இவ்வுலகில் மனிதனை தம் சுய அறிவுடன் காரியமாற்றும் படி படைத்த இறைவன் அவனை சும்மா வெறுங்கையுடன் விட்டுவிடவில்லை ..! 'எப்படி இவ்வுலகில் வாழவேண்டும்' என்று தான் படைத்த முதல் மனிதனுக்கே அறிவுறுத்தும் வண்ணம் 'இஸ்லாம் எனும் நேரிய வாழ்வியல் நெறி' ஒன்றை அவருக்கு அருளிய இறைவன், அவரை தம் இறைத்தூதராகவும் ஆக்கி அவரின் மனைவிக்கும் அனுப்பி அந்த வாழ்வியல் நெறியை பகிரவும், தம் சந்ததிக்கும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் வைத்தார். காலப்போக்கில் சிலர் இந்த இறைவழியை புறக்கணித்து தம் மனம் விரும்பிய வழியில் செல்லத்துணியும்போது, வாழ்வியல் நெறியை அப்போதும் பேணுவோர், ஓரிறை நெறி பிரழ்ந்தவோர் மீது பிரச்சாரம் செய்வதும், அவர்களில் ஒரு சாரார் மீள்வதும் மற்றொரு சாரார் அதனை புறக்கணிப்பதும் அன்றிலிருந்து தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், "நம் பணி இறைச்செய்தியை தெளிவாக இவர்களிடம் சொல்வது மட்டுமே... சொல்லியாயிற்று... இனி இவர்களுக்கு இறைவன் விட்ட வழி" என்று இந்த ஆத்திக இறைப்பற்று கொண்டவர்கள் எண்ணினால்... அவர்களை 'மதப்பற்று' கொண்டவர்கள் எனலாம்.
அவ்வாறின்றி, 'நான் சொல்வதை கேட்காத உன்னை விட்டேனா பார்' என்று இறைநெறி மறுப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பதும், கொடுமை புரிவதும், கொலை செய்வதும் 'மதவெறி' ஆகிவிடுகிறது.
இறையச்சமும் இறைவிருப்பும் ஆத்திக மதப்பற்றாளர்களை தோற்றுவிக்கிறது.
இவர்களில்...
இறையச்சமும் இறைவிருப்பும் பின்னுக்கு தள்ளப்பட்டு மதப்பற்றும் மதவிருப்பும் மட்டுமே முக்கியம் ஆகும்போது .... ஆத்திக 'மதவெறி'யர்களை தோற்றுவிக்கிறது.
அதேபோல...
இறைமறுப்பும் மத நிராகரிப்பும் நாத்திகப்பற்றாளர்களை தோற்றுவிக்கிறது. அவர்களில் தங்கள் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் 'மதஎதிர்வாதி'கள் சிலர் உள்ளனர்.
இந்த 'மதஎதிர்வாத' நாத்திகர்களில்,
இறைமறுப்பும் மத நிராகரிப்பும் பின்னுக்கு தள்ளப்பட்டு 'நான் என்னும் சுயஅகங்காரம்(ஈகோ)' மட்டுமே தன் கருத்தில் மேலோங்குதலும், அதீத மதவெருப்பும் 'மதஎதிர்வெறி'யர்களை தோற்றுவிக்கிறது. ஒரு கட்டத்தில் தங்கள் வாதங்கள் தோற்றுப்போன நிராசையால் இவர்கள் தன்னையே 'இறைவன்' என்றும் கூறிக் கொள்வார்கள்..! தம் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் எதிர்கருத்து கொண்டோரை கொல்லத்துனிவர். உதாரணம்: மூஸா நபி (அலை..) காலத்திய ஃபிர்அவ்ன்..! (Pharaoh of Moses Period in ancient Egypt)
---'மதவெறியர்', 'மதஎதிர்வெறியர்' ஆகிய இந்த இரண்டு பிரிவினருமே மனித சமூகத்துக்கு நல்லதில்லை..!
ஜனவரி.30-1948,
அன்று காந்தியை சுட்ட 'மதவெறியன்' நாதுராம் கோட்சே யின் மந்திரமும் 'ஹே ராம்' தான்.
மதப்பற்றாளர் அல்லது மதவாதி எனப்படும் காந்தியின் மந்திரமும் 'ஹே ராம்' தான்.
சுட்டவன் - சுடப்பட்டவர் ஆகிய இருவரின் மதமும் ஒன்றுதான்..!
'மதப்பற்றாளர்' காந்தியால் எவருடைய உயிருக்கும் உடைமைக்கும் எந்தக்கேடும் நேர்ந்ததில்லை. ஆனால், 'மதவெறியன்' கோட்சேவின் கும்பல் அன்று முதல் இன்றைக்கும் நாட்டில் செய்து வரும் ரத்த யாத்திரை கொலைகளும், மசூதி இடிப்பு அட்டூழியமும், ஆர்.டி.எக்ஸ் குண்டுவெடிப்புகளும்... இதனால் நம் நாடு இப்பொழுது அடைந்து கொண்டு இருக்கும் பெருங்கேடும் நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே..!
'மதப்பற்றுடையவர்கள்' என்றுமே 'மதவெறியர்கள்' ஆகமாட்டார்கள்..!
உலகில் பெரும்பாலானவர்கள் 'மதப்பற்றாளர்கள்'தான். இவர்கள் தமக்கு சரி என்று
பட்டதை, இதை மற்றவர்களுக்கு எழுத்தின் மூலமோ, வாய் வார்த்தை மூலமோ
சொன்னால், கேட்கும் மற்றவர்கள் அதில் சரிகானும் பட்சத்தில், அதை
ஏற்றுக்கொண்டால், 'தாம் சொன்னது அவர்களுக்கும் உபயோகமாக இருக்கிறது' என்று
மனம் மகிழ்வர். அவ்வளவுதான் இவர்கள்.
இப்படி சொல்லியும்
ஏற்றுக்கொள்ளாதவர்களை... அவர்கள் 'இருக்கவே கூடாது' என்று நினைப்போர்தான்
'மதவெறியர்' ஆவார். அரை அல்லது அதிகப்படியாய் ஒரு சதவிகிதம் பேர் உள்ள இவர்களுக்கு எதிராக மதப்பற்றாளர்கள் தங்கள் கருத்தை கூறினால்...
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே போலவே...
பாகிஸ்தான் பஞ்சாப் கவர்னர் சல்மான் தசீரை சுட்டுக்கொன்ற மாலிக் மும்டஸ் காதிரி மாதிரி...
சக
கிருத்துவர்களை சுட்டுக்கொன்று குவித்த நார்வே படுகொலையாளன் ஆண்ட்ரூஸ்
ப்ரீவிக் போன்று...
தம் மதத்தை பின்பற்றும் நல்லோரையே சுட்டுக்கொல்லும் 'மதவெறியர்கள்' ஆக மாறக்கூடும்.
தம் மதத்தை பின்பற்றும் நல்லோரையே சுட்டுக்கொல்லும் 'மதவெறியர்கள்' ஆக மாறக்கூடும்.
இதேபோலவே,
'மதஎதிர்வெறி' கொண்ட 'சிலர்' இஸ்லாம் மீது பயங்கர 'எதிர்ப்புவெறி' பிடித்து அலைகின்றனர். காரணம் என்னவென்றால்... மற்ற மத எதிர்ப்புகளுக்கு தக்க ஆதாரம் மற்றும் வாதங்கள் கொண்டு விவாதிக்க முடிந்த இவர்களுக்கு இஸ்லாமிய மதப்பற்றாளர்களுக்கு மட்டும் தக்க பதில் வாதங்கள் வைக்க முடிவதில்லை.
மேலும், எந்த சரியான கொள்கைகளை கொண்டு அவர்கள் பிற மதங்களை புறக்கணிக்கின்றனரோ அதே சரியான கொள்கைகளை கொண்ட இஸ்லாமை எதிர்க்க முடிவதில்லை.
உதாரணம்... பல/சில தெய்வக்கொள்கை, உடன்கட்டை, விதவை மறுமணம் ரத்து, பெண்ணடிமைத்தனம், தேவதாஸி, சமூக சமநீதி, பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணக்கதைகள், பிறப்பு முதல் திருமணம் ஊடாக இறப்பு வரை ஒரு மனிதனுக்கு உண்டாக்கப்பட்ட அறிவுக்கு ஏற்கவே முடியாத கேள்விக்குறிய மத மூடநம்பிக்கை சடங்குகள், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகள்..! மேற்படி விஷயங்களை எதிர்க்கும் இஸ்லாமை எப்படி எதிர்ப்பது என்ற உண்மை புரிந்தவர்கள் இஸ்லாம் பக்கம் வந்து விடுகின்றனர். உதாரணம், இந்திய முஸ்லிம்கள்..! சமீபத்தில் பிரபல உதாரணம்... நாத்திகராக இருந்து முஸ்லிம் ஆகிய அதாவது,
அப்துல்லாஹ்வாகிய பெரியார் தாசன்..!
ஒருவர், 'தனக்கு மதம் வேண்டாம்' என்று விரும்பினால் அது அவர் விருப்பம்.
கூடவே, 'இறைவனும் இல்லை' என்றால் நாத்திகர் என்போம். இவர்கள் நாம் மேலே
கண்ட 'மதப்பற்றாளர்கள்' போன்ற தங்கள் கொள்கையின் பற்று காரணமாக 'நாத்திக
பற்றாளர்கள்'..! இவர்கள், 'தாம் கொண்ட கொள்கை சரியா' என்பதில் சந்தேகம்
கொண்டால்... அவர்கள் மதஅடிப்படைவாதிகளிடம் தாமாக முன்வந்து தம் சந்தேகங்களை
விவாதிப்பார்கள். மாறாக, மதஅடிப்படை வாதிகளின் பேச்சுரிமை/எழுத்துரிமை
இவற்றை எதிர்க்க மாட்டார்கள். விவாதம் மூலம், இந்த நாத்திகர்கள் மத
அடிப்படை வாதிகளாக ஒருகால் மாறவும் செய்வார்கள். இவர்களால் சமூகத்துக்கு
எவ்வித கேடும் இல்லை.
ஆனால், இது போன்ற விவாதத்தில்... 'தான் இத்தனை நாள் கொண்ட நாத்திக நம்பிக்கை செத்து விடப் போகிறதே' என்ற அகங்காரத்துடன் கூடிய தம் மீதான கழிவிரக்கம்... இவர்களை 'மதஎதிர்வாதி'களாக பரிணாமம் கொள்ள வைக்கிறது..! அதனால், அறிவுக்கு ஒவ்வாத வகையில் ஆனாலும்... 'எதையாவது சொல்லி இஸ்லாமை எதிர்த்தே ஆகவேண்டும்' என்ற பரிதாப கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 'தம் நாத்திக நிலையை புரட்டிப்போடும் இந்த இஸ்லாம் கூறும் மதப்பற்றாளர்கள் இருக்கவே கூடாது' என்ற ... தம் ஃபாசிஸ கொள்கையினால் இஸ்லாமிய பற்றாளர்களை 'மதவாதி' என்று ஏதோ 'தீவிரவாதி' போல திரித்து விளித்து வருகிறார்கள்..!
'அவர்களுக்கு மிகச்சரியான எதிர் கருத்து கொண்டவர்களான முஸ்லிம்கள் எவருமே, தம் பதிவை பகிரும்
திரட்டிகளில் கூட இருக்க கூடாது' என்ற ஃபாசிஸ சித்தாந்தம் நடுநிலை எண்ணம்
கொண்ட நல்லோர் எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது..!
இந்த 'மதஎதிர்வாதி'களின் முந்தய 'மதஎதிர்ப்பு' என்பது சிறிது சிறிதாக 'மதஎதிர்வெறி'யாகும் போது அது 'மதவெறி'யைவிட கொடுமையானதாய் கூட ஆகலாம்.
எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில்
இருந்து நீக்க நினைக்கும் இவர்கள் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை
நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட குரூரமாக நினைக்க ஆரம்பிக்கலாம்..!
இப்படி ஒருவர் 'மதஎதிர்வெறி' கொண்டால்... மன வக்கிரம்
கொண்ட பிறகு 'மதவெறியனுக்கும்', 'மதஎதிர்வெறியனுக்கும்' எந்த
வித்தியாசமும் இல்லையே..! இந்த 'மதவெறியர்'களிடம் இருக்கும் வக்கிரமும், இந்த 'மதஎதிர்வெறியர்'களிடம் இருக்கும் வக்கிரமும் ஒரேமாதிரியானதுதான்.
எந்த வெறியாயினும் அந்த வெறி அழிக்கப்படவேண்டிய ஒன்று..!
சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர்கள் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு,
நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல்
நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..! மதஎதிர்வெறி அழிப்பு மருந்து யாதெனில் அவர்களிடம் நாம் தொடர்ந்து வரும் மத அடிப்படைவாத பிரச்சாரம் மட்டுமே..! மத வெறியர்களிடம் சரியான மத அடிப்படை புரிதலை ஏற்படுத்தினால்தான் அவர்கள் மதவெறியிலிருந்து மீண்டு 'மிதவாதிகளான மதப்பற்றாளர்களாக' மாறக்கூடும்.
ஏனெனில், மதங்கள் பொதுவாக பிறருக்கு அநீதி இழைக்க சொல்வதில்லை. அதிலும், இஸ்லாம் மட்டும் ஒரு படி அதிகம் சென்று, 'அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்துக்கும் இறைவனுக்கும் இடையே திரையே இல்லை' என்று சொல்கிறது.
இன்னும் ஒரு படி மேலே போய், 'அநீதி இழைக்கப்பட்டவன் தனக்கு அநியாயம் செய்தவனை மன்னிக்காவிட்டால்... அந்த பாவத்தை மன்னிக்க இறைவனிடம் எவ்வளவு மன்றாடினாலும் இறைவன் மன்னிப்பதில்லை' என்றும் இஸ்லாம் மனிதவுரிமையை தெளிவாக அறிவிக்கிறது.
இன்றைய தமிழ்ப்பதிவுலகில் 'மதஎதிர்வாதி'கள் வெகு சிலர் 'நாத்திகர்' என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு உள்ளனர். அவர்கள் 'மதஎதிர்வெறி'யர்கள் ஆவதற்குள் அவர்களை சரியாக பிரித்தறிந்து, அன்பு சகிப்புத்தன்மை போன்ற நல்லுபதேசங்களை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இவர்கள் 'யார் யார்' என்பதனை அவர்களின் ஆதாரமற்ற வெற்று குற்றச்சாட்டு பதிவுகள், மொக்கை பின்னூட்டங்கள் ஆகிய இவற்றில் உள்ள ஆபாச- அமங்கல- அசிங்க- வார்த்தைகள் சுலபமாக நமக்கு காட்டிக்கொடுத்து விடும். ஆகவே, இவர்களை பிரித்தறிவது மிகவும் எளிமையான ஒன்றுதான்..!
இவர்கள் 'யார் யார்' என்பதனை அவர்களின் ஆதாரமற்ற வெற்று குற்றச்சாட்டு பதிவுகள், மொக்கை பின்னூட்டங்கள் ஆகிய இவற்றில் உள்ள ஆபாச- அமங்கல- அசிங்க- வார்த்தைகள் சுலபமாக நமக்கு காட்டிக்கொடுத்து விடும். ஆகவே, இவர்களை பிரித்தறிவது மிகவும் எளிமையான ஒன்றுதான்..!
31 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல ஆக்கம் சகோ புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
அஸ்ஸலாமு அலைக்கும் ! சகோ ஆஷிக்!
பொறுமையாக தெளிவாக ஒரு ஆக்கத்தை அளித்திருக்கிறீர்கள். யாருக்கு இது சொல்லப்பட்டதோ அவர்கள் சிறிது சிந்தனை செய்வார்களானால் அவர்கள் பக்கம் உள்ள தவறை உணர்ந்து கொள்வர். சிறந்த பகிர்வு சகோ.
Assalamu Alaikkum w.r.b.
I have submitted this post in "TAMILMANAM."
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சரியாய் மதவாதி, மத எதிர்பாதி போன்றவர்களை வகைபடுத்தியுள்ளீர்கள்.. அருமையா இருந்தது.
சரியாக சொன்னீர்கள்...... தடை செய்யப்பட வேண்டியா கூட்டம் அவர்கள்
#மதப்பற்றுடையவர்கள்' என்றுமே 'மதவெறியர்கள்' ஆகமாட்டார்கள்..!#
சலாம் சகோ....
இதைவிட வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு...அருமை சகோ....
//இப்படி ஒருவர் 'மதஎதிர்வெறி' கொண்டால்... மன வக்கிரம் கொண்ட பிறகு 'மதவெறியனுக்கும்', 'மதஎதிர்வெறியனுக்கும்' எந்த வித்தியாசமும் இல்லையே..! இந்த 'மதவெறியர்'களிடம் இருக்கும் வக்கிரமும், இந்த 'மதஎதிர்வெறியர்'களிடம் இருக்கும் வக்கிரமும் ஒரேமாதிரியானதுதான்.
எந்த வெறியாயினும் அந்த வெறி அழிக்கப்படவேண்டிய ஒன்று..!//
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அருமையாகச் சொன்னீர்கள், சகோ.
மிக நல்ல பயனுள்ள வலை தளம் .
பிர்தௌஸ் ராஜகுமாரன் ,கோவை .
அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லாத்தையும் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட போறேன்
எத்தன வியாதி? மதவியாதி,மதஎதிர்வியாதி,கம்யூனிஸவியாதி,நாத்திகவியாதி
ஆனால் நான் மதவியாதியல்ல,மார்க்கத்தை அழகிய வழிமுறையை பின்பற்றுபவன்
எனது முன்னொர்களும் மார்க்கம் என்று தான் எங்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நல்லப்பதிவு!
புரிய வேண்டியவர்கள் இனியாவது புரிந்துக்கொள்ள முயற்சிக்கட்டும்
இதில் இன்னும் ஒரு விசயம் தெளிவாக புரிகிறது சகோ களங்கம் கற்பிக்கும் வகையில் இஸ்லாமிய பதிவர்கள் போலியாய் பின்னூட்டமிடுகிறார்கள் என கூறும் நேர்மையின் முகவரிகளில் வசிப்பவர்கள் இடும் பின்னூட்டங்களை கூட வெளியிட மறுப்பது தான் நகை முரண். நேற்று இரவு சகோ கோவி கண்ணன். தளத்தில் இட்ட பின்னூட்டம் (சவனப்பிரியனுக்கு அடுத்ததாக) இதுவரை வெளியிடப்படவில்லை... அவர்களின் நேர்மையின் தரம் அவ்வளவு தான் என உணர்த்தவே இங்கு அந்த பின்னூட்டம்
============================================
அன்பு சகோ கோவி.கண்ணன்
உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்...
சிலமுறை உங்கள் தளத்தை பார்வையிட்டாலும். கருத்திட விளைந்தது இதுவே முதல்முறையென நினைக்கிறேன்...
தொடர்ந்து இஸ்லாத்தை மையப்படுத்திய சில இடுகைகள் தமிழ்மண மகுடமாக வந்திருப்பது உண்மைதான். இதை மையப்படுத்தி தற்போது பதிவிட்ட நீங்கள் அத்தகைய ஆக்கங்கள் என்னவிதமான பிரச்சனைகளை தனிமனிதருக்கோ அல்லது ஒட்டு மொத்த சமூகத்திற்கோ ஏற்படுத்தியது என்பதை சொல்ல வில்லையே?
சகோ முதலில் எதார்த்தம் என்ன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்
ஒருவர் பொதுவில் ஒன்றை பகிரவேண்டுமென்றால் எது தெளிவாக தெரியுமோ, அல்லது புரியுமோ அதைக்குறித்துதான் அவரால் பதிவுகளாக வெளியிடமுடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று!.
சினிமாத்துறையே விரும்புவர் சினிமா பற்றியும்,
அரசியலில் ஆர்வம் கொண்டவர் அரசியல் குறித்தும் - அஃதில்லாத
தொழில் நுட்பம் அறிந்தவர் அதைக்குறித்தும் ஆக்கங்கள் எழுதுவர்.
அதுப்போலவே இஸ்லாத்தை தெரிந்தவர்கள் இஸ்லாத்தை தானே சொல்ல முடியும்!
இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு சகோ ? தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி. நமது கருத்துக்கள் பலரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு அத்திரட்டியில் பகிரப்படுதல் அவசியமென நினைப்பவர்கள் அவற்றில் பகிர்கிறார்கள். அதில் முஸ்லிம்களும் அடக்கம். ஓட்டளிப்பது அவரவர் உரிமை. ஆக பலர் அளிக்கும் வாக்குகள் ஒருவரின் பதிவை மகுடத்திற்கு கொண்டுசெல்வதில் என்ன தவறு? இதில் எந்த வித முறைகேடு நிகழ்ந்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள்? இன்று வரையிலும் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால் இது போன்ற நிலைகள் சுய தீர்மானிப்பு என்றும் கண்டனம் தெரிவிக்க முடியாது. மேலும் முஸ்லிம்கள் எழுதும் ஆக்கங்களுக்கு சமூக பயன்பாடு இருப்பதாக சக முஸ்லிம்கள் நினைப்பதால் ப்ளஸ் ஓட்டளிக்கிறார்கள். அவ்வாக்கம் சமூக நலனுக்கு கேடு விளைவிக்குமென்றால் மைனஸ் ஓட்டுப்போட்டு தாரளமாக அங்கே எதிர்ப்பை தெரிவிக்கலாமே?
எனக்கு ப்ளஸ் ஓட்டு போடும் உரிமையை வழங்கிய அதே தமிழ்மணம் உங்களுக்கும் மைனஸ் ஓட்டுப்போடும் உரிமையை அங்கு வழங்கிதானே உள்ளது! பிறகென்ன?
இவைப்போன்றவைகள் தேவையற்ற அல்லது அவசியமற்ற பதிவுகள் என உங்களைப்போல நினைப்போர் தாரளமாக பதிவுகளை முன்னுக்கு வருவதை தடை செய்யலாமே...?
ஏனெனில் பொதுவாக இணையத்தை அதிகம் பயன்படுத்துவோர் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாத சகோதர்களே., அப்படியிருக்க மேற்சொன்ன வழிமுறை மிக இலகுவானதே? ஏன் அப்படி செய்யவில்லை...? இஸ்லாமிய பதிவுகளால் எந்த வித பாதகமும் ஏற்படுவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக அறிந்தவர்களாக இருப்பதாலே...
தமிழ்மணத்தில் இஸ்லாமிய பதிவுகள் மகுடம் சூட்டுவதற்கு முஸ்லிம்களின் ஆக்ரமிப்பு காரணமில்லை சகோ முஸ்லிம்கள் மத்தியில் தமிழ்மண வாசிப்பின் அதிகரிப்பே காரணம்.
சரி இன்னும் எளிய விளக்கம் தர முயல்கிறேன்
பெரும்பாலும் உங்கள் கருத்துக்கள் மதங்களை அல்லது கடவுளை (குறிப்பாய் இஸ்லாத்தை) விமர்சித்தே ஆக்கமாக இருக்கிறது. அதே நிலையில் உங்கள் மீது நான் குற்றச்ச்சாட்டை பொருத்தினால்...? தமிழ்மண விருதுகள் இரண்டு முறை பெறுவதற்கு மதங்ளை தாக்கி எழுதியது தான் காரணம் என்றால் எப்படி அது பொருத்தமான வாதமாக ஏற்றுக்கொள்ள முடியாதோ அதுப்போல தான் உங்களின் மேற்கண்ட குற்றச்சாட்டும்!
யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை சகோ எழுதப்படும் ஆக்கங்கள் எதற்காக என்பதே... இங்கு சிந்தையில் நிறுத்த வேண்டிய ஒன்று!
இப்போதும் பாருங்கள் மத ஆக்ரமிப்பு எனும் பேரில் மதத்தை விமர்சித்தே ஹிட் பெற நினைக்கிறீர்கள்... ? இதை எந்த வகை பதிவில் சேர்க்க...
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்
இறை நாடினால் இனியும் தொடர்கிறேன்
============================================
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
'மதப்பற்று' Vs 'மதவெறி', 'மதஎதிர்வாதி' & 'மதஎதிர்வெறி' , 'மதப்பற்றாளர்' Vs 'மதவெறியன்', 'மதஎதிர்ப்பு'தான் சிறிது சிறிதாக 'மதஎதிர்வெறி'யாக மாறிவிடுகிறது என எத்தனை விளக்கங்கள்!! இவ்வளவு தெளிவாக க்ளாஸ் எடுத்த பிறகாவது அவர்கள் புரிந்துக் கொண்டால் சந்தோஷமே!
'வாத்தியார் பிள்ளை மக்கு'ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. ஆனா அது உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இங்கே ப்ரொஃபசர் மகன் ஒரு குட்டி ப்ரொஃபசரா தெரியுது சகோ, மாஷா அல்லாஹ் :)
சலாம் சகோ குலாம்,
என்ன இவ்வளவு பெரிய பின்னூட்டம்???? பேசாமல் இதை ஒரு பதிவாக போட்டு மகுடம் சூடி இருக்கலாமே??? போங்க சகோ, ஒரு மகுடத்தை மிஸ் பண்ணிட்டீங்களே...
புரிபவர்களுக்கு ஒரு விளக்கம்,
நான் 2 நாட்களுக்கு முன் பதிவிட்ட "சவுதியில் இந்தியர்கள் இரத்ததானம்" என்ற பதிவு சகோ சுவனப்பிரியனுடயது. அதை அவர் பதிவிட்ட பொழுது அவருக்கு கிடைத்த வோட்டு 5 . அதே பதிவை தலைப்பை மட்டும் மாற்றி நான் காபி பேஸ்ட் செய்தேன். எனக்கு கிடைத்த வோட்டு 25 . ஏன் இந்த மதவாதிகள் சுவனப்பிரியனுக்கு 25 வோட்டுக்கள் இட்டு அவரை மகுடத்தில் ஏற்றவில்லை????
நான் மொக்கை பதிவுகள் எழுதுபவன் என்பதும், சுவனப்பிரியன் இஸ்லாமிய பதிவு எழுபவர் என்பதும் உலகறிந்தது.
இதில என்ன இன்னொரு காமெடி அப்படின்னா, சகோ சுவனப்பிரியனும் எனக்கு வோட்டு போட்டு இருந்தார். எவ்வளவு பெரிய மனது வேண்டும் இதற்க்கு, எவ்வளவு பெரும்தன்மை. சுவனப்பிரியன பாத்தாவது கத்துகங்கப்பா....
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அந்த அந்த சூழ்நிலைக்கு பொறுத்தே இஸ்லாமியர்கள் வோட்டு அளிக்கிறார்கள்.
அப்புறம், நம்ம சகோ தமிழ்மணத்தில் இருந்து விலகியாச்சா????? இல்ல இன்னும் வண்டி அங்கதான் ஓடிகிட்டு இருக்கா????
சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
சமீப காலமாக பதிவுலகில் போலி நாத்திகர்களும், அரைகுறை நாத்திகர்களும், குறைஅரை நாத்திகர்களும், நாத்திகமும் ஆத்திகமும் கலந்த நாத்திகர்களும், முழுவதும் ஆத்திகம் மட்டுமே உள்ள நாத்திகர்களும்... இவ்வாறு நாத்திகத்தின் பல பிரிவுகளைச் சார்ந்த நண்பர்கள்(என்ன கண்ண கட்டுதா??? கண்டிப்பா கட்டும், கட்டணும்... இல்லாட்டி நீங்க நார்மலா இல்லன்னு அர்த்தம்) இஸ்லாத்தை குறிவைத்து தாக்குவதில் ஒரு நியாயம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் நாத்திகத்திற்கு எதிரான ஆணித்தரமான அறிவிப்பூர்வமான வாதங்களை வைக்கிறீர்கள்.
மாற்று மதத்தினர் இவர்களை கண்டு கொள்ளாதது போல் நீங்கள் செல்வது இல்லை. டார்வின் வரை தோண்டித் துருவிகிரீர்கள். அதனால் வரும் கோபத்தின் வெளிப்பாடுதான் இதெல்லாம்.
இவற்றை கண்டுகொள்ளாமல் நீங்கள் தொடர்ந்து உங்கள் வழக்கமான பதிவுகளை இட்டு, தமிழ்மணம் மகுடம் சூட வாழ்த்துக்கள்.
நீங்க தான் தமிழ்மணத்தில் இணைய வில்லையே.... பேசாமல் இணைந்து விடுங்கள் சகோ. தமிழ் மணம் முழுவதையும் கழிவறை பதிவுகளும், சினிமா பதிவுகளும், 18 + பதிவுகள் போன்ற குப்பைகள் ஆக்கிரமித்து தமிழ் இணையத்தின் எதிர்காலத்தையே கேள்வி குறி ஆக்கி உள்ளனர். உங்கள் போன்றவர்கள் தான் வந்து கலை எடுக்க வேண்டும்.
50 + தாண்டியவர்கள் எல்லாம் 18 + பதிவு போடறாங்க. காலக் கொடும... வேற என்ன சொல்றது.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அப்புறம், நம்ம சகோ தமிழ்மணத்தில் இருந்து விலகியாச்சா????? இல்ல இன்னும் வண்டி அங்கதான் ஓடிகிட்டு இருக்கா????//
//நீங்க தான் தமிழ்மணத்தில் இணைய வில்லையே....//
---சகோ.சிராஜ்,
எத்தனை முறை சொல்வது..? நான் அதில் இணைந்துதான் உள்ளேன். சவூதியில் ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. தமிழ்மணம் தளமும் தடை காரணமாக திறக்காது.
மூன்றாம் பின்னூட்டம் பாருங்கள். சகோ.வாஞ்சூர் இந்த பதிவை அங்கே சேர்த்துள்ளார். இப்படி, பிற நாட்டினர் தான் அங்கே விரும்பினால் சேர்ப்பிக்கிறார்கள். நீங்களும் விரும்பினால் சேர்ப்பிக்கலாம்.
முன்னர், தானியங்கி முறையில் இணைந்தது போலல்லாம் கடந்த ஒன்றிரண்டு மாதமாக இணைவதில்லை...!
என் பதிவையே.... ஒவ்வொரு முறையும் நீங்கள் யாராவது ஒருவர் இணைத்தால் தான் அங்கே இணைகிறது..! ஒரு நாள் கழித்தோ... இரண்டு நாள் கழித்தோ..! :-)
இல்லாவிட்டால், "நான் அங்கே இல்லை" என்றுதான் நீங்கள் நினைக்க வேண்டி வரும்..! :-))
@சிராஜ்//நீங்கள் அனைவரும் நாத்திகத்திற்கு எதிரான ஆணித்தரமான அறிவிப்பூர்வமான வாதங்களை வைக்கிறீர்கள். மாற்று மதத்தினர் இவர்களை கண்டு கொள்ளாதது போல் நீங்கள் செல்வது இல்லை. டார்வின் வரை தோண்டித் துருவிகிரீர்கள். அதனால் வரும் கோபத்தின் வெளிப்பாடுதான் இதெல்லாம்.//---என்ன இது..?
'நீங்கள்'...'கிரீர்கள்.'..??
'நாம்'...'கிறோம்'..!!
ஓகே..!?!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
பல வருஷமா நிறைய நோட்ஸ் எழுதி இருக்கோம்ல... :-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நகை முரண்.//---'படுகேவலம்' என்று சொல்லுங்கள்..!
இப்படி நம் பின்னூட்டம் வெளியிடாவிட்டலோ...
வெளியிட்டும் பதில் சொல்லாவிட்டாலோ...
'சொன்னாலும்' பதில் சொன்னது போல மழுப்பினாலோ...
//அவர்களின் நேர்மையின் தரம் அவ்வளவு தான் என உணர்த்த//
தீர்வு....
'எதிர்பதிவு..!'
என்னை இப்படித்தானே ஒரு கும்பல் தனி பிளாக் ஆரம்பிக்கவைத்தது..?
//அன்பு சகோ கோவி.கண்ணன்// ---இது ஒன்றே போதும்...
இன்னா செய்தாரை ஒறுத்தல்....
ஆனால்,
அவர் நானுகிறவரா..? :-(
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் சரியான பதிலுக்கும் மிக்க நன்றி சகோ.குலாம்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கிட்டு போகும் சகோ.ஆம்புலன்ஸ் ஹைதர் அலி... ஹோல்ட் ஆன்...
பதிவில் நான் சொன்னவை பொதுவாக விளிக்கப்பட்டவை...
//நான் மதவியாதியல்ல,மார்க்கத்தை அழகிய வழிமுறையை பின்பற்றுபவன்
எனது முன்னொர்களும் மார்க்கம் என்று தான் எங்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள்//
---நீங்கள் சொன்னது...
அந்த பொதுவிற்குள்ளே உள்ள தனித்துவ மார்க்கம்..!
நானும் உங்களோடுதான் சகோ..! :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@www.firthouse.blogspot.comவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.பிர்தௌஸ் ராஜகுமாரன்
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.Syed Ibramsha.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜா.
@மௌனகுரு//தடை செய்யப்பட வேண்டியா கூட்டம் அவர்கள்//---இல்லை சகோ.மெளனகுரு.
உண்மைகள் புரியவைக்கப்பட வேண்டிய கூட்டம் அவர்கள்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.மெளனகுரு.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் 'கரீக்டான' பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சவூதியில் தடை காரணமாக தமிழ்மணம் தளம் திறக்காது. முன்னர், தானியங்கி முறையில் இணைந்தது போலல்லாம் கடந்த ஒன்றிரண்டு மாதமாக இணைவதில்லை..!த.ம.வில் இணைத்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//யாருக்கு இது சொல்லப்பட்டதோ அவர்கள் சிறிது சிந்தனை செய்வார்களானால் அவர்கள் பக்கம் உள்ள தவறை உணர்ந்து கொள்வர்.//
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.//
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ முஹம்மது ஆசிக், இவரையெல்லாம்(கோவி) கணக்கிலே எடுக்ககூடாது.
கோவி அவர்கள் மட்டும் எல்லாயிடங்களிம் விஷமதனத்தை கக்கி விட்டு செல்கிறார். அவருடைய மனநிலையை இருந்து நம் புரிந்துகொண்டால் இந்த பிரச்சனை வாரது. அவர் என்ன நினைக்கிறார் என்றால் (உ.ம்) எல்லோரும் மீன் பிடிக்க துன்டில் எடுத்துகொண்டு குளத்துக் போன எல்லாத்துக்கும் மீனுக்கு பதில் சுரா கிடைக்கிறாது. எனக்கு மட்டும் மீனுக்கு பதில் தவளை மட்டும் தான் கிடைக்கிறாது. என்று நினைத்து, நினைத்து, நினைத்து குட்டையை குழப்பும் மனிடர். சும்மா சீனா பக்வடை எத்தனை நாளைக்கு சுடா முடியும் ....
புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்கு அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். 2:230
நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான். 5:67
@ அநாமதேய மதஎதிர்வாதி/வெறி பதிவர்...
//அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்பவன் தண்டிக்கப்பட வேண்டிய கொலை குற்றவாளி//=====>>இதுதான் என் கருத்து..!
இதற்கு...
எனக்கு வந்த ஒரு கள்ளப்பேர்வழியின் மட்டமான கமென்ட்...
///அப்படி என்றால்...
ஆயுதங்களுடன் வன்செயல் செய்பவர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட துப்பாக்கி சூடு நடத்தும் போலிஸ்சை கொலையாளி என்று சொல்கிறீர்களா...?
அப்பாவி மக்களை கொலை செய்தவர்களுக்கு சட்டப்படி மரண தண்டனை வழங்கும் நீதிபதியை கொலையாளி என்று சொல்கிறீர்களா...?///
:-( :-( :-(
தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பதற்கும், அரசு தன் சட்டத்தை நிலை நாட்டுவதற்கும் கூடவா வித்தியாசம் தெரியாது..?
இறைவா...
நான் மீண்டும் இந்த முட்டாளுக்காக பிரார்த்திக்கிறேன்...
இவருக்கு எதையும் சரியாக புரிந்து கொள்ளும் நல்ல புத்தியை கொடுத்து மனிதனாக்குவாயாக...
@Nizamஅலைக்கும் ஸலாம் வரஹ்...
புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்கு அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். 2:230
நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான். 5:67
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.நிஜாம்.
//கோவி.கண்ணன் said...
காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.//
SOURCE: http://govikannan.blogspot.com/2012/02/2012.html
இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!
பிற சமயங்களின் மீது இட்டுகட்டப்படுபவைகளுக்கு முட்டுக்கொடுத்து தூபம் போட்டு வெறியாட்டம் ஆடுவதில் முன்னிலை வகிப்பது ஏன்? திரும்பிப்பார் !!!
click to watch video
////////
கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி ////////
THE LINK ABOVE IS NOT FUNCTIONING
PLEASE CLICK THE LINK BELOW :
click to watch video
..........................
////////
கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி ////////
.........................
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!