//---எல்லாரும் இப்படி சொல்லிவிட்டால்... வரதட்சிணை ஒழிந்தேவிடும்தான் சகோ.நிஜாம்..! ஆனால்... சொல்ல வேண்டுமே..!
இதற்கு முன்னர்...
"வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்; அப்போதுதான் கணவனின் விவாகரத்து செல்லுபடியாகும்" என்று ஒரு சட்டத்தை கட்டாயமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்..!
நிச்சயமாக இதற்கு பெண் வீட்டாரிடம்.. பொருட்கள் நகைகள் வாங்கிய பில், பணமாக ஒப்படைத்த வீடியோ ஆதாரம் எல்லாம் நிச்சயமா இருக்கும் அல்லவா..?
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
// இதற்கு முன்னர்...
"வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்;
அப்போதுதான் கணவனின் விவாகரத்து செல்லுபடியாகும்" என்று ஒரு சட்டத்தை கட்டாயமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்..!
நிச்சயமாக இதற்கு பெண் வீட்டாரிடம்.. பொருட்கள் நகைகள் வாங்கிய பில், பணமாக ஒப்படைத்த வீடியோ ஆதாரம் எல்லாம் நிச்சயமா இருக்கும் அல்லவா..? //
அட்ரா சக்கைன்னானாம் ... அப்படி போடுங்க... அறுவாளை...
//பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது.//
மிகவும் சரியான கருத்து!.
கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மிக மிக அவசியம், மேலும் அடுத்தவரின் சொல் கேட்டு திடுமென எடுத்துவிடும் முடிவு ஆபத்தானது, பிறகு அதை நினைத்து வருந்தவேண்டி வரும். ஏதேனும் ஒரு பிரச்சினை கணவன் மனைவிக்கிடையில் வரும் பொழுது வார்த்தைகளை நிதானித்து விட வேண்டும், திருமணம் என்பது ஆயிரம்காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவர், தற்பொழுது "அட்லீஸ்ட்" ஒரு முப்பது வருடமாவது பயிரை வாடமல் பாதுகாக்க மிகவும் சிரத்தை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தம்பதியர்க்கிடையில் மிகவும் வெறுக்கப்படவேண்டிய விஷயங்களில் விவாகரத்தும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் எந்தச் சட்டத்தையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மனைவிக்கு கணவன் உண்மையானவனாகவும், கணவனுக்கு மனைவி உண்மையானவராகவும், இறைவன் கூறுவதுபோல் ஒருவருக்கொருவர் ஆடையாக வாழ்ந்தால் வாழ்வு நிச்சயம் இனிக்கும்.
salam bro ashiq!
//தம்பதியர்க்கிடையில் மிகவும் வெறுக்கப்படவேண்டிய விஷயங்களில் விவாகரத்தும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் எந்தச் சட்டத்தையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மனைவிக்கு கணவன் உண்மையானவனாகவும், கணவனுக்கு மனைவி உண்மையானவராகவும், இறைவன் கூறுவதுபோல் ஒருவருக்கொருவர் ஆடையாக வாழ்ந்தால் வாழ்வு நிச்சயம் இனிக்கும்.///
sariyana varththai.
சலாம் சகோ,
பெண்கள் பொதுவாக பிரச்சனையை விரும்பாதவர்கள் எனவே அவர்களுக்கு சலுகையாக இருக்கட்டும் என்று அரசு நினைத்து இருக்கலாம். பிரச்சனை இவர்களிடம் இல்லை சகோ, இந்த சட்டத்தை செயல்படுத்தும் காவல் துறையிடம் இருக்கிறது. நீங்க சும்மா வேற குடும்ப கேசுக்காக போனாலும், அதெல்லாம் நிக்காதுமா பேசாம வரதட்சணை கேட்டான்னு சொல்லுங்க அப்ப தான் கேசு ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லுவாங்க. இப்படி சொல்வதை நானே கேட்டு இருக்கிறேன்.
ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை சகோ. போலீஸ்ட்ட போய் குடும்ப விவகாரத்த தீர்க்கிறதுக்கு பதில் பொண்டாட்டி கால்ல(நவூதுபில்லாஹ்) விழுந்து மன்னிப்பு கேட்டுவிடுவது பெட்டெர்(தவறே செய்யாவிட்டாலும் சரி).
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நல்ல அலசல் சகோ
கால விரயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டமாக இதை நினைக்கிறேன். ஆகவே தான் குறைப்பாடுகளை நீங்களே பட்டியலிட்டுள்ளீர்கள்
வழக்கம்போல் மனிதச் சட்டங்கள் குறைப்பாடுடையவை என்பதைதான் இச்சட்டமும் உணர்த்துகிறது.
//வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்;//
இல்லை சகோ வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்ப்பட வேண்டும்
வரதட்சணை எதிர்ப்புக்கு இது இன்னும் அழுத்தமான வரிகளாக இருக்கும் சகோ
பகிர்ந்த பதிவிற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆறறிவு உள்ள ஜீவன்களுக்கு இறைவனால் இயற்றப்பட்ட சட்டம் இருக்க.அறிவுக்கு பொருந்தாத சட்டம் எதற்கு?
குர் ஆணை படித்து.புரிந்து சட்டம் இயற்றினார்களயனால்.நம் நாடு முன்னேற்ற பாதைக்கு செல்லும்.
@UNMAIKAL//அட்ரா சக்கைன்னானாம் ... அப்படி போடுங்க... அறுவாளை...//---:-))) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.உண்மைகள்.
@Syed Ibramshaவருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அதெல்லாம் நிக்காதுமா பேசாம வரதட்சணை கேட்டான்னு சொல்லுங்க அப்ப தான் கேசு ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லுவாங்க. இப்படி சொல்வதை நானே கேட்டு இருக்கிறேன்.//---ரொம்ப கொடுமையா இருக்கு சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//வழக்கம்போல் மனிதச் சட்டங்கள் குறைப்பாடுடையவை என்பதைதான் இச்சட்டமும் உணர்த்துகிறது.//---சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும்..!
//வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்;//---இதை நான் ஏற்கனவே நடந்து முடிந்த- விவாகரத்துக்கு வந்து நிற்கும்- திருமணத்தை பற்றி... அப்படி கூறினேன் சகோ..!
//இல்லை சகோ வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்ப்பட வேண்டும்//---இது... இனி நடக்க இருக்கும் திருமணத்திற்கு மிகச்சரியான சட்டம்தான் சகோ..!
வருகைக்கும் வரதட்சணை எதிர்ப்புக்கு தேவைப்படும் அழுத்தமான பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.குலாம்
@லெ.மு.செ.அபுபக்கர்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//குர் ஆணை படித்து.புரிந்து சட்டம் இயற்றினார்களயனால்.நம் நாடு முன்னேற்ற பாதைக்கு செல்லும்.//---அடிபட்டு... இடிபட்டு... நசுங்கி... நெளிஞ்சு... பெண்டு நிமிர்ந்து கட்டக்கடைசியாக உணர்வார்கள் போல..! :-))
வருகைக்கும் நிதர்சனமான பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அபுபக்கர்.
intha sattam varaverkathakkathu......................
ithanal pala nalla gunamudaya pengal thirumana vaalvil earpadum kodumaikalil
irunthu vidupada, oru nalla helpfullana sattam..................
it's very goood............
this is very helpful for girls...............
@Raji Lakshmi
சகோ.ராஜி லக்ஷ்மி,
நானும் பதிவில் சட்டத்தை வரவேற்றுள்ளேன்.
ஆனால், சமநீதியற்ற சட்டத்திருத்தத்தையே அது விபரீதத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்த்துள்ளேன்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!