இவ்வருடம் அரபுலகில் புரட்சிகளின் வருடம் போலும்..! துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் லிபியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது..! அல்ஹம்துலில்லாஹ்..! சவூதி பற்றிய செய்தி என்றாலே 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உலக ஊடகங்கள் இதை மட்டும் ஏனோ வெளியில் தெரியப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக அமுக்கி விட்டன..! ஆனால், நாம் விட்டு விடுவோமா..? பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்..? லேட்டானாலும் தாளிச்சிட மாட்டோம்..?
சவூதியை பொறுத்தவரை பால், தயிர், மோர், பட்டர், ச்சீஸ்... இப்படி பால் பொருட்களை தயாரித்து சவூதி உட்பட வளைகுடாநாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவரும் முன்னணி நிறுவனங்கள் சில உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை : அல்மராய், அல்சஃபி, நடா, நாடக், நஜ்தியா, ரயான்... போன்றன..! இதில் அல்மராய் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். அவர்தான் இந்த பிசினசில் நம்பர் ஒன் மட்டுமல்ல... அவர்தான் "வளைகுடாவின் பால்பொருட்களுலகிற்கு தாதா"...!!!
எந்த அளவுக்கு என்றால்... பொதுவாக நீங்கள் சவூதியில் எந்த சூப்பர் மார்க்கெட் சென்றாலும் அங்கே உங்கள் கண்முன்னே தென்படுமாறு வைக்கப்பட்டு இருப்பது அல்மராய் பால்/தயிர்/மோர்/ஜூஸ்/பிரட்/கேக் வகை மட்டுமே...! மற்றவையும் கிடைக்கும் என்றாலும் அவற்றை தேடி நீங்கள்தான் செல்ல வேண்டும் என்பதுபோல அதன் இருப்பிடம் இருக்கும். ஆனால், அல்மராய்..? உங்கள் நடைக்கும், தேடலுக்கும் வேலையே வைக்காமல் உங்களை தன் இருப்பிடம் நோக்கி இழுத்துச்சென்று விடும்..! இதுதான் "தாதா டெக்னிக்"...!
மேலே உள்ள புகைப்படங்கள் இரண்டும் நேற்று நான் என் கம்பெனி குவார்ட்டர்ஸில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுத்தவை. உள்ளே நுழைந்தவுடன் நம் கண்ணில் படுமாறு வைக்கப்பட்டு இருப்பன அனைத்தும் அல்மராய் அயிட்டங்கள்தான். மற்ற பிராண்டுகள் வேண்டுமானால் இந்த ராக்கின் சந்தினுள்ளே புகுந்து சென்று எடுத்து வர வேண்டும்..! :)
மேலே உள்ள புகைப்படங்கள் இரண்டும் நேற்று நான் என் கம்பெனி குவார்ட்டர்ஸில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுத்தவை. உள்ளே நுழைந்தவுடன் நம் கண்ணில் படுமாறு வைக்கப்பட்டு இருப்பன அனைத்தும் அல்மராய் அயிட்டங்கள்தான். மற்ற பிராண்டுகள் வேண்டுமானால் இந்த ராக்கின் சந்தினுள்ளே புகுந்து சென்று எடுத்து வர வேண்டும்..! :)
இதை நம் பதிவர்களுக்கு புரியும்படி நம் மொழியில் (!?) சொல்வதானால், உதாரணமாக... தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடனே அது நேராக சென்று 'சூடான இடுகை', 'வாசகர் பரிந்துரை', 'மகுடம்' இங்கெல்லாம் போய் ஜம்மென்று ஒன்றிரண்டு நாட்கள் உட்கார்ந்து கொள்வதாய் வைத்துக்கொள்வோம்...! (அட.. சும்மா ஒரு பேச்சுக்கு..) அப்புறம் உங்கள் பதிவு ஹிட்ஸ் மழை பொழிந்து அடிச்சு நொறுக்கி பட்டையை கிளப்பாது..? அப்படித்தான் அல்மராய் வியாபாரம் லாபத்தை கொட்டோ கொட்டு என்று அள்ளிக்கொட்டியது..!
"இதை எல்லாம் பார்த்துக்கொண்டு மற்ற பால்பொருள் நிறுவனங்கள் எல்லாம் ஏன் சும்மா விரல் சூப்பிக்கொண்டு இருக்கின்றன..?" என்று நீங்கள் கேட்டால்... விடை... அல்மராய் நிறுவன ஓனர்... கொஞ்சம் இல்லை... ர்ர்ர்ர்ர்ரோம்ப பெரிய இடம்..! ஆமாம்..! சவூதி அரேபிய இளவரசர்..!
தமிழ்மணத்தில், எப்படி... "மகுடம் ஏறும் பதிவுகள் மட்டுமே சிறந்தவை; மற்றவை மோசம்" என்று நம்மால் கூற முடியாதோ... அதேபோல, 'அல்மராய் மட்டுமே சிறந்த பால்; மற்றவை மோசம்' என்றும் கூற இயலாது..! (சரியாத்தானே சொல்றேன் சகோ..?) அல்மராய் போலவே மற்றவையும் சிறந்தவையே..!
அல்மராய் மற்றும் இன்னபிற அனைத்து கம்பெனிகளின் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன்களின் விலை: 7 ரியால். (ரயான் மட்டும் 6 ரியால்) சொல்லப்போனால் நான் வாங்கும் இந்த 6 ரியால்-ரயான் பால், 7 ரியால் நாடக், நஜ்தியா இவற்றை விட சற்று சிறப்பாக, மற்றவைக்கு இணையாக இருக்கும்..!
அல்மராய் மற்றும் இன்னபிற அனைத்து கம்பெனிகளின் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன்களின் விலை: 7 ரியால். (ரயான் மட்டும் 6 ரியால்) சொல்லப்போனால் நான் வாங்கும் இந்த 6 ரியால்-ரயான் பால், 7 ரியால் நாடக், நஜ்தியா இவற்றை விட சற்று சிறப்பாக, மற்றவைக்கு இணையாக இருக்கும்..!
நிலைமை இப்படி இருக்க, சென்ற மாதம் ஜூலை முதல்வாரத்தில் அல்மராய் மட்டும் தன் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன் விலையை அதிரடியாக திடீரென்று 8-ரியால் ஆக்கியது..! கேட்டால், 'தமக்கு விலை கட்டுபடியாகவில்லை' என்றது. மற்ற கம்பெனி பால் விலை ஏதும் ஏறவில்லையே..? 'மற்றவர்களுக்கு மட்டும் கட்டுபடியாகிறதே... அதெப்படி..?' என்றால், பதில் இல்லை..!
பிறகு அல்மராய், தம் பொருட்கள் ஒவ்வொன்றாய் விலை ஏற்றியது. பட்டர், ச்சீஸ் போன்ற சில பொருட்களின் விலையை ஏற்றாவிட்டாலும் 'ரகசியமாக' அளவையை மட்டும் சிறிது குறைத்தது..! எல்லாமே 'இந்த பால் கம்பெனி... இளவரசர் கம்பெனி' என்ற மமதை..!
இடது பக்கம் பழைய அளவு 910g / வலது பக்கம் புதிய அளவு 900g |
இடது பக்கம் பழைய அளவு 200 ml / வலது பக்கம் புதிய அளவு180 ml |
இடது பக்கம் பழைய அளவு 690g / வலது பக்கம் புதிய அளவு 680g |
இங்கேதான் மக்கள் உஷாராயினர். இவையனைத்தையும் மக்கள் கண்டுபிடித்து போட்டோவுடன் இணையத்தில் பரப்பி விட்டனர்..! சவூதியில் மட்டுமே விலை ஏற்றி இருப்பதையும், இவை ஏற்றுமதி ஆகும் ஏனைய வளைகுடா நாடுகளில் அல்மராய் விலையேற்றம் செய்யாததையும் கூட அண்டைநாட்டு இணைய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டனர்.!
சவூதியை பொறுத்தவரை ஏறக்குறைய இணைய வசதி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். மேலும், பாதிக்குமேல்பட்ட மக்கள்... இணைய வசதி உள்ள கைபேசியே வைத்து இருக்கின்றனர். இந்நிலையில்தான் யாரோ எங்கோ கொளுத்திப்போட்ட அல்மராய் பட்டாசு படபட வென வெடித்து சிதறியது. வெடித்த களங்கள்... SMS, ட்விட்டர், ஃபேஸ்புக், ஈ-மெயில், பிளாக்கர், ஃபோரம்... என்று எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் புகுந்து வெளியேறி ஒட்டுமொத்த மக்கட்தொகையையும் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது.
.
.
அதென்ன அல்மராய் பட்டாசு..? ஒரே வாக்கியம்தான்..! "Let their milk rot" ("இவர்களின் பால் கெட்டழியட்டும்") #almarai #Marai #StopMara3i #Mara3i #saudi #ksa என்ற ட்விட்டர் ஹாஷ் டேக்ஸ், அப்புறம் இந்த http://twitpic.com/5m10k6 ட்விட்டர் இமேஜ்... இவற்றில் எல்லாம் சொல்லப்பட்டவை என்னவெனில்... 'யாரும் அல்மராய் பால்பொருட்களை இனி வாங்கக்கூடாது. ஒட்டுமொத்தமாய் பகிஷ்கரிக்க வேண்டும்' என்பது தான்..! கன்னாபின்னா என்று இச்செய்தி அனைவருக்கும் அரபியில் ஈ-மெயிலில் படத்துடன் பறந்தது இப்படி... (எனக்கும் மெயில்கள் வந்தன)
.
.
அரபியில் لا المراعي "லா அல்மராயி" என்றால்... "வேண்டாம் அல்மராய்" என்று அர்த்தம். |
இவ்விஷயத்தில் சில சூப்பர் மார்க்கெட்டுகள் ஒரு படி மேலே போய்... இந்த வார்த்தைகளை அல்மராய் பால் பொருட்கள் இருந்த ராக்கில் கூட நோட்டீஸ் ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டினர்..!
இந்த நோட்டீஸ் என்ன சொல்லுதுன்னா... "இவர்களின் பால் கெடட்டும்"..என்று..! |
இதன் விளைவு..? விற்காமல் போய் EXPIRY DATE முடிந்த அயிட்டங்களை எல்லாம் கண்டெய்னர் கண்டெய்னராய் திரும்ப எடுத்துக்கொண்டு போய் ஆளரவமற்ற அத்துவான பாலைவன மண்ணில் கொட்டினார்கள். இரண்டே வாரம்தான் இப்படி கொட்டினார்கள்..!
இவை எல்லாமே விற்காத எக்ஸ்பைரி ஆன மோர் கேன்கள். அட..! விற்காத எக்ஸ்பைரி ஆன பால் கேன்கள் எங்கே..? குசும்பர்கள்... ஒரையூற்றி மோர் ஆக மாற்றி இருப்பார்களோ..? |
அதற்குள் இவர்களின் இலாபம், பங்குகள் எல்லாமே கடும் வீழ்ச்சியடைந்தன. இது கண்டு நிலைகுலைந்து போன அல்மராய், சென்றமாதம் ஜூலை நடுவில் அந்த மாபெரும் முக்கிய அறிவிப்பை அறிவித்தது. "மீண்டும் அதே முந்தைய பழைய விலையான 7 ரியால் தொடரும்" என்று..!
அப்போது அந்த சவூதி மக்களிடம் வந்த விழிப்புணர்வு, அது இணையம் மூலம் -குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம்- எப்படி சில நாட்களில் ஒட்டு மொத்த நாட்டு மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, ஓர் ஒருமித்த உறுதியான முடிவை எடுக்க வைத்து மக்கள் நினைத்ததை சாதிக்க வைத்தது பார்த்தீர்களா சகோ..?
ஒரு கட்சி இல்லாமல்... ஒரு தலைவர் இல்லாமல்... ஆனால்... ஒருமித்த நல்ல குறிக்கோள் ஒன்றே அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. அதுவே வெற்றியை நோக்கி அவர்கள் அனைவரையும் இயக்கியது. வென்று சாதிக்கவும் வைத்தது..!
சவூதி போன்ற நாட்டிலேயே இது சாத்தியப்படுகிறது என்றால்... நம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில்... என்றோ... எவ்வளவோ மாற்றங்கள்... நடந்திருக்க வேண்டுமே சகோ..? ஏன்.. நடக்கவில்லை..? நாம் இந்த சமூக வலைத்தலங்களை இன்னும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை அல்லவா..?
வாருங்கள் சகோ...! இனியாவது நம் கையில் உள்ள இலவச சமூக வலைத்தளங்களான... ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் பஸ், கூகுள் பிளஸ், பிளாக்கர், ஈ-மெயில் ஆகிய இவற்றினை... பாலியல் மனோஇச்சை, வீணான பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், வெட்டி மொக்கைகள் என அல்லாமல் சரியான திசையில் சரியான நோக்கில் மக்கள் நன்மைக்காக பயன்படுத்தி நம் வாழ்வில் நம்முடைய எதிரிகளை வெல்லும் ஆயுதங்களாக மாற்றி அமைத்துக்கொள்வோமாக சகோ..! தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்ட சமூக வலைத்தளங்களில் அதிகமாக இணையுங்கள்..!
இறைநாடினால் நம் ஒருமித்த தீரமான முயற்சிக்கு நிச்சயம் வெற்றி உண்டு சகோ..!
டிஸ்கி:- தன் MONTHLY ROTATION QUOTA மூலம் "புரச்சி(?)ப்பதிவுகள்" போட்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு வசைபாடித்திரியும் "வசவு(?)கும்பல்" கூட, தம் 'மாதாந்திர இஸ்லாமிய கோட்டா'வில் இந்த மக்கள் புரட்சியை மக்களுக்கு சொல்லாமல் அமுக்கிவிட்டனர்..! ஏன்..?
சென்றமாத இஸ்லாமிய கோட்டாவில் 'ஆப்பிரிக்க பழங்குடி பெண்'களிடம் இருந்துவிட்டு அப்புறம் இம்மாத இஸ்லாமிய கோட்டாவுக்கு அங்கிருந்து நேராக பங்களாதேஷிற்குள் தாண்டிக்குதித்து 'அமிலம்' தேடி அலைந்ததில் படு பிசியாக இருந்ததால், இந்த 'சவூதி மக்கள் புரட்சி' மேட்டர் அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதோ..? பொதுவாக, முஸ்லிம்களின் செயல்களை எல்லாம் இஸ்லாம் என்று ஏற்றிக்கூறுவதுதானே இவர்கள் வழக்கம்..!? அதன்படி, இதே இடுகை "சவூதி:மக்கள்இஸ்லாமிய புரட்சிக்கு மகத்தான வெற்றி..!"--என்ற தலைப்பில் வினவுவில் வருமா..!?! எப்படி வரும்..? பிறரால் நேர்ந்த கொடுமைகள் தவிர்த்து முஸ்லிம்கள் பற்றிய நல்லவைகளை மட்டும் சொல்லவே மாட்டார்களே..?
'புரட்சி புரட்சி' எனும் இவர்களின்... புரட்சி கூட... தன்மீது "நாத்திக சிவப்பு சட்டை" போட்டிருந்தால்தான் ஒத்துக்கொள்வார்களா..? அது... "ஆத்திக கருப்பு அல்லது வெள்ளை அங்கி" அணிந்திருக்கக்கூடாதா..? ம்..?
இதுபோன்ற போலிப்புரட்சிவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்போம் சகோ..!
சென்றமாத இஸ்லாமிய கோட்டாவில் 'ஆப்பிரிக்க பழங்குடி பெண்'களிடம் இருந்துவிட்டு அப்புறம் இம்மாத இஸ்லாமிய கோட்டாவுக்கு அங்கிருந்து நேராக பங்களாதேஷிற்குள் தாண்டிக்குதித்து 'அமிலம்' தேடி அலைந்ததில் படு பிசியாக இருந்ததால், இந்த 'சவூதி மக்கள் புரட்சி' மேட்டர் அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதோ..? பொதுவாக, முஸ்லிம்களின் செயல்களை எல்லாம் இஸ்லாம் என்று ஏற்றிக்கூறுவதுதானே இவர்கள் வழக்கம்..!? அதன்படி, இதே இடுகை "சவூதி:
'புரட்சி புரட்சி' எனும் இவர்களின்... புரட்சி கூட... தன்மீது "நாத்திக சிவப்பு சட்டை" போட்டிருந்தால்தான் ஒத்துக்கொள்வார்களா..? அது... "ஆத்திக கருப்பு அல்லது வெள்ளை அங்கி" அணிந்திருக்கக்கூடாதா..? ம்..?
இதுபோன்ற போலிப்புரட்சிவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்போம் சகோ..!
Our sincere thanks to all these source websites and personal e-mails :-
- http://english.ahram.org.eg/NewsContentPrint/3/0/16233/Business/0/Milk-revolution-succeeds-in-pushing-prices-down-in.aspx
- http://www.arabianbusiness.com/saudi-s-almarai-forced-reduce-cost-of-milk-laban--409817.html
- http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=20110706104601
- http://stream.aljazeera.com/story/stopmara3i
36 ...பின்னூட்டங்கள்..:
சூப்பர் மாப்ஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அருமையான தகவல் மற்றும் நம்முடைய நேரத்தை எதற்கெல்லாம் வீனாக செலவு செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதை அழகிய முறையில் புாிய வைத்திருக்கிறீா்கள். தோழமையுடன்
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ ஆஷிக்..
//(சரியாத்தானே சொல்றேன் சகோ..?)//
சரியாகத்தான் சொல்றீங்க சகோ.
அல்மராய்..அமீரகத்திலும் ஆளுமை செலுத்தும் கம்பெனிதான்..ஆனால் தாங்கள் சொல்வதுபோல் முக்கியத்துவம் இருக்கிறதா என தெரியவில்லை.ஹைர்..
ஒரு புதிய புரட்சிகர விஷயத்தை அறியத்தந்ததற்கு நன்றி சகோ..
வினவு'க்கு கடைசியில் கேள்வி வைத்துள்ளீர்கள்...அவங்க காதுல சிவப்பு துணி அடைத்து இருக்கு..சோ சிவப்பு நிற புரட்சி மட்டுமே காதுக்குள் போகும்,சிவப்பு கண்ணாடி அணிபவனின் காட்சி நிறம் போல..
அன்புடன்
ரஜின்
சஹோ ஆஸிக்.
இது ரொம்ப புது செய்தியா இருக்கே. படங்களுடன் தெளிவாக தெரியப்படுத்தியதுக்கு நன்றிகள். அப்றம் இதிலே இன்னுரு முக்ய விசயம் என்னனா அந்த தாதா மன்னர் கம்பெனி விலை ஏத்தினவுன்னே மத்த கம்பெனிகள் அமைதியா இருந்துது பாருங்க. அங்கேதான் வெசயம் இருக்கு. பலநாள் பகையை மக்களோடு மக்கள சேந்து தீத்துக்கிட்டாங்க. அதுனால வெற்றி சுளுவாகிட்டது.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ ,
புதிய தகவல் ...நன்றி வாழ்த்துக்கள் ...
இது இந்தியாவில் சாத்தியமா ? இல்லை ?மக்களிடம் எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்பட கூடாது என்பதில் தீயா வேலை செய்யும் அரசியல் நடக்கும் நாடு அல்லவா!!!சாத்தியமில்லை ...
எல்லாம் வல்ல இறைவன் நாடினால் ஒரு கணம் ...
அந்த கனத்திற்கு விடியலுக்கு துவா செய்வோம் ..இன்ஷா அல்லா ..
//போலிப்புரட்சிவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்போம் சகோ..///
நிச்சையமாக நானும் உங்களுடன் இருக்கிறேன் .
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
அல்ஹம்துலில்லாஹ்...
சூப்பர் செய்தி சகோதரர். ஒன்று திரண்டு ஒரு உயரிய நோக்கத்திற்காக போராடிய சவூதி மக்களுக்கு பாராட்டுக்கள். இன்ஷா அல்லாஹ் நம் நாட்டிலும் இத்தகைய புரட்சிகள் வரவேண்டும். சமூக தளங்களின் பயன்பாட்டையும் அழகாக விளக்கிவீட்டீர்கள். நிச்சயம் இந்த சமூக தளங்கள் மூலம் ஒரு சிலரையாவது இறைவன் அருள் மூலம் சிந்திக்க வைக்க முடியும். அப்படி ஒருவர் மனதில் ஏற்படும் மாற்றம் இன்ஷா அல்லாஹ் பலருடைய உள்ளங்களில் பிரதிபலிக்கும். இதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்..
வினவை பற்றி...சகோதரர், வழக்கம்போல ரொம்ப குழம்பி போயிருக்காங்க. அமிலம் பற்றிய பதிவில்தான் எத்தனை முரண்பாடுகள்...திரிபுகள். வினவில் என் கமெண்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இந்த முறை அனுமதித்து இருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. வினவை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இருப்பினும், ஒரு ஆதங்கத்தாலேயே, ஒரு திருப்திக்காகவே அங்கு சென்று கமெண்ட்கள் இட்டேன்.
அடுத்து என்ன கிருத்துவ எதிர்ப்பு பதிவா????....
ஆனால் ஒன்று சகோதரர், இவங்க அடிக்குற கூத்துக்கு, இன்னும் அடித்தளத்துக்கு தான் போய் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது அவர்களுக்கு இன்னும் புரியாதது அதிசயமே!!!!
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு ( ஓமன்) அல் மராய் பால் 2 lit விலை 1 ஒமானி ரியால் (சுமார்9.7சவுதி ரியால்) இருந்தாலும் விற்பனையில் நம்பர் one அல் மராய் பொருட்கள் தான் எனது பார்வையில் அதன் தரம் மற்றதைவிட கொஞ்சம் தூக்கல் தான்
@புதுகைச் சாரல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாப்ஸ்.
@Ferozவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஃபெரோஸ்
@RAZIN ABDUL RAHMAN
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//வினவு'க்கு கடைசியில் கேள்வி வைத்துள்ளீர்கள்...அவங்க காதுல சிவப்பு துணி அடைத்து இருக்கு..சோ சிவப்பு நிற புரட்சி மட்டுமே காதுக்குள் போகும்,சிவப்பு கண்ணாடி அணிபவனின் காட்சி நிறம் போல..//
சகோ.ரஜின்...!
கேட்கும் ஒளிக்குக்கூட சிகப்பு சாயமா..?
செமை உருவகம் போங்க..!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ரஜின்.
@neethimaan
//அதுனால வெற்றி சுளுவாகிட்டது.//---கரெக்ட்..!
எதிரிகளிடமும் ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது..! சபாஷ்..! மிகச்சரியான கருத்து சகோ.நீதிமான்..!
நான் குறிப்பிட மறந்த கருத்தும் கூட..!
வருகைக்கும் பதிவை புகுந்து ஆராய்ந்ததற்கும் மிக்க நன்றி சகோ.
@ரியாஸ் அஹமது வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சாத்தியமில்லை//---இல்லை சகோ.ரியாஸ்... எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த முடிவுக்கு என்னால் வர இயலவில்லை.
//நிச்சையமாக நானும் உங்களுடன் இருக்கிறேன்.//---வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ்.
@Aashiq Ahamed வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//வினவை பற்றி...சகோதரர், வழக்கம்போல ரொம்ப குழம்பி போயிருக்காங்க.//
சகோ.ஆஷிக், நீங்கவேற... குழப்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. சட்டியில் தெளிவு என்று ஒண்ணும் இல்லை. அப்புறம் அகப்பையில் அதைத்தேடினால் அது எங்கிருந்து வருமாம்..?
நாய்வாலை ஒன்றரை வருடம் நிமிர்த்த முயற்சித்து அது முடியாமல்... "இனி இறைவன் நாடினால் நிமிரட்டும்" என நான் அவர்களை புறக்கணித்து வருஷம் ஆகுது..!
//வினவை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.//---ஆம் சகோ..!
பெரும்பான்மையான பதிவர்கள் இப்படித்தான் எப்போதோ புறக்கணித்து விட்டனர்.
அப்போதே அங்கே ப்ரோபைல் இல்லாத அனானிகள் படையெடுப்பு அதிகம். ஒவ்வொரு வசவு பதிவிலும் புதுசு புதுசா வந்து வசைபாடிட்டு அடுத்த பதிவில் காணாமல் போவார்கள்.
//இவங்க அடிக்குற கூத்துக்கு, இன்னும் அடித்தளத்துக்கு தான் போய் கொண்டிருக்கின்றனர்.//---ஆம்..! தெளிவான சரியான கொள்கைகள் ஏதும் அற்ற அந்த நாத்திக கும்பல் ஒவ்வொரு படியாக பின்னுக்கு சென்ற வண்ணம்தான் உள்ளது சகோ.
//ஆனால் இது அவர்களுக்கு இன்னும் புரியாதது அதிசயமே!!!!//---புரட்சிதான் வினவின் உயிர்மூச்சு என்பது உண்மைன்னா ஒரு சவால்..!
இந்த பதிவை "சவூதி:இஸ்லாமிய புரட்சிக்கு மகத்தான வெற்றி..!" என்று அவர்களின் வினவுவில் வெளியிடுவார்களா..?
மாட்டார்கள் அல்லவா..?
அப்புறம்..?
வினவு புரியாமல் எல்லாம் இல்லை சகோ.
ரோம்ம்ம்ம்ம்ப தெளிவாத்தான் மக்களை புரட்சி என்ற பெயரில் ஏமாத்தறாங்க..!
வருகைக்கும் புரட்சிக்கருத்திற்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சும்மா... பால் மேட்டருல கலக்கிட்டீங்க போங்க! வித்தியாசமான பாணியில் எதார்த்தமான கட்டுரை., மக்கள் ஒன்றுப்பட்டால் இறை நாட்டத்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை தான் உங்களின் கட்டுரையின் கரு விவரிக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்! தொடருங்கள் விழிப்புணர்வு பதிவுடன்
வினவு..!@? (பக்கத்தில் என்ன குறியீடு போடுவதென்ற தெரியவில்லை) இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாட்களின் பொய்-புரட்டுக்கு தமிழகராதி சொற்பொருளின் அர்த்தம் இதுவாக தான் இருக்கும்
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
இன்ஷா அல்லாஹ் முழுதும் படித்து விட்டு வருகிறேன்
உணவுப் பொருட்களின் தரத்தில் சவுதி அரேபியாவை மிஞ்சுவதற்கு மாற்று நிறுவனங்கள் இல்லையென்றே சொல்லலாம்.நீங்கள் சொன்னது போல் அல்மராய் தரமோ தரம்.
இது தவிர 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உண்மைகளும் சவுதியில் இருக்கவே செய்கின்றன என்ற நடுநிலைமையில் நிற்பதும் அவசியம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
இந்த அருள்மொழிகள் அல்-மராய் கம்பெனிக்கும்,
தங்களின் கோரிக்கைக்கும் பொருந்தும்!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
என்னுடைய ஃபேவரைட் பானம், தற்போது அல்மறாய் சாக்லேட் மில்க் தான். மற்றவைகளை விட இது சுவையானவை.
ஆனால் இந்த வெண்மை புரட்சி ஒரு முன்னுதாரணமாக உள்ளது. சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்தவேண்டும்? என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் எண்ணம் ஈடேற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
அறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
@bat
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ரப்பானி,
transportation charge எல்லாம் சேர்த்து ஆல்ரெடி கூடத்தான் விலை வைத்து விற்கிறார்கள்.
விஷயம் என்னவெனில், மற்ற சவூதி கம்பெனிகள் அதேவிலையில் இருக்கும்போது, மற்ற நாடுகளில் விலையேற்றம் நடக்காதபோது
சவூதியில் மட்டும் எதற்கு என்பதுதான். எதற்கு இவர்கள் தங்கள் லாபத்தை மேலும் கூட்டிக்கொள்ள வேண்டும் என்பதே போராட்டத்தின் மைய நாடி.
அல்மராய் தரம் பற்றி நான் ஏதும் தரக்குறைவாக கூறவில்லையே சகோ.பட்..? அது தரமானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேநேரம்...
//அல் மராய் பொருட்கள் தான் எனது பார்வையில் அதன் தரம் மற்றதைவிட கொஞ்சம் தூக்கல் தான்//---இதில் எனக்கு உடன்பாடில்லை.
ஏனோ 'அல்மராய் மட்டும்தான் தரமிக்கத்து' என்று சும்மா பந்தா காட்டுகிறார்கள்..! அனைத்து பால்/மோர் ஐயும் பயன்படுத்தியதில் அனைத்தும் ஏறக்குறைய சமமே என்பது என் அவதானிப்பு.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.பட்.
@G u l a mவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//மக்கள் ஒன்றுப்பட்டால் இறை நாட்டத்தால் நிச்சயம் வெற்றி உண்டு//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.குலாம்
//வினவு..!@? இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாட்களின் பொய்-புரட்டுக்கு தமிழகராதி சொற்பொருளின் அர்த்தம் இதுவாக தான் இருக்கும்//----?!
அவங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடிலேர்ந்தே இதற்குரிய தகுதியை அடைஞ்சிட்டாங்களே சகோ...!!!
@அந்நியன் 2//இன்ஷா அல்லாஹ் முழுதும் படித்து விட்டு வருகிறேன்//---???
சரிதான் சகோ.அய்யூப்...
சமச்சீர் கல்வி வழக்கு வேற சீக்கிரமா(?) முடிஞ்சுருச்சு..!!!
இனி புக்ஸ் எல்லாம் குடுத்துருவாங்க....
இப்போ ஆகஸ்ட் முடியப்போகுது...
நல்லா கஷ்டப்பட்டு அனைத்து பள்ளிக்கூட பாடங்களையும்...
//முழுதும் படித்து விட்டு//
காலாண்டு, அரையாண்டு அப்புறம் ஏப்ரல் மாசம் முழுவாண்டு தேர்வெல்லாம் நன்றாக எழுதிவிட்டு...
அப்புறம் மே மாச விடுமுறையில் வரப்போறதா சொல்றீங்களா சகோ..???
சர்தான்... வாங்க.. வாங்க..!
வருகைக்கு நன்றி சகோ.
@ராஜ நடராஜன்
//இது தவிர 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உண்மைகளும் சவுதியில் இருக்கவே செய்கின்றன என்ற நடுநிலைமையில் நிற்பதும் அவசியம்.//---ரொம்ப சரியாக சொன்னீர்கள் சகோ.ராஜ நடராஜன்.
ஏனோ...
இந்த பெருச்சாளி சைஸ் நியூசை... பேனாகவோ... ஈராகவோ... ஏன்... அமீபா சைசில் கூட நம்ம நடுநிலைவாதிகள் மக்களுக்கு தரலியே..!?!?!?
இதெல்லாம் விட...
அனுதினமும் 'புரட்சி புரட்சி' என்று "புரட்சி மைக்ராஸ்கோப்" வைத்து தேடும் செஞ்சட்டை காரர்ளுக்குக்கூட... இந்த பெருச்சாளி சைஸ் புரட்சி நியூஸ் தென்படவில்லையே..?!?!?!
இவர்கள் நடுநிலைமையில் நிற்பதன் அவசியத்தை சொன்னமைக்கும், தங்கள் வருகைக்கும் நன்றி சகோ.ராஜா நடராஜன்.
அஸ்ஸலாமு அலைக்கும்(varah)
நல்லதொரு அலசல் சகோ ஆஷிக்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று எல்லோருக்கும் தெரியும் இதைத்தான் சவுதி மக்கள்களும் செய்திருக்கிறார்கள்.
அரபு நாடுகள் மற்றும் மேலை நாடுகளில்தான் காலாவதியான உணவு பொருள்கள் மருந்துகள் மற்றும் ஏனைய பொருள்களை அழிப்பார்கள் ஆனால் இந்தியாவில் கிராம புரங்களில் காலாவதி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மக்கள் விழிப்புண்ர்வும் அரசின் கொள்கைகளும் இருக்கு இந்த லட்சனத்தில் நாம் போராடியால் போலிஸ்காரன்தான் நம்மை முட்டிக்கு முட்டி தட்டுவான்.
நல்லதொரு விழிபுணர்வு சகோ வாழ்த்துக்கள்.
@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@Abdul Basithவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//என்னுடைய ஃபேவரைட் பானம், தற்போது அல்மறாய் சாக்லேட் மில்க் தான். மற்றவைகளை விட இது சுவையானவை.//---நல்ல ரேடியோ விளம்பரம்..! அல்மராய்க்கு கொ.ப.செ வேலை காலி இல்லைன்னு பேசிக்கிட்டாங்களே..! :)
//...நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்.//---இன்னும் நெத்தியடியா சொல்லி இருக்கலாமோ சகோ..?
தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ அப்துல் பாஸித்.
எதற்கெடுத்தாலும் முதலாளி வர்க்கம் சுரண்டல் என சம்பந்தா சம்பந்தமில்லாமல் என கூக்குரலிடும் 'கருங்கொடி' கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லையே
@மஸ்தூக்காஅடடே..! ஆமாம்...! அதானே...!
இவ்வளவுக்கும் இந்த 'கருங்கொடி' சவூதியிலேயே "திருட்டுக்கம்பத்தில் பச்சை இகாமாவில் ஊசலாடும் கிழிந்தகொடி" அல்லவா...?
"'சவூதியில் முதலாளித்துவ வல்லாதிக்க வர்த்தகத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிக்கு அபார வெற்றி..!'"
....அப்படீன்னு ஒரு பதிவு போடும்னு எதிர்பார்த்தீர்களா சகோ.மஸ்தூக்கா..?
செம்புரட்சி எனும் கற்பனைக்கோட்டையின் விரிசல் வழியே இஸ்லாமிய பிழைப்புவாதம் புரியவே நேரம் போதவில்லை போல..!
தங்கள் வருகைக்கும் நினைவூட்டியமைக்கும் நன்றி சகோ.மஸ்தூக்கா.
@ஆயிஷா அபுல்.வ அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஆயிஷா அபுல்.
@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்தியாவில் கிராம புரங்களில் காலாவதி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மக்கள் விழிப்புண்ர்வும் அரசின் கொள்கைகளும் இருக்கு///---இந்த விஷயம் பற்றியும் நம் மக்களுக்கு நாம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது சகோ.அய்யூப்.
இதையும் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் தம் நண்பர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் மூலம் அவரவர் குடும்பத்தார் சுற்றத்தார் ஆகியோருக்கு எடுத்துச்செல்லலாம் சகோ.
இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு படியாக திடமாக கடப்போம். அப்புறம்... சமூக எதிரிகளை முட்டிக்கு முட்டி தட்டுவோம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அய்யூப்
மகிழ்ச்சி தரும் தகவல் வாழ்த்துக்கள் ..
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு....
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ
@ அம்பாளடியாள்
தங்கள் வருகைக்கும் வென்ற மக்களுக்கான மகிழ்வான வாழ்த்துக்கருத்துக்கும் நன்றி சகோ.அம்பாளடியாள்.
@ முஸ்லிம்
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.முஸ்லிம்
சோசியல் நெட்வொர்க்கை உருப்படியாக உபயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்! நம் ஊரிலும் எவ்வளவு பேசுகிறோம், ஏன் இவற்றை உருப்படியாக உபயோகிக்க மாட்டேன் என்கிறோம்?
@bandhuநம் ஊரிலும் நாம் நம் தொடர் முயற்சிகள் மூலம் மக்களிடம் இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் சகோ. நம்பிக்கையுடன் அதை நோக்கிய ஒரு பயணம் தான் இப்பதிவு. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.bandhu.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!