ஒரு ஹீரோயின் மனைவி, தன் அதிதீவிர சாமி பக்தியின் காரணமாக 'வாரத்துக்கு ஏழு நாட்கள் மட்டும்(!?) விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ(?) கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில், 'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'(?) சொல்வார்கள் சகோ..!
அதாவது... ஒரு சின்ன மரக்கட்டையின் இரு புறமும் ஆணி அடித்து அது இரண்டையும் ஒரு ரிப்பனால் முடிச்சிட்டு இணைத்து விடவேண்டும். அப்புறம், ஊருக்கு வெளியே ஒரு மரம் இருக்கும்..! அதில் போய் அந்த 'பிள்ளைபாக்கிய தொட்டிலை' மரக்கிளைக்கொம்பில் தொங்கவிட வேண்டும்..! அவ்ளோதான்..! அப்புறம்...? பிள்ளை உண்டாகிவிடுமாம்..! அந்த மரத்தை பார்த்தால்... அதில் இலைகளை விட அதிகமாக இந்த ரிப்பன் தொட்டில்களே ஆயிரக்கணக்கில் தொங்கும்..! என்னவோர் அறியாமை..!
அப்புறம் இன்னொரு மெகாஹிட் சினிமாவில், ஹீரோயின் தன் பூவும் பொட்டும் தாலியும் நிலைக்க (அதாவது ஹீரோ உயிரோடு இருக்க) வேண்டுமானால்... ஒரு மஞ்சள் கயிறில் மஞ்சள் துண்டை கட்டி ஒரு (இதே வேறு மரம்) மரத்தில் தாலி கட்டி தொங்கவிட வேண்டும்..! அப்போது, அந்த மரத்தை காட்டுவார்கள்... பாருங்கள்..! மரம் முழுக்க மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அத்தனை ஆயிரம் தாலிகள் மரத்தில் தொங்கும்..! அட பரிதாபமே..!
இதை எல்லாம்... மக்கள் மகிழ்ந்து ரசிப்பார்கள்..! படம் செமை ஹிட்..! அடுத்த மூட நம்பிக்கை படம் ஹிட் ஆகும் போது முன்னதை மறப்பார்கள்..! இதனால் மட்டுமல்ல... இதற்கு முன்னாலும்... உலக அளவில் இந்தியர்கள் என்றால் அதிகம் மூடநம்பிக்கை உடையவர்கள் என்ற எண்ணம் எப்போதும் மேற்குலகத்தினருக்கு உண்டு. அதேநேரம், நாமோ... அறிவுசார் ஐரோப்பிய நாகரிகம் என்பது மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்ற ஒரு நம்பிக்கையில் இருக்கிறோம்..! ஆனால், இந்த நம்பிக்கை யாருக்கேனும் இருந்தால்... 'இப்படி நம்புவதுவும் ஒரு மூடநம்பிக்கை' என்று தற்போது ஐரோப்பியர்கள் நிரூபிக்கிறார்கள் சகோ..!
2006 -ல் I Want You -என்று ஒரு நாவல்..! ஓர் இத்தாலி ஆசிரியர் எழுதி ஹிட் ஆகி, பின்னர் சினிமாவாக இத்தாலியில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகியது. அதில், ஹீரோவும் ஹீரோயினும் தங்களுடைய காதல் வெற்றிபெற வேண்டும்(?) என்று, ஒரு பூட்டு வாங்கி அதில் தங்கள் இருவர் பெயரையும் எழுதி, இத்தாலியில் உள்ள பிரபலமான ஓர் ஆற்றுப்பாலத்தின் (Ponte Milvio) ஒரு கம்பி அல்லது கைப்பிடி கிரில்... ஆகிய ஏதோ ஒன்றில் கோர்த்து பூட்டிவிட்டு... சாவியை அந்த ஆற்றில் தூக்கி வீசி விடுகின்றனர். இப்படி செய்ததால்... அவர்களின் லவ், சக்சஸ் ஆகி விடுகிறதாம்..! இப்படி பூட்டுறத்துக்கு பேரு 'லவ்-லாக்'காம்..! இந்த லாக்கை போட்ட பின்னாடி, எவரும்... எதுவும்... காதலர்களை பிரிக்கவே முடியாதாம்..! அடக்கொடுமையே..!
.
.
இதைப்பார்த்த இத்தாலி காதலர்கள், தாங்களும் அதேபோல பூட்டு போட்டு சாவியை அதே ஆற்றில் வீச... அந்த ஆற்றுப்பாலம் எப்போதும் செமை ட்ராஃபிக்குடன் ஒரு காதலர் சரணாலயமாக ஆகிவிட, இதைக்கேள்வியுற்ற மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் காதலர்கள் இங்கே வந்து பூட்ட ஆரம்பிக்க... நொந்துபோன இத்தாலி அரசு... அந்த பாலத்தில் சேர்ந்துவிட்ட சுமார் 5000 பூட்டுக்களை உடைத்து விட்டு... அந்த கடுப்பில் இனி யாரும் பாலத்தில் பூட்டினால் 3000 ஈரோ வரை அபராதம் என்று சொல்லியும் வேலைக்கு ஆகவில்லையாம் சகோ..! எப்படியோ ரகசியமாக 'காதலை அங்கே பூட்டி' விடுகின்றனர்..!
.
.
இதே படத்தை செர்பியர்களும் உல்டா அடிக்க... அவரவர் நாட்டில் உள்ள ஆற்றுப்பாலத்தில், 'பாலத்தில் பூட்டு போட்டுவிட்டு, சாவியை ஆற்றில் கடாசி எறிந்து காதலை காப்பாற்றும், இந்த மூடநம்பிக்கை தற்போது ஐரோப்பா முழுதும் வெகு ஜோராக... (எங்கெல்லாம் பாலமும் கைப்பிடி தடுப்பு கிரில்லும் அல்லது வேறு ஏதேனும் பூட்டு மாட்ட பொருத்தமான இடம் பாலத்தில் இருந்தாலும், அங்கெல்லாம்...) படு வேகமாக இளைஞர்கள் மத்தியில் பரவிவருகிறது' என கவலை தெரிவிக்கிறது ஓர் ஐரோப்பிய நாளிதழ்..!
மூடநம்பிக்கை சினிமாவை பார்த்து விட்டு, நம்ம ஊரு புத்திசாலி மக்கள் போல அப்படியே மறந்து விடும் மக்களாக ஐரோப்பியர்கள் இல்லை போலும்..! நீங்களே பாருங்களேன்..! இந்த 21-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு நடக்கும் மூடநம்பிக்கை அக்கிரமத்தை..! அதுவும்... படித்த புத்திசாலிகள்... சிந்தனாவாதிகள் என்று எண்ணப்பட்ட ஐரோப்பியர்களிடம்..!
ஆனால், நம்ம பெங்காளி(தேசிகள்)கள்... உலகில் எந்த இடத்தில் பணம் பண்ணும் வாய்ப்பு இருந்தாலும் விட மாட்டங்க போல சகோ..! அது சரியான வியாபாரமா... தவறான வியாபாரமா... சட்டத்துக்கு உட்பட்டதா... என எந்த வரைமுறையும் இவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பதில்லை..! பணம் பண்ணுவது மட்டுமே ஒரே குறிக்கோள்..! இங்கேயும் நுழைந்து விட்டார்கள்..!
ஆக... பள்ளி, கல்லூரி... அறிவியல் படிப்பு மட்டுமே மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்கும் என்று கருத முடியவில்லை..! பெரும்பாலும், 786, தாயத்து, தகடு, தர்ஹா, பீடை மாதம் என படிக்காதவர்களிடம் இருந்தாலும்... படித்தர்களிடம்தான்... வாஸ்து, அதிஷ்டக்கல், நியுமராலஜி, 13-ம் நம்பர் பீதி, நல்ல நேரம், ராசி பலன், சகுனம், ஜோதிடம், தோஷம், ஜாதகம் பொருத்தம்... என ஏகத்துக்கும் மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கிறது.
இவை ஒழிய அனைவருக்கும் மெய்யான இறைநம்பிக்கை அவசியம். அது எப்படியெனில்... படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை ஆத்திகர்களின் மனதின் ஆழத்தில் இருந்து வர வேண்டும்..! இந்த உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால், பூட்டையும் சாவியையும் மூடத்தனமாக, காதலுக்கு ஆதாரமாக எல்லாம் இவர்கள் நம்பி இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா..?
மூட நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை...!
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக..! (அல்குர்ஆன் 9:51)
இவை ஒழிய அனைவருக்கும் மெய்யான இறைநம்பிக்கை அவசியம். அது எப்படியெனில்... படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை ஆத்திகர்களின் மனதின் ஆழத்தில் இருந்து வர வேண்டும்..! இந்த உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால், பூட்டையும் சாவியையும் மூடத்தனமாக, காதலுக்கு ஆதாரமாக எல்லாம் இவர்கள் நம்பி இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா..?
மூட நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை...!
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக..! (அல்குர்ஆன் 9:51)
31 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ஆஷிக்!
மூட நம்பிக்கையில் இப்படியும் ஒரு வகையா? எத்தனை பூட்டுகள்! அத்தனையும் வீணாக அங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களை அதிகம் கொண்ட ஐரோப்பாவிலும் இப்படி ஒரு மூட நம்பிக்கை. இதில் இவர்கள் மற்றவர்களை வேறு கேலி செய்கிறார்கள். :-)
சமீபத்திய தமிழ் சினிமாவில் பூட்டு மேட்டர் பார்த்த ஞபாகம்.
உலகம் முழுவதும்..........ம்
நன்றி தகவலுக்கும் பகிர்வுக்கும்
ஸலாம்
என்ன ஒரு நம்பிக்கை ........
ரொம்ப creative தான் யோசிக்கிராங்கோ போல ஆனால் ஒன்னு மட்டும் தெரியுது இந்த நம்பிக்கையினாலே பூட்டு தயாரிக்கும் சீனா காரனைவிட நம்ம அண்டை நாட்டான் பங்காளிகள்( ஓமானில் இவர்களை நம்மவர்கள் கிளி என செல்லமாக அழைப்பார்கள்) அதிகமா சம்பாதிக்கிறார்கள்.
காதல் பிரிக்கமுடியாமல் லாக் ஆகியதோ இல்லையோ இந்த மூட நம்பிக்கையால் பூட்டு தயாரிக்கும் கம்பெனிகளுக்கு நல்ல லாபம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இந்த பூட்டு புகைப்படங்களை
அவ்வபோது பல முறை பார்த்த போதிலும்
அதுக்குறித்த
அறியும்
ஆவல்
அப்போது இல்லை...
உங்க பதிவை படித்ததும் தான் அந்த பூட்டு மேட்டரு என்னனு ஓப்பன் ஆச்சி..
== இனி யாரும் பாலத்தில் பூட்டினால் 3000 ஈரோ வரை அபராதம் என்று சொல்லியும் வேலைக்கு ஆகவில்லையாம் ==
அட..! இந்த ஜரோப்பிய சிந்தனவாதிகள் கூட மூட 'நம்பிக்கை கீ'யில் லாக் ஆகிட்டாங்களே.. இனி வேறு இடம் தேடுவாங்களோ....?
பகிர்வுக்கு நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
என்ன சகோ.
இது கனவா? அல்லது நினைவா? நம்பவே முடியலியே!.
//ஆனால், நம்ம பெங்காளி(தேசிகள்)கள்... உலகில் எந்த இடத்தில் பணம் பண்ணும் வாய்ப்பு இருந்தாலும் விட மாட்டங்க போல சகோ..!//
என்ன? இங்கேயும் பெங்காலியா?!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உலகம் முழுவதும் இந்த மாதிரி நகைப்புக்குரிய நிகழ்ச்சிகள் இருக்கும் போல ..
இந்த விவரம் இன்னும் நம்ம ஆட்களுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன் தெரிஞ்சு இருந்தா இங்கயும் பூட்டு வியாபாரம் கனஜோரா நடக்கும் சகோ..:-))
சலாம் சகோ.!
என்ன ஒரு மூடத்தனம் இது.!
இறை நம்பிக்கை சரியாக இல்லாவிட்டால் படித்தோர் பாமரர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது இந்த மூடநம்பிக்கைக்கு!
இந்தியாவில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் பிரசவம் நடக்கிறதாம். நல்லநாள் பார்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதே இதற்கு முக்கிய காரணமாம்.
எங்கே போகிறது உலகம்?
பகுத்தறிவூட்டும் பதிவிற்கு நன்றி சகோ.!
சலாம்
என்னுடைய கேள்வி
மூட நம்பிக்கை கூட அல்லாஹ்வை இணை வைப்பதில் அடங்குமா ?
//இஸ்லாமிய மார்க்கத்தில் புதுமைப் பழக்க வழக்கங்களைப் புகுத்துதல் என்றால் என்ன?
பதில் : இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாததை இஸ்லாமிய மார்க்கத்தினுள் புகுத்தி அதைக் கூட்ட முயலுவதும் அல்லது இருக்கின்றவற்றை அதிலிருந்து அகற்றி அதைக் குறைக்க முயலுவதும் மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துதல் (பித்அத்) எனப்படுகின்றது. அவ்வாறு புதுமைப் பழக்க வழக்கங்களைப மார்க்கத்தில் புகுத்திப் புகுத்தி நாளடைவில் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாக மாறிப் போனவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கேட்கிறான்.
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அல்குர்ஆன் 42:21
நமது மார்க்கத்தில் இல்லாதவற்றை அதில் எவன் புதுமையாகப் புகுத்துகின்றானோ அவை ஏற்கத்தக்கவை அல்ல.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைக் கண்டித்திருக்கிறார்கள்.
நூல் : புகாரி 2697
//
சலாம்
மூட நம்பிக்கை என்பது இஸ்லாத்தில் இல்லை .....
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
இது பூட்டு வியாபாரியின் நல்ல நம்பிக்கை ....காதலர்களின் மூட நம்பிக்கை
//படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் //
இதுதான் உண்மையான இறை நம்பிக்கை.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
இதை(மூடநம்பிக்கை)ப்பார்த்து சிரிப்பதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.
மூடநம்பிக்கையை விட இது வீன் விரயம் செய்யும் செயலாக அவர்களுக்கு தெரியவில்லை போலும்.
இந்தியாவில் இது எப்பொழுது பிரபலமாகப்போகிறதோ தெரியவில்லை அப்படி பிரபலமாகிவிட்டால் வீட்டில் பூட்டுவதற்கு கூட பூட்டுகள் கிடைக்காமல் போய்விடும்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வீணாகப்போவது பூட்டு மட்டுமா... அவர்களின் கலாச்சாரமும்தான்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@மனசாட்சி™//தமிழ் சினிமாவில்...//---ஹா..ஹா.. நம்ம ஆளுங்க பின்பற்ற மாட்டாங்க... மறந்துருவாங்க..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.மனசாட்சி™.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஓமானில் இவர்களை நம்மவர்கள் கிளி என செல்லமாகஅழைப்பார்கள்//---?!?!?
யான் இதற்கான பெயர்க்காரணம் அறியலாமோ..?
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Rabbani.
பூட்டு தயாரிக்கும் கம்பெனிகள் கிளப்பிவிட்ட வதந்திகள் இப்போ மூட நம்பிக்கையின் மறு உருவமாக நிற்கிறது
@அம்பலத்தார்பேசாம... இனி சாவியே தயாரிக்காம அமுக்கு பூட்டு மட்டும் செஞ்சி விப்பாய்ங்களோ..?
:-)) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அம்பலத்தார்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
போன பதிவு சம்பந்தமா wed-lock பத்தி தேடினப்போதான்... love-lock பத்தி அறிய முடிஞ்சது..! உடன் பகிர்வு..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.G u l a m.
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///என்ன? இங்கேயும் பெங்காலியா?!///
---கேரளாகாரன் இப்போ ஹை டெக் வேலைகளில் ஈடுபடுவதால்... அவன் விட்ட இடத்தை பெரும்பாலும் நிரப்புவது பெங்காளிகள்தான்..! இவர்கள் எந்த வேலைக்கும் தயார்..!
Armstrong/Aldrin நிலவில் இறங்கிய இடம்... "நாயர் கடை டீ ஸ்டால் வாசல்" என்று ஜோக் படித்து இருப்பீர்கள்..!
இனி,
"எவன்டா இங்கே பான் பராக் பீடாவை மென்று துப்பி அசிங்கம் பண்ணி வைத்தது..?" ...என்று செவ்வாயில் கால் வைக்கும் விண்வெளி வீரர்கள் கேட்பதாக... கூடிய விரைவில் ஜோக் வரலாம்..!
:-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha.
@Ayushabegumஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///உலகம் முழுவதும் இந்த மாதிரி நகைப்புக்குரிய நிகழ்ச்சிகள் இருக்கும் போல..///---சரியான இறைநம்பிக்கை இல்லாத எந்த இடத்திலும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இடம்பெறும் சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Ayushabegum.
@தமிழ் மீரான்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்தியாவில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் பிரசவம் நடக்கிறதாம். நல்லநாள் பார்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதே இதற்கு முக்கிய காரணமாம்///---அடக்கொடுமையே..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.தமிழ் மீரான்.
@சிந்தனைஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///என்னுடைய கேள்வி
மூட நம்பிக்கை கூட அல்லாஹ்வை இணை வைப்பதில் அடங்குமா ?///
பதில் ரொம்ப சிம்பிள்தான் சகோ..!
"இந்த பூட்டின் மூலம்தான் எங்கள் இருவரையும் பிரிக்காமல் இறைவன் பாதுகாப்பான்" என்று காதலர்கள் நம்பினால் அது பித்அத்..! இறைவனும் இறைத்தூதரும் சொல்லாத நம்பிக்கை மூடநம்பிக்கை..!
ஏனெனில், திருமண துவா "பாரக்கலாஹு லக..." என்று மணமக்களை சேர்ந்து வாழ பிரார்த்திக்க சொல்லி ஆதாரம் உள்ளதுபோல... பூட்டு மேட்டருக்கும் இப்படி சொல்பவர் இஸ்லாத்தில் இதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்..!இல்லையேல் பித்அத்... அது கொண்டு போய் சேர்க்கும் இடம் நரகம்..! மன்னிப்பு கேட்டால்... அல்லது இறைவன் நாடினால் மன்னிப்பு உண்டு..!
"இந்த பூட்டுதான் எங்கள் இருவரையும் பிரிக்காமல் பாதுகாக்குறது" என்று காதலர்கள் நம்பினால் அது மூடநம்பிக்கை மட்டும் அல்ல..! ஷிர்க்..! இணைவைப்பு..!
இறைவன்
இடத்தில் பூட்டை அவர்கள் இறைவனாக
இணைவைக்கின்றனர்..!
இப்படி
இணைவைத்த நிலையிலேயே இறந்தால் நிரந்தர நரகம் என்று
இறைவன் சொல்வதை நாம் அறிவோம்..!
பொருத்தமான திருமறை வசனம்..! பதிவில் இணைத்து விட்டேன்..! ஜசாக்கல்லாஹு க்ஹைர்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிந்தனை.
@ZAKIR HUSSAINவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ZAKIR HUSSAIN.
@பழனி.கந்தசாமி
//இதுதான் உண்மையான இறை நம்பிக்கை.//---மிகச்சரியானதை ஆமோதித்து இருக்கிறீர்கள் சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.பழனி.கந்தசாமி.
@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது வீன் விரயம்//---நிச்சயமாக சகோ..! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஷஃபி.
@அப்துல்மாலிக்///பூட்டு தயாரிக்கும் கம்பெனிகள் கிளப்பிவிட்ட வதந்திகள்///---எனக்கு இது புதிய விஷயமாக உள்ளது சகோ. நான் ஆதாரம் தேடுகிறேன். உங்களுக்கு கிடைத்தால் பகிருங்கள்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அப்துல்மாலிக்.
//ஓமானில் இவர்களை நம்மவர்கள் கிளி என செல்லமாகஅழைப்பார்கள்//---?!?!?
யான் இதற்கான பெயர்க்காரணம் அறியலாமோ..?
பங்காளிகள் பேசும்போது கீ கீ என அதிகம் உபயோகிப்பதால் இருக்கலாம் சகோ
உதாரணமாக கீ khabar ( என்ன செய்தி ) கீயாசே , எடகீ
சலாம் சகோ ஆசிக்,
மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களுக்கு நாடு பேதம் கிடையாது. இங்கு அதிகம் அங்கு குறைவு என்று வேண்டும் என்றால் சொல்லலாம்.
புதிய தகவல்கள் தந்ததற்கு நன்றி.
திண்டுக்கல் பக்கம் இப்படி ஒரு தர்ஹாவோ கோயிலோ இருந்தா பூட்டு தொழில் நசியாமல் பார்த்துக்கொள்ளலாம் ,,,
காதலர்களின் தரமான தடுப்பு சுவர்.திருடன் கூட உடைக்க வெறுப்பு அடைந்து திருந்திவிடுவான் போலும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!