அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, April 10, 2011

26 இனி... கடல்நீர் எரிபொருள்..!


 
           ஆமாம்...! அதிசயம்தான்..! ஆனால் உண்மை..! 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்..! ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...!

      சென்ற மாதம் என்னுடைய செல்ஃபோன் இடுகைக்காக, பல தளங்களை தேடிப்படித்தபோது, ஒரு தளம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் கண்ட 'அந்த அதிசயம்'  என்னுடைய அப்பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதால், 'அதை, பிறகு படித்துக்கொள்ளலாம்' என்று அப்போதைய பதிவு போடும் அவசரத்தில் புக்மார்க்கில் சேமித்து விட்டு... பின்னர் வழக்கம் போல அதை படிக்காமல் மறந்தும் போனேன்..... :-)

    சில நாட்கள் கழித்து, சகோ.சுவனப்பிரியன், தன் வலைப்பூவில், ஒரு பதிவரின் " பின்நோக்கி செல்லும் இரவு "   பற்றிய அல் குர்ஆன் வசன கேள்விக்கு, மிக அழகிய முறையில்... தெளிவான விளக்கத்தை கொடுத்ததை (இப்பதிவில் அவரின் முதல் பின்னூட்டம்) படிக்க நேர்ந்தது. அந்த வசனம் வந்த அல்குர்ஆன் அத்தியாத்தை ஏற்கனவே படித்திருந்தாலும்... ஆவலின் மேலீட்டால், முழுதும் படிக்கும்போதுதான்... அன்று ஏனோ... அதன் ஆறாவது வசனம் என்னை பிடித்து இழுத்து நிறுத்தி திகைக்க வைத்தது..! பின்னர், இன்னொரு வசனமும் அப்படியே..! அவை கியாமத் நாளின் சமீபத்தை அறிவிக்கும் குறியீடுகளாக... அந்த அல்குர்ஆன் வசனங்களில் இப்படி வருகிறது :-

                 கடல்கள்  தீ  மூட்டப்படும் போது...  (குர்ஆன் - 81 : 6)

                 தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக... (குர்ஆன் - 52 : 6) 

'இதென்ன..! ஆறு, ஏரி, குளம், குட்டை என்று சொல்லப்படாமல் 'கடல்கள்' என்று மட்டும்..? சொல்லப்பட்டுள்ளது...' என என் மனதில் கேள்வி ஓடிய போதுதான்... மூளையில்  பொறிதட்டியது... அடாடா..! அன்று சேமித்த அந்த புக்மார்க்..!

                உடனே  'அந்த அதிசயம்' சம்பந்தமான புக்மார்க்கை தேடிப்பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே  ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!

         முதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் condense ஆவதை காணுகிறார். ஆஹா..! அப்படியெனில் கடல்நீரிலிருந்து  Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது..! சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்...  தீ..ப்..ப..ற்..றி..   எ..ரி..ய..   ஆ...ர.. ம்பித்தது..!!


     பொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா..? இதென்ன புதுக்கேள்வி..? பற்றிக்கொள்ளாதுதான்..! ஆனால், இதற்கு காரணமாக  இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை...! கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது.  அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது..! ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..!

            கீழ்க்காணும்  வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.



     இச்சோதனையை  பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் தனியாக பரிசோதித்து சரிபார்த்துவிட்டு, John Kanzius சொன்னது முற்றிலும் உண்மை என்று நிரூபித்துள்ளனர். RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையை பாய்ச்சும் வரை கடல்நீரை தொடர்ந்து எரிய வைக்கலாம். இத்தீயின் வெப்பம் 3000F வரை கிடைக்கிறது.

டிஸ்கி :-

            இனி கடல்நீர் எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றா..? 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை..! காரணம், இதில்,  இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்..! ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்..? அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா..? ஒரு லோடு லாரி அரிசியை வெறும் நூறு ரூபாய்க்கு 'வளைகுடாவில்'(!?) வாங்கி அதை தம் 'ரிஃபைநரி'யில் மாவாக்கி பத்து மில்லியன் 'இடியாப்பம்' செய்து உலகம் முழுக்க அதுக்கு வரியும் சேர்த்து விற்று பில்லியனராக வேண்டாமா..? என்னா சகோ..! :-(

        முதலில் புவியில் உள்ள எண்ணெய் வளம் எல்லாம் வற்றட்டும் சகோ..! அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு திண்டாடி தவிக்கும்போது, 'ஆபத்பாந்தவனான'(?) அமெரிக்காவின், இந்த 'முன்னமே Patent போடப்பட்ட தொழில்நுட்பத்தை' உலக நாடுகள் எல்லாம் கைகட்டி அதற்குரிய கப்பம் கட்டி வாங்கிகொள்வார்கள். இதற்கான... "XYZ-ஒப்பந்தத்தில்" அனைத்து நாட்டு தலைவர்களும் அதற்கு முன்னமேயே கையொப்பமும் போட்டுமிருப்பார்கள் அல்லவா..!

      ஆனால், ஒருவிஷயம் சகோ..! பாவம்... பல கடற்கரை இல்லாத துரதிர்ஷ்ட நாடுகள்..! அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான "குருட் கடல்நீர்" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்..! கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்..! அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்..!  After all we are all CITIZENS OF THIS WORLD..!

     இப்படி எல்லாம் நடந்தால்...? மொத்தத்தில் அந்த அல்குர்ஆன் அத்தியாயங்களில்  இறைவனால் கூறப்படும் 'கியாமத் நாள்' நெருங்குவதற்கான பல்வேறு குறியீடுகளில் மற்றுமொரு அறிகுறியாகத்தான் இருக்கும் அந்த "கடல்கள் தீ மூட்டப்படும்போது"... "தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக" ... என்றவாறு..! சுபஹானல்லாஹ்..!

                அந்த கியாமத் நாளை இறைவன் ஒருவனே அறிந்தவன்..!
-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-4:82)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

26 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...