சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு புத்தர் சிலையை ஆப்கானில் இடிக்க கிளம்பிவிட்டன...! அதாவது தாலிபான் செய்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன..! ஆனால்... இடிப்பு பின்னணியை பார்த்தால்... தாலிபான் எவ்வளவோ தேவலை என்பீர்கள்..!
அன்று... ஐநாவின் யுனெஸ்கோ தாலிபான் அரசுக்கு ஆப்கானிய குழந்தை நலத்துக்கு நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டது. ஆனால், பெரும் நிதியை தந்து தாலிபான் புத்த சிலை உள்ள எரியாவை world heritage center என்று ஆக்கி சுற்றுலா தளமாக உலகுக்கு திறந்து வைக்க சொன்னது..! புத்தரை கடவுளாக கும்பிட ஒரு ஆப்கானிய குடிமகன் கூட இல்லாத நிலையில்... வெறும் சிலைக்கு மில்லியன் கணக்கில் டாலரை வீச தயாராக இருக்கும் ஐநா... ஆப்கானிய குழந்தைகள் நலன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற பயங்கரவாத நிலையில்... இருந்தது..!
அப்போதுதான்... கடுப்பாகிய தாலிபான் அந்த உலகமகா முட்டாள்த்தனத்தை செய்தது..! அந்த சிலையை குண்டு வைத்து உடைத்து விட்டு... 'இப்போ என்ன செய்வீங்க.. இப்போ என்னா செய்வீங்க...' என்று கேலியாக குதிக்க... அதுவரை தனது எதிரியான ரஷ்யாவையே தான் சப்ளை செய்த ஆயுதங்கள் மூலம் அபாரமாக போரிட்டு தோற்கடித்து துரத்தி அடித்தவன் தாலிபான் என்பதால் அவன் உள்ளுக்குள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்த அமெரிக்கா... இப்போது தனது சொல்லையே கேட்கவில்லை என்றால்..?
'ஐநா தான் அமெரிக்கா... அமெரிக்காதான் ஐநா' என்று பாமர தாலிபானுக்கு தெரியாவிட்டாலும்... உலகுக்கே அந்த உண்மை தெளிவாக தெரியுமே..!
அது மட்டுமில்லை... ரஷ்யாவை வீழ்த்திய வேலை முடிந்து விட்டது..! மெலும் ரஷ்யாவையே பல துண்டாக உடைத்தாகி விட்டது. 'இனி தாலிபான் எனும் அடியாளுக்கு வேலை இல்லை. ஆகவே, அவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஒரு காரணம் உண்டாக்க திட்டம் போடணுமே' என்று மண்டையை சொறிந்து கொண்டு இருந்த அமெரிக்காவுக்கு... ஆடே முன் வந்து 'நான் உனக்கு பிரியாணி ஆகிறேன் தோழா' என்று சொன்னால் வேண்டாம் என்றா சொல்லும்..? ஆக, நேற்றைய அமெரிக்க நண்பன் தாலிபான்... (அ)இன்றைக்கு உலக பயங்கரவாதி ஆகிவிட்டான்..!
ஆக, அன்று.... தாலிபான்கள் ஒரு பாமியான் சிலையை உடைத்த பயங்கரவாதத்துக்கு (?!) எதிராக ஆகாசத்துக்கு எம்பி
குதித்தன, அமெரிக்காவும் சீனாவும்..! சீனாவுக்கு எதுக்கு மூக்கு வேர்த்தது..? தன் கம்யூனிசத்துக்கு மதம் இல்லை' என்று சொல்லிக்கொண்டாலும், சீனர்களின் கடவுளான புத்தர் என்றதும்... எங்கிருந்தோ மஞ்சள் துண்டு காவி மத ஓட்டுபொறுக்கி அரசியல் பறந்து வந்து சீனா மூக்கு மேலே உக்காந்துக்குது பாருங்க..!
இன்று அதே ஆப்கானிஸ்தானில்... மற்ற
புத்தர் சிலைகளை இதே அமெரிக்காவும் சீனாவும் தனது ஆப்கானிய பொம்மை கைக்கூலி அரசுடன் சேர்ந்து கொண்டு.... சத்தம் இன்றி உடைக்க இருக்கின்றன..!
ஏன்..? என்ன காரணம்...?
அந்த சிலைகளுக்கு அடியில்தான்...... அவை திருட வேண்டிய ஆப்கானியர்களுக்கு
சொந்தமான காப்பர் கனிம வளங்கள் ரொம்பி வழிகிறதாம்..!
இங்கே காப்பர் பற்றி கொஞ்சம் நான் சொல்ல வேண்டும்..!
2007 இல், வீட்டு தேவைக்காக ஒரு ரோல் குண்டன் காப்பர் வயர் வாங்கினேன்.
550 ரூபாய்...! ஆனால், அடுத்த வருடம், அதே பாக்கெட்... அதே கம்பெனி... 1125
ரூபாய் ஆகிவிட்டது...! அப்போதே அவ்ளோ ரேட்... இப்போது எவ்ளோ இருக்குமோ..! அறிந்தோர் இன்றைய ரேட் சொல்லுங்க..!
அந்த... "ஆப்கானிய (அதாவது அமெரிக்க)-சீன காப்பர் கனிம தோண்டல் ஒப்பந்தம்" சுமார் $ 3 பில்லியானாம்...! ஆனால், ஆரம்பிக்கும் போதே $ 30 மில்லியன் ஊழல் கசமுசா..! "இந்த கனிம செல்வத்தை விற்று பெறப்போகும் இலாபம் எல்லாம் பாமர ஏழை ஆப்கானியர் வாழ்வை முன்னேற்றும்" என்று ஆப்கானுக்கான அமெரிக்க பொம்மை அதிபர் சொல்கிறார்..! ஹா..ஹா...ஹா...!
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட இராக்கிலும் ஒரு அமெரிக்க பொம்மை அதிபர் இப்படித்தான் (சதாம் உசேன் பிடிபட்ட பின்னர் தான் அதிபர் 'ஆக்கப்பட்டதும்') இப்படித்தான் சொன்னார்...! பாவம் அந்த படித்த பணக்கார இராக்கியர்கள்..! சதாம் உசேன் என்ற "அமெரிக்க முன்னாள் நண்பன் பின்னாள் எதிரி" யால்... ஓட்டாண்டி ஆகி சீர் குலைந்து நிம்மதி இல்லாமல் தற்போது வீதியில் திரிகிறார்கள்..! வளம் பெற்றவர்கள் என்னவோ அமெரிக்கர்கள்..!
அதேபோல... இப்போது... படிக்காத... பாமர ஆப்கானியர்கள்... தாலிபான் என்ற "அமெரிக்க முன்னாள் நண்பன் பின்னாள் எதிரி" யால்... ஓட்டாண்டி ஆகி சீர் குலைந்து நிம்மதி இல்லாமல் புழுதியில் கிடக்கிறார்கள்..! இவர்களின் காப்பர் கனிம வளம் கொள்ளை போவதாவது அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை..!
எப்படி தெரியும்..? அவ்ளோ(?) படித்த நமக்கே தெரியாமல் சுமார் இருபது வருஷமாக நம்முடைய இந்திய கனிம வளம்... கர்நாடக-ஆந்திர மண்ணில் பலகட்சி சேர்ந்து செய்த கூட்டு களவாணித்தனம் மூலம் டன் டன்னாக காணாமல் போன கதை இப்போதுதானே mine scandal என்ற பெயரில் நமக்கே தெரிகிறது...!
ஆக, மொத்தத்தில்....
"நான் அணுகுண்டு வீசினால்... அது ஊசி வெடி..!
நீ தும்மினால் அதுதாண்டா பயங்கரவாதம்..!"
-----இதுதான் ஆப்கானில்... அமெரிக்க-சீன பாலிஸி..!
WHEN the Taliban blasted the famous Bamiyan Buddhas with artillery and dynamite in March 2001, leaders of many faiths and countries denounced the destruction as an act of cultural terrorism. But today, with the encouragement of the American government, Chinese engineers are preparing a similar act of desecration in Afghanistan: the demolition of a vast complex of richly decorated ancient Buddhist monasteries.
The offense of this Afghan monument is not idolatry. Its sin is to sit atop one of the world’s largest copper deposits.
The American government is okay with the destruction of the Buddhist
site when the Chinese are doing it but not okay when the Taliban do it.
Let’s see what the difference is:
The copper at the Mes Aynak mine, just an hour’s drive south of Kabul, is to be extracted under a roughly $3 billion deal signed in 2007 between Afghanistan and China’s Metallurgical Group Corporation. The Afghan finance minister, Omar Zakhilwal, recently said the project could pump $300 million a year into government coffers by 2016. But the project has been plagued by rumors of corruption; there was widespread talk of a $30 million kickback involving the former minister of mines, who resigned.
Oh, copper you say! Three billion dollars worth of it! By all
means, please destroy as much as possible. Will the Afghans see the $3
billion? Who knows!
29 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ஆஷிக்!
தாலிபான்களை காட்டுமிராண்டிகள் என்று கூறியவர்கள் தற்போது என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?
இது தொடர்பாக தலிபான்கள் மீது அடுக்கிய அத்தனை விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் சீன-அமெரிக்க வல்லாதிக்கங்களுக்கும் பொருந்தும்.
//"நான் அணுகுண்டு வீசினால்... அது ஊசி வெடி..!
நீ தும்மினால் அதுதாண்டா பயங்கரவாதம்..!" //
ஆகா..அருமை உங்களுக்கே உரித்தான வலுவான "பன்ச்"
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் சகோ.சுவனப்பிரியன்.
அவர்களை சொன்னவர்கள் இவர்களையும் காட்டுமிராண்டிகள் என்றுதான் சொல்வார்கள் என்று நம்புகிறேன். அதோடு கூடவே, இப்போதாவது அந்த ஆப்கானிய புத்தர் சிலைகள் இடிபடாமல் காக்க உலக அளவில் ஒரு மிகப்பெரிய புரட்சிப்போராட்டம் ஒன்று வெடித்து உலக மக்கள் எழுச்சியுடன் நமது தமிழ்ப்பதிவுலக so called நாத்திகர்கள் தலைமையில் தக்க பதிலடி ஒன்று நடை பெற போகிறது என்று எதிர்பார்க்கிறேன். நீங்க...?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
இதையும் அவசியம் படியுங்க.....
http://www.newstbm.blogspot.com/2010/10/blog-post_16.html
அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,
புதிய தகவல் எனக்கு. புது கோணமும். ம்ம்... கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு இன்னும் இன்னும் ஆஃப்கானில் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போனாலும் முக்கால்வாசி அமெரிக்க கிராமத்தார்கள் இன்னும் தன் அரசு சரியான, தகுந்த, நல்வேலையையே செய்து கொண்டுள்ளார்கள் என Hopeஇக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்றுவானாக. ஆமீன்.
//சரி... மீண்டும் புத்தர் பக்கம் வருவோம். அப்போது.......... 'புத்தர்.... புத்தர்.... Save Bamiyan Budhdha' என்று கத்தியவர்கள்... இப்போது எங்கே போனார்கள்..? நல்லா இருக்குப்பா இந்த உலக நியாயம்...! //
இரண்டு சிலைய இடிச்சதுக்கு கூப்பாடு போட்டாணுக... ஆனா பேரழிவு ஆயுதம்னு பொய் சொல்லி இராக் என்ற நாட்டையே சின்னா பின்ன படுத்துனவங்கள எதிர்த்து ஒரு வார்த்தை பேசல...
இவனுங்கள்லாம் என்னமோ நேர்மையாளர்கள் மாதிரி, நியாயம் கேட்டுகிட்டு இருக்கீங்க.. அய்யோ..அய்யோ....
சிட்டிசன்,
தலிபான்களின் மீதான போர் தீவிரவாதத்திற்க்கான போரே அல்ல.. இது கொள்ளை அடிக்க நேர்த்தியாக திட்டமிட்டு காய் நகர்த்தப்பட்ட போர். ஆப்கனில் கனிம வளங்கள் ஏராளமாக உண்டு.. அதை சுரண்ட போடப்பட்ட திட்டம் தான் இந்தப் போர்..
இன்னும் ஒசாமா, தீவிரவாதம்னு எவனும் பேசினா பார்க்கையில் கடுப்பு தான் வருது. பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்வதும் சேம் கொள்ளையில் பங்கெடுக்கத்தான். திருட்டுப் பசங்க.... இப்படி ஊர அடிச்சு தின்கிறதுக்கு இவனுக வேற வேலை பார்க்கலாம்....
புத்தர் செலைய இடிச்சுட்டானுங்க இடிச்சுட்டானுங்கன்னு வாய் கிழிய கத்திய கூட்டம் கொஞ்சம் இந்த பக்கம் வந்து கருத்து சொன்னா நல்லா இருக்கும் :-)
//நான் அணுகுண்டு வீசினால்... அது ஊசி வெடி..!
நீ தும்மினால் அதுதாண்டா பயங்கரவாதம்..!"// இதொன்னே போதும்... இதான் இன்றைய கேடுகெட்ட நிலை... நடுநிலைவாதிகள் என கூறிக்கொள்வோரும் இனி இதை பற்றி பேசணுமே? ம்ஹும்... கனவுல கூட நடக்காது!! கேடுகெட்ட நேர்மை!..... கேவலமான இஸ்லாமோபோஃபியா....
ஸலாம் சகோ. அருமையான பதிவு!.
//"நான் அணுகுண்டு வீசினால்... அது ஊசி வெடி..!
நீ தும்மினால் அதுதாண்டா பயங்கரவாதம்..!" //
செம பஞ்ச்!
அப்புறம், தனக்கு பிடிக்காத நாட்டுடன்/அதன் வளங்கள் மாத்திரம் பிடித்து போய் அதனுடன் போர்ன்னு ஒன்னு தொடங்கி குண்டு போட்டு மக்களை கொல்லுவானுங்களே, அது சமயம் இதுபோல் சிலைகளோ, சிற்பங்களோ தங்களின் ஆபரேஷனுக்கு இடையூறாக வந்தால் என்ன செய்வார்களாம் இந்த நாட்டாமைகள். (ஒருவேளை ஆள் வச்சு இதையெல்லாம் பத்திரப்படுத்திட்டு பிறகு வந்து குண்டுபோடுவாய்ங்களோ?)
என்னாது அமெரிக்கா இன்றுதான் புத்தர் சிலையை ஒடைக்கித போங்க சகோ சிரிப்பு காட்டிக்கிட்டு
அமெரிக்க ஆமை வியட்நாமில் புகுந்து உடைத்த புத்த ஆலயங்களும் மனித உயிர்களும் எக்கசக்கம் இதுலாம் சும்மா ஜுசுபி
இவ்வளவுக்கும் அங்கிருந்த புத்தபிக்குகள அமெரிக்காவை திருப்பி அடிக்காமல் தங்களை தாங்களே தீ வைத்து கொளுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட பிறகு கூட அமெரிக்கா விடவில்லை
இதற்கு முன் சகோதரர் சுவனப்பிரியன் தளத்தில் நான்... ஆப்கானிஸ்தானில் புத்தருக்கு யாருமே ஆதரவு இல்லத இடத்தில் அம்மனமாக நின்னுக்கிட்டு இருந்தா யாருக்குத்தான் கோவம் வராது அதனால் தான் சூட்டார்கள் என்று நான் சொன்னா கருத்திற்கு வரிந்து கட்டிக்கிட்டு வந்தர் உலக மகா பிதிவர் இக்பால் செல்வன் ஆவர்கள் புத்தரை கூகிலில் பாருங்கள் அவர் கோவனத்தை காட்டிக்கிட்டு இருக்கிறார் என்று சொன்னார்... நானும் தேடி பார்த்து விட்டு ஆமாம் என்று சொன்னேன். தலிபான்களாவது அவரை நெஞ்சில் தான் சூட்டார்கள்... மேலே உள்ள புகைப்படத்தையும் பதிவையும் பார்த்தால் இந்த அமெரிக்கனும் சினானும் கோவனத்தை உறிவி குழி தொன்டி சாமதி ஆகிவிடுவார்கள் போல் இருக்கிறது. இந்த நாசக்கார செயலை கண்டித்து இக்பால் செல்வன் ஆவர்கள் துக்கில் தொங்கினாலும் ஆச்சிரயபடறதுக்கில்லை. பாவம் யாரு பெத்த புள்ளையோ
சலாம் சகோ ஆஷிக்
பதிவு அருமை சகோ.ஒரு வேலை தாலிபான்கள் சிலையை உடைத்த விதம் வேறு அமெரிக்காவும் சைனாவும் சிலையை உடைக்கும் விதம் வேறு என்று இந்த சொம்பு தூக்கிகள் சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை சகோ.
ஆப்கான் மக்கள் வறுமையில் செத்துக்கொண்டு இருக்க,
உதவிக்கு ஐநாவிடம் தாலிபான் அரசு பணம் கேட்டால்,
அது கொடுக்க மறுத்து விட்டது.
ஆனால், அதுவரை தாலிபான்கள் கண்டுகொள்ளாத பாமியான் சிலையை 'world heritage center' என்று அறிவித்து அதனை காப்பாற்றி பாதுகாக்க பல மில்லியன் டாலர் கொடுக்க முன் வந்தது.
"மனிதனுக்கு இல்லாத பணம் ஒன்றுக்கும் உதவாத கல்லுக்கா" என்று...
'குடிமகன் என்ற பெயரில் அந்த புத்தர் சிலைக்கு உரிமை கோர ஒரு ஆப்கானிய பவுத்தர் கூட இல்லாத நிலையில்'
எத்தனையோ நூற்றாண்டு பாதுகாப்பாக இருந்த பாமியான் புத்த சிலையை தாலிபான் இடிப்பதாக அப்போதுதான் அறிவித்தார்கள்..!
ஏனெனில், அப்போது(ம் இப்போதும்) ஆப்கானில் அந்த இடிப்பை எதிர்க்க ஒரு பவுத்தர் கூட இல்லை..!
PART 1. தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் -
சின்னக்கருப்பன் IN திண்ணை
ஒரு மீன்விற்பவள் நெடுநேரம் சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருந்தாள். திடாரென இருட்டி கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. அவசர அவசரமாக ஒரு கடையில் ஒதுங்கினாள்.
கடையோ பூக்கடை.
மழை விடும் மாதிரித் தெரியவில்லை. கொட்டலையும் நிறுத்தவில்லை.
மழையையே பார்த்துக்கொண்டிருந்த மீன்காரியிடம், பூக்கடைக்காரி சொன்னாள்,
'அம்மா, நீ ரொம்ப தொலைவு போகவேணும்போல. நீ இங்கேயே இரவு தூங்கி விட்டு காலையில் உன் வீட்டுக்குப் போ '.
மீன்காரிக்கும் வேறு வழியில்லாததால், அவள் அங்கேயே தூங்க ஆரம்பித்தாள்.
மீன்காரிக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.
காரணம் தெரிந்து விட்டது.
பூக்கடையில் இருக்கும் பூ வாடை அவளுக்கு நாற்றமாய் இருக்கிறது.
மீன்காரி எழுந்து பூக்கடைக்காரியிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கி தன் மீன் கூடையில் தெளித்து அதை தலையில் கவிழ்த்துப் படுத்ததும் ஆனந்தமாய் தூக்கம்.
மீன் காரிக்கு மீன் வாடைதான் வாசம்.
அது பூக்கடைக்காரிக்கு பூ மணம் நல்ல வாசனை.
இது ரொம்ப பழைய தமிழ் நாடோடிக்கதை.
இந்த நாடோடிக்கதை சொல்லும் விஷயத்தைத்தான் இப்போது மானுடவியலில் Cultural Relativism என்று சொல்கிறார்கள்.
வேறொரு கலாச்சாரத்துக்கும் மக்களுக்கும் பிடிக்காத விஷயம் மற்றொரு கலாச்சாரத்துக்கும் மக்களுக்கும் பிடித்தவிஷயமாக இருப்பதை அங்கீகரிப்பது என்பதுதான் இந்த கலாச்சாரப்பின்னணி அமைப்பு.
நாய் மாமிசம் நாகாலாந்து மக்களிடம் முக்கியமான பெரும் விருந்துகளில் பரிமாறப்படும் உணவு.
நாய் மாமிசம் சாப்பிடுவது மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்கமுடியாத விஷயமாக இருக்கும்.
பசு மாமிசம் இந்துக்கள் (முக்கியமாக வட இந்திய இந்துக்கள்) சாப்பிடுவது பாவம் என்கிறார்கள்.
முஸ்லிம்களும், கிரிஸ்தவர்களும் பசு மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
முஸ்லீம்கள் பன்றி சாப்பிடுவதில்லை,
இந்துக்களில் பலரும், பல கிரிஸ்தவர்களும் பன்றி மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
இந்த பார்வையில் பார்த்தால், புத்தச் சிலைகளை உடைப்பது மற்றவர்கள் பார்வையில் தவறானதாகத் தெரியலாம்.
அது முஸ்லீம்களுக்கு மதக்கடைமை என்று தாலிபான் முஸ்லீம்கள் கூறுகிறார்கள்.
நாம் யார் அதைக் கேட்க ?
கலாசார வித்தியாசங்கள் என்ற பெயரில் பல நடைமுறைகள் உண்டு.
தமிழ் நாட்டிலேயே பல கிராமங்களில், முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் பெண்கள் சினிமா பார்ப்பது தவறு என்று ஊர்க்கட்டுப்பாடு உண்டு.
பெந்தே கோஸ்தே கிறுஸ்தவ மதப்பிரிவினரில் பலர், நோயுற்ற மகனையோ, மகளையோ , தன்னையோ காப்பாற்றிக் கொள்ளக்கூட மருத்துவரிடம் செல்வது தவறு என்றும், பிரார்த்தனை மூலம் குணப் படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.
பல உயிர்கள் அதனால் பலியானதும் உண்டு.
அப்படி இறந்தவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்றும், கடவுள் அவர்களைச் சொர்க்கத்தில் சேர்ப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை.
தம் நம்பிக்கைக்காக தம் உயிருக்குயிரான மக்களைப் பலிகொடுக்க அவர்களுக்கு உரிமையில்லை, என்றும், சமூக வாழ்வில் ஒவ்வோர் உயிரும் சமுகத்தின் பொறுப்பும் கூட என்ற வழக்குத் தொடர்ந்த சமூகசேவகர்களும் வெளிநாடுகளில் உண்டு.
சமீபத்தில் அமெரிக்காவில் இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
அமெரிக்காவில் பழங்குடியினர் மத்தியில் நரமாமிசம் சாப்பிடும் பழக்கமும் இருந்ததுண்டு.
கலாசார வித்தியாசம் என்று அதனையும் நியாயப் படுத்த வேண்டும்.
உலகம் முழுவதும் ஒரு விதமான நியதிகள், விதிகள் என்பதைக் கட்டாயமாய்த் திணிக்க முடியாது.
CONTINUED ….
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக அண்ணா
மாஷா அல்லாஹ் சுருக்கமான, சூப்பரான பதிவு அண்ணா.
வரிக்கு வரி சபாஷ்
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (அல்-குர்ஆன்-9:55)
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக அண்ணா
மாஷா அல்லாஹ் சுருக்கமான, சூப்பரான பதிவு அண்ணா.
வரிக்கு வரி சபாஷ்
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (அல்-குர்ஆன்-9:55)
PART 2. தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் - சின்னக்கருப்பன் . திண்ணை
தாலிபான் ஆப்கானிய புத்தச் சிலைகளை உடைப்பதை நான் எதிர்க்கவில்லை.
தாலிபான் அந்தச் சிலைகளை வெறும் கற்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
கண்ணதாசன் பாடினார் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான் '.
பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது.
இன்னும் நான் பாமியான் புத்தச் சிலைகள் உலகத்தின் பாரம்பரியச் சொத்து என்று கூறுவதைக் கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை.
அவை ஆப்கானியச் சொத்துக்கள். அவ்வளவுதான்.
எங்கள் ஊரில் அய்யனார் சிலைகள் இருக்கின்றன.
பெரிய குதிரை சிலைக்குப் பக்கத்தில் அய்யனார் வீரமாக சிமிண்டினால் செய்யப்பட்டு நின்று கொண்டிருக்கிறார். அவைகள் கிராமத்துச் சொத்து.
அவைகளை உருவாக்குவதோ, உடைப்பதோ, மீண்டும் உருவாக்குவதோ, எல்லாம் எங்கள் உரிமை.
உலகச்சொத்து உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் எங்கள் ஊரில் வந்து எங்களைத் தடுப்பதை நாங்கள் விரும்பமாட்டோம்.
தாலிபான் உடைக்கும் சிலைகள் பெரியவையாக இருக்கலாம், மிகப்பழமையானவையாக இருக்கலாம். இருந்தால் என்ன ?
எங்கள் ஊரில் இருக்கும் சிலர் கிரிஸ்தவர்களாகிவிட்டார்கள்.
அவர்கள் அய்யனாரைக் கும்பிடுகிறார்கள். அவர்களது பிள்ளைகள் கும்பிடுவதில்லை.
பின்னால் எங்கள் ஊர் கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வாழும் ஊராகி விட்டால், அய்யனார் சிலைக்கு என்ன மதிப்பு, என்ன தேவை ?
நம்புபவர்களுக்குத் தானே தெய்வம் ?
ஆகவே தாலிபானைத் திட்டவேண்டிய அவசியம் என்ன ?
நான் அவர்களது கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் அவர்களது கொள்கைகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
அவை அவர்களது கொள்கைகள்.
அவர்களது சிலைகள்.
அவர்களது கலாச்சாரம். அவர்களது வரலாறு.
உங்களுக்கு அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களைப்போல ஆகாமலிருங்கள்.
முடிந்தால் உங்கள் கலாச்சாரத்தை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு உங்கள் கலாச்சாரமும், உங்கள் மொழியும்,
உங்கள் இசையும்,
உங்கள் கட்டடங்களும், உங்கள் ஓவியங்களும் பிடித்திருந்தால்
அவைகளை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அதை விட்டுவிட்டு தாலிபானை காட்டுமிராண்டிகள் என்று இந்தியப் பத்திரிக்கைகள் எழுதுவது சரியல்ல.
தாலிபானின் பார்வையில் சிலையைக் கும்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்பது மற்றவர்களுக்கு ஞாபகம் இருக்க வேண்டும்.
தாலிபானும் சிலைகளை உடைப்பது மதத்தின் படி புனிதக்கடமை என்றும் சொல்கிறார்கள்.
இது தவறு என்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது ?
மதத்தைப் பின்பற்றுவதில் பெரும்பான்மையாக - அல்ல , முஸ்லீம்கள் மட்டுமே- உள்ள நாடாகி விட்ட ஆஃப்கானிஸ்தானில் முஸ்லீம் மதச் சட்ட திட்டங்கள் படித்தானே நடக்க முடியும்.
ஆஃகான் மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் , குளிரினாலும் இறந்து கொண்டிருக்கையில் இந்தச் சிலை உடைப்பு என்ன சாதித்து விடும் என்று கேட்பவர்களுக்கும்,
இந்த உடைப்பாளர்களின் மன நிலை புரிவதில்லை.
Continued ….
PART 3. தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் - சின்னக்கருப்பன் . திண்ணை
மக்களின் துயர் போக்குவோம் என்று வாக்குறுதி அளித்தோ , அல்லது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நாங்கள் பாடுபடப் போகிறோம் என்றோ சொல்லி வாக்குகள் வாங்கியோ இவர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றவில்லை.
தூய்மையான இஸ்லாமிய அரசை நிர்மாணிப்போம் என்று தான் மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்கள்.
அவர்கள் ஆதரவுடன் தான், துப்பாக்கி முனையில் எதிர்ப்பாளர்களைத் தாக்கி விட்டு அரசு செய்கிறார்கள்.
பாஜக அரசு புத்தச்சிலை உடைப்புகளை எதிர்ப்பது எனக்கு ஆச்சரியமானதல்ல.
மசூதியை உடைத்தவர்களுக்கு புத்தச்சிலை உடைப்பைப் பற்றிப் பேச அருகதை இல்லை.
ஆனால் மசூதி உடைப்புக்கும், புத்தர் சிலை உடைப்புக்கும் மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது.
மசூதியை உடைப்பது தங்கள் மதம் விதித்த புனிதக் கடமை என்று இந்து தீவிரவாதிகளில் ஒருவர் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை.
இந்துக்களை ஒரு ஓட்டு வங்கியாக்கும் அரசியல் உடைப்பாகத் தான் இருந்தது தவிர மதம் விதித்த உடைப்பாக இல்லை.
இருக்கவும் முடியாது.
ஏனெனில் ஆகம விதிகளின் படி, நிலத்தகராறு இருக்கும் இடத்தில் கோவில் கட்டுவது முறையாகாது.
ஒரு சாரார் மக்கள் எதிர்க்கும் இடத்தில் கோவில் கட்டுவதும் முறையாகாது.
ஒரு வணக்க ஸ்தலம் இருந்த இடத்தில் இன்னொரு தெய்வச்சிலை வைத்துக் கோவில் கட்டுவதும் முறையாகாது.
இதை எதிர்க்கும் பல இந்து மத மடாதிபதிகள் சொல்லும் காரணம் இதுவே.
அது செளகரியமாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.
பாஜக செய்வது அரசியல்.
இந்த இந்து அரசியல், இந்துக்களுக்குத் தேவையாக இருக்கிறது.
பெருகி வரும் இஸ்லாம் சுதந்திர இந்து, இந்திய வாழ்க்கைக்கு எதிரானது என்று இவர்கள் நம்புகிறார்கள்.
தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற இது போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்கள்.
ஆகவே பாஜக செய்வது இந்துமதத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இந்து மதத்தில் இருப்பது போல பம்மாத்துச் செய்கிறார்கள்.
தாலிபானோ தங்கள் மதத்துக்கு உண்மையானவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் அழிப்பது சரிதான்.
அது அவர்களின் மதம்.
மனித உருவத்தை வரைவதோ,
புகைப்படம் எடுப்பதோ இஸ்லாமுக்கு எதிரானது என்ற காரணத்தாலேயே பம்பாயில் அடையாள அட்டைக்காக முஸ்லீம்களை புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று போராட்டம் நடந்தது ஞாபகம் இருக்கலாம்.
அது இஸ்லாமியரின் மதக்கடமையாக இருக்கையில் அதை மதிப்பது தவிர வேறென்ன செய்வது ? - சின்னக்கருப்பன் . திண்ணை
=======================================
ARTICLE SOURCE:http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&format=print&edition_id=20010304
THANKS TO :Thinnai.com
பயனுள்ள தகவல்கள். நன்றி.
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு LIST OF HOLIDAYS
#ஆக, மொத்தத்தில்....
"நான் அணுகுண்டு வீசினால்... அது ஊசி வெடி..!
நீ தும்மினால் அதுதாண்டா பயங்கரவாதம்..!" #
பட்டாசு போல வெடிக்கிறது வார்த்தைகள்..அருமை சகோ..
@உதயம்நிச்சயமாக சகோ.உதயம்.
அதைவிட அதிகமாகவே பொருந்தும்.
@மு.ஜபருல்லாஹ்ஆப்கானில் எவ்வளவு கனிம வளங்கள் ஏகாதிபத்தியத்தால் கொள்ளையடிக்கப்பட தயாராக பூமிக்கடியில் உள்ளன என்பதை அவசியம் படித்து அறிந்து கொள்ளவேண்டிய பகிர்வு சகோ.ஜபருல்லாஹ். மிக்க நன்றி.
@உம்ம் ஒமர்அலைக்கும் ஸலாம் சகோ.உம்ம் ஒமர். ஏகாதிபத்திய ஊடகத்தின் வழியே அரசியல்வாதியின் பேச்சை நம்பும் ஒட்டரசியலுக்கான பாமர அப்பாவிகள் அங்கேயுமா நிறைந்துள்ளனர்..? அடப்பாவமே..!
@சிராஜ்ஆமாம்.சகோ.சிராஜ், சரியான கருத்துக்களை சொன்னீர்கள். மிக்க நன்றி. பாமியான் சிலை தகர்ப்பு முதல்....ஆப்கானை சுரண்ட அமெரிக்கா போட்ட பல்வேறு கட்ட திட்டத்தில்... 9/11 எல்லாம் ரொம்பவே அதிகம்... அராஜகம்... & அநியாயம்..!
@ஆமினா//புத்தர் செலைய இடிச்சுட்டானுங்க இடிச்சுட்டானுங்கன்னு வாய் கிழிய கத்திய கூட்டம் கொஞ்சம் இந்த பக்கம் வந்து கருத்து சொன்னா நல்லா இருக்கும் :-)//
ஆமா... நல்லா இருக்கும்தான்...! சரியான கேள்வி.
// இதான் இன்றைய கேடுகெட்ட நிலை... நடுநிலைவாதிகள் என கூறிக்கொள்வோரும் இனி இதை பற்றி பேசணுமே? ம்ஹும்... கனவுல கூட நடக்காது!! கேடுகெட்ட நேர்மை!..... கேவலமான இஸ்லாமோபோஃபியா....//
அப்புறம் என்ன, நீங்களே பதிலையும் சரியா சொல்லிட்டீங்க சகோ.ஆமினா. நன்றி. :-)
@Syed Ibramshaஅலைக்கும் சலாம் சகோ.Syed Ibramsha. அதானே சரியா கேட்டிங்க..! உங்க கேள்விக்கு எந்த பதில் தரலாம் என்று எண்ணி இருந்தேனோ அதையே மிகவும் அழகாக தந்து விட்டார் சகோ.ஹைதர் அலி..!
@ஹைதர் அலிசரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான கருத்தை சிறப்பாக கூறியமைக்கு நன்றி சகோ.ஹைதர் அலி.
@Nizam ஆக... 'அப்போது கடுங்கோபத்துடன் தாலிபானையும் அதன் மூலம் இஸ்லாத்தையும் எதிர்த்தவர்களின் புத்தர் மீதான பாசம் பொய்' என்று பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது..! நன்றி சகோ.நிஜாம்.
@mohamedஅலைக்கும் சலாம் சகோ.mohamed.ஹா..ஹா...ஹா..... சொன்னாலும் சொல்வார்கள். இப்படி மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்பவர்கள் இங்கே உண்டுதான்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!