ஆதிமனிதர்களான ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா இருவரும் இவ்வுலகிற்கு படைத்தனுப்பப்பட்ட பின்னர், அவ்விருவரும் இப்படி இப்படித்தான் இம்மண்ணில் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அன்றே இறைவனால் கொடுக்கப்பட்ட கலாச்சாரம்தான் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி. இதனை, தன் இறைத்தூதர் ஆதம் நபி(அலை)க்கும், அவர்மூலம் அவரின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களுக்கும் இறைவன் மூலம் பரிசளிக்கப்பட்டது. இதுவே- இந்த இஸ்லாமே- இவர்களின் வழித்தோன்றல்களும் கடைப்பிடித்தொழுக வேண்டிய வாழ்வியல் நெறி. அப்படி இருக்க, முதன்முதலில் இந்த நெறிக்கு எதிராக ஆதம் நபியின் மகன் தன் சகோதரனை கொலை செய்தார். முதல் மனித மரணம். கொலை. இப்படித்தான் இஸ்லாத்திற்கு எதிரான 'கலாச்சாரங்கள்' உலகில் ஆரம்பித்தன. கலாச்சாரம் என்றாலே.. ஒரு நாலுபேர் ஒரே மாதிரி செயல்படுவதும், அதையே அவர்களின் வழித்தோன்றல்கள் எக்கேள்வியும் இன்றி பின்பற்றுவதும் தானே..?!
இதுபோல் மனித குலத்துக்கு-மனித உரிமைக்கு-இஸ்லாத்திற்கு எதிரான பல கலாச்சாரங்கள் தீய மனிதர்களால் உருவாகின. அப்போது இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி மக்கள் மறந்ததாலோ அல்லது பின்பற்றப்படாது போயிருந்ததாலோ, அந்த தீய கலாச்சாரங்கள் மிகுதியாகின. அப்போதெல்லாம் இந்த மனித சமுதாயத்துக்கு நன்மையை ஏவி, தீமையை தடுக்க அந்த மனிதர்களிலிருந்தே, ஒருவரோ இருவரோ இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆதிமனிதர் ஆதம் நபிக்கு அளிக்கப்பட்ட அதே... 'இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி'யை அதே அடிப்படையுடன் அக்கால சூழலுக்கு ஏற்ப தேவையேற்படின் சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு மனிதகுலத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த... இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை- வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!
இவர்கள் அனைவருக்கும் இறைவானால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.
இறுதியாக... ஒரு இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) என்றொருவர் தேவைப்படும் அளவுக்கு அப்போது அப்படியென்ன தீய கலாச்சாரங்கள் அந்த அரபிய மக்களிடம் மிகுந்திருந்தன..? அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
பெண் குழந்தைகள் பிறந்தால் நம்மைப்போல நெல்மணிகளையோ, எருக்கம்பூவையோ, கள்ளிப்பாலையோ தேடி நேரத்தை விரயம் பண்ணமாட்டார்கள் அந்த காட்டரபிகள். பிறந்தவுடனேயே அந்த 'பச்சை மண்ணை' ஈவிரக்கம் இன்றி சுடும் பாலை மண்ணில் புதைத்து விடுவார்கள் அந்த கொலைபாதக காட்டுமிராண்டி அரபிகள்.
ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய புணரமைப்பின் மூலம் புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு அப்போதிருந்து இப்போது வரை, பெண் குழந்தை என்றால் அப்படியொரு சந்தோசம். இரண்டாவது பெண் குழந்தை என்றால் இரட்டிப்பு சந்தோசம். ஆவலாய் இருந்து நான்காவது ஐந்தாவது மாதமே ஸ்கேன் பண்ணிபார்த்து... மூன்றாவதும் பெண் குழந்தை என்று தெரிய வந்தால்... கேட்கவே வேண்டாம்... மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவர்களிடம்..! அன்றே சுவனம் சென்றுவிட்டது போன்ற பெருமகிழ்ச்சி அந்த இஸ்லாமிய கலாச்சார பெற்றோரிடம்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? ஸ்கேன் பண்ணிய டாக்டரிடம் யாராவது, 'என்ன குழந்தை' என்று கேட்டாலோ அல்லது எவராவது சொன்னாலோ.. போதும்..! போலிஸ் வரும்..! சட்டப்படி கைது செய்ய விலங்கோடு..!? கேவலம் இல்லையா இந்த சட்டமும் அதற்கான பின்னணியும்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?
அன்றைய அரபிகள் பெண்களை அடிமைபோல நடத்தினர். பகலிலும் இரவிலும் வேலை வாங்கினர். அதற்கு பிரதியாக சாப்பாடு போட்டனர். இதுதான் அபோதைய அரபி கலாச்சாரம். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அம்மக்களிடம்..! இன்று அவர்களிடம், ஒரு பெண் மலையளவு பொற்குவியலையே தன் திருமணத்துக்காக கேட்டாலும், அதை மஹராக தரச்சொல்கிறது இஸ்லாமிய கலாச்சாரம்..! சமீபத்தில் என்னுடன் பணியாற்றும் ஒரு அரபி இரண்டு லட்சம் ரியால் (23 லட்சம் ரூபாய்) மஹர் கொடுத்து திருமணம் புரிந்தார். மேலும்... வாடகைஃபிளாட், ஃபர்னிச்சர், கார், சமையல் சாமான்கள், திருமணவிருந்து என அனைத்திற்குமாக சேர்த்து இன்னொரு இரண்டு லட்சம் ரியால் அவரே செலவு செய்தார். (இதுவே இவர்களிடம் ஒரு சராசரி திருமணமாம்..!) அந்த மஹர் முழுமைக்கும் நகைவாங்கி போட்டுக்கொண்டு அந்த அரபியபுதுமணப்பெண் கையை வீசிக்கொண்டு மஹாராணியாய் இல்வாழ்க்கையில் நுழைந்தார்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..!
அன்றைய அரபிகள் பெண்களை அடிமைபோல நடத்தினர். பகலிலும் இரவிலும் வேலை வாங்கினர். அதற்கு பிரதியாக சாப்பாடு போட்டனர். இதுதான் அபோதைய அரபி கலாச்சாரம். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அம்மக்களிடம்..! இன்று அவர்களிடம், ஒரு பெண் மலையளவு பொற்குவியலையே தன் திருமணத்துக்காக கேட்டாலும், அதை மஹராக தரச்சொல்கிறது இஸ்லாமிய கலாச்சாரம்..! சமீபத்தில் என்னுடன் பணியாற்றும் ஒரு அரபி இரண்டு லட்சம் ரியால் (23 லட்சம் ரூபாய்) மஹர் கொடுத்து திருமணம் புரிந்தார். மேலும்... வாடகைஃபிளாட், ஃபர்னிச்சர், கார், சமையல் சாமான்கள், திருமணவிருந்து என அனைத்திற்குமாக சேர்த்து இன்னொரு இரண்டு லட்சம் ரியால் அவரே செலவு செய்தார். (இதுவே இவர்களிடம் ஒரு சராசரி திருமணமாம்..!) அந்த மஹர் முழுமைக்கும் நகைவாங்கி போட்டுக்கொண்டு அந்த அரபியபுதுமணப்பெண் கையை வீசிக்கொண்டு மஹாராணியாய் இல்வாழ்க்கையில் நுழைந்தார்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..!
இஸ்லாமிய பெண்ணுரிமை..!?
அந்நாளில் அரபியரிடத்தில் விபச்சாரம் கொடிகட்டி பறந்தது. பெண்கள் ஆபாச உடை அணிந்திருந்தனர். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பெண்கள் கண்ணியமான உடை அணிந்தனர். மதிக்கப்பட்டனர். விபச்சாரத்துக்கே அங்கே வேலையே இல்லை. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? சென்சார் கட் விழும் என்பதால் நடிகைகள் கூட போடாத ஆபாச ஆடையை இளம்பெண்கள் அணிவதும், சினிமா, டிஸ்கோத்தே, பஃப், நைட் பார்ட்டி, பார், டேட்டிங் என அனுமதி பெற்றும் பெறாமலும் விபச்சார வாசல் தாளாரமாய் இன்றய இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இவை ஏதும் அரசாலும் சமூகத்தாலும் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை. திருமண உறவு இல்லாமல், விபச்சாரம் செய்து இருவர் மாட்டிக்கொண்டால், சட்டப்படி அங்கே பெண்தான் குற்றவாளி..! அப்போது பெரியமனது வைத்து அந்த ஆண், 'விரும்பித்தான் ஈடுபட்டோம்' என்றால் அது சட்டப்படி விபச்சாரமே அல்ல..! இன்னும், இப்போது 'கால்செண்டர் வாசல்களில் காண்டம் மெஷின் வைக்கிறார்கள்' என்கிறது சென்ற மாத செய்தி..! 'இந்திய தேவதாசி கலாச்சாரம்' இன்னும் இருப்பதாய் சென்றவாரம் ஒரு செய்தி..! கேவலம் இல்லையா இதெல்லாம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி விபச்சார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?
இதேபோன்று, அப்போது மது அரபியரிடத்தில் ஆறாக ஓடியது. மற்ற தீயதை எல்லாம் ஒரேநாளில் சட்டம்போட்டு ஒழித்து வெற்றி நாட்டிய இறைநெறி, இங்கே மட்டும் இஸ்லாமிய கலாச்சார மாற்றம் படிப்படியாக மூன்று சட்டங்கள் மூலம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு மதுவில் மதிஇழந்து போயிருந்தனர் அந்த காட்டுமிராண்டி அரபிகள். ஆனாலும், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு ஒரு சொட்டுகூட மது இல்லை..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?
(மதுவை எதிர்த்து அரசிடம் கோரிக்கை மனுவுடன் செய்வதறியாது திகைக்கும் நாம்..!)
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? அரசாங்கமே கொலை வெறியோடு மதுக்கடை வைத்து வியாபாரம் செய்யும் நிலையில் நாம் இதை யாரிடம் முறையிடுவது..? பள்ளி மாணவர்கள், பெண்கள் உட்பட எல்லாரும் மது குடிக்கிறார்கள். இதனால், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திக்க வேண்டியவ படித்த பண்டிதர்கள் எல்லாம் சிந்தை மயங்கி செயலற்று வீழ்ந்து கிடக்கின்றனர். மதியிழந்து வாகனம் ஓட்டி அப்பாவி பாதசாரிகளை கொலை செய்கின்றனர். சொத்துக்கள் கொள்ளை இடப்படும்போது சிந்தை இழந்து செயலற்று போய் விடுகின்றனர். தன் குடும்பத்து (தாய்/சகோதரி) பெண்களிடமே பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். பல ஆண்டுகள் வாழ்வேண்டியவர்கள் அல்ப ஆயுசுகளில் நோய் வந்து இறக்கின்றனர். கேவலம் இல்லையா இந்த ஹரப்பா கால பழம்பெரும் சோமபான சுராபான பாரத கலாச்சாரம்..? தேவையா இந்த தமிழக டாஸ்மாக் கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி குடிகார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?
அப்போது அறியாமைக்கால அரபியரிடத்தில், கணவனை இழந்த கைம்பெண்கள் என்றாலே விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! புணரமைக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரம் மூலம் கணவனை இழந்த கைம்பெண்கள் உடனடியாக மறுமணம் செய்விக்கப்பட்டனர், ஏகப்பட்ட மஹரும் பெற்றுக்கொண்டு..! மேலும் இவர்கள் மிகைக்கும் பட்சத்தில், ஒருதார மணமே சிறப்பு எனினும், பொருளாதாரமும் உடல்வலிமையும் அதிகம் இருக்கும் ஆண்கள் அதிபட்சம் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு விதவைகள் மறுவாழ்வு நிகழ்த்திக்காட்டப்பட்டது. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இதோ சென்ற நூற்றாண்டில்தான் கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றும் நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் பல போராட்டங்களின் விளைவால் நீக்கப்பட்டு அதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த ஆகம விதி சமய அடிப்படையில் நடக்கின்றனவே..? பூ, மஞ்சள், குங்குமம், தாலி, நகை, வண்ணப்புடைவை என்று திருமணம் மூலம் சுமங்கலி வேஷம் கொடுத்து, கணவன் இறந்துவிட்டால் அவை ஏதுமற்ற மொட்டைத்தலை அமங்கலி வேஷம் கட்டுதல் போன்ற நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் எல்லாம் கேவலம் இல்லையா..? இதனை கலாச்சாரம் எனக்கூறி கட்டிக்காக்க நமக்கு வெட்கமாக இல்லையா..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?
கருப்பாக பிறந்தவன் என்றால் அடிமை என்ற நிலை. அரபி பேசாமல் வேறு எந்த மொழி பேசினாலும் அவர்கள் 'கால்நடைகள்' என்று புரிந்துணர்வில் வாழ்ந்துகொண்டிருந்த காட்டுமிராண்டி காலத்தில், இந்த நிறவெறியை மொழிவெறியை ஒழித்து 'எந்த நிறம், இனம், மொழி எனினும் அனைவரும் ஆதிமனிதர் ஆதம்-ஹவ்வா தம்பதிகளுக்கு பிறந்த ஒரு தந்தை-தாய் வயிற்று பிள்ளைகள் ஆகிய நாம் சகோதரர்களே' என்ற சமத்துவத்தை நிலைநாட்டியதே..! வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..!
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இன்னும் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த வக்கில்லை நமக்கு. தீண்டாமை சுவரை கட்டுகிறான். பலத்த காவலுடன் இடித்தால், மீண்டும் கட்டுகிறான். இரட்டை குவளை. ஒரே மதம் என்றாலும் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாட்டில் அனுமதி இல்லை. கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பேசினால் தமிழ் பேசுகின்றவனுக்கு தண்ணீர் விடுவது இல்லை. கேவலம் இல்லையா இது..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டிகால மொழிவெறி, இனவெறி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?
இதேபோலத்தான்... நாமே செய்த சிலைகளை வணங்குதல், கல், மண், மரம், காற்று, நெருப்பு, மழை, சூரியன் என கண்டதையெல்லாம் காக்கும் இறைவன் என கருதி வணங்குவது, வட்டி, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, பில்லி, சூனியம், மந்திரம், ஜோசியம், அதிர்ஷ்டக்கல், சகுனம், ஜாதகம், தோஷம், மூடநம்பிக்கைகள், தானாக செத்ததையும், கண்டதையும் உண்ணுதல், முறைதவறி திருமணம் செய்தல், பெண்களுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று அலப்பறை, மரம் வளர்ப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராக இறந்தோரை எரித்தல், யாரோ எவரோ தன் சுயநலனுக்காக எப்போதோ ஏற்படுத்திய மணுதர்மம் எனும் சாதிய சதியை இன்னும் நாம் பிடித்துக்கொண்டு நமக்குள் அடித்துக்கொண்டு இருப்பது போன்ற இத்தனை பாரம்பரிய கலாச்சாரத்தையும் கட்டிக்காக்க வேண்டுமா அல்லது மனித குலத்துக்கு ஏற்ற சிறந்த கலாச்சாரத்தை---இவ்வுலகுக்கு ஏற்ற வாழ்வியல் நெறியை --இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுவதா என்று 20 கோடி இந்தியர்கள் இன்று யோசிப்பது போலவே உலகில் இருக்கும் மூன்றில் ஒருபங்கு மக்களும் யோசிக்கின்றனர்.
சகல கலாச்சாரத்தையும் சீர்தூக்கி நன்மை தீமைகளை தீர ஆலோசித்ததன் முடிவு, இறுதியில் இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர். இது தம் 'உயர்ந்த இருப்பை' பாதிக்கும் என்போர் மட்டும் 'கலாச்சாரகாவலர்(?)' வேஷம் போட்டு இஸ்லாத்தையும் அதனை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோரை(முஸ்லிம்களை)யும் வீம்புக்காக எதிர்க்கின்றனர். ஆனால், உண்மையில் இப்படி எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மட்டும் அறிந்தோ அறியாமலோ 'இதுதான் சரி' என்று ஒன்றை விரும்புகின்றனர். 'அதுதான் இஸ்லாம்' என்று பின்னாளில் அறிய வரும்போது அவர்களும் தங்கள் போலி வேஷத்தை கலைத்துவிட்டு முஸ்லிம் ஆகின்றனர். இறைவனுக்கே எல்லாப்புகழும்.
ஆக, இப்படித்தான்... உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதர்க்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம். அதை இஸ்லாமும் எதிர்க்கிறது என்பதற்காக கட்டிக்காப்பாற்ற முனைவது சமுதாயக்குற்றம்.
இதை நான் சொல்வதற்கு காரணம், நான் பின்பற்றும் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"...என்ற நல்ல தமிழ் கலாச்சாரம்..! இதுவேதான்... நான் பின்பற்றும் "உனக்கு எதை நாடுகிறாயோ அதையே உன் சகோதரருக்கும் நாடு" என்ற இஸ்லாமிய கலாச்சாரம்..!
'தீய கலாச்சாரம்'
மனித சமுதாயத்திடம் உள்ள தீய கலாச்சாரங்களைத்தான் இஸ்லாம் ஒழித்துக்கொண்டிருக்கிறது..!
47 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் அறியாமை காலத்தில் இருந்த போது செய்த சில செயல்களை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கின்றது. நானா அப்படி செய்தேன் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இவற்றை எல்லாம் களையச்செய்து என் வாழ்வில் புது புத்துணர்ச்சியை கொண்டு வந்தது இஸ்லாம். இன்று சமூகத்திற்கு உபயோகமுள்ள ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் இஸ்லாம்தான்.
நாயகம் (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால புரட்சி அன்று மட்டுமல்ல, இதோ இன்று, என் அளவில் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
உங்கள் கட்டுரை என் வாழ்வை மற்றொருமுறை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இனியும் அப்படி செல்லக்கூடாது என்று மற்றொரு முறை எனக்கு நினைவுப்படுத்தி இருக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனிற்கே.
இன்ஷா அல்லாஹ், இங்கு வரும் பின்னூட்டங்களை பார்த்து, தேவைப்படின் மீண்டும் வருகின்றேன்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு , அரபு நாடுகளில் பணிபுரிய செல்லும் இலங்கையை சேர்ந்த பெண்களில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 300 பெண்கள் பிணமாக வருவதும் , அவர்களின் கொடுமைக்கு உட்பட்ட உடல்களும் , அரபு நாடுகளில் பிற இன பெண்கள் நடத்தப்படும் விதம் தெளிவாகிறது .விட்டுவேலைக்கு வரும் வறியவர்களை கொடுமைப்படுத்தும்( பாலியல் உட்பட ) அரபு முதலாளிகள் , தாங்கள் கூறும் கலாச்சாரத்தினால் மேம்பட்டவர்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
மாஷா அல்லாஹ்..இன்று இங்கு (மலேசியாவில் ) நான் கேட்ட பயான் கூட கலாச்சாரத்தை ஒட்டியது தான் .இதை என் பதிவில் கொஞ்சம் வித்தியாசமான முறையில் பதிவிடலாம் என நினைத்தேன் ,நீங்கள் முந்தி விட்டீர்கள்.நீங்கள் அனுமதி தந்தால் இதில் உள்ள சேதிகளை கொஞ்சம் வேறு வடிவில் பதிவிடலாம் என நினைகிறேன்.உங்கள் போல முடியாது இருந்தாலும் ..நன்மையை ஏவ ஒரு ஆசை தேன் தடவி உங்கள் கருத்தை எனக்கு மின் அஞ்சல் செய்யவும் tamilyaz@gmail.com.
tq tq tq
@vijayakumarதங்கள் வருகைக்கும் அருமையான வினாகொண்டு அழகிய முறையில் வினவியதற்கு மிக்க நன்றி சகோ.விஜயகுமார்.
//விட்டுவேலைக்கு வரும் வறியவர்களை கொடுமைப்படுத்தும்( பாலியல் உட்பட ) அரபு முதலாளிகள் , தாங்கள் கூறும் கலாச்சாரத்தினால் மேம்பட்டவர்களா?//
---நிச்சயமாக இல்லை..! கிடையவே கிடையாது..!
சந்தேகமின்றி இது முற்றிலும் இஸ்லாம் சொன்னவற்றிற்கு எதிரான செய்கை..!
அதனால், இஸ்லாம் கூறும் கலாச்சாரத்தில் இவர்கள் தரம் தாழ்ந்தோர் மட்டுமல்ல, குற்றவாளிகள்.
இவர்களை நாம் இன்னும் வன்மையாக கண்டிக்கவேண்டும்.
இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறேன் என்று கூறிக்கொள்ளும், அரபுநாட்டு அரசுகளும்... இதனை தடுக்க, உடனடியாக சட்டங்களை மிகவும் கெடுபிடியாக அமல்படுத்தி, குற்றவாளிகளை உடனே கடுமையாக தண்டித்து, அயல்நாட்டு பணிப்பெண்களின் உரிமையினை காப்பாற்ற அதிக அக்கறை கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்நிலை ஒழியும்.
-----------------------------------
அப்புறம் சகோ.விஜயகுமார்...
கடந்த ஒரு வருடங்களில் இதுபோன்ற குற்றங்கள் பத்துக்கும் குறைவாகவே நான் செய்திகளில் படித்திருக்கிறேன்.
ஆனால்... நீங்கள்... கூறிய...
///...இலங்கையை சேர்ந்த பெண்களில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 300 பெண்கள் பிணமாக வருவதும்...///------இது நான் இதுவரை எங்குமே கேள்விப்படாதது, சகோ.விஜயகுமார்..!
இதற்கு தாங்கள் சரியான ஆதாரம் காட்டவேண்டும். ஏனெனில், ஆதாரமற்ற அபாண்ட குற்றச்சாட்டுக்களும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரானது, சகோ..!
@ரியாஸ் அஹமது
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ரியாஸ் அஹமது,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
தாளாரமாய் செய்யுங்கள் சகோ..!
இதற்கெல்லாம் என் அனுமதியை கோர வேண்டியதில்லை..!
ஏனெனில், உங்களுக்கும் இப்பதிவில் copyright உண்டு சகோ..!
என் தளத்தில் கடைசி வரியை படியுங்கள்..! (எப்போதோ... நான் போட்டுவிட்டேன் இதை..!)
//Copyright: For Me (Mohamed Ashik) & You--with a link to this blog.//
//நன்மையை ஏவ ஒரு ஆசை//-----அல்ஹம்துலில்லாஹ்..!வாழ்த்துக்கள் சகோ..!
ஆவலாய் உள்ளேன், உங்கள் பதிவினை படிக்க.
@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நாயகம் (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால புரட்சி அன்று மட்டுமல்ல,இதோ இன்று, என் அளவில் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.//
---அல்ஹம்துலில்லாஹ்..!
தங்கள் வருகைக்கும் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மது.
//இங்கு வரும் பின்னூட்டங்களை பார்த்து, தேவைப்படின் மீண்டும் வருகின்றேன்...//
---இன்ஷாஅல்லாஹ், அவசியம் வாருங்கள் சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
இஸ்லாத்தை எத்திவைப்பதில் தங்களுக்குள்ள ஆர்வம் ....
மாஷா அல்லாஹ்...
பார்ப்போம் ...
கலாச்சார காவலர்கள் எந்தவிதமான முறையில்
ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ?
நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு,
சிலகாலத்திற்கு முன் இணையத்தில் வாசித்து அறிந்த செய்தியே, அதுவும் மனிதாபிமானம் அற்ற இலங்கை அரசே கூட அச்செய்கை குறித்து கண்டித்திருந்தது .அச்செய்தி வருடாவருடம் அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பெண் பணியாளர்களின் சவபெட்டிகளின் எண்ணிகையை பட்டியல் இட்டுருந்தன .அவ்வினைப்பு கண்டவுடன் தங்களுக்கு தெரிவிக்கின்றேன் .தற்போது தேடியதில் கிடைத்த இணைப்பு இது .....
http://thoomai.wordpress.com/2011/02/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/
நண்பருக்கு வணக்கம்
கலாச்சாரம் என்பதற்கு பல பொருள் இருந்தாலும் பொதுவாக ஒரு சமுதாயத்தின்[தனி மனிதனின்] அங்கீகரிக்கப் பட்ட வாழ்வியல் நடைமுறைகள் என்று கொள்ளலாம்.சமஸ்கிருத 'கலாச்சார்' தமிழில் நாகரிகம் என்றும் கூறலாம்.
*************
1.இப்பதிவை இஸ்லாம பிற கலாச்சாரங்களை ஒழிக்கிறதா என்பதை விட மாற்றுகின்றதா என்று பதிவிட்டு இருந்தால் ஆக்க பூர்வமாக இருந்து இருக்கும்.
**************
2.அக்கால அரபிகளின் நாகரிகத்தை குறை சொல்லி அதனை மாற்றியது இஸ்லாம் என்று கூறுகிறீர்கள்.அவர்களின் செயலாக நீங்கள் பதிவிட்ட அனைத்துமே ,குரானில் அவர்களை பற்றி இருக்கும் வசனங்களில் இருந்துதான்.இது மட்டும் போதுமா? வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகின்றது.வேறு ஆதாரம் இருப்பின் சுட்டி தரவும்.
*************
3.ஒருவர் ,அல்லது குழு மதம் மாறும் பொது உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுகின்றது.சில சமயம் உடை,மொழி கூட மாறுகின்றது.மத்தியக் கிழக்கின் பெரும்பான்மை மொழி அரபி.இந்தியாவில் பெரும்பாலான இஸ்லாமியர்களின் தாய்மொழி உருது,அதாவது மொகலாயர்களின் ஆட்சி மொழி ஹிந்துஸ்தானி இந்தி[தேவநாகரி எழுத்து],உருது[அரபி எழுத்து] ஆகவும் பரிணமித்தது.
**************
4. இஸ்லாமிய நாகரிகத்திலும்,பிற நாகரிகங்கள் போல் கால்த்திற்கேட்ப பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ள்ன.
மாற்றங்கள் ஆக்கபூர்வமானவை என்றால் ஏற்றுக் கொள்வதே மனித சமுதாயத்தை முன்னேற்றும்.
நன்றி
மிக்க நன்று.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆஷிக்!
தெளிவான பதிவு. இஸ்லாத்தினால் சமூகத்துக்கு கேடு வந்துள்ளது என்று கூக்குரலிடும் பலருக்கும் பதிலாக உங்கள் பதிவு அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்!
அன்பு சகோ ஆசிக், சில நாட்களுக்கு பிறகு இன்று தான் வலை உலகிற்கு வந்துள்ளேன். முதல் பதிவே உங்களுடையது தான். மிக நல்ல பதிவு. இஸ்லாத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வதற்கு நாமும் ஒரு காரணம் ஆகும்(நானும் தான்). நாம் சத்திய இஸ்லாத்தை சரியான முறையில் கடைப்பிடித்து இருந்தால் இன்றைய வரலாறு வேறு மாதிரி இருந்து இருக்கும். இன்ஷா அல்லாஹ் இனியாவது உண்மை முஸ்லிமாய் இருக்க முயற்சிப்போம். கலாசார சீரழிவில் இருந்து நாமும் தப்பி பிறரையும் காப்போம்.
@vijayakumarசகோ.விஜயகுமார்,
சுட்டி அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.
அதில் அங்கே சென்று படித்தேன்.
முதலில்.... அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தளமோ, எழுதுபவர் ஒரு முகம் அறியப்பட்ட ஊடகவியலாளரோ அல்ல. அது மற்றுமொரு வேர்ட்பிரஸ் தளம். எழுதுவரின் ஈ-மெயில் ஐடி தவிர வேறு விபரம் ஏதும் இல்லை. (tharmini@hotmail.fr என்பதன் மூலம் அவர் பிரான்சில் இருந்து கொண்டு எழுதுகிறார் என்பது புரிகிறது)
அங்கே...
மிகவும் பிரபலமாக ஏகப்பட்ட ஊடகங்களில் வந்த பலர் அறிந்த துயரம் மிகு அந்த சவூதி அரேபிய ஆணி மேட்டர் பற்றிய இடுகைதான் அது.
அந்த இடுகையின் ஊடாக ஒருவரி...
\\\\\
100க்கு மேற்பட்ட சடலங்கள் ஒவ்வொரு வருடமும் வருகின்றன
\\\\\
---இப்படித்தான் எழுதி இருக்கிறார் அந்த பதிவர்.
இதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை. நானும் அங்கே பின்னூட்டத்தில் இதற்கு ஆதாரம் கேட்டிருக்கிறேன்.
ஆனால்,
இந்த
"100 க்கும் மேற்பட்ட"
---என்பதைத்தான் தங்கள் கூற்றான....
"ஆண்டுக்கு சராசரியாக 300 பெண்கள் பிணமாக வருவதும்"
---என்பதற்கு ஆதாரமாக சொல்லவே முடியாது சகோ.விஜயகுமார் அவர்களே..!
முதலில் இந்த விஷயம் நம்பும்படியாகவே இல்லையே சகோ.விஜயகுமார்.
(இங்கே சவூதியில் நானும் பல இலங்கை தமிழர்களுடன் பணிபுகிறேன் என்பதை அறிக.)
@சார்வாகன்
நம்மை படைத்த இறைவனுக்கே நம் வணக்கம் உரித்தாகுக.
//1//---"மாற்றுகிறது" என்று சொல்லியிருந்தால் எப்படி சரியாக இருக்கும்..?
//2//---கண்ணால் காணும் நேரடி ஆதாரங்களை விட சுட்டிகளைத்தான் நம்புவீர்களா..?
//3//---தன்னளவில் நடைபெறும் இவற்றால்... பிற மனித சமுதாயத்துக்கு என்ன தீங்கு..?
//4//---இஸ்லாத்திற்கு எதிராக எனில், இந்த மாற்றங்களுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லையே..?
//மாற்றங்கள் ஆக்கபூர்வமானவை என்றால் ஏற்றுக் கொள்வதே மனித சமுதாயத்தை முன்னேற்றும்.//
---தங்கள் வருகைக்கும் இக்கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சார்வாகன். இதை உங்கள் அளவில் உங்கள் வாழ்வில் செயல்படுத்த அன்புடன் பரிந்துரைக்கிறேன்.
___________________________________
தங்களின் முந்தைய வருகையில்...
////மைனஸ் ஓட்டு போட்ட சகோதரர்களிடமிருந்து (சகோ.சார்வாகன் & six others) பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறேன்..!
June 6, 2011 05:25 PM////
---நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு இன்றுவரை உங்களிடமிருந்து பதிலையே காணோமே..?
_______________________________
நான் மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பிடிக்கவில்லை...!
அக்கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்காத பட்சத்தில் இனி நீங்கள் கேட்கும் எக்கேள்விகளுக்கும் நான் பதில் கூறப்போவதில்லை சகோ.சார்வாகன்..!
நண்பர் ஆசிக்
நண்பர் சுவனப் பிரியன் பதிவுகளில் இத்னை பற்றி அதிகமாகவே விவாதித்து விட்டோம்.அதை பற்றியே பேச வேண்டாம் என்றுதான் பின்னூட்டம் உங்கள் தளத்தில் இடவில்லை.
படத்தை நீக்குவதற்கு இன்னும் மேம்பட்ட முறையில் பேசி பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து.நீங்கள் எதிர்பதிவு இட்ட்டது ,ஒரு சுய மதிப்பு பிரச்சினை ஆக்கிவிட்டது.உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரி பதிவுகள் எதிர்காலத்தில் வேண்டாம் என்பதற்காக்வே எதிர் வாகளித்தேன்.பல பதிவுகளில் எதிர் வாக்களித்து இருக்கிறேன்.தமிழ் மணம் அளித்த உரிமை. நீங்களும் நண்பர் இ.சே வின் பதிவுக்கு எதிர் வாக்கு,அளித்து விவாதித்து இருக்கலாம்.சில சொற்கள் தவிர்த்த எதிர் பதிவு இட்டிருக்கலாம்.அவ்வளவுதான்.
மற்றபடி நான் உங்கள் அடிக்கடி தளத்திற்கு வருவேன்.தேவை என்றால் பின்னூட்டம் இடுவேன்.அதை ஏற்காவிட்ட்டாலும் பரவாயில்லை.பின்னூட்டம் ஏற்று அதற்கு பதில் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை.மீண்டும் சந்திப்போம்.
நன்றி
@சார்வாகன்
Episode-1: "பன்றிப்படம்"
ஒருவன் மற்றொருவனை கத்தியால் குத்துகிறான். இக்கொலை முயற்சிக்கு அமைதியான முறையில் காரணம் கேட்கப்பட...
"ஏதோ தோணுச்சு குத்தனும்னு" ---என்ற பதில் ஏற்புடையதாக இல்லாததால் பலமுறை கேட்கப்பட...
"கொல்லனும்னா வீச்சரிவாளால் கழித்தில் அல்லவா வெட்டியிருப்பேன்...
கத்தி பிரச்சினைன்னா முன்னாடியே சொல்லி இருக்கணும். அரிவாளோ, கடப்பாறையோ உபயோகித்திருப்பேன்... !"---இது பதில்.!?
ஆக, "பன்றிப்படம்" பற்றியும் அதற்கான பதில்களுக்கும் எதிராக எங்குமே மூச்சுவிட வில்லை நீங்கள்.
-----------------------------------
Episode-2: "அனானிபடம்"
இப்போது அவனே வேறொருவனை துப்பாக்கியால் சுடுகிறான். இக்கொலை முயற்சிக்கும் அமைதியான முறையில் காரணம் கேட்கப்பட்டால் அதேபோல மழுப்பல்தானே பதிலாகும்... என்று போடப்பட்டதுதான் காரணத்துடன் கூடிய கண்டனபதிவு.
ஆனாலும் இதற்கான பதில்... "முன்பே அன்புடன் கோரிக்கை மனு கொடுத்திருந்தால் துளைத்த குண்டை தோண்டி எடுத்திருந்திருப்பேன்..!" --இது பதில்..!?
-----------------------------------
குத்திய கத்தியை உருவிவிடுவதும், சுட்ட துப்பாக்கி குண்டை நீக்கி விடுவதும் கொலைச்செயலுக்கான தண்டனையா..?
-----------------------------------
நான் கேட்ட கேள்விகளுக்கு எங்குமே பதில் அளிக்க விரும்பவில்லை நீங்கள்.
காரணம்-1.
பன்றிப்படத்தை எதிர்க்கவில்லை.
காரணம்-2.
இறைவனையே நேரில் பார்த்தால் கூட நம்புவீர்களா தெரியவில்லை. ஆனால், அனானி படத்தை இன்னார்தான் என நம்பிவிட்டீர்கள்.
காரணம்-3.
நாளை எவராவது "இது சார்வாகன் அப்பா" என்று கற்பனையாக வரையப்பட்ட அனானி படத்தை போட்டாலும் பிளஸ் ஓட்டு போட்டு பின்னூட்டம் போட்டு ஆதரிப்பீர்கள்.
காரணம்-4.
இதனை எதிர்த்து எவனாவது கண்டனம் எழுதினால் மைனஸ் ஓட்டு குத்தி அது என் உரிமை என்பீர்கள்.
சகோ.சார்வாகன்,
தங்களை பற்றியும் ஐயம் திரிபற அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கலாச்சார காவலர்கள் எந்தவிதமான முறையில்
ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ?//
---இஸ்லாம்தான் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்திருக்கிறது என்ற நச்சுக்கருத்தை பரப்பும்... அவர்களை சிறிதேனும் நீதமாக சிந்திக்க வைக்கவே இப்படியெல்லாம் எழுதவேண்டியுள்ளது சகோ.ஜபருல்லாஹ்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
இந்த பதிவை படிக்கும்போது பின்வரும் இறைவசனம் தான் நினைவிற்கு வருகிறது.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.”
(திருக்குர்ஆன் 16: 125).
நன்றி சகோ.!
@சிராஜ்அருமையான நிதர்சனமான கருத்துக்களை கூறியுள்ளீர்கள் சகோ.சிராஜ். முற்றிலும் உண்மை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இஸ்லாத்தினால் சமூகத்துக்கு கேடு வந்துள்ளது என்று கூக்குரலிடும் பலருக்கும் பதிலாக உங்கள் பதிவு அமைந்துள்ளது.///
---அல்ஹம்துலில்லாஹ்..!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//"இஸ்லாம்தான் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்திருக்கிறது" என்ற நச்சுக்கருத்தை சிலர் பரப்புகிறார்கள். இஸ்லாம் பற்றிய இன்றைய 'கலாச்சார காவலர்(?)களுடையது' முற்றிலும் தவறான புரிதல் ஆகும். இதை இவர்கள் உணரவேண்டும். எவ்வளவு விரைவாக உணர்கிறார்களோ அது அவர்களுக்கும் மற்றோருக்கும் மகத்தான நன்மை. ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை நம் வாழ்வினில் கைக்கொள்வோம் சகோ..!//
இஸ்லாம் மாற்று கலச்சாரங்களை அழித்து விட்டது என்று புளுகுபவர்களுக்கு இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இந்த செய்திகளை தருகிறேன்
இஸ்லாமிய வரலாற்றில் இதனை பார்க்கலாம்
பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது
அதனை பார்க்க;
உமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:
’அவர்களுடைய உயிர்கள் உடைமைகள் அவர்களுடைய தேவாலயங்கள் மடாலயங்கள் அவர்களிலுள்ள நலமுள்ளவர்கள் நோயுள்ளவர்கள் அனைவருக்கும் அபயம் அளிக்கப்படும் “எலியா”வின் சமயத்தவர் அனைவருக்குமே! அவ்ர்களுடைய வழிபாட்டிடங்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்படமாட்டாது அவை தகர்க்கப்பட மாட்டாது. அவற்றின் கட்டுமானத்திலும் சுற்றுச் சுவர் களிலும் எத்தகைய மாறுதலும் மேற்கொள்ளப்பட மாட்டாது.அவர்களுடைய சிலுவைகளுக்கோ சொத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படாது. சமய விவகாரங்களில் அவர்கள் வற்புறுத்தப்பட மாட்டார்கள்.அவர்கள் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்.-என்று உறுதிமொழி அளிக்கப்படுகின்றது.
ஆக்கபூர்வமான பதிவு சகோ நன்றி
இப்பதிவின் தீய கலாச்சார ஒழிப்பு என்பது புரிந்து விட்டது.
என் தந்தையை நீங்கள் மதிக்குமாறு வலியுறுத்துவது அவசியமில்லை என்பதை அறிவேன்.அதற்கான கருத்து சுதந்திரம் உங்களுக்கு உள்ளது என்று சான்றளிக்கிறேன்.இத்ற்கு ஒரு பதிவு படத்தோடு வெளியிடலாம்,நான் வேண்டுமென்றால் ஃப்ளஸ் ஓட்டு போடுகின்றேன்.மைனஸ், ஃப்ளஸ் சரியாகப் போய்விடும்.
________
நன் தொடக்கப் பள்ளியில் படிக்கும் போதுதான் இம்மாதிரி பிரச்சினைகளை பார்த்திருக்கிறேன்."இவன் என் அம்மாவை,அப்பாவை பத்தி கெட்ட வார்த்தையில் திட்டிட்டான் சார் " என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்போதே தாண்டி வந்தாயிற்று.
_______________
பல மதத்தவர்,பல இனத்தவ்ர் வாழும் நாட்டில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் சமாதான தீர்வு மட்டும் காண முயற்சிப்பதே அனைவருக்கும் நல்லது.
மற்ற படி இஸ்லாமும் பிற மதங்கள் போன்றதுதான்,இஸ்லாமியர்களும் பிறர் போன்றவர்கள்தான்.
அப்பாடா!!!!!!!!!!! ஒரு பதிவே எழுதி இருக்கலாம்.
/பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது /
நண்பர் ஹைதர் அலி,
திரு உமருக்கு பாலஸ்தீனத்தை கைப்பற்றும் அதிகாரம் இருந்ததாக ஒத்துக் கொள்கிறீர்களா?காரனத்தை விளக்கவும்.
அருமையான பதிவு.
பதிவுலகின் தினமலம் கொடுக்கி.நெட் யு . எ .இ யில் தடை செய்யப்பட்டுள்ளது.
செய்யது
@சார்வாகன்///என் தந்தையை நீங்கள் மதிக்குமாறு வலியுறுத்துவது அவசியமில்லை என்பதை அறிவேன்.அதற்கான கருத்து சுதந்திரம் உங்களுக்கு உள்ளது என்று சான்றளிக்கிறேன்.இத்ற்கு ஒரு பதிவு படத்தோடு வெளியிடலாம்,நான் வேண்டுமென்றால் ஃப்ளஸ் ஓட்டு போடுகின்றேன்.மைனஸ், ஃப்ளஸ் சரியாகப் போய்விடும்.///----"தன் தந்தையே கேவலப்பட்டாலும்...அநீதமான-தீய-உங்களுடைய கூடாநட்பே உங்களுக்கு பிரதானமாக போய்விட்டது..!"
இனி...என்னத்த சொல்ல..!? எப்படி சொன்னால் உங்களுக்கு புரியும் என்று பலவாறு முயற்சித்து இறுதியாக எப்படியெல்லாமோ சொல்லிப்பார்த்தாலும்... ம்ஹூம்... நீங்கள் தேறாத கேஸ் சார்..!
உங்களின் குரூர வன்மம் அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது. இதனைப்பற்றி வெளிப்படையாக இப்படி எழுத மனிதன் என்ற முறையில் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்திருக்க வேண்டும் சார்.
எக்கொள்கையுமற்ற நாத்திகர் என்பதனால் எந்த extreme வேண்டுமானாலும் செல்வீர்களா..? ச்சே..!
உங்களுடன் சகவாசம் வைத்ததால் நானும் தரம் தாழ வேண்டியதாகிறது. எனக்கு என் character முக்கியம்.
I'm very very sorry. Deep condolence for your character..! Bye.
சகோ
நல்ல பதிவு. ஆனால் தங்களின் சார்வாகனுடனான பின்னூட்ட விவாதம் நாகரிக மரபு தாண்டுகிறது. கவனத்தில் கொள்க.
@S
//தங்களின் சார்வாகனுடனான பின்னூட்ட விவாதம் நாகரிக மரபு தாண்டுகிறது.//---சரியான சமயத்தில் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ.S.
'காரணம் 1,2' களுக்கு பதில் சொல்லாமல் மழுப்புவதால்... 'காரணம் 3,4' களை வேறு வழியின்றி 'மரபு எல்லைவரை' சென்று வைக்க வேண்டியதாயிற்று...
ஆனால், அதைக்கூட நியாயப்படுத்தும் போக்கை காணும்போது...
YES..!
அதை நானும் உணர்ந்துகொண்டுத்தான்...
///உங்களுடன் சகவாசம் வைத்ததால் நானும் தரம் தாழ வேண்டியதாகிறது. எனக்கு என் character முக்கியம்.///--என்று கூறி, மரபை தாண்டிக்கொண்டிருந்த என் காலை சட்டென பின்னிழுத்துக்கொண்டுவிட்டேன்.
//கவனத்தில் கொள்க.//---'இன்ஷாஅல்லாஹ், இதுபோல இவர்களை விளங்கிக்கொள்ள வைக்கும்பொருட்டு... என் கேள்விகளை வைப்பதில் இனி இஸ்லாமிய மரபு தாண்டமாட்டேன்' என்று உறுதி கூறுகிறேன் சகோ.S.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
இந்த பதிவில்,
அந்த இறைவசன நெறிக்கு மாற்றமாக...
ஏதும் 'விவேகமற்ற அழகற்ற உபதேசம்' இருந்தால்...
அல்லது
அதுபோன்ற வார்த்தைகள் இருந்தால்...
அவற்றை தயவு செய்து நம் நேரிய மார்க்கத்திற்காக அவசியம் சுட்டிக்காட்டுங்கள் சகோ.அப்துல் பாஸித்.
இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் அவற்றை நீக்கி விடுகிறேன்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
இப்பதிவு,
இஸ்லாம் எப்படி மனித சமுதாயத்திடம் மண்டிக்கிடக்கும் தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து நல்ல கலாச்சாரங்களை கைக்கொள்ள மக்களை ஏவுகிறது என்பதை பற்றியது.
என்றாலும்,
இதனை ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுக்கலாச்சாரத்தை பின்பற்றுவோரிடத்தில், எந்தவித நிர்பந்தமும் அடக்குமுறையும் ஒரு இஸ்லாமிய அரசிடம் இருந்து இல்லை என்பது உங்கள் பின்னூட்டம் மூலம் நீங்கள் அறியத்தரும் செய்தி.
அடுத்து,
சகோ.சார்வாகன் உங்களிடம் கேட்டிருக்கும் நியாயமான கேள்விக்கு விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி &
சகோ.அப்துல் பாஸித்.
என் அழைப்பை ஏற்று, மீண்டும் உங்கள் இருவர் வருகைக்காக எதிர்நோக்கியுள்ளேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சரியான தருணத்தில் எழுதப்பட்ட விரிவான கட்டுரை சகோ. வாழ்த்துக்கள்.
முக்கியமாக ஆக்கத்திற்கு பிரதிபலிக்கும் படங்கள் நீங்கள் சொல்ல வேன்டிய விஷயத்தை உரக்க சொல்கிறது. அதிலும், முதல், மூன்றாவது படம் சூப்பர். புரியாதவர்களுக்கும் புரிந்துவிடும்.
மிக முக்கியமான ஒரு செய்தி: அதாவது முஸ்லீம்கள் தவறு செய்தாலும் தவறு தான் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறோம். இங்கு முஸ்லீம்கள் நல்லவர்கள் என்பதை பற்றியல்ல பதிவு. இஸ்லாம் நல்ல வாழ்வியல் நெறிமுறை என்பதே இங்கு பதியப்படுவதின் நோக்கம். சகோ விஜயகுமார் கவனிக்க. ஆனால் நீங்கள் எடுத்துரைத்த விஷயம் கண்டிக்கத்தக்கது, தவறு யார் செய்தாலும் தவறு தான், அது சவுதியாக இருந்தாலும், குஜராத்தாக இருந்தாலும்.
//அரபு முதலாளிகள் , தாங்கள் கூறும் கலாச்சாரத்தினால் மேம்பட்டவர்களா?//
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், அதாவது ஒருவன் முஸ்லீம் என்ற காரணத்திற்காக எது செய்தாலும் (தவறாக இருந்தாலும்) சரி என்று வேறு எந்த முஸ்லீமும் கூற மாட்டான். இங்கு பதிவு அரபியர்களை பற்றியோ அல்லது முஸ்லீம்களை பற்றியோ அல்ல, மாறாக இஸ்லாத்தை பற்றி.
//அதனால், இஸ்லாம் கூறும் கலாச்சாரத்தில் இவர்கள் தரம் தாழ்ந்தோர் மட்டுமல்ல, குற்றவாளிகள். //
சரியான பதில்.
//பல மதத்தவர்,பல இனத்தவ்ர் வாழும் நாட்டில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் சமாதான தீர்வு மட்டும் காண முயற்சிப்பதே அனைவருக்கும் நல்லது.
மற்ற படி இஸ்லாமும் பிற மதங்கள் போன்றதுதான்,இஸ்லாமியர்களும் பிறர் போன்றவர்கள்தான்.//
சகோதரர் சர்வாகான், அதனால் தான் எல்லோரையும் போல் இஸ்லாமியரையும், முஸ்லீமையும் மதியுங்கள் என்று கூறுகிறோம்.
அப்புறம் உங்க தந்தையை பற்றிய செய்திகளுக்கு நீங்கள் அளித்த பதிலை கண்டும் அதன் நீங்கள் கூறிய தீர்வை (பதிவு போடுங்கள் என்று கூறியது) கண்டும் அதிர்ச்சி அடைகிறேன். உங்கள் கூற்றில் இருந்து நீங்கள் பின்வாங்க கூடாது என்பதற்காக என்ன் வேண்டுமென்றாலும் செல்லலாம் என்று நினைக்காதீர்கள். அது நாகரீகம் அல்ல. இது இஸ்லாத்திலிருந்து சொன்னது இல்லை, பொதுவாக உலக நடைமுறையை தான் சொல்கிறேன்.
@syedabthayar721தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், தகவலுக்கும் மிக்க நன்றி சகோ.செய்யது.
அஸ்ஸலாமு அழைக்கு வரஹ்...
//இந்த பதிவில்,
அந்த இறைவசன நெறிக்கு மாற்றமாக...
ஏதும் 'விவேகமற்ற அழகற்ற உபதேசம்' இருந்தால்...
அல்லது
அதுபோன்ற வார்த்தைகள் இருந்தால்...
அவற்றை தயவு செய்து நம் நேரிய மார்க்கத்திற்காக அவசியம் சுட்டிக்காட்டுங்கள் //
சகோ.! அழகிய முறையில் அந்த குர்ஆன் வசனத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் நான் குறிப்பிட்டுள்ளேன். பதிவில் எந்த தவறையும் நான் காணவில்லை.
ஆனால் பின்னூட்டங்களில்,
//ம்ஹூம்... நீங்கள் தேறாத கேஸ் சார்..!//
//உங்களின் குரூர வன்மம் அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது. இதனைப்பற்றி வெளிப்படையாக இப்படி எழுத மனிதன் என்ற முறையில் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்திருக்க வேண்டும் சார். //
//உங்களுடன் சகவாசம் வைத்ததால் நானும் தரம் தாழ வேண்டியதாகிறது.//
இவற்றை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.
நண்பர் சந்தனம் என்கிற சங்கர் என்கிற திரு சார்வகான் அவர்களுக்கு நண்பரே நலமா?
நாம் நண்பர் செங்கோடி தளத்தில் சந்தித்த பிறகு இப்போது சந்திக்கிறோம் என்று நினைக்கிறேன்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
//திரு உமருக்கு பாலஸ்தீனத்தை கைப்பற்றும் அதிகாரம் இருந்ததாக ஒத்துக் கொள்கிறீர்களா?காரனத்தை விளக்கவும்.//
ஜெருசலேத்தில் கால்வைத்த முதல் இஸ்லாமியச் சக்ரவர்த்தி உமர்தான். அது கி.பி. 638 ம் ஆண்டு நடந்தது.
ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638 ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717 ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான். ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, "உமையாக்கள்" என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.)
அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது. யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.
ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான். கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனை முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக எடுத்துக்கொள்வது இஸ்லாமியர் வழக்கம். ஆனால் ஒரு தெளிவான ராஜதந்திரியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்றே பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
உண்மையில், உமருக்கு இஸ்லாத்தைப் "பரப்ப" வேண்டிய அவசியம் அத்தனையன்றும் தீவிரமாக இருப்பதாக அப்போது தோன்றவில்லை. தானாகவே அது பரவிக்கொண்டிருந்தது. ஆகவே, அமைப்பு ரீதியில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதே அவரது முதல் சிந்தனையாக இருந்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரேபிய சமூகமும் இஸ்லாத்தில் இணைவது பெரிய விஷயமாக இருக்காது என்றே அவர் கருதினார். ஏனெனில், "மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப் பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனாலேயே அங்கீகரிக்கப்படாது" என்ற பொருளில் வரும் குர்ஆனின் ஒரு வசனத்தின்மீது அவருக்கு அளப்பரிய நம்பிக்கை உண்டு.
தொடர்ச்சி
இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற்றும் தேசங்களில் உள்ள பிற இனத்தவர் அனைவரிடமும் "உங்கள் உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்படும்" என்று முதலில் சொல்லிவிடுவது வழக்கம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஒருமுறை, "இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு நியமிக்கிறேன். அவரது பணி உங்கள் தோலை உரிப்பதோ, உங்கள் சொத்தை அபகரிப்பதோ அல்ல. உங்கள் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பது மட்டுமே. இதிலிருந்து எந்த ஆளுநராவது தவறுகிறார் என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உரிய தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு" என்று பேசியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் உமர் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர்கள், பைசாந்தியர்கள். (பைசாந்தியர்கள் என்பது இனத்தின் அடையாளப்பெயர். மத ரீதியில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே.)
அன்றைய தேதியில் உலகின் மிக வலுவான ராணுவம் கொண்ட தேசங்களுள் ஒன்று எகிப்து. ரோமானிய ராணுவத்துக்கு அடுத்தபடி மிகப்பெரிய ராணுவமாக அது இருந்தது. பேரரசின் ஆண்டுச் செலவுக்கணக்கில் மூன்றிலொரு பங்கை ராணுவத்துக்குச் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். (மிகப்பெரிய குதிரைப்படையும், கடலளவு நீண்ட காலாட்படையும், அச்சமூட்டக்கூடிய யானைப்படையும் கொண்டது எகிப்து ராணுவம் என்று எழுதுகிறார் இப்னு அஜ்வி என்கிற ஒரு சரித்திர ஆசிரியர். யுத்தங்களுக்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து யானைகளை ஓட்டிவந்து வருடம் முழுவதும் பழக்குவார்களாம்.)
ஆனால், புதியதொரு பேரரசை நிறுவுவது என்கிற மாபெரும் கனவுடனும் தன்னம்பிக்கையுடனும் யுத்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் பைசாந்திய ராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பல இடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டு முழந்தாளிட்டார்கள். வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன. (யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)
சரித்திரத்தில், மிகக் கடுமையான யுத்தங்கள் என்று வருணிக்கப்படுவனவற்றுள் ஒன்று இது. எத்தனை தினங்கள் நடைபெற்றன என்பது பற்றிய திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பைசாந்தியர்கள் தோல்வியைத் தழுவியதாகத் தெரிகிறது.
எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப் பார்க்கலாம்.
அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது. வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.
தொடர்ச்சி
யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள். (உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள். இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு.
இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்?
மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும். அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.
ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.
ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."
இது கதையல்ல. இஸ்லாமிய சரித்திரத்தின் ஓரங்கமான இச்சம்பவம் அனைத்து யூத, கிறிஸ்துவ வரலாற்று நூல்களிலுமேகூடப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. "முகம்மது நபியே ஒரு கட்டத்தில் யூத மதத்துக்கு மாறிவிடத் தயாராக இருந்தார்" என்று எவ்வித ஆதாரமும் இல்லாத வாதத்தை முன்வைத்த யூத சரித்திர ஆராய்ச்சியாளர் மார்ட்டின் கில்பர்ட் போன்றவர்கள் கூட உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வருணித்திருக்கிறார்கள்.
உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை அபூபக்கரைக் காட்டிலும் எளிமையானவராகவே சித்திரித்திருக்கிறார்கள். அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள். எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார். அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது. அபூபக்கரைப் போலவே, தன் அகங்காரம் மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வருணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான "நிலமெல்லாம் ரத்தம்" தொடரில்
எழுத்தாளர் பா. ராகவன்
நண்பரே இதனை பொறுமையாக படிக்கவும்.
உங்களுக்கான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) அலைக்கும் ஸலாம் வரஹ்...
படங்கள் பற்றி பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.
அவையும் அவைபோன்று இன்னும் நான்கைந்தும் எனக்கு ஒரு சவூதி சகோதரர் சென்ற மாதம் மெயிலில் அனுப்பினார். இங்கே பயன்படுத்திக்கொண்டேன். இதனை டிசைன் பண்ணியவர் யார் என(அவருக்கும்)தெரியவில்லை.
மேலும் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கும், வருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.
@Abdul Basith
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///சகோ.! அழகிய முறையில் அந்த குர்ஆன் வசனத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் நான் குறிப்பிட்டுள்ளேன். பதிவில் எந்த தவறையும் நான் காணவில்லை.///---மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்.
///இவற்றை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.///---சரியான கருத்துதான் சகோ. வேறுவழியின்றி இப்படி ஆகிவிட்டது. இன்ஷாஅல்லாஹ் இனி இப்படி ஆகாது சகோ.
@ஹைதர் அலி ஒரு நடுநிலையாளர் வெளியிட்ட விளக்கத்தை தந்து உள்ளீர்கள். நன்றி சகோ.
2004-ஆம் ஆண்டு வெறும் 26.53% இந்திய மக்களின் ஆதரவையும், 2009-ஆம் ஆண்டு 28.52% இந்திய மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு ஒரு கட்சி இந்தியா எனும் இவ்ளோ பெரிய நாட்டினை ஜனநாயம் என்ற அடிப்படையில் "கைப்பற்ற"(?!) முடிகிறது.
ஆனால், எகிப்திய பைசாந்திய ராணுவம் தவிர, முஸ்லிம்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட அப்பாலஸ்தீன பிரதேச அனைத்து பிரிவு மக்களுமே பைசாந்திய ஆட்சியிலிருந்து விடுதலைக்காகவும், கலீஃபா உமர் ஆட்சிக்காக ஆவலுடன் மகிழ்ச்சியாக காத்திருந்ததாலும்...
'கலீஃபா உமருக்கு பாலஸ்தீனத்தை "கைப்பற்ற"(!) அனைத்து அதிகாரங்களும் உண்டு' என்பது இவ்விளக்கத்தில் இருந்து தெளிவாகிறது, சகோ.ஹைதர் அலி.
"நம் நாட்டிற்கு ஆட்சியாளர் என்றால் கலிபா உமர் போல ஒருவர் வேண்டும்" என்று காந்தியடிகள் கூட உமர்(ரலி)வை பாராட்டியுள்ளார்.
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல நேர்த்தியான பதிவு
படங்களும் மிக மிக அருமை அந்த ஈதன் பழம் அஜ்வா வகை யா?
@bat
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அந்த ஈதன் பழம் அஜ்வா வகை யா?//-------அடப்பாவமே...!?
இல்லை...இல்லை...சகோ.bat..!
அது அஜ்வா வகை பேரீச்சம்பழம் இல்லை..!
தீய கலாச்சாரத்துக்கு ஓர் உருவகம்..!
அது........
"நல்ல கலாச்சாரங்களான" சுவையான பதமான பச்சைநிற திராட்சை பழங்களுக்கு மத்தியில்... ஒரு துர்வாடையுடன் கூடிய வதங்கிய, அழுகிய திராட்சை எனும் "தீய கலாச்சாரம்"....!
பொதுவாக நன்மக்கள் என்ன செய்வார்கள்...? இதை மட்டும் பொருக்கி தூக்கி தூர எரிந்து விட்டு மற்றதை சுவைக்க மாட்டார்களா...?
இந்த வேலையைத்தான்
இஸ்லாம்
செய்யச்சொல்கிறது சகோ, தீய கலாச்சாரத்தை துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டு...!!!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.bat.
நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு , தங்கள் பார்வைக்கு
http://www.srilankaguardian.org/2010/05/shame.html
http://www.migrant-rights.org/2010/01/21/sri-lanka-demands-an-investigation-into-the-murder-of-an-abused-maid-in-saudi-arabia/
http://www.migrant-rights.org/2010/12/15/the-plight-of-maids-in-saudi-arabia/
@vijayakumarசகோ.விஜயகுமார்,
இந்த செய்திகளையெல்லாம் படிக்கும்போதே அதிர்ச்சி வருவதற்கு பதிலாக... பல சந்தேகங்கள், நிறைய முரண்கள் ஆங்காங்கே தென்படுகின்றனவே..?!
மூன்று சுட்டிகளிலும்....
பொதுவாக சம்பளம் தரப்படாமை, வேலைப்பளு, கொடுமை போன்றவன்றால் சிலோன் பெண்கள் தப்பித்து வெளியேறி சிலோன் எம்பசிகளில் தஞ்சம் அடைகிறார்கள்.
அவர்களை பத்திரமாக சிலோனுக்கே 'உயிரோடு' ஃபிளைட்டில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள் சிலோன் எம்பசி காரர்கள்.
ஆனால், சிலோனில் 'பிணங்களாக' இறக்கி வைக்கப்படுகிறார்கள் என்று உங்கள் சுட்டிகள் சொல்கின்றன.
இடையில் 'பிளேனில் என்ன நடக்கிறது' என்று ஒரு உடனடி உயர்மட்ட அதிதீவிர விசாரணை அவசியமாகிறது.
ஏனெனில், "இத்தனை பிணங்களை ஏற்றினோம்" என்று சிலோன் எம்பசிகளில் நியூஸ் இல்லை.
"பிணங்களை இறக்கினோம்" என்றுதான் 'உங்கள் சுட்டிகள்' சொல்கின்றன.
ஆனால், அப்படி சொல்பவர்கள் வளைகுடா நாடுகளிடம் என்ன புகார் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால்...
உங்கள் இன்னொரு சுட்டி சொல்கிறது...
அதன் தலைப்பு: Sri Lanka Demands an Investigation into the Murder of "an" (ஒரே ஒரு) Abused Maid in Saudi Arabia
ஆனால், அதில் உள்ளே நியூஸ் இப்படி உள்ளது:the Sri Lankan Bureau of Foreign Employment (SLBFE) documented the death of 330 deaths of Sri Lankan maids in the Middle East in 2009. Also, the Sri Lankan embassy in Riyadh receives ten runaway maids per day.
மீதி 229 மரணங்களை ஏன் சிலோன் அரசு கண்டுகொள்ளவில்லை..?
ஆக, கொடுமை தாளாமல் தப்பித்து ஓடிவந்து எம்பசிகளில் தஞ்சம் அடையும் சிலோன் பெண்களை கொலை செய்வது யார்...?
விமானத்தில் உயிரோடு ஏற்றிவிடப்பட்ட சிலோன் பெண்களை கொலை செய்வது யார்...?
வளைகுடாவில் இருந்து உயிரோடு விமானத்தில் பறந்து வரும் சிலோன் பெண்களை கொலை செய்வது யார்...?
மில்லியன் டாலர் கேள்வி இது..!
விடை அறிந்தவர்கள் பதில் அளிக்கவும்..!
நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு,தாங்கள் எவ்வாறு இப்படி அர்த்தம் செய்ய முடிகிறது ? நான் கொடுத்த லின்குகளில் இருக்கும் செய்திகளை தவறுதலாக முடிச்சுகளை போட்டு புதிய கேள்விகளை எழுப்பியுல்லலீர்கள். உண்மையை மறைக்க முயலும் தங்கள் சிந்தனை திறன் அபாரம் . விளக்கங்கள் ,
1.நான் கொடுத்துள்ள முதல் சுட்டி http://www.srilankaguardian.org/2010/05/shame.html, இது இலங்கையின் சிறிலங்கன் கார்டியன் எனும் பத்திரிகை வெளிட்டுள்ள செய்தியாகும் .அச்செய்தி மிகத்தெளிவாக கடுனயகே விமானதலதிற்கு மாதம் தோறும் , மத்திய கிழக்கில் பணிபுரிய சென்று பிணங்களாக வரும் இலங்கை பெண்களின் அவல நிலையை சொல்கிறது .
அதுமட்டும் அல்லாமல் அச்செய்தி ,சமந்தபட்ட இலங்கை அமைச்சர்களையும் , இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசாத எம்பிகளையும் கடுமையாக சாடுகிறது .
உலகம் முழுவதும் இதுதான் வாடிக்கை போலும் , நம் அரசு கொல்லப்படும் மீனவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது போல் .
2. http://www.migrant-rights.org/2010/01/21/sri-lanka-demands-an-investigation-into-the-murder-of-an-abused-maid-in-saudi-arabia/ எனும் தளம் வெளிட்டுள்ள செய்தி .இதில் முதல் இரண்டு பத்திகள் 2010 ஆண்டு தர்ஷினி எனும் பணிப்பெண்ணின் கொள்ளப்பட்டது குறித்து முழுமையான விசாரணை வேண்டும் எனும் இலங்கை அரசின் கோரிக்கை .
முன்றாவது பத்தி 2009 ஆண்டு கொல்லப்பட்ட 330 பணிப்பெண்களை பற்றிய செய்தியை தெரிவிக்கிறது .
இவ்விரு செய்திகளை போட்டு குழப்பி ஏதோ விமானத்தில் தான் பெண்கள் கொல்லப்படுவதாக புது கட்டுக்கதையை உருவாக்கியுல்லீர்கள் .
2009 ஆண்டுகளில் இலங்கை அமைச்சர்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்காமல் சும்மா இருந்ததை அங்குள்ள பத்திரிகைகள் கண்டித்திருகின்றன .நிலைமை மோசமாவதை (தொடர்கதையாக ) தொடர்ந்து 2010 வாக்கில் தர்ஷினி கொலைக்கு பின் விசாரணை வேண்டும் ஏன கேட்டுயிருக்கிறது .
இது பற்றி மேலும் தகவலுக்கு அரபு நியூஸ் எனும் பத்திரிகை
வெளிட்டுள்ள செய்தி http://archive.arabnews.com/?page=1§ion=0&article=130976&d=10&m=1&y=2010&pix=kingdom.jpg&category=Kingdom
நான் கொடுத்துள்ள செய்திளின் வாயிலாக , தாங்கள் உண்மைக்கு மாறான கருத்துருவாக்கம் செய்து ஏதோ பத்திரமாக விமானத்தில் எற்றிவிட்டவர்களை ,விமானத்தில் தான் கொல்லப்படுவதாக கேள்வி எழுப்புவது எப்பேர்பட்ட கருணை உள்ளம் தங்களுக்கு .
சகோ.விஜயகுமார்,
இதுபோன்று பணிப்பெண்களை கொடுமைப்படுத்துவது என்பது...///சந்தேகமின்றி இது முற்றிலும் இஸ்லாம் சொன்னவற்றிற்கு எதிரான செய்கை..!
அதனால், இஸ்லாம் கூறும் கலாச்சாரத்தில் இவர்கள் தரம் தாழ்ந்தோர் மட்டுமல்ல, குற்றவாளிகள். இவர்களை நாம் இன்னும் வன்மையாக கண்டிக்கவேண்டும்.
இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறேன் என்று கூறிக்கொள்ளும், அரபுநாட்டு அரசுகளும்... இதனை தடுக்க, உடனடியாக சட்டங்களை மிகவும் கெடுபிடியாக அமல்படுத்தி, குற்றவாளிகளை உடனே கடுமையாக தண்டித்து, அயல்நாட்டு பணிப்பெண்களின் உரிமையினை காப்பாற்ற அதிக அக்கறை கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்நிலை ஒழியும்.///--என்றுதான் நானும் முன்பே சொல்லியிருக்கிறேன்.
இப்போது நீங்கள் கொடுத்த இந்த 'அரப்நியூஸ்' சுட்டி என்ன சொல்கிறது...?
நான் சொன்னதைத்தானே சொல்கிறது..?
L.K. Ruhunuge, an SLBFE official, over the phone from Colombo said, "the SLBFE recorded 330 deaths of Lankan maids in the Middle East in 2009".
இப்படி சொன்னவர், ஒரே ஒரு கொலை பற்றி மட்டும் விசாரணை வேண்டும் என்கிறாரே அது ஏன்..? சிந்திக்க வேண்டும் சகோ.விஜயகுமார்.
இந்த கொலை சம்பந்தமாக...//an anonymous official of the Lankan Embassy told Arab News on Saturday that the body had burn marks and that the sponsor is in custody.
“We have to wait for the police and medical reports for the mission to issue a no-objection letter to clear the body for repatriation,” said the official.//
ஆக, ஒரு கொலைச்சம்பவம், மற்றும் அது சம்பந்தமான கைது, விசாரணனை, சிலோன் எம்பசி அறிக்கை, அது பற்றிய நியூஸ், இலங்கைக்கு ஒரே ஒரு சவப்பெட்டி அனுப்பப்டுவது பற்றிய முறை, அந்த செய்தி என எல்லாமே இருக்கிறது.
நான், கேட்பது என்னவென்றால்....
நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் சகோ.விஜயகுமார்..!
SLBFE மற்றும் ஸ்ரீலங்கன் கார்டியன் பத்திரிக்கை சொல்லும் செய்திகளான...
அவ்வருடம் அனுப்பப்பட்ட மீதி 229 சவப்பெட்டிகள் குறித்த செய்தி எங்கே..?
அதற்கு முந்திய வருடம் அனுப்பப்பட்ட மீதி 300 சவப்பெட்டிகள் குறித்த செய்தி எங்கே..?
அதற்கு பிந்திய வருடம் அனுப்பப்பட்ட மீதி 300 சவப்பெட்டிகள் குறித்த செய்தி எங்கே..?
நான் என்ன கேட்கிறேன்..?
300 சவப்பெட்டி அனுப்பினால்தானே அங்கே வந்து சேரும்..? இதுபோல அனுப்பியதாக மீதி 229 க்கு எந்த நியூஸும் இல்லையே..? எனில், யார் சொல்வது உண்மை..? யார் சொல்ப்வது பொய்..? சிந்திக்கவும் சகோ.விஜயகுமார்..!
சகோ.விஜயகுமார்,
நீங்கள் கொடுத்த இன்றைய அரப் நியூஸ் சுட்டி சொல்வதென்ன...?
//The Lankan Embassy in Riyadh reports that the country’s mission in Saudi Arabia receives about 10 runaway maids a day.
The embassy official said most cases are successfully mediated while some result in the workers being sent back home either at the sponsor’s expense or through an SLBFE program.//
ஆனால், இதுவரை எந்த சிலோன் எம்பசியும் வருஷத்துக்கு முன்னூறு சவப்பெட்டிகளை அனுப்பியதாக சொல்லவில்லை. உயிருடன் பிளேனில் ஏற்றி அனுப்புவதாகவே சொல்கின்றனர். ஆனால், இலங்கையில் உள்ளோர்தான் அப்படி வருஷத்துக்கு முன்னூறு சவப்பெட்டிகள் வந்து சேர்வதாக சொல்கின்றனர்.
இதில் எது உண்மை...?
இரண்டும் உண்மை என்றால்... 'பிளேனில் கொல்லப்படுகிறார்கள்'..?!
ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.
எது உண்மை..?
மெய்யாக நடந்த கொலை என்றால் அது, நீங்கள் கொடுத்த அரப் நியூஸ் சுட்டி போல செய்தியாக வரும். உடன், என்னுடைய கண்டனங்கள் மற்றும் இரங்கல் வரும்.
அப்புறம், //Sri Lanka seeks full inquiry into maid’s murder//--என்ற நியூஸ் வரும்.
ஆக, ஒரு கொலை உறுதியாகிவிட்டது. மற்றவற்றிற்கு இதுபோல நியூஸ் வராததால்... ஆண்டுக்கு 300 சவப்பெட்டிகள் என்பது பொய்யாக இருக்க வேண்டும் என்று தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருகிறேன்.
நான் முன்பு சொன்ன 'பிளேனில் கொலை' என்பது...' "உண்மை என்ன" என்று நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பீர்களே' என்பதற்காக அப்படி நான் சொன்னது சகோ.விஜயகுமார்..!
ஆனால்,
நீங்கள் வருடத்துக்கு சராசரியாக 300 பணிப்பெண்கள் பிணங்கள் வருவதாக கூறி, //வருடாவருடம் அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பெண் பணியாளர்களின் சவபெட்டிகளின் எண்ணிகையை பட்டியல் இட்டுருந்தன. அவ்வினைப்பு கண்டவுடன் தங்களுக்கு தெரிவிக்கின்றேன்//--என்றீர்கள். பட்டியல் சுட்டிக்காக காத்திருக்கிறேன்.
அதேநேரம்....
ஐநா அறிக்கை படி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இறக்கம் இன்றி அராஜகமாக கொன்று குவித்த கொடூர கொலைகார அரசான இலங்கை அரசு என்ற சிங்கள காட்டுமிராண்டி கும்பல் சொல்லும் செய்தியை எத்தனை பேர் நம்புவார்கள் உண்மை என்று..?
ஒருவேளை, அந்த சிங்கள நரபலி கூட்டம், நொந்து போய் திரும்பிய இவர்களை தமிழர்கள் என்பதால்... கொழும்பு ஏர்போர்ட்டில் வைத்து கொன்று குவித்து சவப்பெட்டியில் அடைத்து வெளியே அனுப்பி இருக்குமோ..?
இப்படியும் சிந்திக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவே சகோ.விஜயகுமார்..?
மேலும்,
"வேற்று நாட்டில் இருந்து பணம் செலவழித்து பணிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து, எந்த முன்விரோதமும் இல்லாமல் அவர்களை கொன்று, இதுபோல வருஷத்துக்கு 300 அரபிகள் கொலைகார்களாக மாறுகிறார்கள்"...........என்பது உங்களுக்கு நம்பும்படி உள்ளதா..?
அல்லது....
ஏற்கனவே லட்சங்களில் கொடூரமாக அப்பாவி மக்களை தயவு தாட்சன்யமில்லாமல் கொலை செய்துவிட்டு ஜம்பமாக திரியும் ஒரு காட்டுமிராண்டி அரக்கர் கூட்ட தர்பாருக்கு... நூறுகளில் கொலை செய்வது எளிதானதா..?
பொறுமையாக விருப்பு வெறுப்பு இன்றி நிதானமாக நேரம் எடுத்து நிறைய சிந்தியுங்கள் சகோ.விஜயகுமார்...!
சில தினங்கள் கழித்தே பதில் அளியுங்கள். அவசரமில்லை.
தங்கள் பதிலுக்காக ஆவலாய் காத்திருக்கிறேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!