பிரபல 'The American Board of Orthopaedic Surgery' மருத்துவர்களின் இணையதளம் |
தர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், இறைவனை தியானிப்பது பற்றியும் இறைத்தூதர் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளில் இரண்டை மட்டும் தலைப்பு தொடர்பாக நாம் பார்ப்போம், வாருங்கள் சகோஸ்...!
முதல் ஹதீஸ்
"மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. (அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு...) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் - 21959
இரண்டாம் ஹதீஸ்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி) பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, 'அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை' என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ... அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் - முஸ்லிம், ஹதீஸ் எண் - 1833
இந்த இரு அறிவிப்பிலும்... சொல்லப்பட்டு இருக்கும்... தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து, தமது உடலை சீரும் சிறப்புமாக இயங்க வைக்கும் இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள முஸ்லிம்கள் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு மிகவும் முக்கியமானது.
அதேநேரம்... இது ஒரு புறமிருக்க, இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..! அது....
//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//
//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//
இதெப்படி சாத்தியம்..?
ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ - அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?
நான் இப்பதிவில் படிப்போரை சிந்திக்க வேண்டக்கூடிய விஷயம் இதுதான் சகோஸ்..! நிச்சயமாக, இது அந்த அத்தனை எலும்புகளையும் எண்ணி தேவைக்கேற்ப படைத்த அந்த ஏக இறைவனின்... இறைச்செய்தியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்..! வேறு சாத்தியக்கூறு இல்லை..!
குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்... அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்... என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!
எனவே, அப்படியான ஒரு துல்லியமான வார்த்தையை மருத்துவ-அறிவியல் அறிவு அற்ற மனிதரால் விட்டு அடித்திருக்க முடியாது..! எனவே, இது இறைவன் புறத்திலிருந்து வந்த சரியான தகவலே..! எனில், அம்மனிதர் இறைத்தூதரே..! எனில், அவர் மூலம் மனித சமூகம் பெற்ற குர்ஆன் இறைவேதமே..! எனில், அதுவும் நபியும் இணைந்து தந்த மார்க்கமான இஸ்லாமே... அசல்..!
இவ்வுண்மைகளை சிந்தித்து உணரும்போது, நம்பிக்கையாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறது. நம்பிக்கை கொள்ளாதோரை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. இறைவனே மனிதர்களுக்கு தம் அத்தாட்சிகள் மூலம் தூய நேர்வழியை காட்டுகின்றான்..! இறைவன் தூயவன்..!
டியர் சகோஸ்...
Please, refer... for human's 360 bone-joints with their names from several ortho medical science websites.
http://www.mplsortho.com/
http://www.blurtit.com/q822970.html
http://www.jlquiropractico.com/arthritis/
http://www.healthmd.com/joint-pain.htm
http://www.yelp.com/biz/the-bone-and-joint-center-of-seattle-seattle
http://www.cheshirepersonaltraining.com/have-you-got-back-problems/
http://www.dexknows.com/business_profiles/becker_douglas_a-b406641
http://www.livestrong.com/article/367595-herbs-for-joint-care/#ixzz1WlYXMNkq
http://www.sooperarticles.com/health-fitness-articles/joint-pain-treatment-672067.html
http://www.foundationperformance.com/media/foundation-performance-in-the-media.htm
http://www.quranandscience.com/sunnah-a-science/164-every-man-has-360-joint-bones.html
26 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,
படிக்கும் பொழுதே உடம்பு சிலிர்க்கிறது சகோ ஆஷிக்.அருமையான செய்தியை அறியத் தந்ததற்க்கு அல்லாஹ்(ஜல்) உங்களுக்கு அருள்புரிவானாக
Assalamu Alaikum...
Amazing....Jazakkallah for sharing
சலாம் சகோ.முகம்மத் ஆஷிக் !
வாவ்...வாவ்...வாவ்...!!!
ஒவ்வொருத்தரும் கலக்கிகிட்டு வர்றீங்க...மாஷா அல்லாஹ்...!!!
இதை படித்ததும் ஈமான் இன்னும் கூடிவிட்டது..அல்ஹம்துலில்லாஹ்...!!!
இப்படியே தொடருங்க..!!! இன்ஷா அல்லாஹ்..!!!
நன்றியுடன்
நாகூர் மீரான்
****************
FIRST: 147 JOINTS IN THE VERTEBRAL COLUMN :
25 joints between the vertebrae.
72 joints between the vertebrae and the ribs.
SECOND: 24 JOINTS IN THE THORAX :
2 joints between the bones of the sternum and the thoracic cage.
18 joints between the sternum and the ribs.
2 joints between the clavicle and the scapulae (shoulder blade).
2 joints between the scapulae and the thorax.
THIRD: 86 JOINTS IN THE UPPER EXTREMITY :
2 joints between the scapular bones.
6 joints between the elbows.
8 joints between the wrists.
70 joints between the hand bones.
FOURTH: 92 JOINTS IN THE LOWER EXTREMITY :
2 hip joints.
6 joints between the knee bones.
6 joints between the ankles.
74 joints between the feet bones.
FIFTH: 11 JOINTS IN THE PELVIS :
4 joints between the coccyx vertebrae.
6 joints between the bones acetabulm.
1 joint of the pubic sumphysis.
TOTAL NUMBER OF JOINTS : 360
*********
Thanx to http://www.quranandscience.com
சலாம் சகோ ஆஷிக்!
அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
Wonderful. Mind blowing !!! masha allah
ஸலாம்
நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கியதை விட கொள்கை ரீதியாக சிறப்பான கருத்து ...
//குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்... அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்... என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..! //
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
மாஷா அல்லாஹ், இறைநம்பிக்கையை அதிகரிக்கச்செய்யும் பதிவு. இறைவன் இன்னும் அதிகமாக ஆராயும் திறனையும், அறிவையும் தங்களுக்கு தந்தருள்வானாக.
பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
மாஷா அல்லாஹ்....அருமை சகோ...
@mohamedஅலைக்கும் ஸலாம் வரஹ்... ஆமீன்.
@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
இருவரின் கருத்துக்கும் நன்றி சகோஸ்.
@நாகூர் மீரான்அலைக்கும் ஸலாம் வரஹ்... நான் தந்திருக்கும் இறுதி சுட்டியில் தாங்கள் தந்திருக்கும் விபரங்கள் உள்ளன சகோ. ஆயினும், பகிர்வுக்கு நன்றி சகோ.
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
@Peer Mohamed நன்றி சகோஸ்.
@sulthan mydeenஅலைக்கும் ஸலாம் வரஹ்... //நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கியதை விட கொள்கை ரீதியாக சிறப்பான கருத்து ...//---நன்றி சகோ.
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்... ஆமீன். நன்றி சகோ.
@NKS.ஹாஜா மைதீன் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆஷிக்
பள்ளி சென்றதில்லை, பாடம் படித்ததில்லை,
சொல்லித்தரும் ஆற்றல் இங்கே துனியாவில் யாருக்கும்இல்லை.
அல்லாஹ்வே ஆசிரியன்.
என்ன ஒரு பொருத்தமான பாடல்.....
பகிர்வுக்கு நன்றி.
ஸலாம்
//நல்லவேளை நான் உங்கள் மாணவனாக இல்லாது போனதுக்காக இறைவனுக்கு நன்றி.//
நல்லது.
ஆனாலும் எனக்கு இப்படி seeing just one side of the coin மாதிரியான மாணவன் கிடைத்தாலும் மகிழ்ச்சியே!
// எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும்.... //
உண்மையையே பேசினாலும் வார்த்தைகளில் நிச்சயம் நாகரீகம் வேண்டும் என்று நட்பான சில பதிவர்களிடம் சொல்வதுண்டு.
இங்கே சொன்ன முறையில் தவறு உள்ளது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சொன்னவை தவறான செய்திகள் இல்லையே!
போரில் பிடிபட்ட பெண்களிடம் கலவி கொள்ளும்போது கர்ப்பமாகாமல் தடுக்க withdrawal செய்துவிட வேண்டுமா என்று “நண்பர்க்ள்” கேட்ட கேள்விக்கு முகமது சொன்ன பதிலை எந்த நல்ல மனிதனிடமும் இருந்து எதிர்பார்க்க முடியுமா?
//சீனாவிலும் ஒரு இறைத்தூதர்..//
ஏங்க .. உடலின் கூறுபாட்டைப் பற்றிக் கூற ஒரு நபி தான் வேண்டுமா? ஒரு மருத்துவன் கூறியிருக்க முடியாதா? இது போன்ற பதில்களை வைத்து தான் ’seeing just one side of the coin மாதிரியான மாணவன் ’ என்று சொன்னேன்.
//சீனர் சொன்ன பல வற்றில்... இது ஒன்றுதான் சரி என்று அக்கால அறிவில் உள்ள ஒருவரால் எப்படி தீர்மானிக்க முடிந்தது..?//
very poor logic... சீனர் சொன்ன பலவற்றில் ‘இவர்’ ஒன்றை எடுத்துக் கூறியுள்ளார். அவ்வளவே ...
//தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!//
//தருமி said... 17
//தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!//
ஆஹா ... இந்தப் பின்னூட்டத்தை போட்டு விட்டீர்கள். அதற்கு முன் அனுப்பிய மற்ற பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லையே. ஏன்? ஒரு வேளை நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் அளிக்கும் கள்ள மெளனம் மூலம் என் கேள்வி ஒரு பதில் தரமுடியாத நல்ல கேள்வி என்ற பொருளில் நான் கொள்கிறேன்.
நன்றி.......
//தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!//
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
???????????????????????????????????
இப்பின்னூட்டத்தையும் போட மாட்டீங்க. அதனால் நீங்களாவது இதைப் படிச்சி பாருங்க ....
http://www.answering-islam.org/Responses/Osama/360joints.htm
This article on 360 bones by Osama Abdallah,was published on 3 June 2001,
ex-Muslims have exposed this article as a fraud on 8 October 2003,
Actually, there is some truly mind-boggling miraculous knowledge in the above hadith which Mr. Abdallah has seemingly overlooked: Muhammad predicted part of the Tel-Med phone number for joint problems (360 joints) at a time when nobody even knew what a telephone is!
Osama Abdallah's amazing "Islamic claim" was not proven but has failed in every respect.
there is a contradiction even within this one hadith.(360 or 364??)
Roughly 850 years before the time when Muhammad claimed prophethood, we are told that the following was taught in Chinese philosophy:
The belief that the human body has 360 joints was already nearly a millenium old at the time of Muhammad and may even have been common knowledge in Muhammad's environment.
@தருமி//நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் அளிக்கும் கள்ள மெளனம் மூலம் என் கேள்வி ஒரு பதில் தரமுடியாத நல்ல கேள்வி என்ற பொருளில் நான் கொள்கிறேன்//
திரு.தருமி,
ஹா..ஹா...ஹா.... இது உங்களின் அறியாமை என்று எண்ணி நான் ஏமாற மாட்டேன்..! கள்ளத்தனம் என்று புரிந்து கொள்கிறேன்.
முதலில் ஒரு ஆபாச குப்பை தளத்தின் லிங்க் தந்து //இதனையும் வாசித்தேன்// என்று மாட்டும் இரு வார்த்தை எழுதி ஒரு கமெண்ட் போட்டீர்.
ஓகே. அந்த லிங்க் சென்று பார்த்தால்... முதல் வரிகளிலேயே ஆபாசம்... படிக்கவே நாராசமான பதிவு. ஓய்வு பெற்ற ஒரு கல்லூரி பேராசியர் படிக்க சொல்லும் லிங்க்ஆ இது என்று உங்கள் மீதே அருவருப்பு கொண்டேன். அதனால், அதை வெளியிடாமல் மட்டுறுத்தினேன். ஆனாலும், உங்களை மதித்து அந்த லிங்கில் மனம் பொருத்துக்கொண்டு படித்து முடித்து பதில் ஒன்றை உங்களுக்கு தனி மெயிலில் போட்டேன்.
ஆனால், நீங்கள் மீண்டும் அதே கமெண்டை காபி பேஸ்ட் பண்ணி போட்டீர்கள். இம்முறையும் அந்த லிங்க் காரணமாக அதை நான் வெளியிட வில்லை.
பின்னர் எனது மெயிலுக்கு பதில் போட்டீர்கள். சரி, எதற்கு அதை கமெண்டில் போட வேண்டும்..? நான் காமெண்டிலா பதில் சொன்னேன்..? இதை இங்கே வெளியிட்டால்... அதற்கு முந்திய எனது மெயிலை எங்கே நான் போடுவது...? தலை இல்லாமல் வாலை வெளியிட முடியுமா..?
ஆக, 'தருமியின் கள்ளத்திருவிளையாடல் ஆரம்பித்து விட்டதடா' என்று விளங்கிக்கொண்டேன்..!
@தருமிதொடர்ச்சி...........
ஆனால்... மறுநாள்...
//தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!// என்ற மற்றொரு மொக்கை காபி பேஸ்ட் பின்னூட்டம்... எதுக்குன்னே புரியலை.
'எனது பதிவில் உங்கள் பின்னூட்டம் என்று ஏதாவது ஒன்று இருந்தாக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுகிறீர்களே' என்ற கெஞ்சல் தாள முடியாமல் அதை வெளியிட்டேன். உங்களுக்கு ஊருக்கு திரும்பிய பின்னர் முந்திய பின்னூட்டத்துக்கு ரிப்ளை மெயிலிலேயே தரலாம் என்று இருந்தேன். அத்தோடு... உங்களை நான் மறந்தாச்சு..! வெக்கெஷனில் ஊரில் பிஸியாயாச்சு..!
பின்னர் என்னடா என்றால் விடாமல் பின்னூட்டம் போட்டு காமடி பண்ணி இருக்கிறீர்கள் என்று இப்போது தெரிகிறது..!
உங்க நாக்கு இல்லாத ஆன்ஸ்-இஸ் சுட்டிகளுக்கெல்லாம் பல்லை உடைத்த ஆன்ஸ்-கிருஸ் பதில் சுட்டிகள் இணைய உலகில் இருப்பது உங்களுக்கே தேடினால் கிடைக்கும்..! கிடைத்திருக்கும். நான் இப்பதிவு எழுதும் போது கிடைத்தன..! இதையும் அப்போதே வாசித்து விட்டேன்..!
// seeing just one side of the coin //----நீங்க 'எந்த பக்கமும் பார்க்க மாட்டேன்' என்பவர் ஆயிற்றே..!
@தருமி
தொடர்ச்சி...........//உண்மையையே பேசினாலும் வார்த்தைகளில் நிச்சயம் நாகரீகம் வேண்டும் என்று நட்பான சில பதிவர்களிடம் சொல்வதுண்டு.//
---நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி புரபஸர்.
ஆனால், அவர்கள் உங்க கூட்டணி நண்பர்கள் தானே..? ஏன் அங்கே இந்த கருத்தை நீங்கள் சொல்லவில்லை..? முதலில் நேர்மையை வெற்று வார்த்தையில் எழுதாமல்... செயலில் காட்ட பழகிக்கொள்ளவும் புரபஸர்.
@தருமி
தொடர்ச்சி...........
//போரில் பிடிபட்ட பெண்களிடம் கலவி //
---உங்ககளுக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி சகோ.சுவனப்பிரியன் போன்றவர்கள் பலமுறை சொல்லிவிட்டார்கள். ஆனால், உங்களுக்கு 'பதில்களை படிக்க தெரியாது' என்பது எனக்கு தெரியும். (இவை கூட பிறருக்காகத்தான்) கேள்வி மட்டுமே கேட்க அன்றி வேறு ஏதுமே தெரியாதவர் என்று உங்களை பற்றி நீங்களே தரும் முன்னுரை பதிவுலகில் பலர் அறிந்த ஒன்றுதான்.
உங்கள் பாணியில் கேள்வியே கேட்கிறேன்.
படை திரட்டி வந்து போரிட்டு போரில் தோற்று கைது செய்யப்பட்டு பிடிபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கைதிகள். இந்த கைதிகளை அடைத்து வேளா வேளை மணியடிச்சு மக்கள் காசில் ஓசி சோறு போடும் இடமான இப்போதைய சிறைக்கூடம் என்று ஒன்று அக்காலத்தில் அங்கே இருந்ததா இல்லையா...?
இல்லை என்றால் ஆண்/பெண் கைதிகளை சோறுபோட்டு பராமரித்து கண்காணித்து வருவதை யார் செய்தது...?
உணவு,உடை,உறைவிடம் இவற்றுக்கு பகரமாக ஆண் கைதி ஈச்ச தோட்டம் பராமரிப்பு ஒட்டகம் மேய்ப்பு பாலைவன வியாபாரத்தில் உதவி வேலை எல்லாம் செய்வார்.
ஆனால்... உணவு,உடை,உறைவிடம் இவற்றுக்கு பகரமாக பெண் கைதி..?
நபி ஸல் அவர்கள் சொன்ன வழி... விபச்சாரம் அல்ல. ஒரு பெண் ஒரே ஆணுக்கு மனைவிக்கு அடுத்த நிலை அந்தஸ்து தந்து தரப்பட்டு... ஆனால், குழந்தை பிறந்துவிட்டால்.. மனைவி அந்தஸ்து தர செய்து... அடிமை விடுதலை பெற செய்து... அக்காலத்தில் இதெல்லாம் நினைத்து கூட பார்க்க இயலாத என்னவொரு புரட்சி..!
அந்த புரட்சிக்கு குழந்தை பெறாமல் குறுக்குவழி தேட முயன்றவர்களிடம்தான்... நேரான வழியை வலியுறுத்தி சொல்லி... போரில் கைது செய்யப்பட்டவர்கள் மனைவி எனும் நிலையை அடைய வைக்க பாடுபட்ட உன்னத வரிகள் அவை. இவை எல்லாம் புரிய மன மாச்சர்யம் இன்றி நிறைய படிக்க வேண்டும் புரபஸர். வெறும் கேள்விகள் அறிவை பெருக்கா..!
சரி... அக்கால கண்ணோட்டத்தில்... அக்கால அராபிய வாழ்வியல் நெறியில்... போருக்கு வந்து தோற்ற பெண் கைதிக்கு இதனை விட சிறந்த வேறு ஒரு மாற்று வழியை பிடிபட்ட எதிரி நாட்டில் நீங்கள் சொல்லுங்களேன்... நழுவாமல்.. வழுவாமல்... சரியாக...? விவாதிக்க நீங்கள் தயாரா...?
@தருமி
தொடர்ச்சி...........
//ஒரு நபி தான் வேண்டுமா? ஒரு மருத்துவன் கூறியிருக்க முடியாதா?//----பல சமயம் நபியே தன் சமூகத்தாருக்கு மருத்துவராகவும் இருப்பார் என்றெல்லாம் பல இடங்களில் படித்தது இல்லையா..?
இது போன்ற பதில்களை வைத்து தான் ’not seeing any side of the coin மாதிரியான பேராசிரியர் என்று சொன்னேன்.
//சீனர் சொன்ன பலவற்றில் ‘இவர்’ ஒன்றை எடுத்துக் கூறியுள்ளார். அவ்வளவே ...//---very very poor மழுப்பல் answer புரபஸர்..! எனது கேள்வி... அப்டியே உள்ளது உங்களால் பதில் அளிக்கப்படாமல்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!