முதற்கண் ஒரு சிறு முன்னுரை.
ஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.
ஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.
நிற்க.
இனி தலைப்புக்கு செல்வோம் சகோஸ்.
இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.
சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த
சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள்
சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி கேட்க...
ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை தரமறுக்க...
அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க...
அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற...
அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த,
அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.
ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை தரமறுக்க...
அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க...
அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற...
அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த,
அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.
'அல்லாஹ் எங்கு சென்றான்...
அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா...
அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... "
அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா...
அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... "
...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார்.
இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.
ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.
இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.
ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.
மாஷா அல்லாஹ்.
இதற்கு முன்னரே...
அல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது.
மேலும், 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.
மேலும், 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.
மாஷாஅல்லாஹ், மப்ரூக்.
ஆக மொத்தம்...
தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3)
சுபஹானல்லாஹ்.
"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3)
சுபஹானல்லாஹ்.
மேலும் தகவல்களுக்கு :
http://riyadhconnect.com/trustworthy-sudanese-shepherd-in-saudi-gets-sr-40k-as-reward/
அந்த யூ ட்யூப் காணொளி :
alternate link : http://www.youtube.com/watch?v=Qy1LvkXQCa0
இறைவா..!
இறைவா..!
வறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல்
நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும்
அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அந்த சூடான் சகோதரர்க்கு இப்போது அதிக செல்வத்தை பரிசாக தந்தும் சோதனையை ஆரம்பித்து உள்ளாய். அதிலும் அவர் இஸ்லாமிய வழியில் சரியாக செல்வத்தை செலவிட்டு வெற்றி பெறவே உன்னிடம் துவா செய்கிறேன்.
19 ...பின்னூட்டங்கள்..:
மாஷா அல்லாஹ்
சலாம். நானும் இதைப் பார்த்தேன். அல்லாஹ் அந்த சகோதரருக்கு மென்மேலும் ஈமானில் உறுதியையும், வளமான ஈருலக வாழ்வையும் தந்தருள்வானாக! நமக்கும்!
பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆயத் எண் தவறாக உள்ளது.
"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3)
@அஸ்மாஅலைக்கும் சலாம் சகோ.அஸ்மா.
ஆமீன்.
நீங்கள் சுட்டிக்காட்டிய வண்ணம் தவறை சரி செய்து விட்டேன் சகோ. ஜசாக்கல்லாஹு க்ஹைரன்.
மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்,
எவ்ளோ பெரிய பாடம் இதில் நமக்கு உள்ளது. சுப்ஹானல்லாஹ்...இறைவா எங்களையும் இவர் வழியில் வழிநடத்துவாயாக...ஆமீன்
ஆஷிக் அஹ்மத் அ
பணக்காரர்களை விட ஏழைகளிடம் இறை அச்சமும், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத தன்மையும் அதிகம் இருக்கும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு...
நல்ல பதிவிற்கு நன்றி ப்ரோ... :)
மாஷா அல்லாஹ்
Masha allah!
ஸலாம் ப்ரோ
பதிவு போட்டு ரொம்ப நாளாச்சி போல இம்ம் நல்ல விசயத்தோடு வந்திருக்கீங்க Welcome .....
இதுக்கும் பலத்த எதிர்ப்பு இருக்கு போல
இதுக்கு இறையச்சம் எல்லாம் எதுக்கு ப்ரோ?
'தான் செய்வது தவறு' என்கிற தன்னுணர்வு இருந்தாலே போதுமே. தனி மனித ஒழுக்கங்களைக் அறிய/கற்று தருவதில் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகப்பெரும் பங்கு உள்ளது. மற்றதெல்லாம் அப்புறமே.
அவரு ஆடு மேய்க்கிறவரா இருந்தாலும் புத்திசாலின்னு நினைக்கிறேன். காரில் வந்து ஆட்டைய போடப் பாக்கிறானுகளே, சூதானமா இருப்போம்னு நெனச்சாரு போல. இதுவே பிச்சக்காரத் தோற்றத்தில போயி, நைசாக் கேட்டிருந்தா டீல் போட்டுருப்பாரோ என்னவோ.
இப்ப பாத்தீங்களா அவரு ரிட்டயர் ஆகி சூடான் போயி நிம்மதியா இருக்கலாம்.
Moreover, ஒரு காஃபிரா வீடியோவப் பாக்கிறப்போ இது பிரச்சாரப் படம் போன்ற உணர்வு தருவதைத் தவிர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.
@Gujaalஅதெப்படி ப்ரோ
//இதுக்கு இறையச்சம் எல்லாம் எதுக்கு?'தான் செய்வது தவறு' என்கிற தன்னுணர்வு இருந்தாலே போதுமே. //
---இப்படியும் சொல்லிட்டு....
//இதுவே பிச்சக்காரத் தோற்றத்தில போயி, நைசாக் கேட்டிருந்தா டீல் போட்டுருப்பாரோ என்னவோ. //
---இப்படியும் கமெண்ட் அடிக்க முடியுது உங்களாலே..!?!
இதாங்க மேட்டர். இப்படி ஒரே ஒரு கமெண்டில் நேர்மையானவன் போல நடிக்க கூட மனிதனால் முடியலை பாருங்க. :-)
இதைத்தான்... இறையச்சம் தடுத்து நிறுத்து விடும் என்கிறேன்.
எந்த கெட்டப்பில் எவர் வந்து ஆசை காட்டினாலும்... மனசு கிடந்து 'ஒத்துக்கோ ஒத்துக்கோ' என்று தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டாலும்... தவறு செய்யாமல் மனிதனை தடுத்து விடும் ஒன்று இருக்குமானால்... அது இறையச்சம் மட்டுமே..!
@Gujaalஅதெப்படி ப்ரோ
//இதுக்கு இறையச்சம் எல்லாம் எதுக்கு?'தான் செய்வது தவறு' என்கிற தன்னுணர்வு இருந்தாலே போதுமே. //
---இப்படியும் சொல்லிட்டு....
//இதுவே பிச்சக்காரத் தோற்றத்தில போயி, நைசாக் கேட்டிருந்தா டீல் போட்டுருப்பாரோ என்னவோ. //
---இப்படியும் கமெண்ட் அடிக்க முடியுது உங்களாலே..!?!
இதாங்க மேட்டர். இப்படி ஒரே ஒரு கமெண்டில் நேர்மையானவன் போல நடிக்க கூட மனிதனால் முடியலை பாருங்க. :-)
இதைத்தான்... இறையச்சம் தடுத்து நிறுத்து விடும் என்கிறேன்.
எந்த கெட்டப்பில் எவர் வந்து ஆசை காட்டினாலும்... மனசு கிடந்து 'ஒத்துக்கோ ஒத்துக்கோ' என்று தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டாலும்... தவறு செய்யாமல் மனிதனை தடுத்து விடும் ஒன்று இருக்குமானால்... அது இறையச்சம் மட்டுமே..!
@Rabbaniஅலைக்கும் சலாம் சகோ. எதிர்ப்பா..? யாரும் அப்படி ஏதும் தெரிவிக்கலையே சகோ. ரப்பானி.
@aashiq ahamedஅலைக்கும் சலாம் சகோ. ஆமீன்.
Yes. இதில் நிச்சயமாக நிறைய பாடங்கள் உள்ளனதான்.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
அட தன்னுணர்வு இருந்தாலே போதும் என்பது என் நிலை. அந்த மேய்ப்பருக்கும் என் நிலையே இருக்கும் என எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்?
அந்த நபர் எக்காரணத்திற்காக மறுத்தார் என்பது அவர் மட்டுமே அறிந்தது. அதனால்தான் இருக்கக்கூடும் என்றேன்.
இரண்டையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்.
@Gujaalஅப்படியான குழப்பமே தேவை இருக்காது. எப்படியான நாட்டில் என்றால்... பதிவின் முதல் பாராவை படிங்க சகோ. உங்களுக்காகவே கொஞ்சம் குஜாலா எழுதப்பட்ட பாரா அது. :-)
அருமையான பதிவு சகோ
இதை கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் எதிர் பதிவு போட்டு தம்மை வளர்த்துக்கொள்கின்றனர்
இஸ்லாமிய எதிர்ப்பை காட்டினால் தாம்மால் ஹிட்ஸ் சேர்க்க முடியும் என்று கருதுகின்றனர்
:D
http://dharumi.blogspot.in/2014/02/719.html
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
மூளைய கழட்டி வச்சிட்டா குழப்பமே வராதுங்க.
சவூதிலயே அமைதி, சமாதானம், போரற்ற சூழலை நன்றாகக் காப்பாத்துங்க. அப்படியே பக்கத்தில இருக்கிற சிரியா, எகிப்து, சோமாலியா நாடுகளிலும் காப்பாத்துனா நல்லா இருக்கும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!