ஓர் ஊரில் மேலத்தெருக்கும் கீழத்தெருக்கும் நடுத்தெருவில் அடிதடி சண்டை நடக்கும்போது, வயதிலும் அறிவிலும் முதிர்ந்த ஊர்ப்பெரியவர்கள், 'நாமெல்லாம் ஒரூர்காரங்கப்பா... அடிச்சிக்காதீங்கப்பா...' என்று சமாதானப்படுத்துவார்கள்.
இதேபோலத்தான்... இரு ஊர் அடித்துக்கொண்டால்... 'நாமெல்லாம் ஒரே ஜில்லா காரங்கப்பா...' என்று கலெக்டர் வருவார்..! இரு மாவட்டம் அடித்துக்கொண்டால், 'தமிழேண்டா' என்று முதல்வர் வருவார்..! இரு மாநிலம் அடித்துக்கொண்டால், 'சாரே ஜஹான்செ அச்சா... ஹிந்துஸ்தான் ஹமாரா...' என்று பிரதமர் வருவார்..!
இதேபோல... இரு நாடுகள் அடித்துக்கொண்டால்...?
'Don't fight within us; as, we are all citizens of this world' என்று எவரும் சமாதானம் பேச முன் வருவதில்லையே..! அது ஏன்..?