சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான் தோன்றியது. காரணம், இதில் உள்ள விஷயம் சிலருக்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். சிலருக்கு மிக அவசியமான அறிவுரையாக இருக்கலாம். அத்தவறை செய்யும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன். பதிவில் ஆங்காங்கே சிகப்பில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ..!
.
எனது சிறுவயதில் 'பாம்பே டாய்லட் சிங்க்' என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. ஆனால், அதில் வயதானவர்கள் குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள் குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'சிட்டிங் டாய்லட்' அல்லது மேற்கத்திய கழிப்பறை பீங்கான் பேசின் பிரபலம் ஆனது. ஏதோ வசதியாக வரவேற்பறை நாற்காலியில் அமர்வது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இல்லை. நீண்ட நேரம் அமர்வதும் அதன் சிரமமும் இனி ஒரு பொருட்டல்ல என்றானது.
.
எனது சிறுவயதில் 'பாம்பே டாய்லட் சிங்க்' என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. ஆனால், அதில் வயதானவர்கள் குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள் குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'சிட்டிங் டாய்லட்' அல்லது மேற்கத்திய கழிப்பறை பீங்கான் பேசின் பிரபலம் ஆனது. ஏதோ வசதியாக வரவேற்பறை நாற்காலியில் அமர்வது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இல்லை. நீண்ட நேரம் அமர்வதும் அதன் சிரமமும் இனி ஒரு பொருட்டல்ல என்றானது.
.
இப்படி ஒரு சொகுசு (!?) சிட்டிங் டாய்லட் வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல்......, வாக்மேன், வாரப்பத்திரிக்கை, தினசரிகள், ஆஃபீஸ்ஃபைல், மியுசிக் கீபோர்ட், லேப்டாப் சகிதம் எல்லாம் டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது..! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனியாக அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! கொடுமை..!
.
.
ஆனால், இந்த கூத்தெல்லாம் அரங்கேறும் இடம் வீட்டில் சுத்தமாக உள்ள அல்லது ஸ்டார் ஹோட்டல் ரூமில் உள்ள சுத்தமான சிட்டிங் டாய்லட்டில் மட்டும்தான். மற்றபடி அலுவலகம், கல்லூரி, இரயில், மற்றும் பொதுக்கழிப்பிடங்களில் உள்ள சிட்டிங் டாய்லட் என்றால் அதில் உட்கார நமக்கு மனமே வராது எவருக்கும்..!
.
.
காரணம், அதை பெரும்பான்மையோர் முறையாக உபயோகிப்பது இல்லை. முக்கியமாக, பீங்கான் மீதுள்ள பிளாஸ்டிக் சிட்டிங் கவரை சுத்தமாக வைத்திருப்பது கிடையாது..! சிலர் சிறுநீர் கழிக்க மட்டும் டாய்லட்டை உபயோகிப்பவர்கள், சீட் கவரை மேலே தூக்கி நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன்பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும் பொறுமை அல்லது பழக்கம் கிடையவே கிடையாது. நின்றுகொண்டே... அப்படியே போய்... அந்த சீட் கவரை நாஸ்தி பண்ணிவிடுவர்.
சரி.... இதை, 'அடக்கி வைத்த அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே..? தான்தானே தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரவேண்டும்..? அடுத்தவர் வந்து இதில் எப்படி அமர்வார்..?" என்ற லஜ்ஜையோ, பொதுநலமோ, வீட்டில் உள்ள பொறுப்புணர்வோ ஏதுமே வெளியே மட்டும் சுத்தமாக வராது. அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்..! இதுபோல செல்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்..!
.
சரி.... இதை, 'அடக்கி வைத்த அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே..? தான்தானே தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரவேண்டும்..? அடுத்தவர் வந்து இதில் எப்படி அமர்வார்..?" என்ற லஜ்ஜையோ, பொதுநலமோ, வீட்டில் உள்ள பொறுப்புணர்வோ ஏதுமே வெளியே மட்டும் சுத்தமாக வராது. அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்..! இதுபோல செல்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்..!
.
குர்ஆன் 2:222 ....(நபியே) "திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்" எனக்கூறுவீராக..!
இதனால் என்னாவாகும்..? அடுத்து, 'மலம் கழிக்க வேண்டும்' என்று வருபவர், இந்த பிளாஸ்டிக் சீட்டிங்கின் மேல் இருக்கும் மஞ்சள் சிறுநீரை பார்த்தவுடன் சுத்தமாக அவருக்கு அதில் உட்கார வேண்டும் என்ற எண்ணம் வருமா..? கழுவி விட்டு உட்கார வேண்டும். ஆனால், 'எவனோ செய்த அசிங்கத்தை எதற்கு தான் கழுவ வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.
.
.
இங்கே ஒரு ஐடியா:-
இதுபோல பொது கழிப்பிடம் போகும்போது, பிளாஸ்டிக் சீட்டிங் கவர் (இருந்தால், அதன்) மீது தண்ணீர் ஊற்றிவிட்டு, கையோடு டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது பழைய தினசரி பேப்பர் கொண்டு சென்று அதை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பிளாஸ்டிக் சீட்டிங் மீது பேப்பரை ' \ / ' வைத்து அமரலாம்..! இதை பலர் செய்வதில்லை. ஆனால், வயிற்றை கலக்கும் அவசரம். என்ன செய்ய..?
.
இதுபோல பொது கழிப்பிடம் போகும்போது, பிளாஸ்டிக் சீட்டிங் கவர் (இருந்தால், அதன்) மீது தண்ணீர் ஊற்றிவிட்டு, கையோடு டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது பழைய தினசரி பேப்பர் கொண்டு சென்று அதை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பிளாஸ்டிக் சீட்டிங் மீது பேப்பரை ' \ / ' வைத்து அமரலாம்..! இதை பலர் செய்வதில்லை. ஆனால், வயிற்றை கலக்கும் அவசரம். என்ன செய்ய..?
.
இன்னும் சில பொது டாய்லட்டுகளில் அந்த பிளாஸ்டிக் சீட்டிங்கே இருக்காது..!?! (இருந்திருந்தாலும்....) இப்போதுதான் அந்த பயங்கர செயலை செய்வர். அதாவது செருப்பு அல்லது ஷூ காலுடன் ஏறி அந்த பிளாஸ்டிக் சீட் மேலோ அல்லது அதை தள்ளிவிட்டு பீங்கான் மீதோ அமர்ந்து, அந்த சிட்டிங் டாய்லட்டை அந்தக்கால 'பாம்பே டாய்லட் சின்க்' போல பாவித்து உபயோகப்படுத்திவிட்டு சென்று விடுவார்..! இதுதான் முற்றிலும் தவறு மற்றும் ஆபத்து..!
.
.
.
"சுத்தம் ஈமானில் பாதியாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி); நூல் : சஹீ ஹ் முஸ்லிம் (328)
அந்த அவரை தொடர்ந்து அடுத்து உள்ளே செல்வோர், சீட்டிங்கின் மீது செருப்பு / ஷூ அச்சுடன் சேர்ந்த சகதி மண் என எல்லாம் இருப்பதை கண்டு, முகம் சுளித்து அவரும் அதேபோலவே...! இதுபோல இனி அந்த பிளாஸ்டிக் சீட்டிங் மீது அமர்வதை இனி வருவோர் அனைவருமே தவிர்த்து விடுவர்..!
.
இங்கேதான் ஆபத்து காத்து இருக்கிறது. பதிவின் நோக்கமே இதை சொல்வதுதான்..!
"சுத்தம் ஈமானில் பாதியாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி); நூல் : சஹீ ஹ் முஸ்லிம் (328)
அந்த அவரை தொடர்ந்து அடுத்து உள்ளே செல்வோர், சீட்டிங்கின் மீது செருப்பு / ஷூ அச்சுடன் சேர்ந்த சகதி மண் என எல்லாம் இருப்பதை கண்டு, முகம் சுளித்து அவரும் அதேபோலவே...! இதுபோல இனி அந்த பிளாஸ்டிக் சீட்டிங் மீது அமர்வதை இனி வருவோர் அனைவருமே தவிர்த்து விடுவர்..!
.
இங்கேதான் ஆபத்து காத்து இருக்கிறது. பதிவின் நோக்கமே இதை சொல்வதுதான்..!
.
இதுபோன்ற பீங்கான் தொட்டிகள் அடியில் குறுகலாகவும் மேற்புறம் அகன்றும் செய்யப்பட்டுள்ளது. காலை தரையில் வைத்து அமர்வதால் நம் உடலின் முழு எடையும் பீங்கானின் மீது லோட் ஆவதில்லை. பாதி எடை கால்வரை பரவி சென்றுவிடுகிறது. ஆனால், சீட்டிங் மேலே ஏறி அமரும்போது எடை பீங்கானின் மீது மட்டுமே கூடுகிறது.
அதுமட்டுமின்றி இரண்டு கால்களும் இரண்டு பக்கம் நோக்கி வெளிப்பக்கமாக விசை கொடுத்து உந்தித்தள்ளுவதால், என்னதான் முதல் தரம் கூடிய பிராண்ட் ஆயினும் நாளடைவில் அந்த பீங்கான் பலம் குன்றி போயிருந்தாலோ அல்லது கரடுமுரடான சுத்தப்படுத்தும் கருவிகளால் எங்கேனும் இடிபட்டு சிறு விரிசல் விட்டு இருந்தாலோ, அதன் மீது உட்கார்ந்து இருப்பவர் எடை அல்லது அன்று அவரின் விதி... காரணமாக எந்நேரமும் அந்த பீங்கான் இருதுண்டாக... அல்லது பலதுண்டாக இப்படி உடையலாம்..!
.
இதுபோன்ற பீங்கான் தொட்டிகள் அடியில் குறுகலாகவும் மேற்புறம் அகன்றும் செய்யப்பட்டுள்ளது. காலை தரையில் வைத்து அமர்வதால் நம் உடலின் முழு எடையும் பீங்கானின் மீது லோட் ஆவதில்லை. பாதி எடை கால்வரை பரவி சென்றுவிடுகிறது. ஆனால், சீட்டிங் மேலே ஏறி அமரும்போது எடை பீங்கானின் மீது மட்டுமே கூடுகிறது.
அதுமட்டுமின்றி இரண்டு கால்களும் இரண்டு பக்கம் நோக்கி வெளிப்பக்கமாக விசை கொடுத்து உந்தித்தள்ளுவதால், என்னதான் முதல் தரம் கூடிய பிராண்ட் ஆயினும் நாளடைவில் அந்த பீங்கான் பலம் குன்றி போயிருந்தாலோ அல்லது கரடுமுரடான சுத்தப்படுத்தும் கருவிகளால் எங்கேனும் இடிபட்டு சிறு விரிசல் விட்டு இருந்தாலோ, அதன் மீது உட்கார்ந்து இருப்பவர் எடை அல்லது அன்று அவரின் விதி... காரணமாக எந்நேரமும் அந்த பீங்கான் இருதுண்டாக... அல்லது பலதுண்டாக இப்படி உடையலாம்..!
.
.
அப்படி உடையும்போது அதன் சில்லுகள் மீது எசகுபிசகாக கால்கள் பரப்பி விழும் நபருக்கு எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஒரு காயம் கூட இன்றியும் தப்பலாம். அல்லது உயிரே போகும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போயும் விடக்கூடும். அப்படி இருவருக்கு நடந்த விபத்தை அடுத்து வரும் ஃபோட்டோவில் பாருங்கள்..! சிட்டிங் டாய்லட் பீங்கான் மீது ஒருவர் ஏறி நின்றமர்ந்து, வெயிட் தாங்காமல் அது உடைந்து... உடைந்த கூர்மையான பீங்கான் பாகங்கள் உடலை குத்தி கிழித்து... :-O காணசகிக்கலை..!
.
அப்படி உடையும்போது அதன் சில்லுகள் மீது எசகுபிசகாக கால்கள் பரப்பி விழும் நபருக்கு எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஒரு காயம் கூட இன்றியும் தப்பலாம். அல்லது உயிரே போகும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போயும் விடக்கூடும். அப்படி இருவருக்கு நடந்த விபத்தை அடுத்து வரும் ஃபோட்டோவில் பாருங்கள்..! சிட்டிங் டாய்லட் பீங்கான் மீது ஒருவர் ஏறி நின்றமர்ந்து, வெயிட் தாங்காமல் அது உடைந்து... உடைந்த கூர்மையான பீங்கான் பாகங்கள் உடலை குத்தி கிழித்து... :-O காணசகிக்கலை..!
.
அதேபோல அதில் எப்படி ஏறி உட்காருவது ஆபத்தோ... அதை விட அதிக ஆபத்து... அதன்
மீது ஏறி நிற்பது. உயரம் அதிகரிப்பதால்... பீங்கான் மீதான வெயிட்
இன்னும்கூடும். அப்படி ஒருவர், அதன் மீது ஏறி நின்று... மேலே பியூஸ் போன
பல்பை மாற்ற
முயற்சித்திருந்திருக்கிறார்..!
..
எல்லாம் ஒரு நொடியில் நடந்தேறி முடிந்து
விட்டது..! இறந்து விட்டார்... பார்க்க முடியலைங்க...
.
இனி நமக்குத்தெரிந்த சகலருக்கும் இதை அறிவுறுத்தி நாமும் எச்சரிக்கையாக இருப்போம் சகோஸ்...
65 ...பின்னூட்டங்கள்..:
நல்ல பகிர்வு....பஸ் ஸ்டாண்ட் களில் உள்ள சாதாரணமான கக்கூஸ் களில் இதை விட அசுத்தம் அதிகமாக இருக்கும் .
நல்ல விழிப்புணர்வு பதிவு..
கடைசி புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம்.. ரொம்ப கொடூரமாக உள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நன்னோக்கத்துடன் எழுதப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.
@தாஜுதீன்////கடைசி புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம்.. ரொம்ப கொடூரமாக உள்ளது.//////புகைப்படம் இந்த பதிவுக்கு மிகவும் அவசியம்.இதை பார்த்தாலாவது இதுபோன்று அமர்வதை தவிர்ப்பார்கள் என்பது எனது கருத்து.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்உண்மை தான் நண்பா பயனுள்ள பதிவு
சலாம் சகோ ஆஷிக்!
அவசியமான பதிவு. அதிலும் அந்த படத்தை பார்ப்பவர் இனி மிக எச்சரிக்கையாகவே இருப்பர். பழைய மாடலான பாம்பே கழிவறைதான் சுகாதாரமானதும் ஆபத்தில்லாததும். வயதானவர்களுக்கும் கர்ப்பிளிப் பெண்களுக்கும் பிரென்ச் மாடல் ஓகே! ஆனால் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
/* இப்படி ஒரு சொகுசு (!?) சிட்டிங் டாய்லட் வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல், சிலர்... வாக்மேன், வாரப்பத்திரிக்கை, தினசரி, ஆஃபீஸ் ஃபைல், மியுசிக் கீபோர்ட், லேப்டாப் சகிதம் எல்லாம் டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது */
ஹி.ஹி.ஹி... எனக்கு புக் படிக்கும் பழக்கம் இருக்கு சகோ. தப்பா????
கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும். தேவையான பதிவு தான். கோவி கண்ணனுக்கு நிச்சயம் இந்த பதிவு பிடிக்கும். அவர் இதற்க்கு பின்னூட்டம் போடுவார் என்று நினைக்கிறேன்.
அந்த கடைசி படத்தை தவிர்த்து இருக்கலாம். பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.
TM-0
பலருக்கும் விழிப்புணர்வை தரும் இத்தகைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமென விரும்பினால் என் தளத்தில் இணைக்கலாம். மேலதிக தகவல்களுக்கு http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html
ஓர் எச்சரிக்கைப் பதிவு..!! பதிவைப்படித்தவர் அனைவரும் இனி எச்சரிக்கையாகவே செயல்படுவார்கள்..!!
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்....
இது அருவருப்பா?
என்ன ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு.
என்னை பொறுத்தவரை பொதுகழிப்பிடங்களை முடிந்தவரை தவிர்ப்பதே சிறந்தது!
பகிர்வுக்கு நன்றி.சகோதரா!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
கண்டிப்பாக அருவருப்பான பதிவு அல்ல சரியான விழிப்புணர்வு பதிவு
விழிப்புணர்வான பதிவு.
கடைசி படத்தில் இரத்தத்தினை கொஞ்சம் மறைத்திருக்கலாம்..
வெஸ்டர்ன் டாய்லெட்டைத் தவறாகப் பயன்படுத்துவதன் விபரீதத்தைப் பலர் யோசிப்பதில்லை. இப்பதிவும் படமும் அவசியமானதுதான்!
ஆனாலும் நம்மூரு ரயில் பயணிகள் மட்டும் திருந்த மாட்டாங்க. ரயில்ல பிளாஸ்டிக் டாய்லட்டுங்கறதானால தைரியம்.
தவிர்ப்பதே நல்லது. எவ்வளவு சீக்கிரம் எழுகிறோமோ அவ்வளவு நல்லது. உணவில் நார்சத்தான பொருட்களை சேர்த்துக் கொண்டால் வேலை சுலபமாகும். ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட் வந்தபிறகு கழிவறையில் செய்யக்கூடாத வேலைகளையெல்லாம் நம் மக்கள் செய்து வருகின்றனர்.
பதிவுக்கு நன்றி!
கடைசிப் படத்தைப் பார்த்ததுமே தலை கிர்ர்ர்ர்ர்ன்ன்னு சுத்திடுச்சு,
நல்ல ஒரு விழிப்புணர்வுப் பதிவு சகோ...
அவசியமான ஒரு பதிவுதான் இது, நண்பரே...
இந்தியாவில் பலருக்கு இது போன்ற சிட்டிங் டாய்லெட் உபயோகம் பற்றி தெரிந்திருப்பதில்லை தான்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!
எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுதான், இதில் தயங்குவதற்கு ஒன்றுமே இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இப்படியெல்லாம் பீங்கான் மீது ஏறி அமர்வார்கள் என்று இந்த பதிவை பார்த்து தான் அறிந்துக்கொண்டேன். நிச்சயம் இது சொல்லப்பட வேண்டிய ஒன்று.
பயனுள்ள பதிவிற்கு ஜசாக்கல்லாஹ்.
ஸலாம் சகோ
எதை எவ்வாறு உபயோகம் செய்ய வேண்டுமோ அவ்வாறு செய்ய வேண்டும் இல்லாவிடில் இவ்வாறு விபரீதத்தில் முடியும் என்பதை அதிர்ச்சியான சம்பவம் மூலம் உணர்த்திய விதம் அருமை
சகோ சிராஜ்
"ஹி.ஹி.ஹி... எனக்கு புக் படிக்கும் பழக்கம் இருக்கு சகோ. தப்பா????"
இதற்கெல்லாம் இந்த சகோ இடம் பத்வா
கேட்பீர்கள் போல
அறியாமையில் உள்ளவர்களுக்கு சரியான கட்டுரை. ஆனால் அவர்கள் இதைப் படிக்க வேண்டுமே! படித்தால் அல்லவோ திருந்துவார்கள். அருமை!! இத்தகைய கொடுஞ்செயலை நான் விமான தளங்களிலும், விமானத்தின் உள்புறம் உள்ள கழிவு அறையிலும் கூட கண்டிருக்கிறேன்.
அவசியமான பதிவு.
நன்றி.
படிப்பினை தரும் நல்ல பதிவு.சொல்லி திருந்துபவர் சிலர்.ஆனால் அனுபவப்பட்டு திருந்துபவர் பலர். விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
விழிப்புணர்வு பதிவு. கடைசிப்படம் பார்த்துவிட்டு இன்னும் படப்படப்பு அடங்கவில்லை. :( :( :(
இது பற்றி நான் படங்களுடன் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2010/01/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
சலாம் சகோ..
அவசியமான எச்சரிக்கை அளிக்கும் பதிவு...நவீனங்கள் என்றுமே ஆபத்தை தரக்கூடியதுதான்
படிக்க பயமாகஇருந்தது
அருமையான விளிப்புணர்வு பதிவு..! கடைசி படத்தை பார்க்கிறவங்க கட்டாயம் திருந்துவாங்க.
உண்மையிலேயே இது ஒரு தேவையான பதிவு .பலருக்கு இது ஒரு பாடம்
@கோவை நேரம்ஆமாம் சகோ.கோவை நேரம். இவ்வளவுக்கும் ரூபாய் வேறு வாங்கிக்கொண்டு, தண்ணீரே வைத்து இருக்க மாட்டார்கள்... கொடுமை..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
@தாஜுதீன்//இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன்.//
-----இப்படி விளக்கி விட்டுத்தான் பகிர்ந்து உள்ளேன்... சகோ.தாஜுதீன்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//புகைப்படம் இந்த பதிவுக்கு மிகவும் அவசியம்.இதை பார்த்தாலாவது இதுபோன்று அமர்வதை தவிர்ப்பார்கள்//---எனது முடிவும் இஃதே, சகோ.ஷஃபி..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
@♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பதில் கருத்துக்கு ஊட்டம் கொடுத்தமைக்கும் நன்றி சகோ.சாருஜன்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அதிலும் அந்த படத்தை பார்ப்பவர் இனி மிக எச்சரிக்கையாகவே இருப்பர்... ...அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்//
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//எனக்கு புக் படிக்கும் பழக்கம் இருக்கு சகோ//---அது படிப்பறை அல்லவே சகோ..?
//அந்த கடைசி படத்தை தவிர்த்து இருக்கலாம். பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.//---சகோ.தாஜுதீனுக்கு சொன்ன அதே பதில்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிராஜ்.
//TM-0//---இல்லாத ஒன்றுக்கு போட்டீர்கள் ஜீரோ... ஓகே..!
ஆனால்,
மற்ற, இருப்பதற்கு..?
@கூகிள்சிறி .கொம்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பகிர்வு அழைப்புக்கும் நன்றி சகோ.கூகிள்ஸ்ரீ
@தங்கம் பழனிநீங்கள் சொன்ன எதிர்பார்ப்புடன்தான் இந்த பதிவு சகோ. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பகிர்வு அழைப்புக்கும் நன்றி சகோ.தங்கம் பழனி.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வேறு வழியேயின்றி பொதுகழிப்பிடங்களை உபயோகிப்போரும் முடிந்தவரை அதனை தூய்மையாய் வைத்துக்கொள்ள உதவுதல் சிறந்தது சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.
@KANA VARO//கடைசி படத்தில் இரத்தத்தினை கொஞ்சம் மறைத்திருக்கலாம்..//---அச்சமூட்டி ஓர் எச்சரிக்கை செய்ய அதுவும் அவசியமாகிவிட்டது சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.கண வாரோ
@தமிழ் மீரான்//ரயில்ல பிளாஸ்டிக் டாய்லட்டுங்கறதானால தைரியம்.//---சுத்தம் காத்தல் நம்மவர்களிடம் இறை அச்சம் மூலமாகவாவது வந்தாக வேண்டும் சகோ.
//கழிவறையில் செய்யக்கூடாத வேலைகளையெல்லாம் நம் மக்கள் செய்து வருகின்றனர்.//---மேலே ஒருத்தர் 'புத்தகம் படித்தல் தவறா' என்கிறார்..!
இந்த பதிவை பிரிண்ட் போட்டு புக்லட்டா ஆக்கி அவருகிட்டே கொடுத்திறலாமா, அங்கே படிக்க..?
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.தமிழ்மீரான்.
@Syed Ibramshaவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha
@அகிலாவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அகிலா.
@கோகுல்//இந்தியாவில் பலருக்கு இது போன்ற சிட்டிங் டாய்லெட் உபயோகம் பற்றி தெரிந்திருப்பதில்லை தான்.//---எனில், நானும் அதனை தெரியப்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கிவிட்டேன்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.கோகுல்.
@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.ஃபாரூக்.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
/இப்படியெல்லாம் பீங்கான் மீது ஏறி அமர்வார்கள் என்று இந்த பதிவை பார்த்து தான் அறிந்துக்கொண்டேன்.//
---பீங்கானை சுத்தமாக வைத்து இருக்கும் வரை இந்த நினைப்பு யார்க்கும் வரப்போவதில்லை சகோ.ஆஷிக்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
பதிவின் சாரத்தை கருத்தில் மொழிந்தீர்கள். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ரப்பானி.
@pkanniyappan///விமான தளங்களிலும், விமானத்தின் உள்புறம் உள்ள கழிவு அறையிலும் கூட///---இப்படி நடப்பதை நானும் கண்டு இருக்கிறேன் சகோ.கன்னியப்பன்.
அதற்குத்தான் அங்கே, 'வட்ட வடிவில் மத்தியில் ஓட்டை போட்ட டிஷ்யூ' வைத்து இருப்பார்கள். அதையும் கூட அறியாமையில் இவர்கள் கண்டு கொள்வதில்லை..!
தொடர்ந்து சொல்வோம்..! கேட்பவர் கேட்கட்டும்..! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.கன்னியப்பன்.
@Rathnavel Natarajanவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ரத்னவேல் நடராஜன்.
@லெ.மு.செ.அபுபக்கர்//அனுபவப்பட்டு திருந்துபவர் பலர்.//---அச்சச்சோ... இப்படி எவருக்கும் அனுபவம் வந்து விடக்கூடாதே என்றுதான் சொல்கிறோம் சகோ.அபுபக்கர்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அப்துல் பாஸித்.
@dondu
தங்கள் சுட்டியை வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்த விஷயம் குறித்து விழிப்புணர்வூட்டி உள்ளமை கண்டு மகிழ்ச்சி சகோ.ராகவன். இதில் உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டால், இரண்டு மாதத்துக்கு ஒருத்தர் விழிப்புணர்வூட்ட வேண்டிய நிலை உள்ளது.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் சுட்டிக்கும் நன்றி சகோ.dondu.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நவீனங்கள் என்றுமே ஆபத்தை தரக்கூடியதுதான்//---அப்படி எதையும் பொதுமைப்படுத்தி விட முடியாது சகோ.ஹாஜா.
இதை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டுமோ அவ்வாறு உபயோகப்படுத்தவில்லை. அதனால் நேர்ந்த விபத்துதான் சகோ இது.
மேலும், ஏதும் 'கிராக்' விட்டு இருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் பதிவில் சுட்டியுள்ளேன். "பீங்கானின் தரம்" என்ற ஒன்றும் இதிலே இருக்கிறது.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஹாஜா.
@sathish//படிக்க பயமாகஇருந்தது//---பார்க்க..?!?! :-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.சதீஷ்.
@காட்டான்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.காட்டான்.
@Barariவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.பராரி.
கழிப்பறை கோப்பைகள் பார்க்க அழகாக இருக்கும் எமன்கள்! அவை உடைந்தால் எந்த ஒரு கூர்மையான கத்தியை விடவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எமன்கள்! பதிவு பயனுள்ளது! ...இக்பால்
அன்புக்குரிய பைங்கிளி! நேற்று முதல் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதை மகிழ்வுடன் அறிவேன். நிறைந்த மனத்துடன் பல்வேறு வலைத்தள நண்பர்களின் படைப்புக்களை அறிமுகம் செய்துள்ளீர்கள், பாராட்டுகின்றேன். எனது படைப்பு ஒன்றையும் அறிமுகம் செய்து என்னையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், மிக்க நன்றி! நான் எழுதியவற்றில் என் மனத்தில் முன் நிற்கும் படைப்புக்களில் இதுவும் ஒன்று, என்றும் மாறாத தழும்பு. உங்கள் மனத்தையும் நெகிழச்செய்ததை அறிவேன். தொடர்க உங்கள் செவ்விய பணி பைங்கிளி! நன்றி!...இக்பால்
சலாம் சகோ ஆசிக்,
/* //TM-0//---இல்லாத ஒன்றுக்கு போட்டீர்கள் ஜீரோ... ஓகே..!
ஆனால்,
மற்ற, இருப்பதற்கு..? */
ஆமாம் ல.... சாரி சகோ. இதுவரை நான் தமிழ்மணம் தவிர வேறெதிலும் வோட்டு போடுவது இல்லை. இன்றிலிருந்து தொடங்குகிறேன்.
கசாலி கிட்ட password என்னன்னு கேட்கணும். அவன்தான் செட் பண்ணினான்.
இனி உங்க பதிவு எல்லாத்துக்கும் வோட்டு மழை தான் சகோ. அடுத்த பதிவுக்கு அட்வான்சா வோட்டு போட்ற option ஏதாவது இருக்கா??? இருந்தா சொல்லுங்க இப்பவே தட்டி விட்டுர்றேன்
ஜாலியா படிச்சிகிட்டு வந்தவனை கடைசியில ’வயத்த கலக்க ’வச்சிட்டீங்களே சகோ இது நியாயமா ..??? அவ்வ்வ்வ் ...!!
வெளியூரு போவதா இருந்தா இதுக்குன்னு சில டேப்லட் இருக்கே ..!!, ஒரு நாள் முன்னாடியிலிருந்து வயத்தை கொஞ்சமா பட்டினி போட்டால் போதும் ..நிறைய விஷயத்துக்கு நல்லது . இதுல நான் மகா கெட்டி ஹா..ஹா.. :-)))
@தென்காசித் தமிழ்ப் பைங்கிளிதங்கள் வருகைக்கும் வலைச்சரத்தில் பதிவை அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி சகோ.தென்காசித்தமிழ்ப்பைங்கிளி. அங்கேயும் பின்னூட்டமிட்டுள்ளேன்.
@saambaldhesamஆமாம் சகோ.இக்பால்...
//அவை உடைந்தால் எந்த ஒரு கூர்மையான கத்தியை விடவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய//வைதான் என்பதில் ஐயமில்லை..! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
@சிராஜ்///அடுத்த பதிவுக்கு அட்வான்சா வோட்டு போட்ற option ஏதாவது இருக்கா???///---என்ன்ன்னது..? அடுத்த பதிவுக்கு ஓட்டு போட இப்போவே அட்வான்ஸ் வேணுமா..? என்ன இது சகோ.சிராஜ்... நீங்க சங்கரன்கோவிலா..?
@ஜெய்லானி'வயித்த கலக்காம' இருக்க,
கைவசம் நிறைய புதிய ஐடியாஸ்... டெக்னிக்ஸ்...
என்று 'வைத்து கலக்குறீங்க' சகோ.ஜெய்லானி..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!