அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, June 9, 2013

3 நம்மிருவரில் யார் மிகப்பெரிய தீயவன்?


"நம்ம ரெண்டு பேர்லே எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும், இதுதான் ரூல்ஸ். குறுகிய காலத்தில் நாந்தான் மிகப்பெரிய கெட்டவன் ஆகிருக்கேன். ஸோ, நீ ரிடயர்ட் ஆகிறு..."


"தப்பு... தப்பு..! இந்த ரூல்ஸ் படி பார்த்து இருந்தால்... நானல்லவா 3 முறையும் தலைவர் ஆகி இருந்திருக்கணும்..? 13 நாள், 13 மாசம், 5 வருஷம்ன்னு தொடர்ச்சியா படாபாய்க்கே வழி விட்டுகொடுத்தேன்லே..? யூ மஸ்ட் ஃபால்லோ தட் சேம் ரூல்ஸ்".

"ஷேம் ஆன் தட் ரூல்ஸ். முடியாது... எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும். இதுதான் நம்ம பார்ட்டிக்கு பெருமை, அதைத்தான் மக்கள் விரும்புறாங்க..!"


"நீ தப்பா விளங்கி வச்சிருக்கே. பொதுமக்களை கவரனும்னா... 'அடச்சே... அவனுக்கு இவன் தேவலாமே'ன்னு ஒரு சீனை கிரியேட் பண்ணனும். அது தான் நம்ம பார்ட்டிக்கு நல்லதா இருக்கும். அப்படித்தான் அப்போ நானும் படாபாயும் சீன் கிரியேட் பண்ணி ஜெயிச்சோம். அதாவது... இப்போ, 'உனக்கு... நான் எவ்வளவோ பெட்டர்'ன்னு மக்களை நினைக்க வைக்கணும். புரியுதா..? பீர்பாலின் நுண்ணறிவு பத்தி சின்ன வயசிலே படிச்சி இருப்பே. பக்கத்திலே ஒரு சின்ன கோட்டை போட்டு... முதல் கோட்டை ரொம்ப பெரிசா காட்ற டெக்னிக்..."

"நீ தான் இன்னும் அந்த காலத்திலேயே இருக்கே. நானெல்லாம் எவ்வளோவோ பெரிய கெட்டவனா இருந்தும் ஏங்க ஊரிலே தொடர்ந்து ஜெயிச்சிட்டு இருக்கேன்லே..? அப்புறம் என்ன..? இது பொதுமக்கள் விரும்பாமலேயா நடக்குது..? அது போதாதா...? அடப்போய்யா...!"


"ம்ம்ம்.... ஒத்துக்குறேன்..! நான் முப்பது வருஷத்திலே பல ஊரிலே நேரடியாவும் ஆளு வச்சு மறைமுகமாவும் செஞ்சதை, மூனே நாளில் உன் ஊரிலே நேரடியா முன்னின்று முடிச்சவன் நீ... என்னைவிட கெட்டவன் நீதான்னு ஒத்துக்குறேன். :-)) ஆனால்... உன் ஊரிலே உள்ள வெறி பிடிச்ச முட்டாள் கூட்டம் போலவே எல்லா ஊரிலேயும் பொதுமக்கள் பெரும்பான்மையா இருப்பாங்கன்னு நீ நினைச்சா அது உன்னோட அறிவீனம்..! கொஞ்சம் வெளியே வந்து நாலு இடத்த பாரு. உனக்கே புரியும். அதனாலே... நம்ம 'படாபாய் ரூல்ஸ்'படி இம்முறை எனக்கு நீ வழி விடு... நாந்தான் இப்போ உனக்கு படாபாய். உனக்கு நான் தேவலை. அதுதான் நம்ம பார்ட்டிக்கு நல்லது."

"அந்த எட்டுக்கால் பூச்பாய் ரூல்சை பின்பற்ற நானென்ன உன்னை மாதிரி ஏமாளித்தேள்ன்னு நினைச்சியா..? நீ ஒன்னோட சான்சை மூனுவாட்டி இளிச்சவாய்த்தனமா அதுகிட்டே விட்டு கொடுத்தே. அத தெரிஞ்சிக்க..! 'எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும்'. இட் இஸ் மை ரூல். நியூ ரூல். அவர் பீபிள் லைக் திஸ் ரூல். ஆல் ப்ளடி ஓல்ட் பாய்ஸ் ஓல்ட் ரூல்ஸ் ஆர் கேன்சல்ட்..! சம்மதம்னா ஒன்ன எனக்கு அசிஸ்டண்டா வச்சிக்கிறேன்... இல்லைன்னா... பார்டரை கிராஸ் பண்ணி நீ எங்கிருந்து வந்தாயோ, அந்த நாட்டுக்கே திரும்பிப்போயி பொழச்சிக்க... இல்லைன்னா அப்புறம் உன்னை முழுங்கி ஏப்பம் விட்டுருவேன்... "

நீதி : கெடுவான்... கேடு செய்தவன்.

3 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...