அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, December 25, 2010

29 TNTJ தலைவர் அல்தாஃபியும் சுமார் 40 பாதிரியார்களும்

கும்பகோணத்தில்  40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்.

கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத்தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒரு கிறிஸ்தவ சகோதரர், 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.

அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறுமனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்ல மாட்டோம். இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் மத்தியில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு பாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

அதைப்போன்று உங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து இருக்கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள் எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம். இந்த நிலைப்பாட்டிற்கு தாங்கள் தயாரா? என்று கேள்வியெழுப்ப, தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம். நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:



மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ள ஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவுடன் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உரை:

அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்.



உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதை பட்டியலிட்டார்.

1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்

இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டு இருந்தாலும், ஏசுவை நீங்கள் இறைவனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள் இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.

எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களையும் விதமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழு அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் மத்தியில் இருக்கும் கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

எனவே இதுபோன்றதொரு கலந்துரையாடல் காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.

உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்க வேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடைய வளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களது தீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.



இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டாலே உலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதாவது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண்டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும் என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:

நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடுகளோ தாங்கள் செய்யும் தீவிரவாத செயல்களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்க முஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங்களை சாந்த சொரூபிகளைப் போன்று உலக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றனர்.
தங்களது தீவிரவாத முகத்தை மறைப்பதற்காக தங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.



மேலும், உலக நாடுகள் மீது அநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ளயர்களை நாட்டைவிட்டு விரட்டும் புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண் டத்தை வீசுகின்றன என்றும், அதே நேரத்தில் இத்தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத்தல் மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலியினர், போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாக தங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவ நாடுகள் இத்தகைய ஆக்கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ கூறுவதில்லை என்பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களை மட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக்கம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதாவது அவர்களை எதிர்த்து போரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.

மேலும், நமது இந்திய நாட்டையும் ஆக்கிரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்து தீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக் காட்டி னார்.

ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளே காரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும் தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்.

அனல்பறந்த கேள்வி – பதில் நிகழ்ச்சி:

கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார் களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்துகளை போட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி பாய்ந்தன.



அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்த பாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல் பறந்தது.

--------------------------------------------------------------------------------------------------------------
Thanks :-   tntj.net   &  tvtntj.net  (as copied and pasted with pictures)
--------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி: 
1 - எனது ஊருக்கு அடுத்த குடந்தையின் பாதிரியார் பெருமக்கள், தங்கள் பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, அடுத்தவர் கருத்தையும் கேட்கவேண்டியது அவசியம் என்றது, என்னைக்கவர்ந்தது. நிச்சயமாக கிறிஸ்துவர்களின் இம்முயற்சி, சமூக ஒற்றுமைக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.

2 -  அதற்கு உடனே இசைவு தந்ததோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு தமிழக அளவில் பிரபலமான ஓர் இஸ்லாமிய அமைப்பின் மாநிலத்தலைவரே உடனடியாக-நேரடியாக சென்று அங்கே உரை நிகழ்த்தியதும்  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

3 - அதுமட்டுமின்றி, அவர் நிகழ்த்திய உரை எனக்கு மிக மிக பிடித்திருந்ததால், அது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என நான் கருதியதால்தான் இந்த காபி/பேஸ்ட் பதிவு. (வண்ணம் தீட்டி படம் காட்டியது மட்டும் நம் வேலை..!).

29 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...