அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, January 14, 2011

26 டில்லியில் DDA இடித்த இரண்டாவது மஸ்ஜித் இது..!


DDA -- என்றால்...  Delhi Development Authority போல தெரியவில்லை..!  

Department of  Demolishing  Authority ...போல தெரிகிறது..!?

இவர்களுக்கு மஸ்ஜிதை இடிப்பதே வேலையா..? 

டில்லி வளர்ச்சி ஆணையம் (DDA) டில்லி வளர்ச்சிக்கு என்ன செய்கிறது? 

முதலில் சாலைகளை அடைத்துக்கொண்டும் வழியை மறைத்துக்கொண்டும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தினாலேக்கூட ஏகப்பட்ட இடம் சாலைகளில் கிடைக்கும். அப்புறப்படுத்த முடியாது இவர்களால். கார் காரர்கள்-டில்லியில் பெரும்பாலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்-அவர்கள் கேட்பார்களே...'எங்கே தருகிறாய் எங்களுக்கு பார்க்கிங்' என்று ஒரு கேள்வி..!


எங்கேனும் நடு ரோட்டில் மஸ்ஜிதையோ, சர்ச்சையோ பார்த்திருக்கிறீர்களா யாராவது? ஆனால், நம் நாட்டில், நட்ட நடு சாலையில், எத்தனையோ அரசு அலுவலக வளாகங்களில், பேருந்து நிலையம், இரயில் நிலையம், முச்சந்தி, தெருவில் தனியாக துருத்திக்கொண்டு... என்று எங்கு பார்த்தாலும் ஒரு கோவிலை கட்டி வைத்திருப்பார்களே...! டில்லியிலும் இதேபோல நான் பார்த்திருக்கிறேன். அவற்றில் எல்லாம் கைவைத்தார்களா இவர்கள்? முடியுமா இவர்களுக்கு?

1  -   டில்லியில் மசூதி இடிப்பு – பதட்டம்!

26-6-2009,  4:00 PM.

இந்திய தலைநகரமான டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதியான  மெஹ்ரோளியிலுள்ள திபியாவாலி என்ற பெயரில் அறியப்படும் மஸ்ஜிதை, ஜூன் - 26, 2009 அன்று  மாலை நான்கு மணியளவில் இடிப்பதற்கான எஸ்கவேட்டரும் மற்ற உபகரணங்களுமாக அப்பகுதிக்கு வந்த டில்லி விரிவாக்கத் துறை(DDA)யும், டில்லி காவல்துறையும் இணைந்து மசூதியின் மேற்பகுதியையும் சுவர்களையும் இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்படும் செய்தியறிந்து அப்பகுதியில் கூடிய முஸ்லிம்கள், 'மசூதியை இடிப்பதை நிறுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையின் உதவியுடன் மசூதி இடிக்கப்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து டில்லி விரிவாக்கத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக காவல்துறை அங்கு கூடிய முஸ்லிம்கள் மீது லத்திசார்ஜ் நடத்திக் கூட்டத்தை அடித்து விரட்டியது.

'சட்ட விரோதமான ஆக்ரமிப்பு' என்ற பெயர் கூறி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்திலேயே இம்மசூதியினை இடிப்பதற்கு முயற்சி நடந்தது. அதனை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தடுத்து நிறுத்தியிருந்தார். இப்பிரச்சனையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. ' மசூதி இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இம்மசூதி புராதன கட்டிடங்களின் பட்டியலில் உள்ளதாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------


------இது நாம் மறந்து போன  பழைய செய்தி.    ....அடுத்து....  புதிய செய்தி....!



2  -   டில்லியில் மசூதி இடிப்பு – பதட்டம்! 

13-01-2011, 6 AM.

 ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய (DDA) அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர். 


இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

'சட்டத்திற்கு புறம்பானது' எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த (DDA) அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.




(DDA)வின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.

சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க (DDA) அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.


நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் (DDA) நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக (DDA)வின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்குள் (DDA) இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (இன்று) என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது. 

---------------------------------------------------------------------------------------------------------------
செய்தி-நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத்தூது(தமிழில்)
 ---------------------------------------------------------------------------------------------------------------

LG approved 'Religious Committee’s' recommendations which are not being divulged despite pending RTI Petition 

==> Jangpura Masjid: High Court did not order demolition <==

By Dr Syed Zafar Mahmood.     The Milli Gazette Online,   Published Online: Jan 14, 2011.

The Delhi Wakf Board had informed DDA on 26 Oct 2010 that the 30-year-old masjid is located at a land owned by Delhi Wakf Board as per 35-year-old gazette notification and the Jamabandi of 1947-48. Even then, using massive police force, DDA committed the gross illegality injuring the sentiments of millions of Indian Muslims. 

ஒரு முக்கிய பிற்சேர்க்கை:-

அந்த இடம் மஸ்ஜிதுக்குத்தான் சொந்தம் என்று 1975-ல் அரசு முத்திரை பதித்து வெளிவந்த நில ஆவணத்திற்கான  டெல்லி கெஜட் ஆதாரம் காண விரும்புவோர்...

===>>    Jangpura Masjid: Factual Position  <<===

By Dr Zafar Mahmood      The Milli Gazette Online,   Published Online: 13 January 2011 - 10:20pm

...இங்கேயும் அவசியம் சென்று மேற்படி ஆதாரத்தை கண்டு வாருங்கள்.
( நன்றி :- சுட்டியை பின்னூட்டத்தில் தெரிவித்த சகோ.உதயம் )
---------------------------------------------------------------------------------------------------------------

மேற்கண்ட சுட்டிகளில் பார்த்தோமானால், வக்ப் போர்டிடம் சொத்துக்கான சான்று இருக்கும்போது, இடிக்கும் முடிவை தடுக்கும் சம்பந்தமான விஷயம் இன்னும் பேச்சுவார்த்தை மற்றும் விசாரணையில் இருக்கும்போது, ஏன் DDA அவசரம் காட்டியது? இப்படியா ஒரு சென்சிட்டிவ்வான விஷயத்தை ஒரு அரசு நிர்வாகம் கையாள்வது? அந்த துறையில் உயர்பொறுப்பில் உள்ளவர் யார்? அவருக்கு ஏன் டில்லியில் மஸ்ஜித்கள் இருப்பது பிடிக்கவில்லை? அதைவிட முக்கியமாக நாடு அமைதியாக இருப்பது ஏன் பிடிக்கவில்லை? இதுவரை வேறு எத்தனை பிற சமய வழிபாட்டுத்தளங்கள் DDA-வால் இடிக்கப்பட்டுள்ளன? வெள்ளை அறிக்கை விட முடியுமா DDA வால்? பெரும்பாண்மை சமூக மக்களின் வழிபாட்டுத்தலங்களை இதே போல ஒரு பிரச்சினை வந்தால் இப்படியா அனுகிறார்கள்?

சாம்பிளுக்கு ஒன்று : தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பள்ளிவாசலில் இரண்டடி 'சாலை அகலப்படுத்த' என தேவைப்பட்டபோது, அதற்காக  மஸ்ஜித் முழுதும் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டது. ஆனால், அதே சாலையில் அடுத்த மூன்றாவது கிலோமீட்டரில்  பாபநாசம், திருப்பாலத்துறையில் முழுக்கோவிலும் நட்டநடு சாலையில் உள்ளதே..? பேருந்து, சரக்குந்து போன்ற கனரக வாகனங்கள் எல்லாம் கோவிலுக்கு பின்னே நின்று சிக்னல் போட்டு, ஒன்று போனபின் மற்றொன்று போகும். கெட்டகேட்டுக்கு இது NH-45C வேறு..! கேட்டால்... இதற்குமட்டும், 'வழிபாட்டுத்தலங்களை எல்லாம் அவ்வளவு எளிதில் அகற்றி விட முடியுமா' என்கிறார்கள்?

அதை இடித்தால் இதை இடிங்கள். இயலாதென்றால் இரண்டின் பக்கமும் நெருங்காதீர்கள். மக்களுக்கு கோபம் வருகிறது என்றால் இதுதான் காரணம். நாம்  கேட்பதெல்லாம் சமநீதி. ஒரு கண்ணுக்கு அமிலமும் மறு கண்ணுக்கு வெள்ளரிப்பிஞ்சும் அல்ல..! இது அநீதி.

ச்சே... முஸ்லிம்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்றாகிவிட்டதா? இப்போது இந்த செய்தி எந்த காட்சி ஊடகத்திலும் வராமல் தன் அதிகார பலத்தால் பார்த்துக்கொண்டது, என்பது மத்தியிலும் டில்லி மாநிலத்திலும் ஆளும் காங்கிரசின் மெய்யான கோர காவிமுகத்தை தெளிவாக காட்டுகிறது.

நிம்மதியாக  வாழலாம் என்றால் விடமாட்டாங்க போலிருக்கே..! இதில்... இன்று வெள்ளிக்கிழமை... டில்லியில் என்னவாகுமோ...! இனி, 'எல்லாம் வல்ல இறைவன்தான் நம் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்' என்று இறைஞ்சுகிறேன்.

26 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...